மூன்று கவிகள்

 


"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"

 

"இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம்

இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்!

இளிச்ச வாய்கள் இனி வேண்டாம்

இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!"

 

"காட்டிக் கொடுத்து கோட்டை  கட்டியது

காலம் கடத்தி நீதி ஏமாற்றியது

காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது

காணும் இனி எழுந்து நில்லு!"

 

"முரசு முழங்கு தானை மூவருங்கூடி

அரசவை இருந்த தோற்றம் போலப் 

தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால்

சிறைகள் எங்கே, வெற்றி எமதே! "

 

 

 

"தித்திக்கும் தீபாவளி"

 

"தித்திக்கும் தீபாவளி யார் சொன்னது?

பத்தினியை தீயில் குதிக்க ஏவியவனை   

சத்தியத்துக்கு மாறாக கொலை செய்தவனை

புத்தி இழந்து கொண்டாடுவது சரியா?"

 

"இறப்பைக் கொண்டாடும்  மனிதமற்ற நிகழ்வே!

இதயத்தில் துளி இரக்கமும் இல்லையா?

இகழ்ந்து உன்னை இழிவாகச் சொல்லுகிறான்

இளிச்சவாயாய் உன் இறப்பையே கொண்டாடுகிறாய்!"

 

 

"சுயம் காப்பாய்"

[அந்தாதி]

 

"சுயம் காப்பாய் மெய்யறிந்து வாழ்வாய்

வாழ்வின் வழியில் கலப்பு வேண்டாம்

வேண்டாத சொற்களை தூக்கி எறிவோம்

எறிந்த சொல்லுக்கு தமிழில் பெயரிடுவோம்

பெயர்கள் எல்லாம் தனித்தமிழில் வரட்டுமே!

வந்து எங்கள் பெருமை சொல்லட்டுமே!!

 

சொல்லிய சொல்லை செயல் ஆக்கி

ஆக்கிய செயலை உறுதியாக தொடர்ந்து 

தொடர்ந்த பெருமைகள் என்றும் வாழ

வாழு கலப்பின்றி சுயம் [சொந்தம்] காப்பாய்!"[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]


சரத்பாபு -மீண்டும் ஒரு கலைஞரின் மறைவு



சத்தியம் பாபு தீக்சிதுலு என்ற இயற்பெயர் கொண்ட சரத் ​​பாபு 31 சூலை 1951-இல் பிறந்தார்.

சரத்பாபு (Sarath Babu, 31 சூலை 1951 – 22 மே 2023) தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973-இல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் [[பட்டினப்பிரவேசம்] என்ற கே. பாலசந்தரின் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

 

சரத் பாபு என்றவுடன் சட்டென்று இந்தப் பாடல் திரை ரசிகர்களின் நினைவுக்கு வருவதை தடுக்க முடியாது. 70களில் தொடங்கி 90கள் வரையில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக, பணக்கார இளைஞனாக, நண்பனாக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. தெலுங்கு படங்களில் அறிமுகமான சரத்பாபுவிற்கு பட்டினப்பிரவேசம் என்ற தமிழ் திரைப்படம் முதல் திரைப்படம் என்றாலும் ’நிழல் நிஜமாகிறது’ திரைப்படமே சரத் பாபுவை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த முக்கியமான திரைப்படம்.

 

தமிழ், தெலுங்கு என மாறி மாறி திரைப்படங்களில் நடித்த சரத்பாபுவிற்கு தமிழில் முன்னணி இயக்குனர்களான மகேந்திரன், கே பாலச்சந்தர் ஆகியோர் முக்கியத்துவம் அளித்து தங்களது திரைப்படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகளை வழங்கினர்.

 

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி என மகேந்திரன் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் எல்லாம் சரத்பாபுவுக்கு என கதாபாத்திரங்கள் காத்துக் கொண்டிருந்தன. இதேபோல பாலச்சந்தர் இயக்கிய நினைத்தாலே இனிக்கும் , முத்தா சீனிவாசன் இயக்கிய கீழ்வானம் சிவக்கும் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் எல்லாம் சரத் பாபு தனது கதாபாத்திரத்தால் தமிழ் சினிமாவை அலங்கரித்தார்.

