திருக்குறள் தொடர்கிறது…
123. பொழுதுகண்டு
இரங்கல்
👉குறள் 1221:
மாலையோ
அல்லை
மணந்தார்
உயிருண்ணும்வேலைநீ
வாழி
பொழுது
மு.வ உரை:
பொழுதே!
நீ
மாலைக்காலம்
அல்ல;
(காதலரோடு
கூடியிருந்து
பிறகு
பிரிந்து
வாழும்)
மகளிரின்
உயிரை
உண்ணும்
முடிவுக்
காலமாக
இருக்கினறாய்!
சாலமன் பாப்பையா உரை:
பொழுதே!
நீ
வாழ்க!
முன்பெல்லாம்
வருவாயே
அந்த
மாலையா
நீ
என்றால்
இல்லை;
திருமணம்
செய்து
கொண்ட
பெண்களின்
உயிரை
வாங்கும்
பொழுது
நீ.
கலைஞர் உரை:
நீ
மாலைப்
பொழுதாக
இல்லாமல்
காதலரைப்
பிரிந்திருக்கும்
மகளிர்
உயிரைக்
குடிக்கும்
வேலாக
இருப்பதற்காக
உனக்கோர்
வாழ்த்து!
English Explanation:
Live, O you evening are you (the former) evening? No, you
are the season that slays (married) women.
👉குறள் 1222:
புன்கண்ணை
வாழி
மருள்மாலை
எங்கேள்போல்வன்கண்ண
தோநின்
துணை.
மு.வ உரை:
மயங்கிய
மாலைப்பொழுதே!
நீயும்
எம்மைப்போல்
துன்பப்படுகின்றாயே!
உன்
துணையும்
எம்
காதலர்
போல்
இரக்கம்
அற்றதோ?
சாலமன் பாப்பையா உரை:
பகலும்
இரவுமாய்
மயங்கும்
மாலைப்பொழுதே!
என்னைப்
போலவே
நீயும்
ஒளி
இழந்த
கண்ணோடு
இருக்கிறாயே;
உன்
கணவரும்
என்
கணவரைப்
போல்
கொடியவரோ?
கலைஞர் உரை:
மயங்கும்
மாலைப்
பொழுதே!
நீயும்
எம்மைப்
போல்
துன்பப்படுகின்றாயே!
எம்
காதலர்
போல்
உன்
துணையும்
இரக்கம்
அற்றதோ?
English Explanation:
A long life to you, O dark evening! You are sightless Is
your help-mate (also) as hard-hearted as mine.
👉குறள் 1223:
பனியரும்பிப்
பைதல்கொள்
மாலை
துனியரும்பித்துன்பம்
வளர
வரும்.
மு.வ
உரை:
பனி
தோன்றிப்
பசந்த
நிறம்
கொண்ட
மாலைப்
பொழுது
எனக்கு
வருத்தம்
ஏற்பட்டுத்
துன்பம்
மேன்மேலும்
வளரும்படியாக
வருகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
என்னைப்
பிரிவதற்கு
முன்பு
என்முன்
வரவே
நடுக்கம்
எய்தி
மேனி
கறுத்து
வந்த
இந்த
மாலைப்
பொழுது
இப்போது
எனக்குச்
சாவு
வரும்படி
தோன்றி,
அதற்கான
துன்பம்
பெருகும்படி
நாளும்
வருகின்றது.
கலைஞர் உரை:
பக்கத்தில்
என்
காதலர்
இருந்த
போது
பயந்து,
பசலை
நிறத்துடன்
வந்த
மாலைப்
பொழுது,
இப்போது
என்
உயிரை
வெறுக்குமளவுக்குத்
துன்பத்தை
மிகுதியாகக்
கொண்டு
வருகிறது.
English Explanation:
The evening that (once) came in with
trembling and dimness (now) brings me an aversion for life and increasing
sorrow.
👉குறள் 1224:
காதலர்
இல்வழி
மாலை
கொலைக்களத்
தேதிலர்
போல
வரும்.
