ஒளிர்வு 81, தமிழ் இணைய சஞ்சிகை -ஆடிமாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் ஆடித்திங்கள் வணக்கம்

''தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்ப ல் தலை''-[திருக்குறள்]

உலகில்வாழ்ந்தவர்,மறைந்தவர் கோடிகோடியாய் இருக்கலாம்.மக்கள் மனதில் நீங்கள் நிலைத்திருக்க என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட  ஆரம்பித்தால் நிச்சயம் உலகில் ஒவ்வொருவரும் நீடூடி வாழ்ந்துகொண்டிருப்பர்.
                                                                      

பெண்களைத் தீட்டு என்று ஒதுக்கலாமா?- சித்தரின் விளக்கம்

Image result for women tamilஇந்துக்களில் எத்தனை நாயன்மார் வாழ்ந்து சென்றென்ன இறைவனை முற்றிலும் உணர்ந்து கொண்டவர்கள் சித்தர்கள்  மட்டுமே. நாலு நல்ல விஷயத்தினை கூறினால் கூறியவரை கடவுளாக்கிவிடும் நம்மவர் மத்தியில் சித்தர்கள் கருத்துக்கள் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதாலேயே அவர்கள் ஆரியரின் ஆலய  வியாபாரத்துக்குள் எடுத்துக்கொள்ளப்பட முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை.
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள - 049 
றையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
 
 பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டுஅவர்கள் குளிக்கும் அறையில் குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டுஇறந்தால் தீட்டு என்று சொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

****************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்050 -  
தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள் தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. 

தீட்டாகிவிட்டதே, தூமையாகிவிட்டதே என்று சொல்லி துவண்டு வருந்தி அலையும் ஏழைகளே! தூமையானவாலைப்பெண் உனக்குள்ளேயே இருக்கும்போது தீட்டு என்பது உன்னைவிட்டு எவ்விடம் போகும். அதுபோனால் உனது உயிரும் உடலை விட்டு போய்விடும். ஆமையைப் போல் நீரில் தலையை மூழ்கிவிட்டு, தீட்டு போய்விட்டதாகக் கூறி அனேகவித வேத மந்திரங்களை ஒதுகின்றீர்கள். அந்த வேத சாஸ்திரங்களை உங்களுக்குச் சொல்லித் தந்த சொற்குருக்களும் இந்த தூமையினால்தான் உருவாக்கி வளர்ந்து திரண்டுருண்டு ஆனவர்கள்தான் என்பதனை அறிந்துருங்கள்.
                                                      

கவித்துளிகள்....[அகிலன்]

1.முத்தம் 

மலர் கொடுக்கும் தேனால்
 மனமகிழ்ந்து 
மலர் மீது முத்தம் இட்டு நிக்கிறது  
வண்ணத்துப்பூச்சி!
   
2.வாழ்வோம்

பிறவி கடவுள் தந்த கொடை 
இந்தநிமிடம் என்பது வரம் 
மகிழ்வை உண்டாக்கி
வாழ்வோம்
 நாளை விடியும் 
என்ற நம்பிக்கையில்!

03 தேய்பிறை

பிறவி ப்பயன் புரியாமல் 
பண மாயையில் சிக்குண்டு
 நித்தம் பேராசை வளர்த்து 
 வாழ்வை தேய்பிறையாக்குறோம்!

04.முதல் காதல்

கானல் என அறியா பருவத்தில்
 என் உயிர் என வந்தவளே
உன்னோடு சேர முன்பே 
கனவு போல கலைந்தது ஏனோ!

05.வறுமை

வான வீதியில் 
செல்லும் மேகமே நீ
விழி திறந்து கண்ணீர் செறிந்தால் 
கருகி போகும் பயிர்கள் உயிர்ப்பு அடைந்து
 விவசாயின்    வறுமையும் அழிந்துவிடும்!

06..உறவு

நெஞ்சை அன்பினில் நீந்தி  அதில் 
நேர்மையாக இருந்தால் 
அருமையான உறவு
 நிலைத்து நிற்கும் 
இல்லையெனில் 
அது தொலைந்துவிடும்!

07..இயற்கை 

ஒளி நிலாவும்
 கண்விழி திறந்து
 எட்டி பார்க்கிறாள்
இருள்  மூடிய 
இயற்கையினை! 

08..மகிழ்வு

செழிப்பு அடைய உழைத்தேன் 
பலன்  வந்தது
இதனை கண்டு உறவுகளும்
 முகம் மகிழ
நண்பர்கள் அரவணைத்து    வாழ்த்த
 முகம் மலர்ந்து
 செழிப்புக் கொண்டேன்!

09.மழை

செழிப்படைய  மழை
 உதவி செய்யவில்லை எனில்
 உலகுக்கு எப்படி உணவு கிடைக்கும் 
மழை தரையை நனைக்கும் போதே
விவசாயி உணவை உலகிற்கு கொடுக்கிறான்!

10..சிந்தனை

ஞானம் வந்து இருந்தால்
நேசிக்க முன்பு
யோசித்திருப்பேன்  ஆனால் 
 இன்று சிந்தித்து கொண்டு இருக்கிறேன் 
ஏன் அவளை நேசித்தேன் என!

ஆக்கம்:அகிலன்,தமிழன்-காலையடி                       

சிவகார்த்திகேயனின் ''வேலைக்காரன்''

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
மேலும், இந்த படத்தில் பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சிவகார்திகேயனை மையப்படுத்தி வெளியானது. அதன் பின்னர் பகத் பாசிலின்  பிறந்த நாளன்று அவரை மையப்படுத்தி போஸ்டர் வெளியானது.

தற்போது நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் உள்ள போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டீஸர் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்ப்பார்கப்படுகிறது. இந்த படத்தை 24 ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
தகவல்:கயல்விழி    

