திருக்குறள் தொடர்கிறது…
125. நெஞ்சொடு
கிளத்தல்
குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கு மருந்து.
மு.வ உரை:
நெஞ்சே!
( காதலால்
வளர்ந்த)
இத்
துன்ப
நோயைத்
தீர்க்கும்
மருந்து
ஏதாவது
ஒன்றை
நீ
நினைத்துப்
பார்த்து
எனக்குச்
சொல்ல
மாட்டாயோ?
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே!
எதனாலும்
தீராத
என்
நோயைத்
தீர்க்கும்
மருந்து
ஏதாவது
ஒன்றை
எண்ணிப்
பார்த்துச்
சொல்லமாட்டாயா?
கலைஞர் உரை:
எந்த
மருந்தினாலும்
தீராத
என்
காதல்
நோய்
தீர்ந்திட
ஏதாவது
ஒரு
மருந்தை
நினைத்துப்
பார்த்து,
நெஞ்சே!
உன்னால்
சொல்ல
முடியுமா?
English Explanation:
O my soul, will you not think and tell me some medicine be
it what it may, that can cure this incurable malady?
குறள் 1242:
காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு.
மு.வ உரை:
என்
நெஞ்சே!
வாழ்க!
அவர்
நம்மிடம்
காதல்
இல்லாதவராக
இருக்க,
நீ
மட்டும்
அவரை
நினைந்து
வருந்துவது
உன்
அறியாமையே!
சாலமன் பாப்பையா உரை:
என்
நெஞ்சே
நீ
வாழ்ந்து
போ;
அவர்
நம்மீது
அன்பு
இல்லாதவராக
இருக்க,
நீ
மட்டும்
அவர்
வரவை
எண்ணி
வருந்துவது
மூடத்தனமே.
கலைஞர் உரை:
அவர்
நமது
காதலை
மதித்து
நம்மிடம்
வராத
போது,
நெஞ்சே!
நீ
மட்டும்
அவரை
நினைத்து
வருந்துவது
அறியாமையாகும்;
நீ
வாழ்க.
English Explanation:
Is folly, fare thee well my heart!
குறள் 1243:
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
மு.வ உரை:
நெஞ்சே
(என்னுடன்)
இருந்து
அவரை
நினைந்து
வருந்துவது
ஏன்?
இந்தத்
துன்பநோயை
உண்டாக்கியவரிடம்
இவ்வாறு
அன்பு
கொண்டு
நினைக்கும்
தன்மை
இல்லையே!
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே!
அவர்
இருக்கும்
இடத்திற்கும்
போகாமல்,
இங்கே
இறந்தும்
போகாமல்,
இங்கிருந்தபடியே
அவர்
வருவதை
எண்ணி
நீ
வருந்துவது
ஏன்?
நமக்கு
இந்தத்
துன்ப
நோயைத்
தந்தவர்க்கு
நம்மீது
இரக்கப்படும்
எண்ணம்
இல்லை.
கலைஞர் உரை:
பிரிவுத்
துன்பம்
தந்த
காதலருக்கு
நம்மிடம்
இரக்கமில்லாத
போது,
நெஞ்சே!
நீ
மட்டும்
இங்கிருந்து
கொண்டு
அவரை
எண்ணிக்
கலங்குவதால்
என்ன
பயன்?
English Explanation:
O my soul! why remain (here) and suffer thinking (of him)?
There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of
sorrow.
குறள் 1244:
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று.
மு.வ உரை:
நெஞ்சே!
நீ
அவரிடம்
செல்லும்போது
என்
கண்களையும்
உடன்
கொண்டு
செல்வாயாக;
அவரைக்
காணவேண்டும்
என்று
இவை
என்னைப்
பிடுங்கித்
தின்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே!
நீ
அவரைக்
காணச்
சென்றால்
என்
கண்களையும்
உடன்
கொண்டு
செல்.
அவற்றை
விட்டுவிட்டு
நீ
போய்
விடுவாயானால்
அவரைக்
காண
விரும்பும்
என்
கண்கள்
என்னைத்
தின்பன
போல
வருந்தும்.
