கடவுள் தண்டிப்பாரா?


இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், “கடவுள் தண்டிப்பாரா?” என்று.”தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது” எனச் சொன்னோம்.உடனே அவர் கேட்டார், “அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?”அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்…குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக “வாடா” என்றான்.சப்தமாய் மலையிலிருந்து “வாடா” என்று குரல் எதிரொலித்தது.தன்னை, “யார் வாடா” என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, “யாரது?” என்றான்.”யாரது?” என்று மலையும் திரும்பக் கேட்டது.சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, “நீங்க யாரு?” என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.குரு சிரித்தபடியே சொன்னார்…”இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்,” என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.வாழ்வை எதிர்த்தாலே போதும், வாழ்வு அவரை எதிர்க்கும்.வாழ்வை வரவேற்றால்,அவரை….வாழ்வு வரவேற்கும்.எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.இனிமையாய் அணுகுங்கள்.இனிமையாய் எல்லாம் அமையும்.இது வாக்கல்ல,என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.
நன்றி : ஜீவன் முக்திபரமஹம்ஸ நித்யானந்தரின் அமுதமொழிகள்

0 comments:

Post a Comment