மு.வ உரை:
காதலர்
இல்லாத
இப்போது,
கொலை
செய்யும்
இடத்தில்
பகைவர்
வருவது
போல்
மாலைப்பொழுது
( என்
உயிரைக்
கொள்ள)
வருகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
என்னைப்
பிரியாமல்
என்னுடன்
இருந்தபோது
எல்லாம்
என்
உயிர்
வளர
வந்த
இந்த
மாலைப்
பொழுது,
அவர்
என்னைப்
பிரிந்து
இருக்கும்
இப்போது,
கொலைக்
காலத்திற்கு
வரும்
கொலையாளிகள்
போலக்
கருணை
இல்லாமல்
வருகிறது.
கலைஞர் உரை:
காதலர்
பிரிந்திருக்கும்போது
வருகிற
மாலைப்
பொழுது
கொலைக்
களத்தில்
பகைவர்
ஓங்கி
வீசுகிற
வாளைப்போல்
வருகிறது.
English Explanation:
In the absence of my lover, evening
comes in like slayers on the field of slaughter.
👉குறள் 1225:
காலைக்குச்
செய்தநன்
றென்கொல்
எவன்கொல்யான்மாலைக்குச்
செய்த
பகை.
மு.வ உரை:
யான்
காலைப்பொழுதிற்குச்
செய்த
நன்மை
என்ன?
(என்னைத்
துன்புறுத்துகின்ற)
மாலைப்
பொழுதிற்குச்
செய்த
பகையான
தீமை
என்ன?
சாலமன்
பாப்பையா
உரை:
காலைக்கு
நான்
செய்த
நன்மை
என்ன?
மாலைக்கு
நான்
செய்த
தீமை
என்ன?
கலைஞர் உரை:
மாலைப்
பொழுதாகிவிட்டால்
காதல்
துன்பம்
அதிகமாக
வருத்துகிறது
அதனால்
பிரிந்திருக்கும்
காதலர்
உள்ளம்
``காலை
நேரத்துக்கு
நான்
செய்த
நன்மை
என்ன?
மாலை
நேரத்துக்குச்
செய்த
தீமைதான்
என்ன?''
என்று
புலம்புகிறது.
English Explanation:
When evening comes, the pain of love
becomes more painful, and the separated lover's heart laments, "What good
did I do in the morning? What evil did I do in the evening?"
👉குறள் 1226:
மாலைநோய்
செய்தல்
மணந்தார்
அகலாத
காலை
அறிந்த
திலேன்.
மு.வ உரை:
மாலைப்
பொழுது
இவ்வாறு
துன்பம்
செய்ய
வல்லது
என்பதைக்
காதலர்
என்னை
விட்டு
அகலாமல்
உடனிருந்த
காலத்தில்
யான்
அறியவில்லை.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு
எனக்கு
மகிழ்ச்சி
தந்த
மாலைப்பொழுது
இப்படித்
துன்பம்
தரும்
என்பதை,
என்னை
மணந்த
காதலர்
என்னைப்
பிரிவதற்கு
முன்பு
நான்
அறிந்தது
கூட
இல்லை.
கலைஞர் உரை:
மாலைக்காலம்
இப்படியெல்லாம்
இன்னல்
விளைவிக்கக்
கூடியது
என்பதைக்
காதலர்
என்னை
விட்டுப்
பிரியாமல்
இருந்த
போது
நான்
அறிந்திருக்கவில்லை.
English Explanation:
I didn't know that evening could
bring such suffering when my lover didn't leave me.
👉குறள் 1227:
காலை
அரும்பிப்
பகலெல்லாம்
போதாகி
மாலை
மலருமிந்
நோய்.
மு.வ உரை:
இந்த
காமநோய்,
காலைப்பொழுதில்
அரும்பாய்த்
தோன்றி,
பகற்பொழுதெல்லாம்
பேரரும்பாய்
வளர்ந்து
மாலைப்பொழுதில்
மலராகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
காதல்
துன்பமாகிய
இப்பூ,
காலையில்
அரும்புகிறது;
பகலில்
முதிர்கிறது;
மாலைப்பொழுதில்
மலர்ந்து
விடுகிறது.
கலைஞர் உரை:
காதல்
என்பது
காலையில்
அரும்பாகி,
பகல்
முழுதும்
முதிர்ச்சியடைந்து,
மாலையில்
மலரும்
ஒரு
நோயாகும்.
English Explanation:
Love is a disease that begins in the morning, matures
throughout the day, and blooms in the evening.
👉குறள் 1228:
அழல்போலும்
மாலைக்குக்
தூதாகி
ஆயன்
குழல்போலும்
கொல்லும்
படை.
மு.வ உரை:
ஆயனுடைய
புல்லாங்குழல்,
நெருப்புப்போல்
வருத்தும்
மாலைப்பொழுதிற்குத்
தூதாகி
என்னைக்
கொல்லும்
படையாகவும்
வருகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு
இனிதாய்
ஒலித்த
ஆயனின்
புல்லாங்குழல்
இப்போது
நெருப்பாய்ச்
சுடும்
மாலைப்
பொழுதிற்கு்
தூதானது
மட்டும்
அன்றி,
என்னைக்
கொல்லும்
ஆயுதமுமாகிவிட்டது.
கலைஞர் உரை:
காதலர்
பிரிவால்
என்னைத்
தணலாகச்
சுடுகின்ற
மாலைப்பொழுதை
அறிவிக்கும்
தூதாக
வருவது
போல
வரும்
ஆயனின்
புல்லாங் குழலோசை
என்னைக்
கொல்லும்
படைக்கருவியின்
ஓசைபோல்
அல்லவா
காதில்
ஒலிக்கிறது.
English Explanation:
The shepherd's flute now sounds as a
fiery forerunner of night, and is become a weapon that slays (me).
👉குறள் 1229:
பதிமருண்டு
பைதல்
உழக்கும்
மதிமருண்டு
மாலை
படர்தரும்
போழ்து.
மு.வ உரை:
அறிவு
மயங்கும்படியாக
மாலைப்பொழுது
வந்து
படரும்போது,
இந்த
ஊரும்
மயங்கி
என்னைப்
போல்
துன்பத்தால்
வருந்தும்.
சாலமன் பாப்பையா உரை:
இதற்கு
முன்பு
நான்
மட்டும்தான்
மயங்கித்
துன்புற்றேன்;
இனிப்
பார்த்தவர்
எல்லாம்
மதி
மயங்கும்படி
மாலைப்
பொழுது
வரும்போது
இந்த
ஊரே
மயங்கித்
துன்பப்படும்.
கலைஞர் உரை:
என்
அறிவை
மயக்கும்
மாலைப்
பொழுது,
இந்த
ஊரையே
மயக்கித்
துன்பத்தில்
ஆழ்த்துவது
போல்
எனக்குத்
தோன்றுகிறது.
English Explanation:
When night comes on confusing
(everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in
sorrow.
👉குறள் 1230:
பொருள்மாலை
யாளரை
உள்ளி
மருள்மாலை
மாயுமென்
மாயா
உயிர்.
மு.வ உரை:
( பிரிவுத்
துன்பத்தால்)
மாயமாய்
நின்ற
என்
உயிர்,
பொருள்
காரணமாகப்
பிரிந்து
சென்ற
காதலரை
நினைந்து
மயங்குகின்ற
இம்
மாலைப்பொழுதில்
மாய்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
என்னைப்
பிரிந்தபோது
பொறுத்துக்
கொண்ட
என்
உயிர்,
பொருள்
மயக்கமே
பெரிதாக
உடைய
அவரை
நினைத்து
மயங்கும்
இந்த
மாலைப்
பொழுதில்
மடிகின்றது.
கலைஞர் உரை:
பொருள்
ஈட்டுவதற்கச்
சென்றுள்ள
காதலரை
எண்ணி
மாய்ந்து
போகாத
என்னுயிர்,
மயக்கும்
இந்த
மாலைப்
பொழுதில்
மாய்ந்து
போகின்றது.
English Explanation:
My (hitherto) unextinguished life is now lost in this
bewildering night at the thought of him who has the nature of wealth.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment