ஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் ஆவணித் திங்கள் வணக்கம்,

உறவுகளுக்கிடையில் அவநம்பிக்கை வளர்ந்து செல்வதனை இன்று கண் கூடாகக் காண்கிறோம். அதன் காரணம் பழகுகின்ற விதங்களில் காட்டிடப்படும் [பேதங்கள்] ஏற்றத்தாழ்வுகளே ஆகும். அதனால் அவர்கள் எப்பயனையும் அடைந்திடப் போவதில்லை.இருந்தும் இன்றைய உலகம் அவற்றினை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை. இதனைத் தானோ கலியுகத்தின் குத்துக் கரணங்கள் இவை என்று ஆன்மிக வாதிகள் கூறுவார்களோ ?
                                                                   




click on ''like'' top of the right corner
மேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டதுதீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

கட்டுரைகள்,
கவிதைகள்,
நகைச்சுவை(சிரிப்பு),
திரைப் பட விமர்சனங்கள்(திரை),
திரைச்செய்திகள்(திரை),
*தொழில்நுட்பம்,
உடல்நலம்(உணவு),
*ஆன்மீகம்
பாடல்
நடனம்
என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்

* " பறுவதம் பாட்டி",(நடப்பு)
* "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
* அரசியல் பேசும்  ‘’சண்டியன் சரவணை "(நடப்பு)
 கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின்
புதுமைகள்கூறும்  ஆய்வுக்கட்டுரைகள்                                                                        
அகிலன் தமிழனின் கவிதைகள்,கதைகள்
 கயல்விழியின் தொகுப்புக்கள்,
என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
புதிய வாசகர்களின் வசதி கருதி ஒவ்வொரு புதன்கிழமை யும்ஏற்கனவே  வாசகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற பதிவுகள்
 மீள வெளியாகின்றன.
எமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய
 நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.
தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும்தீபத்தின்எழுத்தாளார்களுக்கும்வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறதுஉங்கள்ஆக்கங்களுக்கு:-  s.manuventhan@hotmail.com
தமிழில் எழுதுவதற்கு:   click http://tamil.changathi.com/ then Type in English and press space(add space) to get converted to tamil.
உங்கள் வருகைக்கு நன்றி [listening] 

www.theebam.com



'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01


பரிணாம வளர்ச்சியின் படி, குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் தோன்றினான் என்று அறிவியல் சொல்கிறது. எனவே, மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பொதுவாக மனிதர்களிடயே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப் போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கி யிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்தி களையும் தான் பரி மாறிக் கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட  தகவல்கள் அமைந்துள்ளன. எது எப்படியாகினும் ,பொதுவாக, ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே ‘மொழி’ என்பார் அறிஞர்கள். மொழிதல் என்றால் சொல்லுதல் என்பது பொருள். பேச்சு மொழியே முதலில் தோன்றியது.உதாரணமாக, அறிஞர் மு. வரதராசனார்:

‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவைகளே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும்’ 

என்று கூறுகிறார். எனவே மொழி என்பதைப் பேச்சு, எழுத்து, எண்ணம் என்றும் பல நிலைகளில் அறியலாம். ஒலி வடிவான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி; வரி வடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்துமொழி. பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது; எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பர் அறிஞர். குளிர் மிகுதியால் பனி உறைந்து வேறுபட்டதைப் போல் கற்றவர்களின் முயற்சியால் மொழி இறுகி அமைந்ததே எழுத்து மொழி ஆகும்.

மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இவர்கள்  மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து மொழியைப் பயன்படுத்தும் வல்லமை கொண்ட , ஓமோ சாப்பியன்களுக்கு மாறியதால், அது, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்ல வில்லை. இதனால், பொதுவாக, மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. எனினும் 2007 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப் பட்ட  நியண்டர்தாலின் [Neanderthal] நாவடி எலும்பு [தொண்டை எலும்பு/hyoid bone] ஒன்று, நியண்டர்தால்கள் தற்கால மனிதர்கள் உடையதைய் ஒத்த ஒலிகளை எழுப்புவதற்கான வல்லமையைக் கொண்டிருக்கக் கூடும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. எனினும், உடற் கூற்றியல் அடிப்படை யிலான தற்கால மனிதனின் மிகப் பழைய புதை படிவப் பதிவுகள்,ஹோமோ சேபியன்கள் [Anatomically modern humans, Homo sapiens /ஓமோ சாப்பியன்சு], எதியோப்பியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதனுக்குரிய முழுமை யான நடத்தைகள் உருவாகி விட்டதாகக் கருதப்படுகிறது. அக் காலத்தில், கற் கருவிகள் துல்லியமாக ஒரே மாதிரியான வடிவத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டவையாகக் காணப்படுகின்றன. எலும்புகள், விலங்குக் கொம்புகள் போன்றவற்றாலும் கருவிகள் செய்யப்பட்டன. அத்துடன் அக் காலத்துக் கருவிகள், பயன்பாட்டு அடிப்படையில் இலகுவாக வகைப் படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. அவற்றை, எறிவதற்கான கூர்முனைகள், செதுக்குக் கருவிகள், கத்தி விளிம்புகள், துளைக் கருவிகள் என இலகுவாக அடையாளம் காண முடிகின்றது. இதை சரியாக பிள்ளைகளுக்கும், பிற குழு உறுப்பினர்களுக்கும், கருவிகளைச் செய்யக் கற்பிப்பது, மொழியின் துணை இல்லாவிட்டால் கட்டாயம் கடினமாக இருந்திருக்கும். எனவே இக்காலப் பகுதியில் அங்கு எதோ ஒரு மொழி பேசப்பட்டு இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. இது அதிகமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்ளக் கூடிய ஒரு இலகுவான தொடக்க மொழியாக, திருத்தம்பெறாத மொழியாக [பிட்யின்/pidgin language or a simplified primary language] இருக்கலாம். எனினும், அவை பிற்பாடு படிப்படியாக ஆயிரக்கணக்கான ஆண்டுக் காலப்பகுதியில் ஓரளவு நல்ல நிலையை எட்டி இருக்கும் என நம்பலாம். இந்த தொடக்க மனிதர்களுக்கு அப்பொழுது எழுத தெரியாது. தங்கள்
எண்ணங்களை வெளிப்படுத்த சைகைகளையும், உடல் அசைவுகளையும், செய்கைகளையும்  மற்றும் பிட்யின் மொழியையும் பாவித்தன. பின், ஏறத்தாழ, 25,000-30,000 ஆண்டுகளுக்கு முன்பு,குகைகளில் வாழ்ந்த மனிதன் தான் பார்த்து பயந்த, அல்லது தான் பார்த்து ரசித்த சில காட்சிகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பினான். அதற்கு உண்டான மொழி அவனிடம் இல்லை. எனவே அவன்; வசித்த குகையின் சுவர்களில் வெண்மை, சிவப்பு நிறமுடைய கற்களைக் கொண்டு தாம் நினைத்ததை ஏதோ ஒரு வகையில் ஓவியமாக வரையத் தொடங்கினான். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தான் செய்த போரினையும், விலங்கினைக் கொன்ற தீரத்தையும் வெண்மை, பழுப்பு நிறங்கற்களால் குகைச்சுவர்களில் ஈட்டி , மிருகங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் நெருக்கமாக வரைவதன் மூலமாக வெளிப்படுத்தினான்.