கலைஞர் உரை:
நெஞ்சே!
நீ
காதலரிடம்
செல்லும்
போது
கண்களையும்கூட
அழைத்துக்கொண்டு
போ;
இல்லையேல்
அவரைக்
காண
வேண்டுமென்று
என்னையே
அவை
தின்று
விடுவது
போல்
இருக்கின்றன.
English Explanation:
O my soul! take my eyes also with
you, (if not), these would eat me up (in their desire) to see him
குறள் 1245:
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.
மு.வ உரை:
நெஞ்சே!
யாம்
விரும்பி
நாடினாலும்
எம்மை
நாடாத
அவர்
நம்மை
வெறுத்து
விட்டார்
என்று
எண்ணிக்
கைவிட
முடியுமோ?
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே!
நான்
அவர்மீது
அன்பு
காட்டியும்,
என்மீது
அன்பு
காட்டாத
அவரை,
நம்மை
வெறுத்தவர்
என்று
எண்ணிக்
கைவிடும்
உள்ள
உறுதி
எனக்கு
உண்டோ?
கலைஞர் உரை:
நெஞ்சே!
நாம்
விரும்பினாலும்
நம்மை
விரும்பி
வராத
அவர்,
நம்மை
வெறுத்து
விட்டார்
என
நினைத்து
அவர்
மீது
கொண்ட
காதலைக்
கைவிட்டு
விட
முடியுமா?
English Explanation:
O my soul! can he who loves not though he is beloved, be
forsaken saying he hates me (now)?
குறள் 1246:
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு
காய்தியென் நெஞ்சு.
மு.வ உரை:
என்
நெஞ்சே!
ஊடியபோது
கூடி
ஊடல்
உணர்த்த
வல்ல
காதலரைக்
கண்டபோது
நீ
பிணங்கி
உணர
மாட்டாய்;
பொய்யான
சினங்கொண்டு
காய்கினறாய்.
சாலமன் பாப்பையா உரை:
என்
நெஞ்சே!
நான்
அவருடன்
ஊடினால்
அந்த
ஊடலை
என்னுடன்
கூடி
நீக்கவல்ல
என்
அன்பரைக்
கண்டால்
பொய்யாகவாவது
கொஞ்சம்
ஊடிப்
பிறகு
ஊடலை
விட்டுக்
கூடமாட்டோம்.
இப்போது
அதையும்
விட்டுவிட்டு
அவரைக்
கொடியவர்
எனப்
பொய்யாக
வெறுப்பது
போல்
இருக்கின்றாய்;
இதை
விடுத்து
அவரிடம்
போயேன்.
கலைஞர் உரை:
நெஞ்சே!
கூடிக்
கலந்து
ஊடலை
நீக்கும்
காதலரைக்
கண்டால்
ஒரு
தடவைகூடப்
பிணங்கியறியாத
நீ
இப்போது
அவர்
மீது
கொள்ளுகிற
கோபம்
பொய்யானது
தானே?
English Explanation:
O my soul! when you see the dear one who remove dislike by
intercourse, you are displeased and continue to be so Nay, your displeasure is
(simply) false.
குறள் 1247:
காமம்
விடுவொன்றோ
நாண்விடு
நன்னெஞ்சேயானோ
பொறேனிவ்
விரண்டு.
மு.வ உரை:
நல்ல
நெஞ்சே!
ஒன்று
காமத்தை
விட்டு
விடு;
அல்லது
நாணத்தை
விட்டு
விடு;
இந்த
இரண்டையும்
பொறுத்துக்
கொண்டிருக்க
என்னால்
முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல
நெஞ்சே!
ஒன்று
காதல்
விருப்பத்தை
விடு;
அல்லது
நாணத்தை
விடு;
இரண்டையுமே
விடமுடியாது
என்பது
உன்
எண்ணம்
என்றால்,
ஒன்றிற்கொன்று
வேறுபட்ட
இந்த
இரண்டையும்
சேர்த்துத்
தாங்கும்
ஆற்றல்
எனக்கு
இல்லை.
