ஒளிர்வு-(21)ஆவணி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,/ /கனடாவிலிருந்து.....ஒரு கடிதம்  // பாடுபட்டுத் தேடிப் பணத்தை… //ஆராய்ச்சியாளரின்செய்திகள் // பணம் வந்தால்.. // ஆன்மீகம் // சங்க கால மக்களின் மறுபக்கம்! // தொழில்நுட்பம் // கனடாவில்....,//உணவின்புதினம் ,//கணிணிஒளி //பாருக்குள் ஒரு நாடு.ஒரு பார்வை // உங்களுக்குதெரியுமா?// அறிவியல்//சிரிக்க..!, //சினிமா//பண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்-video.  
 தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
* உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால்
இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்!
* அறிஞனுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும்!
ஆனால் முட்டாளுக்கு முள் மட்டுமே தெரியும்!
* காதலுக்குரிய கண்ணினை யொத்த
மாதருக் குரிமை மறுப்பவர் மடையர்!
*பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால்
உன் சிறப்புக்களை ஊர் புகழும்!
*உண்மையைச் சொல்லுங்கள்!
உண்மையாய்ச் சொல்லுங்கள்!



ஆன்மீகம்-இல்லை/இருக்கிறது


ஆண்டவன் பிரச்சனை
இருக்கிறது என்பதுவும் பிரச்சனையில்லை
இல்லையென்பதுவும் பிரச்சனையில்லை
இருக்கிறது என்ச் சொல்லிப் பிழைப்பதுவும்
இல்லையெனச் சொல்லிப் பிழைப்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

நம்புவதும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்பாததும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

கோவில் சன்னதி பக்தி முதலான
நம்பிக்கைகள் கூட பிரச்சனையில்லை
நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்கவேண்டியவனே
சன்னதிக்குள் லீலைபுரிவதே பிரச்சனை

பகுத்தறிவு மூட நம்பிக்கை ஒழிப்பு முதலான
பிரச்சாரங்கள் கூட பிரச்சனையில்லை
பிரச்சாரம் செய்பவனே தன் வீட்டிற்கு அது
பொருந்தாது என்பதுதான் பிரச்சனை

போற்றிப் புகழ்ந்தால் அள்ளி வழங்கவோ
தூற்றித் திரிந்தால் தீமை புரியவோ
ஆண்டவன் மனிதன் இல்லை
அவன் கதிரவனைப் போல் பொதுவானவன்

நோயுள்ளவனை நடுங்கச் செய்தும்
பலசாலியை மகிழச் செய்தும்  போகும்
தென்றல் இரண்டாக இல்லை
அதுவும்  நிலவைப் போல் பொதுவானதே

மொத்தத்தில்
பிரச்சனைகள் எதுவும்
ஆண்டவனால் சிறிதும் இல்லை
சித்தத்தில்
இதனைக் கொண்டால் இங்கே
இத்தனை பிரச்சனை இல்லை
---------- Ramani

ஆராய்ச்சியாளரின் செய்திகள்


முதுகுவலியை ஒழிக்கும் புதிய கண்டுபிடிப்பு
முதுகுத் தண்டின் நெகிழ்ச்சித் தன்மையை அப்படியே சுருதி பிசகாமல் பிரதிபலிக்கும் ஒரு சிறு செயற்கை வட்டை (Disc) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது முதுகுவலிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வளிக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்காவின் பிரிகாம் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழுவினர் உருவாக்கிய இந்த "ரோலர்" என்ற வட்டு முத்குத் தண்டில் பழுதடைந்த டிஸ்க்குகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தண்டுவடத்தில் இயற்கையாக உள்ள டிஸ்க் எப்படி வேலை செய்கிறதோ, அப்படியே சுருதி பிசகாமல் இந்த செயற்கை வட்டும் வேலை செய்யும்.

இந்த புதிய செயற்கை வட்டு ரோலிங் செயல்பாட்டுடன் தண்டுவடம் பல திசைகளில் இயங்க வழிவகை செய்கிறது.

