நகைச்சுவை=ஜோக்ஸ்
01-
தாய்: இன்றைய வரலாறு பாடம் எப்படி இருந்தது?
மகன்: ரொம்ப நல்லா இருந்தது அம்மா, ஆனா ரீச்சர் கோபமா போனாங்க!
தாய்: ஏன் டா?
மகன்: அவங்க சொன்னாங்க “அலெக்ஸாண்டர் உலகையே வென்றவன்!”ன்னு. நான் கேட்டேன் “அம்மா, அவன் World Cupயும் வென்றானா?”ன்னு 😅
தாய்: (சிரித்து) உன் கேள்விக்கு பதில் சொல்லனும்னா வரலாறு புத்தகத்தைக் கூட புதுசா எழுதணும்!
02-
தாய்: பாடசாலையால வரேக்கை ஏண்டா அழுதுகொண்டு வாறே?
மகன்: அம்மா… ஆசிரியர் சொன்னாங்க — “மாணவர்களுக்கு ஆறு மணித்தியாலம் நித்திரை போதுமாம்” என்று!
தாய்: அதுக்கென்னடா அழுகிறாய்?
மகன்: அதுக்காக அல்ல அம்மா… எனக்கொரு சந்தேகம் வந்தது!
தாய்: என்ன சந்தேகம்?
மகன்: “ஆறு மணித்தியால நித்திரை வகுப்பிலையா? இல்ல வீட்டிலையா?” என்று கேட்டேன்…
தாய்: 😳😳
மகன்: அதுக்கே ரீச்சர் கோபமா வெழுவெழு என்று அடிச்சாங்க! 😢
03-
ஆசிரியர்: “எழுத்து” என்றால் என்ன?
மாணவன்: பேனாவால் எழுதுறதுதான் எழுத்து, மாஸ்டர்!
ஆசிரியர்: சரி, “மொழி” என்றால்?
மாணவன்: வாயால் எழுதுறது மாஸ்டர்! 😅
ஆசிரியர்: (சிரித்து) உன் வாயை ஓர் நாள் ‘பேனா’னு விற்கலாம் போல இருக்கு! ✏️😂
04-
ஆசிரியர்: நீ 100 ரூபாய் வைத்திருக்கிறாய். அதில் 50 ரூபாய் உன் பக்கத்தில் உள்ள நண்பனுக்கு கொடுத்தால் எத்தனை ரூபாய் உனக்கு மீறும்?
மாணவன்: பக்கத்தில நண்பனே இருக்க மாட்டான் மாஸ்டர்! 😎
ஆசிரியர்: 😳 (சிரித்து) அப்போ உனக்கு இனி கணிதம் வேண்டாம் — மனதில சமன்பாடு போதும்! 😂
05-
மனைவி: இனிமேல் டயட் ஆரம்பிக்கணும்!
கணவன்: நல்லது தான்! ஆனா உன் டயட் பட்டியலில் என்ன இருக்கு?
மனைவி: காலை – இட்லி, மதியம் – சாம்பார் சாதம், இரவு – பீட்சா!
கணவன்: அதுக்கு பெயர் டயட் இல்ல… தீயட்! 🍕😂
06-
மாணவி 1: கம்ப்யூட்டர் வகுப்பு எப்படிப் போச்சு?
மாணவி 2: ரொம்ப பயமா இருந்தது!
மாணவி 1: ஏன்?
மாணவி 2: சின்ன வயசிலிருந்தே மெளவுஸ் என்றால் எனக்குப் பயம்😂
07-
ரோகி: டாக்டர், எனக்கு காலையிலிருந்து சரியான தலையிடியாயிருக்கு!
டாக்டர்: நீ இரவு நன்றாகத் தூங்கினாயா?
ரோகி: ஆம், ஆனா கனவிலே என் கணவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
08-
மனைவி: இண்டைக்கு எனக்கு ஒரு நல்ல ஆச்சரியமான செய்தி சொல்லுவீங்களா ?
கணவன்: நீ இண்டைக்கு என் மேல எரிஞ்சு விழவில்லை என்றால் அதுதான் ஆச்சரியமான செய்தி!
09-
மனைவி: என்னை ஏன் காதலிச்சீங்க?
கணவன்: நான் என்ன பாவம் செய்தேனோ தெரியலையே!
10-
மனைவி: எனக்காக ஒருமுறை யோசிக்க மாட்டேங்களா?
கணவன்: பலமுறை யோசிக்கிறேன் … எப்படி உங்களுக்குக் கோபம் வராமல் நான் இருக்கனும் என்று!
11-
மனைவி: இந்த வீட்டுல யாரு Boss?
கணவன்: (அடக்கத்துடன்) இருவரும்…
மனைவி: எதிர்காலத்தை யோசிச்சு சரியாய் சொல்லுங்க!
கணவன்: நீங்க… நீங்கதான்…!
12-
மன்னர்: பக்கத்து நாட்டில படையெடுக்க அமைதியான வேளை என்ன என்று கூற முடியுமா அமைச்சரே?
அமைச்சர்: ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி தூங்கும் இரவு நேரம் தான் மன்னா!
13-
அமலா: பக்கத்து வீட்டுக்காரி ஜிம்முக்குப் போகத்தேவை இல்லை.
கமலா: ஏன் அப்பிடிச் சொல்லுறாய்?
அமலா: அவள்தானே தன் புருஷனை தினமும் பந்தாடுறாள்.
14-
சர்தார்: Doctor, என்னை யாரோ பின்தொடருற மாதிரியாக இருக்கு!
டாக்டர்: பரவாயில்லை… அது உங்க மனைவி தான்.
15-
சர்தார் மனைவி: என்னப்பா , உங்களு மூளையே இல்லையே!
சர்தார்: அதை கலியாண நாளே நீ எடுத்துட்டியே!
16-
சர்தார் மனைவி: நான் கோபத்துல பேசுறேன்!
சர்தார்: பிரச்சனை இல்லை… நான் பயத்துல கேக்கறேன்.
17-
சர்தார்: நம்மல பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு.
மனைவி: எப்படி?
சர்தார்: நீ பேசிக்கொண்டே இருக்கிறாய், நான் அதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறன்!
18-
சர்தார்
நண்பனுக்கு :“நேற்று இரவு எங்க வீட்டு கெட்ட வானிலை!”
நண்பன்: ‘’ இடிமின்னல், மழை வந்துதா?”
சர்தார்: “இல்ல…தாய் வீட்டால மனைவி வந்துட்டாங்க!”
19-
கட்சித் தலைவர்: இனிமேல் zoom இலதான் அரசியல் கூட்டம் என்று மக்களுக்கு அறிவியுங்கள்
தொண்டர்; ஏனுங்க இந்த முடிவு?
கட்சித் தலைவர்: அவங்க எறியிற செருப்புகள், கற்கள் அவங்கட கொம்பியூட்டர் இனை உடைக்கட்டும்.
20-
அப்பா: என் மகனுக்கு ஏன் சார் அடிச்சீங்க?
ஆசிரியர்:ரயில் பாதையில் ஏன் இரண்டு தண்டவாளம் எண்டு கேட்டால் 'ஒண்ணு ஊருக்குப் போக, இன்னொன்று திரும்பி வர' எண்டு சொல்லுறான்.
அப்பா: ...!!!!!
ஆக்கம்::செ . மனுவேந்தன்
0 comments:
Post a Comment