கணிணிஉலகம்:


ஐபோன், ஐபேட் வரிசையில் அடுத்து வரும் ஆப்பிள் டிவி

ஆப்பிள் ஒரு டிவியை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் வதந்தீ காட்டுத் தீப்போல பரவி வந்தது. அந்த வந்தி தற்போது உண்மையாகப் போகிறது. ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை வடிவமைத்த பாக்ஸ்கான் இப்போது ஆப்பிள் ஐடிவியை தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. சைனா டெய்லி என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாக்ஸ்கானின் தலைவர் டெரி கோ தமது நிறுவனம் ஆப்பிளின் புதிய டிவியை தற்போது தயாரித்து வருவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதன் மூலம் பல காலமாக நிலவி வந்த வதந்தி இப்போது நிஜமாகப் போகிறது என்று கூறுகிறார். இந்த டிவி பேஸ் டைம் மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகளுடன் வர இறுக்கிறது. இந்த புதிய டிவி தயாரிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, இந்த டிவி இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வருவது சாத்தியமில்லை என்று சைனா நாளிதழ் கூறுகிறது.
பாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் சிறந்த வர்த்தக நண்பர்கள் என்ற முறையில் டெரி ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த முக்கியத் தகவலைக் கசியவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் பாக்ஸ்கான் இந்த புதிய ஆப்பிள் டிவியைத் தயாரிக்க ஷார்ப் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்ற சைனா டெய்லி கூறுகிறது. சைனா டெயிலியின் இந்த புதிய தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐசிஎஸ் அப்டேட் பெறும் ஐபெரி டேப்லெட்!

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டைத் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் (ஐசிஎஸ்) இயங்கு தளத்தை மிக வேகமாக அப்டேட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐபெரி நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு டேப்லெட்டான ஐபெரி பிடி07ஐக்கு ஐசிஎஸ் அப்டேட்டை வழங்கி வருகிறது. அதன் மூலம் இந்த ஐபெரி டேப்லெட் மேலும் புதுப் பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த அப்க்ரேட் மூலம் இந்த டேப்லெட்டின் கேமரா அப்ளிகேசன் மற்றும் பேட்டரி பேக்கப் ஆகியவை மேம்பாடு அடையும். அதோடு கேலரி அப்ளிகேசன் மற்றும் பன்முக செயல்பாடு போன்றவற்றில் இந்த டேப்லெட் இன்னும் சிறப்பாக செயல்படும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே இந்த டேப்லெட் 800×480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம், 1 ஜிஹெர்ட்ஸ் எஎம் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர், 4ஜிபி சேமிப்பு, சூப்பரான முகப்பு கேமரா, வைபை மற்றும் 3ஜி டோங்குள்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
இந்த அப்டேட் மூலம் இந்த மலிவு விலை டேப்லெட்டின் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபெரி டேப்லெட்டை வைத்திருப்போது நேரடியாக அப்க்ரேட் செய்யலாம். அதாவது இந்த அப்க்ரேட் பைலை எஸ்டி கார்டு மூலம் இந்த டேப்லெட்டில் இணைக்க வேண்டு. பின் ஐபெரியின் வெப்சைட்டுக்குள் சென்று அப்டேட் லிங்கை க்ளிக் செய்தால் போதும். டேப்லெட் மிக எளிதாக இந்த அப்டேட்டைப் பெற்றுவிடும்.

வேகத்தில் பின்னும் புதிய லெனோவா கம்ப்யூட்டர்!

லெனோவா ஒரு புதிய சிறிய மேசைக் கணினியைக் களமிறக்க இருக்கிறது. இந்த கணினிக்கு திங்க்சென்டர் எம்92பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மேசைக் கணினியின் சிறப்பு என்னவென்றால் இந்த கணினி ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த கணினி மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த வேகம் மிகத் தாறுமாறாக இருக்கும். மேலும் இது முழுக்க முழுக்க ஒரு வர்த்தக கணினியாகும். இந்த கணினி டைனி என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது. இந்த லெனோவா மேசைக் கணினி இன்டல் கோர் சிப் கொண்டிருப்பதால் இதன் உறுதிக்கு உத்திரவாதம் வழங்க முடியும். மேலும் இந்த கணினி விப்ரோ வசதி கொண்டிருப்பதால் இது ஐடி கண்ட்ரோல் வசதிகளையும் வழங்குகிறது.
இந்த கணினியில் ஸ்பின்னிங் அல்லது சாலிட் ஸ்டேட் ஹார்ட் ட்ரைவ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கணினி வைபை மற்றும் க்ராபிக்ஸ் வசதி ஆகியவை கொண்டு வருவதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக அருமையாக செய்ய முடியும்.இந்த லெனோவா கணினி டிஸ்ப்ளேபோர் டோங்குள்களையும் கொண்டு வருகிறது. அதனால் விருப்பமான டிஸ்பளேயை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறிய கணினி வோல்பி மற்றும் வீடியோ உரையாடலையும் சப்போர்ட் செய்கிறது. இந்த சிறிய மேசைக் கணினி மற்ற பெரிய மேசைக் கணினிகளைவிட மிக உறுதியாக இயங்கக் கூடியது. மேலும் இதன் பூட்டிங் மிக விரைவாக இருக்கும்.

சாம்சங் அறிமுகம் செய்யும் புதிய நோட்புக்

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய வரிசை 5 550பி நோட்புக்குளை இங்கிலாந்தில் களமிறக்க இருக்கிறது சாம்சங். இந்த அல்ட்ராபுக்குகள் மற்ற லேப்டாப்புகளைப் போல தோன்றுகின்றன. இந்த 5 550பி வரிசையில் இரண்டு நோட்புக் மாடல்களை சாம்சங் களமிறக்க இருக்கிறது. அதாவது 15 இன்ச் மற்றும் 17 இன்ச் என இரண்டு மாடல்கள் வருகின்றன. 15 இன்ச் நோட்புக்கின் டிஸ்ப்ளே 1366 X 768 பிக்சல் ரிசலூசனையும் அதே நேரத்தில் 17 இன்ச் நோட்புக் 1600 X 900 பிக்சல் ரிசலூசனையும் கொண்டுள்ளன. இந்த நோட்புக்குகள் க்வாட் கோர் ஐவி பிரிட்ஜ் கோர் ஐ7 சிப்களையும், 8ஜிபி ரேமையும் கொண்டுள்ளன. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக 2ஜிபி ஜிஇபோர்ஸ் ஜிடி 650எம் வசதியும் உள்ளது. அதுபோல் இந்த நோட்புக்குகளில் ப்ளூ ரே ஆப்டிக்கல் ட்ரைவ் ப்ளஸ் வசதியும் உண்டு. மேலும் இதன் சேமிப்பு வசதி 2டிபி ஆகும். எனவே ஏராளமான தகவல்களை இந்த நோட்புக்குகளில் சேமித்து வைக்க முடியும். ஒலி அமைப்பிற்காக இந்த நோட்புக்குகள் ஜேபிஎஸ் ஸ்பீக்கர்களையும், மேக்ஸ் பாஸ் பூஸ்ட் துணை ஊபரையும் கொண்டுள்ளன. அதனால் இதன் ஒலி அமைப்பு மிக பக்காவாக இருக்கும்.

ஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் புதிய நோட்புக்!

மவுஸ் கம்யூட்டர் நிறுவனம் நோட்புக் ரசிகர்களுக்கு ஒரு புதிய நற்செய்தியை வழங்க இருக்கிறது. இந்த மவுஸ் கம்யூட்டர் எல்பி-டி710பி என்ற ஒரு புதிய 17.3 இன்ச் நோட்புக்கை களமிறக்க இருக்கிறது. கருப்பு நிறத்தில் களையாக வரும் இந்த நோட்புக் அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது. தொடு வசதி இல்லாத இதன் திரை 1920 × 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. விண்டோஸ் 64பிட் 7 ஹோம் இயங்கு தளத்தில் இயங்கு இந்த நோட்புக் இன்டல் கோர் ஐ5-2450எம் ப்ராசஸர், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் மற்றும் இன்டல் எச்எம்76 சிப்செட் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இந்த நோட்புக் மிக வேகமாக இயங்கும் திறன் கொண்டது. அதுபோல் இந்த நோட்புக் மிக உறுதியாகவும் இருக்கும். முகப்பு வெப்காம் மட்டும் கொண்டுவரும் இந்த நோட்புக் வீடியோ வசதியையும் கொண்டுள்ளது. இதில் இமெயில் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகளும் உண்டு. 4ஜிபி டிடிஆர்3 ரேமைக் கொண்டிருக்கும் இந்த நோட்புக்கின் சேமிப்பை மல்டி கார்டு ரீடர் மூலம் விரிவுபடுத்தவும் முடியும்.
இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்எல் ப்ரவ்சர் வசதிகளை இந்த நோட்புக் கொண்டுள்ளதால் இதில் தடையின்றி தகவல்களை மிக விரைவாக பரிமாற்றம் செய்யலாம். இந்த நோட்புக் சூப்பாரன பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. அதற்காக இந்த நோட்புக் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர், வீடியோ கேம்கள், அசத்தலான ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது. சூப்பரான லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த நோட்புக் 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த நோட்புக்கின் விலை ரூ.50000 ஆகும். இந்த நோட்புக் தற்போது ஜப்பானில் விற்பனையாகி வருகிறது.