 

ரஜினிகாந்துடன் நடித்த 2 திரைப்படங்கள் அவரது திரைவாழ்வில் குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்தன. முள்ளும் மலரும் திரைப்படத்தில் இரண்டு கைகளையும் இழந்து விட்டு நடிகர் ரஜினி மிடுக்காக சரத் பாபுவை பார்த்து பேசும் வசனங்கள் ரஜினியின் சாந்தமான சவாலுக்கு சாட்சியாக நின்றன. இதே போல, ரஜினியின் ஆரம்ப கால ஹிட் படமான நெற்றிக்கண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

 

இதுபோல் அண்ணாமலை திரைப்படத்தில் வீட்டை இழந்து விட்டு சரத்பாபுவை பார்த்தும் ஆக்ரோஷமாக ரஜினி பேசும் வசனங்கள் நெஞ்சை விட்டு அகலாதவை. ரஜினியின் கேரியரில் அண்ணாமலையும், முக்கிய படமாக அமைந்தது.

 

மேலும் முத்து திரைப்படத்திலும் ரஜினியின் நண்பனாக தோன்றி முத்திரை பதித்திருப்பார் சரத்பாபு. கமல்ஹாசனுடன் நண்பனாக சட்டம் திரைப்படத்தில் தோன்றி, அவருடன் பின்னர் மோதும் கதாப்பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சரத்பாபு.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த கடைசி படமான 'நதியை தேடி வந்த கடல்' படத்தில் கதாநாயகனாக சரத்பாபு நடித்தது குறிப்பிடத்தக்கது. சரத்பாபு தயங்கியபோது ஜெயலலிதா அவரை அழைத்து பேசிய பின்னரே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

 

வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வந்த சரத்பாபு தமிழில் கடைசியாக சிங்கம் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்திருந்தார்.

 

தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக மூன்று முறை நந்தி விருதையும் தமிழ் திரைப்படத்திற்காக ஒரு முறை சிறந்த துணை நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் வென்றவர் சரத்பாபு.

 

மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு 2 மனைவிகள். முதலில், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகையான ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டார். 1971-ல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, எனினும் 1988-ல்  விவாகரத்து செய்தனர்.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு சரத்பாபுவுக்கும் பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியாரின் மகள் சினேகா நம்பியாருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. சினேகா ஏற்கனவே கேரளாவை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். முதல் திருமணத்தின்போது அவருக்கு தீபக் நம்பியார் என்ற மகன் இருக்கிறார்.

 

உடல் நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்பாபு 2023 மே 22 அன்று தனது 71-ஆவது அகவையில் இறந்தார்.

 

இந்த நிலையில் சரத்பாபுவின் மறைவு குறித்து தீபக் நம்பியார் பேசியதாவது, ''அம்மாவுக்கு அவருக்கும் திருமணம் முடிந்தபோது என்னிடம் அப்பா என்றே கூப்பிட சொன்னார். என்னை தன்னுடைய மகனாகவே நினைத்து பாசம் காட்டினார். ஒரு கட்டத்தில் அவருக்கும் அம்மாவுக்கும் 2011-ல் விவாகரத்து  ஆச்சு. ஆனாலும் என் மீது எப்பவும் போல பாசத்துடன் பழகினார். தங்கமான மனிதர்'' என்று பேசினார்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


சிரிக்க.... சில நிமிடம்....

நகைச்சுவை-காமெடி-ஜோக்ஸ் 


01::

மாப்பிள்ளை:மாமா,உங்க வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு தன்மானம் இடம் கொடுக்காது.

மாமா:சரி,என்ன செய்யலாம்?

மாப்பிள்ளை:உங்க வீட்டை விற்று பணத்தை என்கிட்டை குடுத்திடுங்க.அந்தப் பணத்தில் வேற வீடு வாங்கிக் குடி போயிடலாம்.

மாமா:!!!

 

02::

தொண்டர்01: ''தலைவர், சலூன் போகும்போதெல்லாம் எதுக்கு அனாவசியமாய்த் தொண்டர்களையும் கூட்டிட்டுப் போறார்.''

தொண்டர்02: ''அதுவா!நான் நினைக்கிறன், முடி வெட்டுறத்துக்கு முதல்ல தோளிலை துண்டு போர்த்துவிடுவான்கள் அல்லவா, அந்த நேரத்தில கை தட்டுறத்திற்காக இருக்கும்.

 

03::

நீதிபதி:பார்த்தால், ஒரு அப்பாவியாய் நீ தெரியுறே!! நீயா பிக்பாக்கெட்? நம்பவே முடியலையே?

குற்றவாளி:உங்களை மாதிரியுங்க சார் , எல்லோருமே என்கிட்ட ஏமாந்துர்றாங்கள்.

 

04::

ராணி:தலையில இருந்து முடி கொட்டுறதிற்கு காரணம் என்ன என்று தெரியுமா?

வேணி:தெரியலையே...என்னது?

ராணி: தலையில முடி இருக்கிறதுதான் காரணம்.

