நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
மனைவி: இந்த வீட்டுல யாருக்கும் வேலைசெய்யத் தெரியாது!
கணவன்: அதான் உன்னை கல்யாணம் நான் பண்ணிக்கிட்டேனே…
-02-
மனைவி: காதலிச்சபோது பிடிச்ச என்னுட குரல் இப்ப மட்டும் உங்களுக்கு ஏன் பிடிக்கல?
கணவன்: காதலிச்சபோது பேசின மெல்லிய volume இலிலை இப்ப கூட பேசினால் பிடியாமலா போகும்?
-03-
கணவன்: நீ எப்ப பார்த்தாலும் கூகிள் -ல தான்!
மனைவி: உன்கிட்ட பேசறத விட கூகிள்- லை பேசினா ஒழுங்கா உடன பதில் குடுக்குது!
-04-
மனைவி: இந்த புடவை வாங்கலன்னா நான் சாப்பாடு உண்ணமாட்டேன்!
கணவன்: உனக்குத்தான் fasting தேவை என்று டாக்டர் சொன்னா கேட்க மாட்டாயே! இனியாவது இரு.
-05-
மனைவி: என் சமையல் எப்படி இருக்கு?
கணவன்: .......!!!
மனைவி: லைவ் insurance வைச்சுருக்கிறியள் தானே. பயப்பிடாமல் சாப்பிடுங்கோ!!
-06-
காதலி: நீ என்னை எதுக்காக காதலிக்கிற காதலிக்கிற எண்டு சொல்லி பின்னால திரியுறாய்?
காதலன்: என்னால உன்னை விட முடியல!
காதலி: ரொமான்டிக்?
காதலன்: இல்லை, நீ என்கிட்ட 10,000 ரூபாய் கடன் வாங்கிருக்காய்!
-07-
காதலி: நாளைக்கு என் Birthday! என்ன Surprise?
காதலன்: நான் நாளைக்கு Phone Switch Off பண்ணுறேன் – அதுதான் Surprise!-
-08-
மாமி: காபி கொஞ்சம் கசக்குது…
மருமகள்: உங்கள் பையன் மாதிரி தான் மாமி… கொஞ்சம் Strong தான்!
-09-
மாமி: நா சமைச்சத தான் நம்ம வீட்டில் சிறந்த சாப்பாடு!
மருமகள்: அதான் மாமி, உங்க பையன் Hotel-லதான் Order பண்டுறாரு!
-10-
நண்பர் 1: நீ ஏன் எப்பவும் எனக்கு இவ்வளவு ஜோக் சொல்றே?
நண்பர் 2: நீ சிரியாத போதெல்லாம் உன்ர முகத்தை பார்க்கச் சகிக்க முடியலை.!
-11-
ஆசிரியர்: என்னுடைய கேள்விக்கு டக்கு டக்கு என்று பதில் சொல்!
மாணவன்: Teacher, Google மாதிரியெல்லாம் என்னால சொல்ல முடியாது!
-12-
ஆசிரியர்: ஏன் என்னுடைய பாடம் கவனமாகக் கேட்கவில்லை?
மாணவன்: Teacher, அதெல்லாம் போனில வொய்ஸ் ரெகார்டிங் இல இருக்கு. வசதியான நேரம் போட்டுக் கேட்கிறேன் டீச்சர்.
-13-
போலீஸ்: நீ ஏன் இப்படி? அடிக்கொருக்கா கைது செய்யவேண்டி உள்ளதே! திருந்த மாட் டாயா ?
திருடன்: ஐயா! நாம திருந்தினால் உங்க வேலை போயிரும்?
-14-
நீதிபதி: சொல்லு, நீ குற்றவாளியா? சுற்றவாளியா?
குற்றவாளி: அது உங்கட தீர்ப்பிலதான் இருக்கு ஐயா!
-15-
நீதிபதி: நீ ஏன் அப்படி சிரிக்கிறாய்?
குற்றவாளி: நீதிமன்றம் காமெடியா இருக்குதுன்னு தான்!
-16-
அயல் வீட்டு பெண்:நீ நேற்று தந்த சோறு கறி ருசி இல்லையே!
அயல் வீட்டு பெண் 2: அதனாலதான் புண்ணியமா போகட்டும் என்று உனக்கு தந்துதவி செயதேன்!
-17-
அயல் வீட்டு பெண்: நீ எப்பவும் சிரிச்சுப் பேசுறாய்!
அயல் வீட்டு பெண் 2: உன்கிட்ட கடன்பட அது தான் என் ஆயுதம்!
-18-
வண்டியில் அமர்ந்தவர்: ஐயா, உங்களிடம் GPS இருக்கா?
டிரைவர்: இல்ல, நானே வழி தவறி, வந்த வழியில தானே திரும்பிப் போய்க்கொண்டு இருக்கிறன்!
-19-
விமானத்தில் பயணி: சார், இந்த சில்லறை change ஆகுமா?
ஏர்ஹோஸ்டஸ்: காசை தருக.அடுத்த ஸ்டாப் வந்ததும் மாற்றித் தருகிறேன்.
-20-
ஆசிரியர்: "நீங்க எல்லாம் ஆம்பிள்ளைங்களா பொண்ணுங்களா?"
மாணவிகள்: “''ஓடவிட்டுப் பாருங்கள் சார், எங்களை யாரென்று புரியும்''”
ஆக்கம்::செ . மனுவேந்தன்
0 comments:
Post a Comment