ஐ.நா.சபை வரலாறு-சுருக்கம்


1. .நா. சபை என்பதன் முழுபெயர் என்ன? ஐக்கிய நாடுகள் சபை (United Nations - UN)
2. .நா. சபை ஏன் உருவானது? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.
3. அட்லாண்டிக் சார்ட்டரே என்றால் என்ன? உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.
4. அட்லாண்டிக் சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது? 14.08.1941
5. 1941-இல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் யார், யார்? அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
6. .நா. சபையின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? இலண்டன்
7. .நா. சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1946
8. .நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்? பிராங்ளின் ரூஸ்வெல்ட்
9. .நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது? லீக் ஆப் நேஷன்ஸ்
10. லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது? 1920
11. .நா பொதுச்சபைக்கு ஒரு நாடு அதிகபட்சமாக எத்தனை பிரதிநிதிகளை அனுப்பலாம்? 5
12. .நா சபை அமைப்பில் இருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட நாடு எது? யூகோஸ்லோவியா
13. .நா சபை எத்தனை உள்ளமைப்புகளைக் கொண்டது? 6
14. .நா சபையின் உள்ளமைப்புகள் யாவை? 1. பொதுச்சபை 2. பாதுகாப்புச்சபை 3.பொருளாதார சமூகசபை 4. பொறுப்பாண்மைக்குழு 5. பன்னாட்டு நீதிமன்றம் 6. செயலகம்
15. .நா பொதுசபை (General Assembly) எங்குள்ளது? நியூயார்க்
16 .நா. பொதுச்சபையில் ஒரு நாட்டுக்கு எத்தனை வாக்குகள் உண்டு? ஒரு வாக்கு மட்டும் தான் (5பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம்)
17. .நா. பொதுச்சபையில் எதைப் பற்றி விவாதிக்கலாம்? .நா. சார்ட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி (பாதுகாப்பு சபை கையாளும் விசயங்கள் தவிர்த்து)
18 .நா பொதுச்சபையின் பணிகள் என்ன? .நா.பட்ஜெட்டை கையாளுவது, பாதுகாப்பு சபையின் சிபாரிசின் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, சமூகப் பொருளாதாரச் சபைக்கான தற்காலிக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாண்மைக் குழுவுக்கான நிரந்தர உறுப்பினர்களைத் தேர்வு செய்வது போன்றவை.
19 .நா பொதுச்சபை வருடத்திற்கு எத்தனை முறை கூடுகிறது? 2 முறை
20 .நா சபையின் மகாநாடு எப்போது நடைபெறும்? ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமை
21. .நா சபையின் பொதுச்சபையின் செயலரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்? 5 ஆண்டுகள்
22 .நா. பாதுகாப்புச் சபையின் தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
23 சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை யார் தேர்ந்தெடுப்பது? .நா. பாதுகாப்புசபை (Security Council)
24 சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது யார்? .நா. பாதுகாப்புசபை
25 .நா. பாதுகாப்புச் சபையில் எத்தனை நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன? 5 நாடுகள்
26 .நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் எவை? சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
27 .நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது யார்? .நா. பொதுச்சபை
28 .நா. பாதுகாப்புச்சபையில் தற்காலிக உறுப்பினராக, இந்தியா எந்தெந்த ஆண்டுகளில் இருந்தது? 1951-1952, 1967-1968, 1977-1978, 1991-1992
29 .நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எந்த முக்கிய நாடுகள் கோரி வருகிறது? இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் இன்னும் பிற நாடுகள்.
30 .நா. பொருளாதார (Economic & Social Council) தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
31 .நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 3 ஆண்டுகள்
32 .நா. பாதுகாப்புச்சபையின் தற்காலிக உறுப்பினரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டு? 1 ஆண்டு
33 .நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? பொதுச்சபையால். (மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெரும்பான்மையில்)
34 .நா. பொருளாதார சமூகச்சபை எத்தனை பிரதிநிதிகளை கொண்டது? 54 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள்
35 .நா. பொருளாதார சமூகச்சபையின் பணிகள் என்ன? பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம்.
36 .நா. பொறுப்பாண்மைக் குழுவின் (Trusteeship Council) தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
37 .நா.பொறுப்பாண்மைக்குழுவின் உறுப்பினர்கள் யார்? சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
38 .நா.பொறுப்பாண்மைக்குழு எதற்கு அமைக்கப்பட்டது? சுயஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டது.
39 .நா.பொறுப்பாண்மைக் குழுவின் தலைமைப் பதவி எந்த நாட்டிடம் உள்ளது? ஒவ்வொரு நாடும் ஒரு வருடம் மட்டும் என்ற சுழற்சி முறையில் (5 நாடுகள் மட்டும்)
40 .நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது? International Court of Justice திஹேக், நெதர்லாந்து
41 .நா.சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு எந்தெந்த நாடுகள் கட்டுப்பட்டவை? .நா. சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும்.
42 .நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் பணிபுரிகின்றனர்? 15
43 .நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 9 வருடங்கள்
44 .நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் எத்தனை நீதிபதிகளை தேர்வு செய்யலாம்? ஒன்று
45 .நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் அலுவல் மொழி எது? ஆங்கிலம், பிரெஞ்சு
46 .நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய (2015) தலைவர் யார்? பீட்டர் தோம்கா (ஸ்லோவாகியா)
47 .நா சபையின் செயலகம் முதன்முதலில் எங்கிருந்தது? லண்டனில் இருந்தது.
48 .நா சபையின் செயலகம் தற்போது எங்குள்ளது? நியூயார்க்
49 .நாவின் முக்கிய அமைப்பு எது? .நா. செயலகம் (Secreteriate)
50 .நாவின் பொதுச்செயலாளரை எவ்வாறு தேர்ந்தெடுப்பர்? .நா.பாதுகாப்பு சபையின் சிபாரிசுப்படி பொதுச்சபை நியமிக்கும்
51 .நா. சபையின் பொதுச்செயலாளரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள் 52 .நா சபையின் பொதுச்செயலாளராக பதவிபுரிந்தவர் மீண்டும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க சட்டத்தில் இடம் உண்டா ? உண்டு
53 .நா சபையின் தற்போதைய (2015) பொதுச்செயலாளர் யார்? பான் கீ மூன் (தென்கொரியா)
54 .நா. சபையின் பொதுச்செயலாளராக கானா நாட்டை சார்ந்த யார் பணிபுரிந்தவர்? கோஃபி அன்னான் (1997)
55 .நா. சபையின் பொதுச்செயலாளராக எகிப்து நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? பொட்ரோஸ் காலி (1992)
56 .நா. சபையின் பொதுச்செயலாளராக பெரு நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? ஜாவியர் பெரிஸ் டி குவையர் (1982)
57 .நா. சபையின் பொதுச்செயலாளராக ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? குர்ட் வான்ஹைம் (1972)
58 .நா. சபையின் பொதுச்செயலாளராக பர்மா நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? ஊதாண்ட் (1961)
59 .நா. சபையின் பொதுச்செயலாளராக சுவீடன் நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? டாக் .ஹாமர் ஸ்கால்டு (1953)
60 .நா. சபையின் பொதுச்செயலாளராக நார்வே நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? டிரைக்வே-லை (1946)
61 .நா. சபையின் அலுவல் மொழிகள் எவை? ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ரஷ்யா, ஸ்பானிஷ், அரபி.
62 .நா. சபை எப்போது உருவாக்கப்பட்டது? 24.10.1945
63 .நா. சபையின் மொத்த உறுப்பு நாடுகள் எத்தனை? 193 நாடுகள்
64 .நா. சபையில் இந்தியா உறுப்பினராக சேர்ந்தது எப்போது? 30.10.1945
65 .நா. சபையில் 193-வது உறுப்பினராக சேர்ந்த நாடு எது? தெற்கு சூடான் (2011)
66 .நா. சபையின் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் எவை? சீனா,பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
67 .நா. சபையின் வீட்டோவின் அதிகாரம் என்ன? .நா.சபையில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தாலும் வீட்டோ அதிகாரம் படைத்த ஏதாவது ஒரு நாடு 'வீட்டோ" செய்தால் அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படும்.
