திருக்குறள் தொடர்கிறது…
128. குறிப்பறிவுறுத்தல்.
குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
மு.வ உரை:
நீ
சொல்லாமல்
மறைத்தாலும்
நிற்காமல்
உன்னைக்
கடந்து
உன்னுடைய
கண்கள்
எனக்குச்
சொல்லக்
கூடிய
செய்தி
ஒன்று
இருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
நீ
சொல்லாது
மறைத்தாலும்,
மறைக்க
உடன்படாமல்,
உன்
மை
தீட்டப்
பெற்ற
கண்களே
எனக்குச்
சொல்ல
விரும்பும்
செய்தி
ஒன்று
உண்டு.
கலைஞர் உரை:
வெளியில்
சொல்லாமல்
மறைக்கப்
பார்த்தாலும்,
நிற்காமல்
தடைகடந்து
விழிகள்
சொல்லக்கூடிய
செய்தி
ஒன்று
உண்டு;
அதுதான்
பிரிவை
விரும்பாத
காதல்.
English Explanation:
Though you would conceal (your
feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they
tell (me) something.
குறள் 1272:
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது.
மு.வ உரை:
கண்
நிறைந்த
அழகும்
மூங்கில்
போன்ற
தோளும்
உடைய
என்
காதலிக்குப்
பெண்மைத்தன்மை
நிறைந்து
விளங்கும்
இயல்பு
மிகுதியாக
உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
என்
கண்
நிறைந்த
அழகையும்,
மூங்கிலைப்
போன்ற
தோளையும்
உடைய
இப்பேதைக்குப்
பெண்கள்
எல்லாரிடமும்
இருக்கும்
குண
மேன்மையிலும்
அதிக
மேன்மை
இருக்கிறது.
கலைஞர் உரை:
கண்நிறைந்த
அழகும்
மூங்கில்
போன்ற
தோளும்
கொண்ட
என்
காதலிக்குப்
பெண்மைப்
பண்பு
நிறைந்திருப்பதே
பேரழகாகும்.
English Explanation:
Unusually great is the female
simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble
the bamboo.
குறள் 1273:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.
மு.வ உரை:
( கோத்த)
மணியினுள்
விளங்கும்
நூலைப்
போல்
என்
காதலியின்
அழகினுள்
விளங்குவதான
குறிப்பு
ஒன்று
இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
கோக்கப்பட்ட
பளிங்கிற்குள்
கிடந்து
வெளியே
தெரியும்
நூலைப்
போல
இவளின்
அழகிற்குள்
கிடந்து
வெளியே
தெரியும்
குறிப்பு
ஒன்று
உண்டு.
கலைஞர் உரை:
மணியாரத்திற்குள்
மறைந்திருக்கும்
நூலைப்போல
இந்த
மடந்தையின்
அழகுக்குள்ளே
என்னை
மயக்கும்
குறிப்பு
ஒன்று
உளது.
English Explanation:
There is something that is implied
in the beauty of this woman, like the thread that is visible in a garland of
gems.
குறள் 1274:
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
மு.வ உரை:
அரும்பு
தோன்றும்போது
அடங்கியிருக்கும்
மணத்தைப்
போல்,
காதலியின்
புன்முறுவலின்
தோற்றத்தில்
அடங்கி
இருக்கும்
குறிப்பு
ஒன்று
உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
மலராத
அரும்புக்குள்
நறுமணம்
அடங்கியிருப்பது
போலத்தான்
ஒரு
பெண்ணின்
புன்னகையென்ற
அரும்புக்குள்
அவளது
காதலனைப்பற்றிய
நினைவும்
நிரம்பியிருக்கிறது.
கலைஞர் உரை:
மலராத
அரும்புக்குள்
நறுமணம்
அடங்கியிருப்பது
போலத்தான்
ஒரு
பெண்ணின்
புன்னகையென்ற
அரும்புக்குள்
அவளது
காதலனைப்பற்றிய
நினைவும்
நிரம்பியிருக்கிறது.
English Explanation:
There is something in the unmatured
smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
குறள் 1275:
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.
மு.வ உரை:
காதலி
என்னை
நோக்கி
செய்து
விட்டுச்
சென்ற
கள்ளமான
குறிப்பு,
என்
மிக்க
துயரத்தைத்
தீர்க்கும்
மருந்து
ஒன்று
உடையதாக
இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நெருங்கி
வளையல்களை
அணிந்த
என்
மனைவி
நான்
மட்டுமே
அறிய
மறைத்துக்
காட்டும்
ஒரு
குறிப்பில்
என்
பெருங்கவலையைத்
தீர்க்கும்
மருந்து
ஒன்றும்
உண்டு.
கலைஞர் உரை:
வண்ணமிகு
வளையல்கள்
அணிந்த
என்
வடிவழகியின்
குறும்புத்தனமான
பார்வையில்,
என்னைத்
துளைத்தெடுக்கும்
துன்பத்தைத்
தீர்க்கும்
மருந்தும்
இருக்கிறது.
English Explanation:
The well-meant departure of her
whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.
குறள் 1276:
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
மு.வ உரை:
பெரிதும்
அன்பு
செய்து
விரும்புமாறு
கூடுதல்,
அரிதாகிய
பிரிவைச்
செய்து
பிறகு
அன்பில்லாமல்கைவிட
எண்ணுகின்ற
குறிப்பை
உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அவரைப்
பிரிந்து
இருந்ததால்
ஏற்பட்ட
துன்பத்தினைப்
பெரிதும்
பொறுத்துக்
கொண்டு
இப்போது
நான்
மகிழும்
வண்ணம்
அவர்
என்னைக்
கூடுவது
அவரது
அன்பின்மையை
எண்ணிப்
பார்க்கச்
செய்கிறது.
