எந்த ஊர் போனாலும் ''கடலூர்'' போலாகுமா!

கடலூர் (ஆங்கிலம்:Cuddalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
சொற்தோற்றம்
முற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது,
வரலாறு
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,
புனித டேவிட் கோட்டை

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் , முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்படுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாkirathu

ஆங்கிலேய ஆட்சி
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடருந்துப் போக்குவரத்து
கடலூர் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன.
தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி ரயில் பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.
கடலூர் துறைமுகம்
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது.தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள் , கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன.அவை வருமாறு
திருச்சோபுரம் துறைமுகம்
சிலம்பிமங்களம் துறைமுகம்
பரங்கிபேட்டை துறைமுகம் என்பனவாகும்.

[குறிப்பு: மாதம் ஒருமுறை வெளியாகும் இப்பக்கத்தில் உங்கள் ஊர் தொடர்பான கட்டுரையும் விரைவில் வெளியாகும்.]
                                                                                                                                                                     

குலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்


நாம் ஆணா பெண்ணா.. ?

Kandiah Thillaivinayagalingam's photo."மழலையாய் பிறந்தோம் 
தாய் தந்தை மகிழ்வில் 
விளக்கம் இல்லை 

நாம் வேறா வேறா.."
"குழந்தையாய் வளர்ந்தோம் 
ஒன்றாய் கட்டி உருண்டோம் 
குழப்பம் இல்லை 
நாம் ஆணா பெண்ணா.."

Kandiah Thillaivinayagalingam's photo."சிறுவராய் வளர்ந்தோம் 
தாய் தந்தை பாசத்தில் 
குழப்பம் தளைத்தது 
நாம் பருவம் தாண்ட.."
"மாறும் வளர்ச்சியில் 
மொட்டு மெல்ல பூக்க 
வேறு எண்ணங்கள் 
பட்டு மெல்ல மழர.."

Kandiah Thillaivinayagalingam's photo."இளைஞனாய் மாறினோம் 
தாய் தந்தை நேசத்தில் 
குழப்பம் முளைத்தது 
நாம் ஆணா பெண்ணா.."
"துளைத்தது காதல் 
கண்கள் கவர்ந்தது அழகு 
இளைத்தது நெஞ்சம் 
அன்பு அணைத்தது உறவை"..
"சுற்றத்தார் வாழ்த்த 

Kandiah Thillaivinayagalingam's photo.தாய் தந்தை மகிழ 
முற்றத்து பந்தலில் 
நாம் மணமக்கள் ஆனோம்.."
"சற்றும் கவலையில்லை 
நாம் ஆணா பெண்ணா 
வேற்றுமையில் ஒற்றுமை 
நாம் மீண்டும் ஒன்றாக.."

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மாவீரர்நாள் 2016

அன்று இலங்கை மன்னன்  இராவணனை   இந்தியா,  அரக்கனை அழிப்பதாக கூறி தமிழரை அழித்தது.
அதே இந்திய உதவியுடன் இன்று..........
தமிழர் தலைவனை பயங்கரவாதி என்று கூறி ......
இது சிங்கள,தமிழ் இனவாத அரசியல் தந்த பரிசு.
கனமான அந்த யுத்த காலம்.
போர் என்றால் போர் என்ற பெரும்பான்மை அரசியலின் கொக்கரிப்பும் , ஆயுதம் தான் இனி முடிவு என்ற  உணர்ச்சியூட்டும் வெறும் வாய்ப்பேச்சு பேசி தம் அரசியலை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளலாம் என கனவுகண்ட   தமிழ் அரசியல் வாதிகளால் வளர்க்கப்பட்டு  தூண்டப்பட்டு ஆயுத வழிக்கு இட்டுச் சென்ற அப்பாவித் தமிழ் இளைய சமுதாயம் எமது ஒற்றுமையினை நம்பி ஏமாந்து வீரர்களாகவே மடிந்தனர். இவர்களுடன்இவ்யுத்தகாலத்தில் அழிக்கப்படட உறவுகள் பல லட்ஷம். 
 தம்மை தாமே அழிக்கும் விட்டில்  பூச்சிகளாக வெளிநாட்டிலும் அகதிகளாக பரவி தமிழர் அடையாளங்களை துறந்து கொண்டிருக்கும் தமிழர் பல லட்ஷம்.
மொத்தத்தில் தமிழர் அழிவு என்பது தொடர்கதையாகிவிட்டது.
வாழும்வரை எம் மாவீரர் தியாகங்களை மதிப்பளிப்போம். mavirar nal

                                                                            தீபம்