தண்டுவட டிஸ்க்குகளில் ஒரு ஜெல் போன்ற ஒரு திரவம் உள்ளது உடல் அசையும் போது இது தண்டுவடத்திற்கு இயக்கத்தை குஷன் போன்று பராமரிக்கிறது. இயக்கத்திற்கு இந்த டிஸ்குகள் பெரிதும் பயன்படுகிறது என்றாலும் இவை பழுதடையும்போது முதுகு வலி தோன்றுகிறது. உடனே வலிநிவாரணி மாத்திரைகள், பிசியோதெரபி, முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

இதில் மிகவும் பிரபலமான மருத்துவம் "ஃபியூஷன்" என்று அழைக்கப்படுகிறது. பழுதடைந்த டிஸ்கின் இருபுறத்திலிருக்கும் தண்டெலும்புகள் ஒன்று சேர்க்கப்பட்டு வலி குறைக்கப்படுகிறது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்தால் இயக்கம் மட்டுப்படுத்தப்படும். இந்த அறுவை சிகிச்சையினால் தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மை பாதிக்கப்படும்.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவே இப்போது "ரோலர்" என்ற செயற்கை டிஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்னும் பின்னும், பக்கவாட்டுகளிலும் இயங்கக்கூடியதாகும். தண்டெலும்பு மற்றும் டிஸ்கிற்கு இடையே இந்த செயற்கை சிறிய டிஸ்க் பொருத்தப்படும். இதன் மூலம் முதுகுவலிக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக இந்த விஞ்ஞானிகள் கோருகின்றனர்.

இப்போது பெஇர்ய அளவில் கிளினிக்கல் டிரையல்களில் இதனை பரிசோதித்து வருகின்றனர். வெற்றி அடைந்துவிட்டால் அடுத்த 3 ஆண்டுகளி இது பொதுமக்கள் பயனுக்கு வந்தூ விடும்.
உணவு நேரத்துடன் பசியை தொடர்புபடுத்தும் மரபணு
ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் வயிறு தானாகவே பசிக்கிறது. இதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் மரபணுவை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் வயிறு சுருங்கும். கடமுடா என்று சத்தமிடும். கண்கள் கிறுகிறுக்கும். சோர்வாக இருக்கும். இதையடுத்து எதையேனும் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம். இத்தகைய உணர்வுகளுக்கு காரணமான மரபணுவை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்குபெர்-2′ என்று பெயரிட்டுள்ளனர். மூளை மற்றும் உடலின் இதரபகுதிகளில் செயல்படும் இந்த மரபணுவை ஆய்வு செய்தால் கொழுப்புச்சத்து நோய்க்கும், தூக்கமின்மை, மதுவுக்கு அடிமையாதல் ஆகியவற்றுக்கு சிகிச்சை முறைகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
புற்றுநோயை தடுக்க உதவும் திராட்சை
திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்
தண்ணீர் குடிப்பது நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஒருவர் தினமும் 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு.
ஆனால் தண்ணீர் நல்லது என்று கருதி அளவு கடந்து இஷ்டத்துக்கு குடித்தால் அதுவும் விஷம் போலத் தான்.
நிறைய தண்ணீர் குடிக்கிற போது, உடலில் சுரக்கிற திரவங்கள் நீர்த்துப் போகின்றனவாம். இதனால் உடலில் சோடியத்தின் அளவு குறைந்து போய் சமயங்களில் உயிராபத்தையும் ஏற்படுத்தி விடுமாம்.
தண்ணீரை தாகத்துக்கு குடியுங்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.
100 கிலோ எடை உடைய ஒருவர் அதிகபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாமாம். அதாவது ஒரு கிலோ எடைக்கு 3 மில்லி தண்ணீர் என்ற விகிதாச்சாரத்தில் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.