கலைஞர் உரை:
நல்ல
நெஞ்சமே!
ஒன்று
காதலால்
துடிப்பதையாவது
விட்டு
விடு;
அல்லது
அதனைத்
துணிந்து
சொல்ல
முடியாமல்
தடுக்கும்
நாணத்தையாவது
விட்டு
விடு
இந்த
இரண்டு
செய்லகளையும்
ஒரே
நேரத்தில்
தாங்கிக்
கொள்ள
என்னால்
முடியாது.
English Explanation:
O my good soul, give up either lust
or honour, as for me I can endure neither.
குறள் 1248:
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.
மு.வ உரை:
என்
நெஞ்சே!
பிரிவுத்
துன்பத்தால்
வருந்தி
அவர்
வந்து
அன்பு
செய்ய
வில்லையே
என்று
ஏங்கி
பிரிந்தவரின்
பின்
செல்கின்றாய்
பேதை.
சாலமன் பாப்பையா உரை:
என்
நெஞ்சே!
நம்
பிரிவுத்
துன்பத்தை
அவர்
அறியார்.
அதனால்
வருந்தி
அவர்
நம்மீது
அன்பு
காட்டாமல்
இருக்கின்றார்
என்று
எண்ணி,
நம்
நிலையை
அவர்க்குக்
கூறுவதற்காக,
அவர்
பின்னே
ஏங்கிச்
செல்லும்
நீ
ஏதும்
அறியாத
பேதையே!
கலைஞர் உரை:
நம்மீது
இரக்கமின்றிப்
பிரிந்து
விட்டாரேயென்று
ஏங்கிடும்
அதே
வேளையில்
பிரிந்தவர்
பின்னாலேயே
சென்று
கொண்டிருக்கும்
என்
நெஞ்சம்
ஓர்
அறிவற்ற
பேதை
போன்றதாகும்.
English Explanation:
You are a fool, O my soul! to go
after my departed one, while you mourn that he is not kind enough to favour you.
குறள் 1249:
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
மு.வ உரை:
என்
நெஞ்சே!
காதலர்
உன்
உள்ளத்தில்
உள்ளவராக
இருக்கும்போது
நீ
அவரை
நினைத்து
யாரிடம்
தேடிச்
செல்கின்றாய்?
சாலமன் பாப்பையா உரை:
என்
நெஞ்சே!
நம்
அன்பர்
நம்
மனத்திற்குள்ளேயே
இருக்க,
நீ
அவரைத்
தேடி
எவரிடம்
போகிறாய்?
கலைஞர் உரை:
உள்ளத்திலேயே
காதலர்
குடி
கொண்டிருக்கும்போது,
நெஞ்சமே!
நீ
அவரை
நினைத்து
வெளியே
எவரிடம்
தேடி
அலைகிறாய்?
English Explanation:
O my soul! to whom would you repair, while the dear one is
within yourself?
குறள் 1250:
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
மு.வ உரை:
நம்மோடு
பொருந்தி
இருக்காமல்
கைவிட்டுச
சென்ற
காதலரை
நெஞ்சில்
வைத்திருக்கும்போது
இன்னும்
மெலிந்து
அழகை
இழந்து
வருகின்றோம்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மைக்
கலவாமல்
பிரிந்து
போனவரை
நாம்
நம்
மனத்திற்குள்ளேயே
கொண்டிருப்பதால்
முன்பு
இழந்த
புற
அழகை
மட்டுமே
அன்று
இருக்கும்
அக
அழகையும்
இழக்கப்
போகிறோம்.
கலைஞர் உரை:
சேராமல்
பிரிந்து
சென்ற
காதலரைச்
சிந்தையில்
வைத்திருப்பதால்
மேலும்
மேனியெழில்
இழந்து
மெலிந்து
அழிய
வேண்டியுள்ளது.
English Explanation:
If I retain in my heart him who has left me without
befriending me, I shall lose even the (inward) beauty that remains.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment