ஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017

   

தீபம் வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம்,
மீண்டும் மாசி மாதத்தின் பிறப்பில் உங்களுடன் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பொறாமை- மனிதனை ஆட்டிப் படைப்பதில் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவனும் தமது விருப்புகளுக்கேற்ப வெவ்வேறு விதமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறான். வெவ்வேறு திறமைகளைக் கொண்டிருக்கிறான். அதில் வெற்றியும் கண்டிருக்கிறான். அவ்வெற்றிகளை அடையாதவன் எதோ ஒரு விதத்திலாவது சில நன்மைகளை அடைந்தாலும் கூட மற்றவன்  பெற்றதும் தனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை அடைகிறான். பொறாமையினால் மன அழுத்தம் காரணமாக நோய் வாய்ப்படுகிறான்.உறவுகளை இழக்கிறான்.பின் தன்னையும் இழக்கிறான்.
ஒருவன் தனக்கே எல்லா சுக போகங்களும் கிட்டிட வேண்டும் என எண்ணுவது பேராசை.அதுவே பொறாமைக்கு வழிகோலுகிறது. இறுதியில் அவன்  அனைத்தையும் இழக்கிறான்.
எனவே,வாழ்வில் நல் முயற்சிகள் தொடரட்டும்.வாழ்வில் வளர்ந்தோரை வாழ்த்துவோம், இணைந்தே வளர்வோம்.[தீபம்]

"மகளிர் மட்டும்" - பெண்ணின் பெருமையை உணர்த்தும் படம்...

நாம் நமது வாழ்கையில் நிறைய படங்களை பார்க்கிறோம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் ஒரு சில படமோ, மனிதர்களோ நமக்கு என்றைக்கும் மறப்பதில்லை. நாம் எத்தனை பெரிய மனிதர்களானாலும் அவற்றின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். எனக்கு பத்து வயது இருக்கும்போது குடும்பத்துடன் "மகளிர் மட்டும்" படத்தை கோவையில் சாந்தி திரையரங்கில்  சென்ற பார்த்த  நியாபகம். ஒரு முறை மதுரை சென்றபோது ஒரு வீடியோ கடையில் மகளிர் மட்டும் படம் இருப்பதை பார்த்ததும் எனக்கு என் சிறுவயதில் திரையரங்கில் பார்த்த நியாபகம் வந்தது, உடனே அந்த படத்தை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். பல நாள் அந்த படத்தை பார்கவில்லை வேறு ஒரு படம் பார்க்க எடுத்தபோது மகளிர்  மட்டும் படம் என் பார்வையில்பட்டது மீண்டும் எனக்கு  என் பழைய சிறுவயது நியாபகங்கள்.இன்று பெண்கள் மீது ஒரு மரியாதை இருக்கும் என்றால் அந்த படம் தந்த தாக்கமாக இருக்கலாம்.படத்தை பார்க்கும் தாக்கம் பிறந்தது படம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை படம் பார்த்தவர்களுக்கு  நான் சொல்லத்தேவையில்லை. இருந்தாலும் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது. படிக்காமல் இருக்க உங்களால் முடியாது என்பதால் சொல்கிறேன்.

 குடும்பசூழ்நிலைக்காக வேலைக்கு போகும் பெண்கள் படும் அவதியை, சித்ரவதையை, கேவலமான ஆண்களின் பார்வையை சந்திக்கும் பல லட்சம் பெண்களில் மூன்று பேராக நடித்திருப்பது ரேவதி, ரோகினி மற்றும் ஊர்வசி. மூவருமே நடிப்பை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் இந்த படத்தில். இந்த படத்தை முதல் முறை பார்பவர்கள் கண்டிப்பாக விழுந்து விழுந்து சிரிக்கும் வசனத்தை எழுதியிருப்பது என் பெயர் கொண்ட நடிகர் கிரேசி மோகன் அவர்கள். குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு வரும் பெண்களை காமத்தால் அடையத்துடிக்கும் கார்மெண்ட்ஸ் கம்பெனி மேலாளராக நடித்திருப்பது நாசர் அவர்கள்.
நாசர் செய்யும் சில்மிசங்களை பொறுக்கவும் முடியாமல் வேலையை விடவும் முடியாமல் அவதிப்படும் பெண்கள். அப்படிப்பட்ட மேலதிகாரியை கடிவாளம் போட்டு அடக்கும் படமாக மகளிர் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கங்கே சினிமாதனம் இருந்தாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் இப்படி கொடூர  மனம்  படைத்த ஆண்களை சமாளித்து பல பெண்கள் வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது எவ்வளவோ மாறிவிட்டது என்றாலும் நிறைய இடங்களில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்ணை பெண்ணாக பார்க்காமல் போகப்பொருளாக பார்க்கும் வக்கரபுத்தி படைத்த ஆண்கள் நேற்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள் நாளையும் இருப்பார்கள். அவர்களுக்கு இந்தப்படம் ஒரு பாடம்.

இந்த படத்தில் ரேவதி அவர்கள் அவ்வளவு அழகு. படம் முழுவதும் அவரது நடிப்பு அவரைப்போல் அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு பிணத்தை கடத்துவது, காரை திருடுவது, என்று ஏகத்துக்கு கலாட்டா செய்திருக்கிறார். ஊர்வசி பயத்தில் உளறிக்கொட்டுவது, ரோகிணியின் சென்னை பாசை படம் முழுவதும் நம்மை ஆக்ரமித்துவிடும்.
நாகேஷ் அவர்கள் பிணம்கூட இவ்வளவு நன்றாக நடிக்குமா? என்பது போன்ற ஒரு அற்புதமாக  நடித்திருப்பார். இந்த காட்சியை முதல் முதலில் பார்க்கும்போது நான்  எவ்வளவு  ரசித்திருப்பேன் என்பது என்னால் இப்போது  உணரமுடிகிறது. ஒரு வசனமே இல்லாமல்  உடலசைவற்ற உடல்  அசைவைக்கொண்டு  நல்ல நடிகர் என்ற கிரீடத்தை ஒரு காட்சியிலேயே அசத்தியிருப்பார் நாகேஷ் அவர்கள்.

நாசரை கடத்தி கம்பனி நிருவாகத்தை கட்சிதமாய் கையாண்டு கம்பனியை மாற்றிக்கட்டும் ரேவதியின் நடிப்பு கம்பனியை மட்டுமல்ல படத்தையும் வெற்றிக்கு உயர்த்தியிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆளுமையை, நிர்வாக திறமையை, புதிய புதிய யோசனைகளை கொண்டுவந்து மூன்றே நாளில் கம்பனியை மாற்றிக்காட்டுவது  சினிமாத்தனமாக இருந்தாலும்  அதில் உள்ள ஆளுமையை, பெண்ணின் பெருமையை வெகுவாக உயர்த்திவிடுகிறது.


 படத்தின் கடைசியில் கம்பனியின் முதலாளியாக வரும்  கமல் படத்தின் திருப்புமுனையாக வருகிறார். நாசரை அந்தமானுக்கு அனுப்பிவிட்டு நிருவாகத்தை ரேவதியிடம் ஒப்படைப்பதோடு ரேவதி தனக்கு கணவானாக வருபவரை கற்பனையாக கணிப்பொறியில்   வடிவமைத்த உருவம் கமலாக வருவது ரசிக்கவைக்கிறது. படம் பெண்களை பற்றியது என்றாலும் இரண்டுவகையான ஆண்களை அதில் காட்டப்படிருக்கிறது பெண்களை காமப்பொருளாக பார்க்கும் அல்ப  ஆணாக நாசர் நடித்திருப்பார் , மற்றும் பெண்ணின் திறமையை மதித்து பெண்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் ஆல்பா  ஆணாக கமல் நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் ஆண்கள் தனக்குள்  கேட்கவேண்டிய கேள்வி இதுதான் நாம் அல்ப ஆணா? ஆல்பா ஆணா? என்பதுதான்.

உன்னை பார்த்த உடன்...

எங்கள் கிராமத்தின் வாசனை மீண்டும் கிடைக்குமா..? [ஆக்கம்:அகிலன் தமிழன் ]

இருள் தனை களையும் பொழுது
 எம் விட்டு சேவல்கள் கூவும் சத்தமும் 
  காகங்கள்  கரைந்து எம்மை எழுப்பும் ஒளியும் 
அதனை தொடந்து கதிரவனின் வருகையும் 
 எங்களின் வருகையை எதிர் பார்த்து 
எம் வீ ட்டு வளர்ப்பு பிராணிகளின் குதூகளிப்பும் 
கிராமத்தின் காலை காட்சி இன்பம் மறக்க முடியுமா..?



                                                                                                   
தாய்   முகத்தை காணவும் 
அவள்   குரலும் ஓசைக்கும் 
அவள் தரிசனத்துக்கு 
காத்து இருந்து விழிக்கும் தருணமும் 
எங்களுக்கு சேவை செய்ய
 அவள் காத்து இருந்த கணங்களும் 
மீண்டும் வருமா?



அம்மாவை விட்டு பிரிய மனம் இன்றி 
பாடசாலைக்கு போகாமல் இருந்தாலும் 
அக்கா அல்லது  அண்ணன் 

இழுத்து கொண்டு பாடசாலைக்கு சேர்க்கும் 
அழகிய பொழுதுகள் மீண்டும் கிடைக்குமா ? ...

                                                 கணித வாத்தியார் அடிப்பார் என்று சொல்லி 

                            இரண்டு கால்சட்டையை அணிந்து

      பள்ளி சென்ற தருணம்..

      என்னிடம் ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது                என பெருமைபட்ட தருணம் 

      புதிதாக வாங்கும் மை பேனாவும்
    அதை  நண்பர்களுக்கு காட்டி 
    பவுதிரம்மாக வைத்து இருக்கும் போது 
      அதை கொண்டு தங்களின் 

                கையெழுத்தை எழுதி   பார்க்க
 கூடும் நண்பர்களும்...

                                                    ஒருவருக்கு ஒருவர் பட்ட பெயர் வைத்து கூவுவதும் 
அதனால் வரும் 

இனம் புரியா   கோவமும் சண்டயும்

மீண்டும் வருமா!


மாலை பொழுது என்றதும் 

வெற்றி மடத்தில் விளையாடும் விளையாட்டும் 
வாழைப்பழத்துக்கு ஆக 

போட்டி போட்டு விளையாடும்  கிளி தட்டும் 
கிட்டி புல்லு விளையாட்டும் 

ஒப்பு விளையாட்டும் மறக்க முடியும்!
 

உடம்பு வெயர்க்கும் போது 
சட்டையை கழற்றி  
 நண்பர்களுடம் கொடுத்து விளையாடிய தருணமும்
 நண்பர்கள் சட்டையை ஒளித்து வைப்பதும் 
அதானல் எழும் சண்டையை பார்க்க 

நண்பர்கள் துண்டிவிடுவதும்
அப்  பொழுதுகள் மீண்டும் வருமா! 




     கோயில் திருவிழாவுக்காக 

இரவு வேளை   களவாக 
     தென்னை குருத்தை வெட்டி 
                  தோரணை செய்து நண்பர்களுடன்

 கோயிலை சோடிப்பதும் 

              அதில் சில நண்பர்கள் களவாக 


                     இளநி பிடிங்கி கொண்டு வருவதும் 

                     அதை பறித்து குடிக்கும் போட்டியும் 


                   அடுத்த நாள் நல்ல பிள்ளைகளாக 

                                     வாழ்ந்து திரிந்த காலமும் மீண்டும் வருமா!

திருவெம்பாவை வந்ததும்  

விடிய காலை  நண்பர்களுடம் எழும்பி
தேவாரம் படித்து திரிந்த காலமும் 

அந்த நேரம் பொடியளுக்காக 
தின் பண்டங்கள் செய்து 

தேனீர் வைத்து தரும் கிராமத்தின் மக்களின் 
பாசமும் மீண்டும் கிடக்குமா!