இந்த குகை ஓவியம் பல செய்திகளை எமக்கு இன்று சொல்கிறது. அதை வாசிக்கக் கூடியதாக உள்ளது. அப்படி என்றால், இந்த குகை பட வரைவை ஒரு வித எழுத்தாக நாம் கொள்ளலாமா? அப்படி இதை ஒரு ஆரம்ப எழுத்தாக கொள்வோமாயின் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் எழுத ஆரம்பித்தான் என்று கொள்ளலாம். இது ,இந்த குகை ஓவியம், ஆதிகால மனிதனின் தொல் எச்சங்களில் ஒன்றாக கருதலாம். இந்த ஓவியங்கள் அந்தகால நடப்புகளை நமக்கு இன்று சுட்டிக்காட்டி நிற்கிறது. இன்று உலகின் பல பகுதிகளில் குகை ஓவியம் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. கற்கால ஓவியங்களில் மனித சித்திரம் மிக அரிதாகவே காணப்படுகிறது. விலங்குகள், கோடுகள்,முதலியவை தான் மிகுந்து நிற்கின்றன. உதாரணமாக, வேட்டையாடுதல், விலங்குகளை பழக்குதல், விலங்குகள் இடம்பெயர்தல், போர், விவசாயம் முதலிய செயல்கள் ஓவியங்களில் காணப்படுகிறது. தமிழகம், கர்நாடக முதலிய இடங்களிலும் சில குன்றுகளில் கற்கால குகை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளன. எனினும் இந்த ஓவியங்கள் பண்டைய ஒரு கதையை சொல்கின்றனவா அல்லது ஒரு வித ஆவி வீடு ["spirit house"] ஒன்றை பிரதி பலிக்கின்றனவா அல்லது வேறு ஏதாவது சடங்கு [ritual exercise] ஒன்றை குறிக்கின்றனவா என்பது சரியாக தெரியா?

ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய எழுத்து முறையின் ஆரம்பம் வேடடையாடி உணவு திரட்டும் சமூக நிலையில் இருந்து, நிரந்தரமாக குடியேறி விவசாய சமூக நிலைக்கு மாறும் தருவாயில் ஏற்பட்டதாக கருதலாம். ஏனென்றால், அப்பொழுது அவர்களுக்கு, தங்கள் உடமையை எண்ண வேண்டிய தேவை உண்டாகி இருக்கும். உதாரணமாக, காணி நிலம்,மிருகங்கள்,தானியங்களின் அளவீடு போன்றவற்றை எண்ண கணக்கிட அல்லது உடமையை வேறு ஒருவருக்கு அல்லது மற்றொரு குடியேற்றத்திற்கு எண்ணி,கணக்கிலிட்டு மாற்ற வேண்டிய கட்டாயம் அல்லது ஒரு நிலை  ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் யூப்பிரட்டீஸ், டைகிரிஸ் [ Tigris and Euphrates] என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியான மெசொப்பொத்தே மியாவை [ Mesopotamia], இன்றைய மத்திய கிழக்கு ஈராக் பகுதியை,  "செழுமையான பிறை" ( Fertile Crescent ) என அழைக்கப் பட்டது. அப்பகுதியில் 9,000 ஆண்டு பழமை வாய்ந்த, கற்கால [neolithic] கீறல் போட்ட  கணக்கிடும் அடையாள வில்லைகள் [ incised "counting tokens"]  பல தோண்டி எடுக்கப் பட்டன. மேலும் 4100-3800 ஆண்டுகளுக்கு முன், இந்த  அடையாள வில்லைகள் [டோக்கன்கள்] ,களிமண்ணில் [clay] பதியக் கூடிய அல்லது பொறிக்கக் கூடிய சின்னங்களாக [symbols] மாறின. இவை காணி [நிலம்] ,தானியம்,கால்நடைகள் போன்றவற்றை பிரதிநிதித்துவம் படுத்த அன்று பாவிக்கப் பட்டன. ஒரு எழுத்துமொழி அங்கு முதல் முதல் இவ்வாறு பிறந்தது எனலாம்?

களி மண்ணில் பதியப்பட்ட படங்கள் சித்திரவெழுத்தாக [ஓவிய எழுத்துக்கள் /உருவ எழுத்துக்கள் /pictographs] பரிணமித்தது, இந்த முறை மிகுந்த கடினமாகவும், நெடுங்காலம் பிடிப்பதாகவும், ஏராளமான உருவங்களையும் பயன்படுத்த வேண்டிய தாகவும் இருந்ததால், சில படங்கள் பின் ஒரு யோசனையை அல்லது ஒரு கருத்தை பிரதி பலித்து, கருத்தெழுத்தாக [ideographs] மாறின.அதாவது, அம்புகள் பாய்வதுபோல் வரைந்து போர் என்பதை குறித்தனர், மேலும் கண் எழுதி அதன் கீழ் செங்கோல் எழுதினால் அது ஒரு அரசன் என்பதை குறிக்கும். இப்படி அதை கொஞ்சம் இலகுவாக மாற்றினார். இதன் தொடர்ச்சியாக , பின்னர் சொற்களையும், சொல்லின் பகுதிகளையும் குறிப்பதற்கான படிமங்களை பயன்படுத்தி னார்கள். கல் என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுவதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ஒருபகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்ற முறை இதுவாகும். இறுதியில் அவை இன்று உள்ளது போல, ஒலியை பிரதி பலிக்கும் ஒலியெழுத்தாக (alphabetic) மாறின. இது தான் சுருக்கமான எழுத்தின் பிறப்பின் கதை! 

உலகிற்கு முதல் முதல் எழுத்தை தந்த சுமேரியர்கள், அந்த சுமேரிய ஆப்பு வடிவ எழுத்தின் மூலம் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவிலும் விட்டு சென்றுள்ளார்கள். இதை பிலடெல்பியா [Philadelphia] பல்கலைக்கழக பேராசிரியரான நோவா கிரேமர் [Noah Kramer]  ஆங்கிலத்தில் தந்தார்.அதை நான் தமிழில் மொழிபெயர்த்து இங்கு கீழே தருகிறேன். எழுத்து இல்லை என்றால் இந்த நாலாயிரம் ஆண்டிற்கு மேற்பட்ட காதல் கவிதையும் [கி மு 2031 ] இன்று இல்லை! 

"அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !! 
உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது 
ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே, 
உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது" 
"நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே  
எனது சுய விருப்பத்தில் நான் உன்னிடம் வருவேன்
ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னை 
உன்னுடன் கொண்டு போ 
நீ என்னை மயக்கி விட்டாய், எனவே  
எனது  கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்
காதல் தோழனே!  படுக்கையறைக்குள் என்னை 
உன்னுடன் தூக்கி போ"

"மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு
என் மதிப்புள்ள காதற் கண்மணியே!  உனக்கு என்னை தேன் தர விடு 
தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை 
மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே 
இளைஞனே! உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு 
என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட  விடு"  

"வீரனே! நீ என்னை  கவர்கிறாய்,எனவே  
என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன் 
என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார் 
உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது என்பது எனக்கு தெரியும் 
மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு 
உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது என்பது எனக்கு தெரியும் 
இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு"

"வீரனே!நீ என்னை விரும்புவதால்,
நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால் 
எனது எஜமானே! கடவுளே!! பாதுகாவலனே!!!   
"என்லில்" கடவுளின் இதயத்தை  மகிழ்ச்சிபடுத்தும் 
எனது  "ஷு-சின்"  அரசனே!
உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின், 
தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின்,
அளவு சாடியின் மூடி போல 
அங்கே உன் கையை எனக்காக மூடு[வை] 
மரச் சீவல் சாடியின் மூடி போல 
அங்கே உன் கையை  எனக்காக விரி[பரப்பு ]"  

[மொழி பெயர்ப்பு:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

குறிப்பு:ஷு சின்' :கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர்.என்லில்:மழை மற்றும் காற்று கடவுள்"  

                                                                            [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:02  தொடரும்

'Story or History of writing'/Part:01

Language existed long before writing, emerging probably simultaneously with sapience, abstract thought and the Genus Homo (—such as Homo habilis, who used simple stone tools—) .The signature event that separated the emergence of paleo humans (early humans) from their anthropoid (a higher primate, especially an ape or apeman) progenitors was not tool-making but a rudimentary oral communication that replaced the hoots and gestures still used by lower primates. The transfer of more complex information, ideas and concepts from one individual to another, or to a group, was the single most advantageous evolutionary adaptation for species preservation.  As long ago as 25,000-30,000 years, before present, humans were painting pictures on cave walls. Can cave paintings be considered a form of written language? In that case, we can set the flag to 30.000 years ago. However, Whether these pictures were telling a "story" or represented some type of "spirit house" or ritual exercise is not known?

The advent of a writing system, however, seems to coincide with the transition from hunter-
gatherer societies to more permanent agrarian encampments when it became necessary to count ones property, whether it be parcels of land, animals or measures of grain or to transfer that property to another individual or another settlement.  We see the first evidence for this with incised "counting tokens" about 9,000 years ago in the neolithic fertile crescent. Around 4100-3800 BCE, the tokens began to be symbols that could be impressed or inscribed in clay to represent a record of land, grain or cattle and a written language was beginning to develop.

One of the earliest examples was found in the excavations of Uruk in Mesopotamia at a level representing the time of the crystallization of the Sumerian culture.The pictures began as representing what they were, pictographs, and eventually, certain pictures represented an idea or concept, ideographs, and this new way of interpreting signs is called the rebus principle. Only a few examples of its use exist in the earliest stages of cuneiform from between 3200 and 3000 B.C.,For example, Each of us certainly met with rebuses in everyday life. Undoubtedly, the most famous and popular puzzle looks like this : i ♥ u ( pronounced "I Love You" ) . Thus, in the modern sense, is a rebus puzzle, consisting of images of objects (drawings in combination with other compositions and alphabetic characters), congruent
with the words or parts of words and finally to represent sounds and thus writing born ! However, The consistent use of this type of phonetic writing only becomes apparent after 2600 B.C. It constitutes the beginning of a true writing system characterized by a complex combination of word-signs and phonograms—signs for vowels and syllables—that allowed the scribe to express ideas. By the middle of the third millennium B.C., cuneiform primarily written on clay tablets was used for a vast array of economic, religious, political, literary, and scholarly documents. The oldest surviving love poem is written in a clay tablet around 2031 BC from the times of the Sumerians, inventors of writing, is given below as an example of their literary writing works.

"Man of my heart, my beloved man, 

your allure is a sweet thing, as sweet as honey. 
Man of my heart, my beloved man, 
your allure is a sweet thing, as sweet as honey." 

"You have captivated me, 
of my own free will I will come to you. 
Man, let me flee with you—into the bedroom. 
You have captivated me; 
of my own free will I shall come to you. 
Lad, let me flee with you—into the bedroom." 

"Man, let me do the sweetest things to you. 
My precious sweet, let me bring you honey. 
In the bedchamber dripping with honey 
let us enjoy over and over your allure, the sweet thing. 
Lad, let me do the sweetest things to you. 
My precious sweet, let me bring you honey." 

"Man, you have become attracted to me. 
Speak to my mother and I will give myself to you; 
speak to my father and he will make a gift of me. 
I know where to give physical pleasure to your body— 
sleep, man, in our house till morning. 
I know how to bring heart's delight to your heart— 
sleep, lad, in our house till morning." 

"Since you have fallen in love with me, man, 
if only you would do your sweet thing to me. 
My lord and god, my lord and guardian angel, 
my Cu-Suen who cheers Enlil's heart, 
if only you would handle your sweet place, 
if only you would grasp your place that is sweet as honey. 
Put your hand there for me 
like the cover on a measuring cup. 
Spread your hand there for me 
like the cover on a cup of wood shavings." 

NB:Shu-sin or Cu-Suen: was king of Sumer and Akkad, and was the penultimate king of the Ur III dynasty.
enlil :"Lord (of the) Storm" /Enlil/Ellil is one of the most important gods of Mesopotamia. Enlil's /Ellil's main city is Nippur. Kings from all over Mesopotamia sent offerings to him there. 

[Kandiah Thillaivinayagalingam]

Part:02 will follow     

தமிழுறவும், தமிழர்பின்னடைவும்


               கனடாவிலிருந்து ஒரு கடிதம்.   
                                                                                                                                   16.11.2014

அன்புள்ள அப்புவுக்கு,                                                                                                     
நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.அப்பு உங்கள் கடிதமும் நீங்கள் அன்புடன் எனக்கு அனுப்பிய தீபாவளிப் பரிசும் கிடைத்தது.மகிழ்ச்சி.
அப்பு,புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் இயந்திர வாழ்க்கையுடன் காலம் கழியும் நிலையில் நீங்கள் அனுப்பிய  பரிசு தீபாவளியினை நினைவூட்டியது.




அப்பு, தீபாவளி அன்று மாமா குடும்பத்தினர் உங்களை பழைய பகை மறந்து அழைகிறார்கள் என நம்பி அங்கு சென்று அவர்கள் மலர்ந்த முகம் காட்டாது தந்த விருந்தினை உண்ண முடியாமல் தவித்ததாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.இதைப் படித்தபோது நான் சிறுவயதில் பாடசாலையில் படித்த பாடல் ஒன்று நினைவில் வந்தது.
காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ
அன்பிலாள் இட்ட அமுது. 
[உள்ளத்தில் அன்பு இல்லாமல் ஒப்புக்காக ஒருத்தி ஔவைக்கு உணவளித்தாள். அதனை வெறுத்த ஔவை பாடிய பாட்டு இது. (மாணொக்க வாய் = மாட்சிமை மிக்க வாய்.)]
இதைவிட அவர்கள் உங்களை அழைக்காமலே இருந்திருக்கலாம்.
அப்பு, தமிழர் எமக்குப் பக்கத்தில் இருக்கிறார்களோ எனக்கேட்டு இருந்தீர்கள்.இருக்கிறார்கள்.ஆனால் சிலரின் பழக்க வழக்கங்கள் வெறுப்பினையே கொடுக்கும். ஏனெனில் வீதியில் நிமிர்ந்து நடந்துவரும் சிலர் எம்முன்னே தலையை குனிந்து  எம்மை கடந்த பின் மீண்டும் நிமிர்ந்து செல்வர்.இதுபற்றி ஒரு பெரியவரிடம் கதைத்தபோது சாதியில் குறைந்தவர்கள் தம்மை சமுதாயத்தில் அடையாளப் படுத்த விரும்பமாட்டார்கள் எனக் கூறியது எனக்கு சற்று சங்கடமாக இருந்தது. 
அப்பு,எம்மவர்கள் கூடும் இடங்களில் அவர்கள் நண்பர் என்ற போர்வையுள் எப்படி உரையாடுகிறார்கள் என்பதனையும்,ஏனைய நாட்டினரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.ஏனைய நாட்டினர் அரசியல்,அவைசார்ந்த சமூகம் அல்லது தொழிநுட்பம் என்று அறிவு சார் தகவல்களினை பகிர்ந்து கொள்வர்.ஆனால் எம்மவர்களோ என்னொரு தமிழனைப்பற்றி அவதூறு அல்லது இன்னொரு தமிழனை கேலி பண்ணி பேசுவதையோ பொழுது போக்காக கொண்டிருப்பார்.இதனாலேயே தமிழருக்கிடையில் நல்லதொரு உறவு இருப்பதாகத் தெரியவில்லை.
ஏன்?கூட தொழில் புரியும் இடங்களில் கூட தொலைபேசி இலக்கங்களே எம்மவர்க்கிடையில் பரிமாறப்படுவதில்லை. வெறும் ரயில் சிநேகிதர்களாகவே இங்கு பழகிக்கொள்கிறார்கள்.அப்படி ஒரு சிலர் பழகினாலும் சில நாட்களில் ஒருவரை ஒருவர் பணவடிவில் அல்லது வாழ்க்கையில் விளையாடி ஏமாற்றி கொள்வார்.ஆனால் உதாரணமாக சீனத்துக்காரனை எடுத்துப் பார்த்தால் வேலைக்கு தற்காலிகமாக ஒரு கிழமை வந்து சென்ற தன் நாட்டுக்காரனுடன்கூட  நட்பினை வளர்த்துக் கொண்டிருப்பான். அவர்களும் இணைந்து வளர்ந்து கொள்வர். ஆனால் எம்மவர்  தொழில் சார்ந்த விடையங்களை புதிதாக வந்தவன் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பான்.
எம்முடைய வாழ்க்கை முறைதான் தமிழர்களின் ஒவ்வொரு நிலையிலும் பின்னடைவுக்குக் காரணம் என்பதனை அப்பு நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அப்பு,உங்கள் சுகத்தினையும் ,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.
   வேறு புதினங்கள் இல்லை.
இப்படிக்கு 
அன்பின் மகன் 
செ.ம.வேந்தன்.