68 .நா சபையின் தற்காலிக உறுப்பினரான 10 நாடுகள் எவை?
69 .நா தினத்தை என்று கொண்டாடுகிறோம்? அக்டோபர் 24
70 .நாவின் சின்னம் எது? இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டம்
71 .நாவின் கொடி எது? இளம் நீல பின்புலத்தில் வெண்மை நிற .நா.சின்னத்தில் வடதுருவத்திலிருந்து உயர்ந்து நிற்கும் உலக வரைபடத்தை இரு ஆலிவ் மரக்கிளைகள் சுற்றி நிற்பதாக அமைந்துள்ளது.
72 .நாவின் சின்னம் எதை குறிப்பிடுகிறது? உலக அமைதி
73 .நா. சபையின் முகவரி எது? First Avenue, UN Plaza, New York City, USA, Website www.UN.org
74 . ஸட்டன் பிளேஸ் என்பது யாருடைய மாளிகை? .நா. பொதுச்செயலரின் மாளிகை
75 .நா. பொதுச்செயலரின் மாளிகையான ஸட்டன் பிளேஸ் எங்குள்ளது? மன்ஹாட்டன் நகரம் (அமெரிக்கா)
76 ஸட்டன் பிளேஸ் மாளிகை யார் யாருக்கு அளித்தது? நியூயார்க் நகர கோடீஸ்வரரான ஜே.பி மார்கன் மகள் ஆன் மார்கனுக்காக 1921-ல் கட்டி பின்னர் 1972-ல் .நா.சபைக்கு பரிசாக வழங்கப்பட்டது.
77 .நா சபையின் தலைமையகம் எத்தனை ஏக்கரில் அமைந்துள்ளது? 18 ஏக்கர்
78 .நா சபை அமைந்துள்ள 18 ஏக்கர் நிலம் யார் பரிசாக அளித்தது? ஜான் டி. ரோக்
79 .நா. தலைமையகம் அமைந்துள்ள 18 ஏக்கர் நிலப்பகுதி எத்தகைய நிலப்பகுதியாக கருதப்படுகிறது? சர்வதேச நிலப்பகுதியாக (International Territory)
80 .நாவின் பொதுச்செயலாளராக இருந்த பின்னர் தனது நாட்டின் அதிபரானவர் யார்? குர்ட் வான்ஹைம் (ஆஸ்திரியா)
81 .நாவின் பொதுச்செயலாளராக இருந்த பின்னர் தனது நாட்டின் பிரதமரானவர் யார்? ஜாவியர் பெரிஸ் டி குவையர் ( பெரு)
82 விளையாட்டு கூட்டமைப்புகள் தவிர்த்து உலக நாடுகள் உறுப்பினராக உள்ள முதல் மற்றும் இரண்டாவது அமைப்பு எது? முதல் அமைப்பு .நா.சபை (193 உறுப்பினர்கள்) இரண்டாவது அமைப்பு இன்டர்போல் (190 உறுப்பினர்கள்)
83 .நா.சார்ட்டரில் இந்தியாவிற்காக கையொப்பமிட்டவர் யார்? சர்.இராமசாமி முதலியார்
84 உலக சுகாதார அமைப்பின் தலைவரான ஒரே இந்தியப் பெண்மணி யார்? ராஜ்குமாரி அம்ருத்கௌர்
85 .நா. சபையில் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் உரையாற்றிய இந்தியர் யார்? வி.கே.கிருஷ்ண மேனன் (1957)
86 .நா. மனித உரிமைக் கழகத்தின் துணை இயக்குனராக பதவி வகித்த இந்தியர் யார்? ஜஸ்டிஸ் பி.என்.பகவதி
87 .நா. அண்டர் செகரெட்டரியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? சசி தரூர்
88 . இண்டர் பார்லிமெண்டரி யூனியனின் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண்மணி யார்? நஜ்மா ஹெப்துல்லா
89 .நா. சபையில் முதன்முதலில் இந்தியில் உரையாற்றியவர் யார்? .பி.வாஜ்பாய்
90 .நா சபையில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார்? எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1966)
91 உலக வங்கியின் இவாலுவேஷன் டைரக்டர் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்? வினோத் தாமஸ்
92 உலக சுகாதாரக் கழகத்தின் ஆடிட்டராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்? விஜயேந்திரா என்.கவுர்
93 சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய இந்திய நீதிபதி யார்? ஜஸ்டிஸ் தல்வீர் பண்டாரி
94 .நாவில் இந்தியாவின் தற்போதைய நிரந்தர உறுப்பினர் யார்? அசோக்குமார் முகர்ஜி
95 .நாவின் 190வது உறுப்பினர் நாடு எது? சுவிட்சர்லாந்து (2002)
96 .நாவின் 191வது உறுப்பினர் நாடு எது? கிழக்கு டிமெர் (2002)
97 .நாவின் 192வது உறுப்பினர் நாடு எது? மோன்டனெக்ரா (2006)
98 2015 நிலவரப்படி .நாவில் உறுப்பினராக சேர்ந்த கடைசி நாடு எது? தெற்கு சூடான் (193வது நாடாக 2011ல் சேர்ந்தது)
99 .நா சபையில் உறுப்பினராக இல்லாத நாடுகள் எவை? கொசாவா, சஹ்ராவி அரபுக்குடியரசு, துருக்கிய சைப்ரஸ், தைவான், பாலஸ்தீன அதாரிட்டி, வாடிகன் நகரம்.
100. .நா. சபை 2015ம் ஆண்டை எவ்வாறு அறிவித்துள்ளது? சர்வதேச ஒளிவருடம் (Year of Light) சர்வதேச மண்வருடம் (Year of Soil)
101. .நா.சபை 2014-ம் ஆண்டை எவ்வாறு அறிவித்தது? சர்வதேச குடும்ப விவசாய வருடம்.
102. ஐக்கிய நாடுகள் தினம் அக்டோபர் 24

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்