நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
மனைவி: உங்களை என்ன பண்ணுற எண்டு , எனக்கு ஒண்டும் புரியலை!
கணவன்: அதே கஷ்டம் தானடி எனக்கும்!
-02-
கணவன்: நீ இல்லாம நானே இல்லையடியம்மா!.
மனைவி: ஒ! எனக்கு புரியுது.. வாடகை வீட்டுக்காரங்க இன்றைக்கு வாரேன்னு சொன்னதுக்குத்தான் இந்த டயலாக்ஆக்கும் !
-03-
மனைவி: என் make-up எப்படி இருக்கு?
கணவன்: அங்க பார்த்தியா? Mirror கூட உன் அழகைக் கண்டு மிரண்டு அசையாம நிக்குது!
-04-
மனைவி: நானும் திடீர்னு வேலைக்குப் போறேன்னு சொன்னா என்ன பண்ணுவே?
கணவன்: ஒரு கோவில் கெட்டிபம் வைத்து கொண்டாடுவேன்!
-05-
போலீஸ்: நீ திருட சென்ற வீட்டில் யாரும் இல்லையா?
திருடன்: இருந்தாங்க சார், நான் கதவைத்தட்டி bank யிலிருந்து வந்திருக்கேன் எண்டதும் , எடுத்த லோன் ஐ நினைச்சு எல்லாரும் பின்பக்கத்தால ஓடி போயிட்டாங்க சார்!
-06-
போலீஸ்: ஊர்ல எத்தனையோ வங்கிகள் இருக்க நீ ஏன் அரசியல் வாதி வீட்ல திருடப் போனாய்?
திருடன்: வங்கியில இல்லாத பணம் அங்கை கிடைக்கும் எண்டுதான்!
-07-
போலீஸ்: ஏன் சாமி கோயிலில நகை திருடுனே?
திருடன்: உண்ணா சொத்து மண்ணாகிப் போகக் கூடாதே எண்டுதான் சார்!
-08-
ஆசிரியர்: இந்த கவிதை யாரால் எழுதப்பட்டது?
மாணவன்: WhatsApp group-ல யாரோ Forward பண்ணிருந்தாங்க டீச்சர்!
-09-
ஆசிரியர்: Exam-க்கு என்ன தயார் பண்ணீங்க?
மாணவன்: மொபைல் , சார்ச்சர் எல்லாம் ரெடி சார்.
-10-
ஆசிரியர்: இந்த தவணை எப்பிடி போச்சுது?
மாணவன்: (அலுப்புடன்)எங்க சார்! வந்த சினிமாப் படங்கள் பார்த்து முடியலை, அதுக்கிடையில பரீட்சை வந்திட்டுது.
-11-
மாமி: அளவுக்கு மிஞ்சின makeup ஏன் பண்ணுறாய்?
மருமகள்: அப்பதான் பாக்கிறவங்க, இங்க மாமியார் கொடுமை இல்லையென்று நம்புவாங்கள்.
மாமி:(இனியும் வாய் திறப்பாளா மாமி)
-12-
மாமி: உங்க அம்மா உங்களை நல்லாய் வளர்த்தாங்களா?
மருமகள்: ஆமாம் மாமி, பெரிய ஆசையோட , அன்போட வளர்த்தாங்க… அப்புறமா வேள்விக்கிடாயை நேர்ந்து விட்டமாதிரி உங்க பையனுக்குத் தானம் பண்ணிட்டாங்க!
-13-
பாட்டி: உங்க உடுப்பு ரொம்ப கம்மியா இருக்கும்மா?
இளஞ்சிறுமி: இருக்குதா பாட்டி…அதுதான் நிறைய likes வந்துச்சே!
-14-
பாட்டி: வீட்டில உள்ளவர்களோட சிரிச்சுப் பேச மாட்டியா?
பேத்தி: பாட்டி, ரீல் லை போய்ப்பாருங்க, வகை வகையான என் சிரிப்புக்கெல்லாம் எப்பிடியெல்லாம் காமென்ஸ் வந்திருக்கென்னு!
-15-
பாட்டி: அடியே, உன்ர மேற்சட் டையில கை இல்லையே!
பேத்தி: நான் ஒன்னும் கைவெளங்கதவளில்லை , என்கிட்ட இருக்கிற இரண்டு கையும் எனக்குப் போதும் பாட்டி.
-16-
முட்டாள்: வங்கியில போய் பணம் எடுக்கப் போறேன்…
நண்பன்: கணக்கு வைச்சுருக்கிறியா?
முட்டாள்: இல்லை, கண்(துப்பாக்கி) வைச்சிருக்கேன்!
-17-
முட்டாள்: நான் இன்னைக்கு காலையில பேய் பார்த்தேனேடி!
நண்பி: எங்கேயடி?
முட்டாள்: நம்ம கண்ணாடியில தான்…!
-18-
நீதிபதி: நீ குற்றவாளியா?
குற்றவாளி: இல்ல சார், என்னை வீட்டில கூட என் மனைவி என்னை ஒரு குற்றவாளி மாதிரி தான் நடத்துறாங்க!
-19-
நீதிபதி: நீதிமன்றத்துக்கு இன்றைக்கு நீ தாமதமாய் வந்ததுக்கு காரணம் என்ன?
குற்றவாளி: (வெட்கத்துடன்)அது சார்… நான் காலையில் திருடப் போன வீட்டுல காதலில வீழ்ந்திட்டன் சார்!
-20-
நீதிபதி: உனக்கு யார் வக்கீல்?
குற்றவாளி: ChatGPT தான் சார்.
ஆக்கம்::செ . மனுவேந்தன்
0 comments:
Post a Comment