தொழில்நுட்பம்


புதுமையான கண்ணாடி!:- அதிகாலை வேளையில் மூக்குக் கண்ணாடியில் புகை போலப் படியும் பனி, அதை அணிவோருக்குத் தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.
 இனி அம்மாதிரி சாதாரணக் கண்ணாடிகளுக்கு விடை கொடுத்துவிடலாம். இப்போது, ஈரப்பதமான இடங்கள், நேரங்களில் புகை போல பனி படியாத மூக்குக் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள். இது, எப்படிப்பட்ட காலநிலையிலும் தெளிவாகவே இருக்கும்.
 `ஆப்டிபாக்எனப்படும் இந்த கண்ணாடியில் ஒரு விசேஷப் பூச்சு அமைந்திருக்கிறது. இது தண்ணீரை கூடுதல் ஈர்ப்பாகக் கவரும். ஆனால் கண்ணாடியில் பனி போல படர விடாமல், கண்ணுக்குத் தெரியாத படலமாக மாற்றிவிடும். எனவே கண்ணாடியில் ஈரப்பதம் பட்டாலும் அது தெளிவாகவே இருக்கும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.
 இதை உருவாக்கியிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான எசிலார், சமையல் கலைஞர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், சைக்கிள் வீரர்கள், முகமூடி அணியும் மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கூறுகிறது.
 கண்ணாடி மூலம் பார்ப்பது இயற்கைப் பார்வைக்கு இணையாக இருக்கும் வகையில் செய்வதற்கு எங்கள் ஆராய்ச்சியாளர்கள் உழைத்து வருகிறார்கள். அந்த நோக்கில் `ஆப்டிபாக்ஒரு முக் கியமான மைல்கல்என்கிறார், மேற்கண்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் கிர்க்லி.
பனி எதிர்ப்புப் பூச்சைக் காக்க இந்த கண்ணாடியில் ஒவ்வொரு வாரமும் ஒரு வேதித் திரவத்தை `ஸ்பிரேசெய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை:
பிரபல சமூக இணையத்தளமான பேஸ் புக் மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 அடுத்த வாரம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரலாம் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் முதல் முறையாக இந்த திட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
 வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த திகதி உள்ளிட்ட விபரங்கள் மாத்திரமே சமூக இணையத்தளமான பேஸ் புக் ஊடாக பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
 இந்த நடைமுறையை ஏனைய மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு குறித்த மாநிலங்களின் சட்டசபையின் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது.
 எனினும் இணையத்தளம் மூலம் வாக்காளர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சூரிய மின்சக்தியில் பறக்கும் விமானம் சோதனை ஓட்டம்:
சூரிய மின்சக்தியில் பறக்கும் Solar Impulse விமானம் ஸ்பெயினில் இருந்து மொராக்கோ நாட்டுக்கு நேற்று சோதனை ஓட்டமாக புறப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சாகச நிபுணர் பெர்னாட் பிக்கார்ட். வயது 54. சூரிய மின்சக்தியில் விமானத்தை இயக்குவது அவரது குறிக்கோள். சுவிஸ் நாட்டில் இருந்து மே மாதத்தில் அவரது சோலார் இம்பல்ஸ் விமானம் ஸ்பெயின் வந்தது. அங்கிருந்து 2500 கி.மீ. தூர மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாட் நகருக்கு நேற்று விமானத்தில் கிளம்பினார் பெர்னாட். விமானத்தின் மேல் பகுதி முழுவதும் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானம் 11800 அடி உயரத்தில் பறக்கும் . ஒருவர் அமரக்கூடிய இந்த விமானத்தின் நீண்ட தூர பயணம் வெற்றிகரமாக அமைந்தால் எதிர்காலத்தில் சூரிய சக்தி விமான போக்குவரத்துக்கான கண்டுபிடிப்புகள் முன்னேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளிக்கு பொருட்களைக் கொண்டுசெல்லும் முதலாவது தனியார் விண்கலம்:
விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டுசெல்லும் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் கலிபோர்னியாவைச் சேர்ந்த SpaceX தனியார் நிறுவனத்தினால் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 விண்வெளிக்கு பொருட்களை அனுப்பி வைப்பதற்காக தனியாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது விண்கலமாக இது கருதப்படுகின்றது.
 அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளின் வரலாற்றில் இது முக்கியமான ஒரு விடயமாக அமைந்துள்ளது.
 விண்வெளி வீரர்களுக்கு வெளி நபர்களால் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.