புதிய ஐஓஎஸ் இயங்கு தளத்தை அப்டேட் செய்யும் ஆப்பிள்

நவீனம், புதுமை மற்றும் தரம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக எப்போதுமே ஆப்பிள் நிறுவனம் இருந்து வருகிறது. அதனால் தான் வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் மீது மோகம் கொண்டு இருக்கின்றனர். இந்த ஆப்பிள் தனது ஐஒஎஸ் இயங்கு தளத்தில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. அதன் மூலம் இந்த ஐஒஎஸ் இயங்கு தளம் மேலும் மெருகு பெறும் என்று நம்பலாம். ஆப்பிளின் ஐஒஎஸ் 5.1.1. அப்டேட் பல வசதிகளுடன் வருகிறது. அதாவது ஏர் ப்ளே வீடியோ ப்ளே பேக்கிற்கான பக் பிக்சஸ் வசதி இந்த அப்டேட்டில் உள்ளது. அதனால் புதிய ஐபேடை 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 3ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. மேலும் அன் ஏபிள் டூ பர்சேஸ் என்ற தவறான செய்தியும் புதிய ஐபேடில் வராது.
இந்த ஐஒஎஸ் 5.1 கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆப்பிளால் அறிமுகம் செய்யப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் இப்போது இந்த இயங்கு தளத்தில் 5.1.1 அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேட் பேட்டரிக்கும் நீடித்த ஆயுளை வழங்கும். இந்த புதிய ஐஒஎஸ் 5.1.1.ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக ஐஒஎஸ் இயங்கு தளம் வைத்திருக்கும் ஐபேட் வாடிக்கையாளர்கள் தமது ஜெனரல் சாப்ட்வேர் அப்டேட்டுக்குள் சென்று இந்த புதிய அப்டேட்டை செய்யலாம்.





ஒளிர்வு-(17) சித்திரை த்திங்கள்-2012


Loading...
எம்மவர் இணையத்தளங்களுக்கும்,
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் எமது
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தளத்தில்:சிந்தனை ஒளி,கனடாவிலிருந்து....., , ,பிராத்தனையா?,அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு, ஒரு கடிதம் ஆராய்ச்சியாளரின் செய்திகள்,தொழில்நுட்பம்,உணவின்புதினம்கணிணிஉலகம்,பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வைசிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!சினிமா.
சிந்தனை ஒளி:
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
 ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
 துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
சிந்திக்காதவன் முட்டாள்.சிந்திக்கத் துணியாதவன் கோழை
 சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
 முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
என்றும் நினைவில் கொள்.
 மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

கனடாவில்........


ஈழத்தமிழ்த் திரைப்படத் துறையில் கனடியத் தமிழ்க் கலைஞர்களின் பங்களிப்பில்...

ஸ்ரார் 67
 Water sound picture இன் தயாரிப்பில்  30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று  கனடாவில் scarborough இல் உள்ள Cineplex தியேட்டரில் வெளியிடப்பட்டது ஸ்ரார் 67

     புலம்பெயர்ந்த எம்மவரிடையே பொதுவான பிரச்சனைகளில் ஒன்றே இலக்கமற்ற தொலைபேசி அழைப்புக்கள். இவ்விலக்கமற்ற தொலைபேசி அழைப்புககளினால் அல்லல்ப்படும் ஒரு குடும்பத்தின் கதையே ஸ்ரார் 67. முற்றுமுழுதாக கனடாவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் அனைத்துலகத் திற்கும் பொதுவான பிரச்சனையை ஆழஊடுருவி நிற்பது மெச்சத்தக்கது. இதன்மூலம் எங்கள் சமூகத்தின் சர்வதேசப் பிரச்சனையை கையிலேடுத்து தீர்வுகண்டிருக்கும் கதி.செல்வக்குமார் மற்றும் றைடன் பாலசிங்கத்தின் சமூகபொறுப்புணர்வும் சமூகத்தின்மேல் கவிந்திருக்கும் அவர்களின் பரிந்துணர்வும்  வெளிப்படும் திரைப்படமே ஸ்ரார் 67

     கனடாவில் ஏறக்குறைய நாற்பது திரைப்படங்கள் எம்மவர்களினால் தயாரிக்கப்பட்டிருந்த போதும் ஒரு முழுமையான திரைப்படத்திற்குரிய அம்சங்களை தாங்கிவந்தவை ஒருசிலவே. எனினும் அவைகளாலும் மக்களின் கவனத்தை கவரமுடியவில்லை. ஏனையவை குறுந் திரைப்படங்களாகவும் பரீட்சார்த்த முயற்ச்சிகளாகவுமே வெளி வந்திருந்தன. இந்நிலையில் ஒரு முழுமையான திரைப்படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் தாங்கி இன்றைய ஹொலிவூட்டின் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது ஸ்ரார் 67

    கனடாவில் எம்மவரின் திரைப்படவரலாறு குழந்தைப்பருவத்தைக் கடந்து டீன்ஏஜ் பருவத்தில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப இத்திரைப்படமும் இளமையின் கனவுகளுடனும் அதற்குரிய வேகத்துடனும் நகர்ந்து செல்கிறது. புலம்பெயர்ந்து புதியஇடத்தில் பதியம் வைக்கப்பட்ட எமது இளைஞர்கள் எப்படியாவது சாதித்து விடத்துடிப்பதை அப்பட்டமான கதைவசனங்களுடன் காட்சிப்படுத்தி இருக்கும் ஸ்ரார் 67 எம்மவர்  சிலரின் ஒருபக்க வாழ்க்கையை அப்படியே எங்களின் கண்முன்னே தருகின்றது.

இத்திரைப்படம் சமூகத்திற்கான படிப்பினையல்ல சமூகத்தின் மீதான ஒரு பார்வையே. தொடர்ந்தும் திரைப்படம் ஊடாக சாதிக்கத்துடிக்கும் கதி.செல்வக்குமாரின் தயாரிப்பில் வெளிவருகின்றது ஸ்ரார் 67

     கதி.செல்வக்குமார் இந்திய திரைப்படப்பாடலுக்கு அபிநயம் புரிந்த எம்மவரின் கனவுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியவர். 1997இல் வெளிவந்த இவருடையமனோரஞ்சிதம்எனும் பாடல்களின் ஒளித்தொகுப்பு முழுக்கமுழுக்க இவரின் சொல்லாட்சியில் உருவான பாடல்களுடன் வெளிவந்திருந்தது. முற்றுமுழுதாக இந்தியதிரைப்பட பாடல்களை பிரதி செய்வதை தவிர்த்து பாடல் நடிப்பு ஒப்பனை ஒளிப்பதிவு இயக்கம் என்பவற்றுடன் இந்திய இசையை மட்டுமே இணைத்து அவ்விசையை ஆழம் பார்த்த அளவுகோலாகவேமனோரஞ்சிதம்பாடல்தொகுப்பு அன்று வெளிவந்திருந்தது. இந்தியஇசையின் உயரத்தை அளந்துகொண்டமனேரஞ்சிதம்பாடல்தொகுப்பின் பின் அதற்கும் சற்றும் குறையாததரத்துடன் வெளிவந்தது இவருடைய இரண்டாவது பாடல் தொகுப்பானமுதல்நாள்பாடல்கள் வெளியீடாகும். பாடல்கள் நடிப்பு ஒப்பனை இயக்கம் இவைகளுடன் எம்மவர்களின் இசையினையும் இணைத்து முழுமையான ஒருதொகுப்பாக வெளிவந்திருந்ததுமுதல்நாள்

     கோடம்பாக்கத்தின் உயரத்தைத் தொட்ட இவ்விசைத் தொகுப்புகள் தந்த அனுபவத்துடன் இவரும் தனது அடுத்தபயணத்தினை ஆரம்பித்தார். குறுந்திரைப்படங்களில் காலடிவைத்த இவர் உபசாந்தி நிறங்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் என பதினாறு குறுந்திரைப் படங்களினை இவ்விடைக் காலத்தில் எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இவ்வாறு பதினாறும் பெற்று பெருமையுடன் வாழ்ந்த இவரின் நீண்டநாள் கனவின் வெளிப்பாடாக தயாராகி வெளிவருவதுதான் ஸ்ரார் 67.

    தொட்டுவிட்ட சிகரங்களை தூரத்தில் விட்டுவிட்டு புதியபுதிய சிகரங்களை தேடும் இவரின் திரைப்படகனவுகளிற்கு வானமும் எல்லையில்லை. அதற்கு அப்பாலும் பிரபஞ்சத்தை கடந்தும்......ஏதோ ஒன்று? இந்த நிலையிலேயே ஹொலிவூட் சினிமாவின் தொழில்நுட்பங்களுடன் இவரின் பரந்துவிரிந்த கனவினையும் எம்கண்களின் முன்னால் கொண்டுவருகின்றது ஸ்ரார்67.

    இத்திரைப்படத்தின் திரைக்கதை இயக்கம் என்பவற்றை கதி.செல்வக்குமாருடன் இணைந்து உருவாக்கியவர்றைடன்வி. பாலசிங்கம் ஆவார். இலங்கையில் MTV எனப்படும் மகாராஜா தொலைக்காட்சி மற்றும் NEWS1 என்பவற்றில் எடிட்டராக கடமையாற்றிய இவரே ஸ்ரார்67 திரைப்படத்தின் படத்தொகுப்பபு மற்றும் E.S.P எனும் சலனப்பொறியியலி னையும் முழுமையாக கையாண்டுள்ளார். இவரிடம் கைவரப்பெற்ற புதியபுதிய தொழில்நுட்பங்கள் இத்திரைப்படத்தினை முழுமையாக்குவதில் பெரும்பங்கை வகிக்கின்றன. கதி.செல்வக்குமாரும் இவரும் இணைந்தது புலம்பெயர் சினிமாக்களிற்கு மட்டுமன்றி தமிழகசினிமாக்களிற்கும் சவாலாகியுள்ளதை   உலகம் உணர்ந்துகொள்ள வெளிவரும் திரைப்படமே ஸ்ரார் 67.

      புதினெட்டு நடிகநடிகையர் குறிப்பாக இமான் கண்ணன் ஹமில்ட்டன்சத்தப்பணகாய்ரமேஸ், கணபதி, இரவீந்திரன், மலர்விழி, யசோதா என கனடாவின் புகழ்பெற்ற திரைமுகங்கள் போட்டிபோட்டு நடித்திருக்கும் அற்புதமான திரைப்படம் ஸ்ரார் 67.

     இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் பார்ப்பவரின் மனங்களில் பதியுமாறு ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளராக கடமையாற்றி உள்ள திரு.குகேந்திரன். கனடாவில் பாடகராக அறிமுகமாகி எல்லோரின் நெஞ்சங்களையும் தொட்டஉணர்ச்சிப்பாடகர்செந்தூரன் அழகையா இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கும் களமாக காட்சிதர வருகின்றது ஸ்ரார் 67.

    கதி.செல்வக்குமாரின் முந்தைய படைப்புக்கள் அனைத்தும்அன்னபூரணாஸ்தயாரிப்புகளாகவே வெளிவந்திருந்தன. எங்களின் பிறந்தகமானவல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் குளேஸ்ரெர் வரைவந்தஅன்னபூரணிஅம்மாள்என்ற பாய்க்கப்பலின் பெயரினைத்தழுவி உருவாக்கப்பட்டதுதான்அன்னபூரணாஸ்தயாரிப்பு நிறுவனம் ஆகும். காற்றின் உதவியுடன் கடல்நீரைக்கிழித்து அமெரிக்காவிற்குள் அன்று நுழைந்தது அன்னபூரணி. அன்று அன்னபூரணியுடன் இணைந்து வந்த தண்ணீர்ச்சத்தம் போல AnnaPuranas உடன் இணைந்து வருவதுதான் Water Sound Picture ஆகும். இதன் முதலாவதுவெளியீடே ஸ்ரார் 67.

ஆம் உங்களின் பார்வைக்கானது எங்களின் ஸ்ரார் 67
  தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்

ஆராய்ச்சியாளரின் செய்திகள்


2029ல் கணணிகள் மனிதர்களை மிஞ்சிவிடும்
இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.
 இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.
 அவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.
 இது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.
 அந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.
 எல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.
 இதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.
 அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்.
அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் :
டீன்ஏஜ் இளைஞர்களுக்கு 7 மணி நேரம் தூக்கம் போதும் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பிர்காம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எரிக் எய்ட் தலைமையிலான குழுவினர் தூக்கம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தினர். தினமும் 7 மணி நேரம் தூங்கும் டீன்ஏஜ் பருவத்தினர் கல்வி கற்பதில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் சுமார் 1,724 பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் தூங்கும் நேரம், தேர்வுகளில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் எரிக் கூறுகையில்: 16 வயதுள்ள ஒருவருக்கு 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று முன்பு நம்பப்பட்டது. அவர்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதும் என தற்போது தெரியவந்துள்ளது. வயது ஏற ஏற தூக்கத்தின் அளவை இன்னும் குறைக்கலாம். 10 வயது குழந்தைகள் 9 மணி நேரமும், 12 வயதினர் 8 மணிநேரமும், டீன்ஏஜ் வயதினர் 7 மணி நேரமும் தூங்குவது சரியான அளவு என்றார். தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
எல்லாருக்கும் தூக்கம் அவசியம். நீண்ட காலமாக 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், மந்தத் தன்மை ஏற்படும். செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கப்படும். சரியாக தூங்காத பெண்களுக்கு புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் என்கிறது அந்த ஆய்வு.

கருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு!
அல்ட்ரா சவுண்ட் மூலம் புதிய முறையிலான கருத்தடையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அல்ட்ரா சவுண்ட் மூலம் உடல் உள் உறுப்புகளை படம் பிடிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இதே அல்ட்ரா சவுண்ட் மூலம் கருத்தடை செய்யலாம் என்பதை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது கருத்தடைக்கு பல்வேறு முறைகள் உள்ளன.ஆனால் அவற்றில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.வேறு சிலவற்றால் போதிய பலன்கள் கிடைப்பதில்லை.எனவே கருத்தடை முறைகள் இன்னும் முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை.

இப்போது கண்டுபிடித்துள்ள அல்ட்ரா சவுண்ட் கருத்தடை முறை முழுமையான வெற்றி அடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அல்ட்ரா சவுண்ட் அலைகளை உயிரணுப்பையில் தாக்க செய்து அதை செயலிழக்க செய்வது புதிய முறை கருத்தடையாகும். இந்தமுறை மூலம் உயிரணுவின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிடும்.
இதனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு முற்றிலும் நின்றுவிடும்.15 நிமிடத்தில் சிகிச்சை முடிந்துவிடும். இன்னும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி இதை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா?
. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது.
இதனை நன்றாகச் சமைக்கும்போது சிகப்பு நிறம் மாறி பழுப்பு நிறம் எய்துகிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என்று அழைக்கப்படுகிறதுஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.
மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.
இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.
குழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம்:
 குழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று  நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 குறிப்பாக, மழலையரிடமிருந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை மாற்றுவதனால் பள்ளிக்கு வரத்தொடங்கும் வயதிலேயே அதிபருமன் உடலுள்ளவர்களாக அவர்கள் ஆவதைத் தடுக்க முடியும். மழலையர் பள்ளிகளுக்கும் இதில் பங்குண்டு என்று ஆய்வில் ஈடுபட்ட கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஏதென்ஸ் ஹார்கோப்பியோ பல்கலைகழகத்தின் துணைப் பேராசிரியர். "உடல் உழைப்புக்கு வாய்ப்பில்லா நடத்தை முறைகள், குறிப்பாக, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை உடற்பருமன் அதிகரிப்பதற்கு வழி கோலுகின்றன"
ஸ்பெய்னில் பள்ளிக்கூடம் செல்லும் வயதை அடைவதற்கு முன்பே 40 சத குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகள் அதிபருமனாகிவிடுகிறார்கள் என்றும், ப்ரிட்டனின் ஐந்தில் ஒரு குழந்தை இக்குறைப்பாட்டைக் கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
'கடவுள்' இருப்பது உண்மை தான்!!
கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தட்ஸ்தமிழ் வாசகர்கள் இது குறித்த எனது முந்தைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள்.

அதை படிக்காதவர்கள், அல்லது மீண்டும் படிக்க விரும்புவோர் 'Higgs Boson'! கடவுளே! (/editor-speaks/2008/09/09-world-biggest-physics-experiment.html), கடவுளின் அணுத் துகளைத் தேடி...பயணம் ஆரம்பம் (/editor-speaks/2010/03/31-atom-smasher-achieves-big-bang-collisions.html) ஆகிய கட்டுரைகளை ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).
கிட்டத்தட்ட 400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

இருவருக்கும் கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.
அது என்ன 'ஹிக்ஸ் போஸன்'?:
ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.
இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

டரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.
இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.
இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
'ஹிக்ஸ் போஸனிடம்' ஸாரி.. கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு காத்திருப்போம்..!