 

05::

டொக்டர்: உங்க மனைவி  உங்ககிடட  ரொம்ப அன்பு போலிருக்கே?

நோயாளியின் கணவர்: எப்படிச் சொல்லுறீங்க?

டொக்டர்:ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது ,தன்னுடைய இதயத்துக்குள்ள இருக்கிற தன் கணவருக்குக் காயம் படாமச் செய்யச் சொன்னாரே!

 

06::

பாபு: கவுண்டர் தன் காரை, ஏன் ரிவர்ஸ்சிலயே  ஓட்டியிட்டுப் போறார்?

கோபு:காரை விக்கும்போது கி.மீ குறைவா இருந்தா ,விலை கூட விக்கலாமாம். அதான்...!

 

07::

செந்தில்:டொக்டர் ,எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்துகிடடே இருக்கு.

டொக்டர் கவுண்டன்: நீங்க சொல்லவே வேண்டாம்.என்கிட்ட நீங்க வந்ததை வைச்சே புரிஞ்சுக்க முடியும்.

 

08::

நண்பர் 1:இதோ தர்றேன் தானே. அவசரப்படாதீங்க! எல்லாருக்கும் உண்டு பயப்படாதீங்க! அப்பிடிச் சொல்லிச் சொல்லி, 100, 200 ரூபாய்களை அள்ளி அள்ளி வீசுறாரே..!!! அவர் என்ன பெரிய கோடிஸ்வரரா??

நண்பர் 2: அட,நீ வேற! ஆளை விடட வாங்கிடமுடியாதெண்டு, வாங்கின கடனை திருப்பி வாங்க ஆபிசுக்கே  வந்தவங்களை 100,200 ஐக் கொடுத்து சமாளிச்சுக்கிட்டு இருக்கிறார்.

 

09::

சீதா: அந்த சலூன் கடைக்காரரை ஏன் கைது செய்தாங்க?

வேதா:முடி வெட்டப் போனவனை ,கடைசியாய் தலையைச்  சீவி விடுற என்று சொல்லிப்போட்டு கழுத்தோட தலையையே சீவிட்டாராம்.

 

10::

கோபு: 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையைப் படிச்சதும், நீங்களா இப்படி எழுதினீங்க, என்று ஆச்சரியமாக இருந்தது.

பாபு: பரவாயில்லை,உங்களுக்காவது ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சந்தேகமாக  இருந்தது.

 

11::

ரமணன்:என்னது!! நம்ம பத்திரிகை ஆபிஸிலேந்து திருடிக்கிட்டுப் போனவன் , திருப்பிப் பார்சல் அனுப்பியிருக்கானா?

குமணன்:அதை ஏன் கேட்க்கிறீங்க? எங்க பத்திரிகைக்கு வந்த கதையெல்லாம் படு கண்றாவியா இருக்குதுன்னு திருப்பி அனுப்பிவிட்டான் சண்டாளன்.

 

12::

மனநல ஆசிரியர்:தம்பி,அங்க பாரு! பெடியன்களெல்லாம் பந்தை உருட்டி அங்கையும்,இங்கையும் ஓடி விளையாடுறாங்கள். நீ மட்டும் தனியா ஒரே இடத்தில நிக்கலாமா சொல்லு.

மாணவன்: ஐயோ, நான்தான் கோல் கீப்பர் சேர்!!

 

13::

செந்தில்:சீக்கிரமே பணத்தைப் பெருக்க ஒரு வழி சொல்லுங்கண்ணை

கவுண்டன்:ம், சொல்லுறன்.கிடக்கிற பணத்தை முற்றத்தில போட்டுட்டு, ஒரு விளக்குமாறு எடுத்து சீக்கிரமே பெருக்கு. பெருக்குப்படும்.

 

14::

கோபு: ஒடடப்பந்தயத்தில தங்க மெடல் வாங்கினவனை செக் பண்ணி ஊக்கமருந்து உண்டதென்று கண்டுபிடிச்சுத் தடை செஞ்சாங்கள், சரி பார்வையாளராய் வந்தவர்களையும் ஏன் செக் பண்ணுறங்கள்.

பாபு: தூங்கி வழிஞ்ச இவங்கள் ஏதாவது தூக்க மருந்து சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.

 

15::

ஆசிரியர்:பாடசாலைச் சட்டையில லோகோ எதுவும் போட்டிருக்கக் கூடாது என்று ஒரு ரூல்ஸ் இருக்கு தெரியுமெல்லா?

மாணவி: யூஸ் குடிக்கேக்கை சட்டையில சிந்திடுச்சி சேர்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்