கலைஞர் உரை:
ஆரத்
தழுவி
அளவற்ற
அன்பு
காட்டி
அவர்
என்னைக்
கூடுவதானது
மீண்டும்
அவர்
என்னைப்
பிரிந்து
செல்லப்
போகிற
குறிப்பை
உணர்த்துவது
போல்
இருக்கிறதே.
English Explanation:
The embrace that fills me with
comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating
on his want of love.
குறள் 1277:
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
மு.வ உரை:
குளிர்ந்த
துறையை
உடைய
காதலன்
பிரிந்த
பிரிவை
நம்மை
விட
முன்னமே
நம்முடைய
வளையல்கள்
உணர்ந்து
கழன்று
விட்டனவே!
சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த
துறைகளுக்குச்
சொந்தக்காரரான
அவர்
என்னை
உடலால்
கூடி
உள்ளத்தால்
பிரிந்திருப்பதை
என்னைக்
காட்டிலும்
என்
கை
வளையல்கள்
முன்னமே
அறிந்துவிட்டன.
கலைஞர் உரை:
குளிர்ந்த
நீர்த்
துறைக்கு
உரிய
காதலன்
உடலால்
கூடியிருக்கும்
போது,
உள்ளத்தால்
பிரியும்
நினைவு
கொண்டதை
என்
வளையல்கள்
எனக்கு
முன்னரே
உணர்ந்து
கழன்றன
போலும்!
English Explanation:
My bracelets have understood before me the (mental)
separation of him who rules the cool seashore.
குறள் 1278:
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
மு.வ உரை:
எம்முடைய
காதலர்
நேற்றுதான்
பிரிந்து
சென்றார்;
யாமும்
மேனி
பசலை
நிறம்
அடைந்து
ஏழு
நாட்கள்
ஆய்விட்ட
நிலையில்
இருக்கின்றோம்.
சாலமன் பாப்பையா உரை:
என்
காதலர்
நேற்றுத்தான்
என்னைப்
பிரிந்து
போனார்;
அப்பிரிவிற்கு
வாடி
என்
மேனியின்
நிறம்
வேறுபட்டு
ஏழு
நாள்களாகிவிட்டன.
கலைஞர் உரை:
நேற்றுத்தான்
எம்
காதலர்
பிரிந்து
சென்றார்;
எனினும்,
பல
நாட்கள்
கழிந்தன
என்பது
போல்
பசலை
நிறம்
எம்மைப்
பற்றிக்
கொண்டதே.
English Explanation:
It was but yesterday my lover
departed (from me); and it is seven days since my complexion turned sallow.
குறள் 1279:
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் தது.
மு.வ உரை:
தன்னுடைய
வளையல்களை
நோக்கி,
மெல்லிய
தோள்களையும்
நோக்கித்
தன்னுடைய
அடிகளையும்
நோக்கி
அவள்
செய்த
குறிப்பு
உடன்போக்காகிய
அதுவேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நீ
என்னைப்
பிரிந்தால்
இவை
என்னுடன்
இருக்கமாட்டா
என்று
கை
வளையல்களைப்
பார்த்தாள்.
துணையாக
தன்
மெல்லிய
தோள்களும்
மெலியும்
என
அவற்றைப்
பார்த்தாள்;
இவை
இரண்டும்
நடக்காதபடி
நீர்
நடந்து
கொள்ள
வேண்டும்
என்று
தன்
பாதங்களையும்
பார்த்தாள்,
பிரிந்தால்
நானும்
உடன்
வருவேன்
என்ற
ஒரு
குறிப்பும்
இதனுள்
இருக்கிறது.
கலைஞர் உரை:
பிரிவு
காரணமாகக்
கழலக்
கூடிய
வளையலையும்,
மெலிந்து
போகக்
கூடிய
மென்மையான
தோளையும்
நோக்கியவன்
காதலனைத்
தொடர்ந்து
செல்வதென்ற
முடிவைத்
தன்
அடிகளை
நோக்கும்
குறிப்பால்
உணர்த்தினான்.
English Explanation:
She looked at her bracelets, her
tender shoulders, and her feet; this was what she did there (significantly).
குறள் 1280:
பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.
மு.வ உரை:
கண்ணினால்
காமநோயைத்
தெரிவித்துப்
பிரியாமல்
இருக்குமாறு
இரத்தல்,
பெண்
தன்மைக்கு
மேலும்
பெண்
தன்மை
உடையது
என்று
கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்கள்
தம்
காதல்
நோயைக்
கண்ணாலேயே
சொல்லி
அதைத்
தீர்க்கும்படி
வேண்டுவது
பெண்மை.
மேலும்
ஒரு
பெண்மையைக்
கொண்டிருப்பதாகும்
என்பர்
அறிந்தோர்.
கலைஞர் உரை:
காதல்
வேட்கையைக்
கண்களால்
உணர்த்திக்
காதலனுடன்
போவதற்கு
இரந்து
நிற்கும்போது
பெண்மைக்குப்
பெண்மை
சேர்த்தாற்
போன்று
இருக்கின்றது.
English Explanation:
To express their love-sickness by
their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment