ஒளிர்வு-(27) தை த்திங்கள்-2013

தீபம் வாசகர்கள் அனைவருக்கும்
எமது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.

தளத்தில்:சிந்தனைஒளி, பறுவதம் பாட்டி , தமிழ் மொழி, பண்டைய தமிழ் பாடல்களில்  "விஞ்ஞானம்,ஆன்மீகம், , குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம், ஆராய்ச்சியாளரின் செய்திகள், தொழில்நுட்பம், உணவின் புதினம் ,அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்குதெரியுமா? ,சிரிக்க...!,சினிமா, விளையாட்டு.உங்கள் படைப்பை சமர்ப்பிக்க:manuventhan@hotmail.com

சிந்தனைஒளி
* நல்லவர்கள்உதவிசெய்தேன்என்றுசொல்லமாட்டார்கள்!
உதவிசெய்தேன்என்றுசொல்பவர்கள்நல்லவரல்ல!
       *கனிந்தகாதலிஇறந்தாலும்நினைப்பில்வாழலாம்!
முறிந்தகாதலியைநினைக்கவும்முடியாது!மறக்கவும்முடியாது!
       *அன்புசெலுத்துபவனைஅடக்கிஆழமுடியாது!
ஆனால், அடக்கிஆழ்பவனையும்அன்பினால்வெல்லலாம்!
       *பிராத்தனைஉங்கள்நம்பிக்கைக்குஉயிர்கொடுக்காது!
நம்பிக்கைதான்உங்கள்பிராத்தனைக்குஉயிர்கொடுக்கும்!
* மனிதன்வெட்டும்போதுஆட்டின்இதயம்துடிக்கிறது!
அதன்கொலோஸ்ரோலால்மனிதஇதயம்வலிக்கிறது


ஆராய்ச்சியாளரின் செய்திகள்


அண்டார்டிக்காவில் பெருகிவரும் இராட்சத நண்டு இனம்: 

புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம். இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், அண்டார்டிகாவின் ‘பார்மர் டீப்’ எனப்படும் பகுதியில் ‘கிங் கிரப்’ எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன. இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதிகளிலேயே குறிப்பாக 1.4 பாகை செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலைப் பகுதியிலேயே வாழும் .எனினும் அவை தற்போது அண்டார்டிக் பகுதியில் வாழ்ந்துவருகின்றமையானது அப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்துவருவதனைக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவை சுமார் 30 – 40 வரையான ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடல் வாழ் தாவரங்கள், ஜெலி மற்றும் நட்சத்திர மீன்கள் உட்பட கடல் வளங்களை உண்பதுடன் அவற்றை வேகமாக அழித்துவருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் பரம்பல் மேலும் அதிகரிப்பது அப்பகுதியில் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆழ் கடலுக்குள் ஓர் அதிசய பாதாள உலகம் : 

அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.  ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் 
தெரிவிக்கின்றனர்.

காதல் வந்தால் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கும்

லட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா, வடிவேலு சொல்றதைப் போல, உங்களுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்கின்றனர் விஞ்ஞானிகள்.
காதல் என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் காதல் உணர்வுகளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும், போதைப் பொருளுக்கு சமமானது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
காதல் நிவாரணி
காதல் உணர்வுகள் மனத்திற்கான மகிழ்ச்சியைத் தருவதோடு உடல் வலிகளை நீக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் காதல் வயப்பட்ட 15 இளம் ஜோடிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர்கள் விரும்பும் நபர்களின் புகைப்படத்தை கொடுத்து அவர்களின் உணர்வுகளை கணினியில் அளவெடுத்தனர். அப்பொழுது அவர்களின் கைகளில் சிறிதளவு வலிநிவாரணி உட்கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டது.
அதே நேரத்தில் அவர்களின் மூளையையும் ஸ்கேன் செய்யட்டப்பட்டது. அப்பொழுது காதல் உணர்வுகள் முழுவதும் மூளையில் நிரம்பியிருந்தன. எனவே காதலிக்கும் நபரின் போட்டோவை பார்த்தாலே வலி நிவாரணி உட்கொண்ட உணர்வு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அந்த அளவிற்கு காதல் சக்தி வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
“கொக்கேய்ன்” போதை
காதலில் விழுந்தவன் போதையில் மிதப்பவனைப் போல உலக விசயங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பான் என்பார்கள் கவிஞர்கள். அதே கருத்தை இப்பொழுது விஞ்ஞானிகளும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
காதல் வயப்பட்டவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள், “கொக்கேய்ன்” என்ற போதைப் பொருளை உட்கொண்டால் ஏற்படும் பாதிப்பிற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறிந்தனர்.
நியூயார்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியரும் தலைமை ஆய்வாளருமான பேராசிரியர் ஆர்டிக்கும் அவரின் குழுவினரும், மேற்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந்திலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
பார்த்த முதல் நாளில்
கண்டதும் காதல் என்பது சாத்தியம் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதன் முதலாக ஒருவரை கண்டவுடன் இவர் நமக்குரியவர்தான் என்பதை உணர்த்தும் வகையில் மூளையின் 12 இடங்களில் தூண்டல் நடைபெறுகிறதாம்.
அப்பொழுது ‘திடீரென சிறப்பாக உணரச்செய்யும்’ டோபைன், ஆக்ஸிடோஸின், அட்ரனலின் போன்ற இரசாயனங்கள் உடலில் சுரகின்றன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொகேயின் போதைப் பொருளை உட்கொண்டாலும் இந்த இரசாயனங்கள் தூண்டப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது உறுதிப்படுத்துகின்றன என்கிறார் ஸ்டெபானி ஆர்டிக். இக்கண்டுபிடிப்புகளின் மூலம் நரம்பியல் விஞ்ஞானத்திலும் உளவியல் மருத்துவத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என ஸ்டெபானி ஆர்டிக் கூறியுள்ளார்.
இதயமா மூளையா?
காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு பதிலளித்த விஞ்ஞானிகள், காதல் உணர்வு ஏற்படுவது மூளையில்தான் என்கின்றனர். இருப்பினும் இதயத்திற்கும் தொடர்புள்ளது. உதாரணமாக, மூளையின் சில பகுதிகள் செயற்படும்போது இதயத்தில் தூண்டுதல்கள் ஏற்பட
முடியும். வயிற்றில் வண்ணத்துப்பூச்சி பறக்கும் என்கிறார் பேராசிரியர் ஆர்டிக்.
என்ன உங்களுக்குள் பட்டர்பிளைஸ் பறக்க ஆரம்பிச்சிடுச்சா…??

தொழில்நுட்பம்


ஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்

Foxxconn எனும் நிறுவனம் தான் Mac, iPhone, iPad, iPod ஆகியவற்றின் வன் பொருள்களை சீனாவில் இருந்து உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. அங்கே வேலைசெய்யும் ஊழியர்கள் அதிக பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். மாததோறும் தற்கொலை செய்து சாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் பெரும் தர்மசங்கடதத்திற்கு ஆளாகும். தன் மீது படிந்த இந்தப் பழியைப் போக்கும் விதத்திலும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதத்திலும் இனி Mac கனினிகள் அமெரிக்க மண்ணில் இயங்கும் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என ஆப்பிள் நிறுவன முதன்மை செயல் அலுவலர் Tim Cook தெரிவித்துள்ளார்.  இந்தப் பொருள்களில் எந்த விலை விதிதியாசாமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வளையக்கூடிய திரையுடைய ஸ்மார்ட் போன்கள் : 

CES Samsung Flexible screen 1
சம்சுங் நிறுவனமானது தமது புதிய தொழில்நுட்பமான வளையக் கூடிய திரைகளை உடைய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வருடாந்த இலத்திரனியல் சாதனங்களுக்கான கண்காட்சியின் போதே சம்சுங் தமது புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இக்கண்காட்சியின் போது காகிதத்தின் தடிப்புடன் கூடிய வர்ண மயமான திரையினை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்தது. எனினும் கடதாசியினை போன்று மடிக்கத் தகுந்த தன்மை இல்லாவிடினும் குழாயினைப் போன்று வளையக்கூடிய தன்மையினை கொண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமது எதிர்கால தயாரிப்பின் வீடியோவினை வெளியிட்டுள்ளது சம்சுங் நிறுவனம்.
எனினும் சந்தைக்கு எப்போது வரும் என்பதனை அறிவிக்காத சம்சுங் நிறுவனம் விரைவில் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் என்று கூறியுள்ளது.

பேட்டரியின் சேமிப்புத்திறனை சேமிக்கும் வழிமுறைகள்

laptop
இலத்திரனியல் சாதனங்களை வாங்கும் பலரது கவலை பேட்டரி. இது ஒரு பெரிய விஷயமா? வாங்கும்போது நீடித்து உழைக்கும் பேட்டரியினை வாங்கினால் போதும் என்று தோன்றும். ஆனால் அதிக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதால் எவ்வளவு சார்ஜ்செய்தாலும் போதவில்லை என்பது பலரது கவலையாக இருக்கிறது. இதனால் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க என்ன வசதி என்பதை பார்க்கலாம்.
வைபை மற்றும் ப்ளுடூத் போன்ற வசதிகளை பயன்படுத்தி முடித்த பின்பு, இதை ஆப் செய்து வைத்துக் கொள்வது மிக சிறந்த ஒன்று. அதிக அப்ளிகேஷன்களை டவுண்லோடு செய்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.  சில புதிய அப்ளிகேஷன்கள் டவுண்லோடு செய்யும் போது அதிகம் பயன்படுத்தாத சில அப்ளிகேஷன்களை அகற்றுவது நல்லது. பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். ஆனால் விளையாட்டு படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்காகவே அதிக நேரம் லேப்டாப்கள் பயன்படுத்துவதும் பேட்டரியை பாதிக்கும்.
எக்ஸ்டர்னல் மவுஸ் பயன்படுத்தாமல், லேப்டாப்பில் உள்ள மவுஸை பயன்படுத்துவது சிறந்தது. திரைக்கு அதிக வெளிச்சம் வைத்திருந்தால் அதை குறைக்கவும். இது பேட்டரிக்கும், கண்களுக்கும் சேர்த்து ஆபத்தை கொடுக்கும். தகவல்களை தெளிவாக பார்க்கக்கூடிய அளவு திரை வெளிச்சத்தினை சரியான அளவில் பயன்படுத்துவது கூட பேட்டரியின் ஆற்றலை அதிகப்படுத்த உதவும்.
லேப்டாப்பை ஆப் செய்யும் போது டர்ன் ஆப் ஆப்ஷனை பயன்படுத்துவது சிறந்தது. லேப்டாப் மானிட்டர் சரியாக ஆப் செய்யப்படாவிட்டால் இதன் மூலம் அதிக பேட்டரி வெளியேறும். ஸ்பீக்கர் வால்யூம் அதிகளவில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
எல்லோரும் செய்யும் முக்கியமான தவறு ஒன்றும் இருக்கிறது. லேப்டாப் சார்ஜரை ப்ளக்கில் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஆன் செய்த பிறகு அந்த சார்ஜர் ஒயரை லேப்டாப்பில் இணைப்பது மிகவும் தவறானது. இதனால் மின்சாரத்தின் நேரடி பாய்ச்சல் பேட்டரியை எளிதாக தாக்கும் ஆகவே லேப்டாப் சார்ஜரின் ஒயரை லேப்டாப்பிலும், ப்ளக்கிலும் இணைத்துவிட்டு அதன்பின் ஸ்விட்ச்சை ஆன் செய்வது சிறந்தது. இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்துவதால் லேப்டாப்பின் பேட்டரி ஆற்றலை எளிதாக சேமிக்க முடியும்.




கணினிஉலகம்


கைப்பேசிகளுக்கான Firefox இயங்குதளம் விரைவில் அறிமுகமாகின்றது 


முன்னணி இணைய உலாவியான Firefox - இனை வெளியிட்டு பயனர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட Mozillaநிறுவனமானது கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள்

ஒன்றான ZTE உடன் இணைந்து புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தவிருக்கின்றது. Firefox OS என பெயரிடப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இயங்குதமளாது கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ள அன்ரோயிட் இயங்குதளத்திற்கு சவாலாக விளங்கும் என்றும் Mozilla நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

அட்டகாசமான ஆடியோ எடிட்டிங் செய்வதற்கு


பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் கணினியானது இசைத்துறையினையும் விட்டுவைக்கவில்லை.இதன் அடிப்படையில் புதிய இசையமைத்தல்அவற்றினை மீள எடிட்டிங் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பல்வேறு கணினி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றின் வரிசையில் தற்போத ACID Xpress எனும் மென்பொருளும் இணைந்துள்ளது. சோனி நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மென்பொருளினை முற்றிலும் இலசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் ஆடியோக்களை Edit, Mix, மற்றும் Record செய்யும் வசதியினை தருகின்றது.



இன்று காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கணினிகளில் காணப்படும் அப்பிளிக்கேஷன்களை செயற்படுத்துவதற்கு Responding Heads 4 எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொடுதிரையின் மூலம் கணினிகளை இயக்கும் தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக குரல் கட்டகளைகள் மூலம் அவற்றினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் புதிய பரிமாணத்திற்குள்
இம்மென்பொருளினை கணினியில் நிறுவிக்கொண்டு நுனுக்குப்பன்னி (Microphone) மூலம் குரல் வழிக்கட்டளைகளை வழங்குவதன் ஊடாக ஏனைய அப்பிளிக்கேஷன்களை இயக்கக்கூடியவாறு காணப்படுகின்றது.
உதாரணமாக Outlook Express - இனை ”Open Mail” எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் செயற்படுத்த முடியும்.

அப்பிளின் iOS 6.0.2 புதிய பதிப்பு வெளியானது

அப்பிள் நிறுவனம் தன்னுடைய இயங்குதளமான iOS 6.0.2 பதிப்பினை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
 ஐபோன் 5 மற்றும் ஐபோன் மினியில் இந்த இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.
இந்த புதிய பதிப்பில்பழைய பதிப்பிலிருந்த wi-Fi இயக்கத்தின் பிழை திருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு Settings என்பதில் Software Update சென்று System Softwareதொகுப்பினை அப்டேட் செய்து கொள்ளலாம் அல்லது ஐட்யூன்ஸ் (iTunes)வழியாகவும் அப்டேட் செய்திடலாம்.

Android 4.1 Smart TV இனை அறிமுகப்படுத்துகின்றது Archos


கூகுளின் இயங்குதளமான Android 4.1 Jelly Bean இல் செயற்படக்கூடிய Smart TV இனை உருவாக்கியுள்ள Archos நிறுவனம் அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்தக்
காத்திருக்கின்றது.
1.5 GHz Multi-Core TI OMAP 4470 Processor, 1GB RAM, மற்றும் 8GB சேமிப்பு சாதனம் ஆகியவற்றினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது Ethernet port, Mini HDMI output, Micro USB port, Micro SD slot, HD webcam என்பனவற்றினையும் LED சமிக்ஞை விள்குகளையும் கொண்டுள்ளன.
இத்தொலைக்காட்சியின் ஊடாக கூகுளின் Play Store போன்றவற்றினை பயன்படுத்தக்கூடியதான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியின் பெறுமதியானது 129 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audio Editing செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள்


MP3 கோப்புக்களை பயன்படுத்தி Audio Editing செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

எனினும் அவற்றில் அனேகமானவற்றை பணம் கொடுத்து கொள்வனவு செய்யவேண்டி இருப்பதுடன் கடினமான பயனர் இடைமுகத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றன.
ஆனால் Audio Mp3 Editor எனும் மென்பொருளானது முற்றிலும் இலவசமான மென்பொருளாகவும்இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
தவிர Converter மற்றும் CD Ripper ஆகவும் இம்மென்பொருள் தொழிற்படுகின்றது. அதாவது MP3, WMA, WAV, Ogg Vorbis, VOX, Audio CD Tracks(CDA), PCM, RAW, AVI, MPEG, G721 ஆகிய கோப்புக்களாக மாற்றும் வசதியினை இம்மென்பொருள் கொண்டுள்ளது.

Click & Clean: கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

கணனியில் தேங்கும் Browsing History, Ttyped URLs, Flash Cookiesபோன்றவற்றினை இலகுவாக நீக்குவதற்காக Click & Clean எனும் நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 கணனியின் வன்றட்டில் காணப்படும் தேவையற்ற கோப்புகளை CCleanerஅல்லது Wise Disk Cleaner போன்ற மென்பொருட்களின் உதவியுடன் நீக்க முடியும்.
இதே போன்று தேவையற்ற கோப்புகளை நீக்கவும்கணனியின் வேகத்தை அதிகரிக்கவும் Click & Clean எனும் நீட்சி பயன்படுகிறது.

புதுவருடத்தில் ஓர் இலவசமான அன்டிவரைஸ் மென்பொருள்


 பெருகிவரும் கணினி பாவனைக்கு ஈடாக வைரஸ் தாக்கங்களும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
இப்படியான வைரஸ் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் காணப்படுகின்றபோதும் அவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைப்பதில்லை.
ஆனால் பிரபலமான அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றானBitdefender Antivirus தற்போது புதுவருடத்தில் Bitdefender Antivirus 2013 எனும் பெயரில் தனது இலவச பதிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடிய இம்மென்பொருளை பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.

சினிமா



2012-12-24         நீதானே என் பொன்வசந்தம்
கதை: காதல் ஜோடியின் மூன்று காலகட்டத்திலான ஊடலும், கூடலுமாக கலந்த கதையே நீதானே என் பொன்வசந்தம்.
நடிகர்கள்: ஜீவா,சமந்தா,சந்தானம்.
கருத்து: திரைக்கதை ரசிகர்களை அதிகளவில் வெறுப்பேற்றுகிறது.
புள்ளிகள்:40
2012-12-24    கும்கி
கதை: பாகனின் காதலை, கும்கி யானையை மையமாக வைத்து சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன்.
நடிகர்கள்: விக்ரம் பிரபு, தம்பி ராமையா,லட்சுமி மேனன்
கருத்து: ஜீவனுள்ள கதை...  
புள்ளிகள்:50
திரையுள்.....
சென்ற ஆண்டில் கலக்கிய படங்களும் வழுக்கிய படங்களும்
2012-ல் மொத்தம் 168 படங்கள் ரிலீசாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் இவ்வளவு அதிக படங்கள் எப்போதும் ரிலீசாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் கூடுதல் எண்ணிக்கையில் வந்தன. பெரிய பட்ஜெட் படங்களும் நிறைய ரிலீசாயின. இவற்றில் 17 படங்கள் மட்டுமே போட்ட முதலை திரும்ப எடுத்ததாக கூறப்படுகிறதுஇதில் சில படங்கள் மெகா ஹிட்டாயின. இன்னும் இப்படங்கள் சராசரிக்கு மேல் லாபம் ஈட்டின. மற்றவை நஷ்டம் இல்லாமல் செலவிட்ட பணத்தை மீட்டு கொடுத்தன.
தியேட்டர் வசூல், டி.வி.க்கு உரிமை வழங்குதல், வெளிநாட்டு உரிமை, பாடல் சி.டி. விற்பனை போன்றவற்றை கணக்கிட்டு பார்க்கையில் நம்பர் ஒன் இடத்தில் 'துப்பாக்கி' இருக்கிறது. விஜய், .ஆர். முருகதாஸ் கூட்டணியில் வந்த இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகி இன்னும் ஒடிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் விநியோகஸ்தர்களுக்கு ரூ.60 கோடிவரை லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சிவாஜி', 'எந்திரன்', படங்களுக்கு பிறகு அதிக வசூல் ஈட்டிய படமாக இது உள்ளது.

'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சுந்தரபாண்டியன்' படங்கள் செலவு தொகையை காட்டிலும் இரு மடங்கு லாபம் ஈட்டியுள்ளது. 'கும்கி' படமும் இந்த பட்டியலில் இடம்பெறும் என்கின்றனர்.

நான் ’, ‘பீட்சா’, ‘கலகலப்புஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடின. செலவு தொகைக்கு மேல் 50 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளன. ‘மெரீனா’, ‘மனம் கொத்தி பறவை’, ‘காதலில் சொதப்புவது எப்படிஆகியவை ஹிட் படங்கள் பட்டியலில் உள்ளன. இவை செலவுக்கு மேல் 20 முதல் 30 சதவீதம் வரை லாபம் ஈட்டி உள்ளன.

அட்டகத்தி’, ‘வழக்கு எண் 18/9’, ‘நான்’, ‘கழுகு’, ‘சாட்டைபடங்கள் சுமாராக லாபம் பார்த்துள்ளன. செலவுக்கு மேல் 5 முதல் 10 சதவீதம் வரை கிடைத்துள்ளது. ‘நண்பன்’, ‘நீர்பறவைசராசரியாக ஓடிய படங்கள் ஆகும். மேலும் சில படங்கள் செலவை சரிகட்டி உள்ளன. மற்றவை நஷ்டத்தில் ஓடின.
சென்ற ஆண்டில் கோலிவுட்டில் கல்லா கட்டாத படங்கள்!

தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் வசூல் ரீதியாக அவை பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. 'படம் நல்லாதான் இருக்கு... ஆனா ஓடாது' எனும் போக்கு அதிகரித்துவிட்டது. இந்த 2012-லும் அப்படி சில படங்கள் வந்து, சுவடு தெரியாமல் போய்விட்டன. சில படங்களுக்கு ஓஹோ என விமர்சனங்கள் கிடைத்தும் அவை படத்தின் ஓட்டத்துக்கு உதவாமல் போயிருக்கின்றன. அப்படிப்பட்ட சில படங்கள்...
செங்காத்து பூமியிலே...
பாரதிராஜாவின் கதாசிரியர்களுள் ஒருவரான ரத்னகுமார் இயக்கிய படம் இந்த செங்காத்து பூமியிலே. ரத்த உறவுகளுக்குள் வரும் சண்டை, பூமியை ரத்தத்தால் நனைக்கும் கதை. இளையராஜாவின் உருக்கும் இசை. நல்ல நடிப்பு என அனைத்தும் இருந்தது படத்தில். ஓரளவு நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் படம் ஓடவில்லை.
பச்சை என்கிற காத்து
புது இயக்குநர் கீரா இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்து வந்த இந்த படைத்தை மீடியாக்களும் விமர்சகர்களும் பெரிதாக சிலாகித்துதான் எழுதினார்கள். ஆனால் அதெல்லாம் 'அம்மஞ்சல்லிக்குப்' பிரயோசனமில்லாமல் போய்விட்டது. படம் வந்த சுவடே தெரியவில்லை. இப்போது ரெகுலராக சினிமா பார்க்கும் யாரையாவது கேட்டுப் பாருங்கள்... அப்படி ஒரு படம் வந்ததா என திருப்பிக் கேட்பார்கள்!
ராட்டினம்
கிட்டத்தட்ட 'காதல்' படத்தைப் போன்றதொரு படைப்புதான். ஆனால் ரொம்ப ப்ரெஷ்ஷான ஒரு படத்தைப் பார்த்த உணர்வைத் தந்திருந்தார் இயக்குநர் தங்கசாமி. தூத்துக்குடி பின்னணியில் வெகு இயல்பான கதை, இயல்பான க்ளைமாக்ஸ். படத்தை பலரும் பாராட்டினார்கள். இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு நல்ல விஸிட்டிங் கார்டாக அமைந்தது என்பதோடு சரி. வசூல் ரீதியாக பெரிய சாதனை எதுவும் இல்லை.
தடையறத் தாக்க
பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜய்யை ஒரு நடிகராக ஒப்புக் கொள்ள வைத்த படம் இது. விறுவிறுப்பாகவும் தரமாகவும் எடுக்கப்பட்ட இந்தப் படம், கமர்ஷியலாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.
மதுபானக்கடை
ஒரு டாஸ்மாக் பார், நான்கைந்து குடிகார பாத்திரங்களை வைத்தே முழுப் படத்தையும் எடுத்திருந்தார் இயக்குநர் கமலக்கண்ணன். ஆனால் அனைவருக்கும் பிடித்த படம் என்று இதனைச் சொல்ல முடியாது.
டிடிஎச்சில் வருமா விஸ்வரூபம்?
டிடிஎச்சில் விஸ்வரூபம் வருமா என்பது குறித்து எந்த உறுதியான பதிலையும் கமல்ஹாஸன் கூறவில்லை.
"விஸ்வரூபம் படம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆதரவுடன் வருகிற 25-ந் தேதி, 500 தியேட்டர்களுக்கு மேல் தமிழ்நாடு முழுவதும் வெளியாகும்'' என்று கமல்ஹாசன் அறிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் கூட்டு கூட்டம், பிலிம்சேம்பரில் நேற்று மாலை நடந்தது.
அதில், கமல்ஹாசன் கலந்து கொண்டார்.அவருக்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் மோதிரம் அணிவித்து, பொன்னாடை போர்த்தினார்கள்.
பின்னர் கமல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலில் இவர்களை அம்பு என்று நினைத்தேன். இப்போது அது அன்பு என்று புரிந்துகொண்டேன். இந்த அன்புக்கு முன்னால் பணிவு ஒன்றுதான் நல்ல ஒழுக்கம். இவர்களின் அன்புக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன் (இவர்களுக்குதான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கமல் நேற்று முன்தினம் தெரிவித்தார்!).
விஸ்வரூபம்' படத்தின் மூலம் நான் பட்ட கடன் தீரும் என்று இங்கே பேசினார்கள். ரே ஒரு கடன் மட்டும் தீராது. அது தமிழ் ரசிகர்களுக்கு நான் பட்ட கடன்.
35 படங்கள் வரை நான் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தபோது, என்னை தூக்கி விட்டவர், கே.பாலசந்தர். இந்திப் பட உலகுக்கும் என்னை தூக்கி விட்டவர், அவர்தான்.
இதுபோன்ற ஆசிகள் தமிழ் திரையுலகில் எனக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, எனக்கு அதிக பலமாக இருக்கிறது.உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். வீணடிக்க மாட்டேன்.
டி.டி.எச். நிறுவனங்களுடன்...
நான் நல்ல தகவலை சொல்வேன் என்று இங்கு கூறினார்கள். ‘விஸ்வரூபம்' படம் டி.டி.எச்.சில் எப்போது ஒளிபரப்பப்படும்? என்பதை இப்போது சொல்ல முடியாது. டி.டி.எச்.காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, அந்த தகவலை உங்களுக்கு சொல்கிறேன்.
ஒட்டுமொத்த தமிழகமெங்கும் திரையரங்க உரிமையாளர்களின் ஆதரவுடன்விஸ்வரூபம்' படம் 25-ந் தேதி, 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரைக்கு வரும். திரையரங்க உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்து இருக்கிறீர்கள். அது எனக்கு புத்துணர்வை தரும் என்று நம்புகிறேன்.