ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி



பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.
குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.
“பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”.
டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு,
டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
“இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது”.
பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
100 ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிதாம்.
தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.
மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .
ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது.
அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.
நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

இருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்

''10 எண்றதுக்குள்ள'' படத்தை அடுத்து தற்போது ''இருமுகன் ''என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக, நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் நடித்து வருகின்றனர். இருமுகன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேஷியாவில் நடைப்பெற்று முடிந்தநிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புலி படத்தின் தயாரிப்பளரான ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இருமுகன் படத்தில் விக்ரம் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ரா உளவுப் பிரிவு ஏஜெண்ட்டாகவும், திருநங்கையாகவும் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் விக்ரம். தற்போது தாடி வளர்த்துள்ள விக்ரம், இந்த கெட்டப்பில்தான் ரா உளவுப் பிரிவு ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரா உளவுப் பிரிவு ஏஜெண்ட் கதாபாத்திரத்திற்கான காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறார்கள். அதில் பிரம்மாண்டமானதொரு சண்டைக்காட்சியும் அடக்கம்.

இந்த போர்ஷன்களை படமாக்கிய பிறகு, திருநங்கை கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கும் காட்சிகளை எடுக்க உள்ளனர். முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால், திருநங்கைகளின் உடல் அசைவுகள், அவருடைய பேச்சு மொழி உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறார் விக்ரம். கந்தசாமி படத்தில் பெண் வேடம் போட்ட விக்ரம் இருமுகன் படத்தில் திருநங்கையாகவும் கலக்குவார் என்பது நிச்சயம்.
                                                                                                             

உன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]


உன்னை பார்த்த 
நாள் முதல்  
வெட்கம் குடி புகுந்து 
உள்ளம் ஊமையாகி 
 ஒவ்வொரு நிமிடமும்  
இனம் புரியா   மகிழ்ச்சியில்
  மூழ்கி இருந்தேன்,
ஓரிரு வார்த்தை யானும் 
உன்னுடன் பேசிட என்று
என் மனம் துடிக்கும் போது   
உன்னை பற்றிய கனவுகள்
 என்நெஞ்சில்  இதமாக 
வந்து மோதும்,   
 இவ்வாறு 
 காதல் பூக்கள் பூக்கும் 
மலர் போல இருந்த நீ 
முள்ளு செடியாக 
மாறி குத்தியதால் 
 மாநோயாளி ஆனேன்.
                                              

FOOD HABITS OF TAMILS/PART :20

[Compiled by: Kandiah Thillaivinayagalingam]
[Food Habits Of Medieval period Tamils]
The Sangam Age came to an end during the middle of the Third century A.D.The closing years of the Sangam Age was called the post-Sangam period.Then the Kalabhras captured the Tamil country from the Chera,Chola and Pandyan rulers and These Kalabhras had occupied the Tamil country from the middle of the Third century A.D. to the end of the Sixth century A.D. The North Indian religions,namely Buddhism and Jainism began to spread in the Tamil region.The
traditional religious beliefs of the Tamil people gave way to the new religious ideas.The impulse of these works was oriented towards reforming the society.For example,morality in political and social life had been strictly insisted in the poems of InnaNarpathu, Iniyavai Narpathu and Naladiyar[இன்ன நாற்பது,இனியவை
நாற்பது,நாலடியார்].We have very few sources to study the history of the Kalabhras.This is one of the reasons to call this period as Dark  Age.
By the end of the Sixth century A.D. the Pandyan ruler Kadungon had liberated the southern part of the Tamil country from the Kalabhras.By the same period,the Pallava king,Simhavishnu had captured Tondaimandalam and Cholamandalam from the Kalabhras.Thus,the Kalabhra rule inTamil country came to an end.During the end of the Kalabhra rule,the Bakthi-cult[devotional cults] flourished in the Tamil country through which both Saivism and Vaishnavism began to flourish there. 

Over the years, certain interesting concepts in food appeared. A tradition of vegetarianism,which was largely absent from ancient Tamil Nadu or among the sangam tamils began to emerge,mainly as a result of the popularity of Buddhism and Jainism.Taste was classified into six groups,and all food commodities were divided into two broad categories,hot and cold.The whole of Tamil cuisine is still largely based on this classification which also influenced indigenous medicinal practices:Even a Tamil poetic work,Naladiyar of
the Kalabhra age,speaks about six tastes[அறுசுவை].It says,"While the wife feeds the husband,with love and desire,the different types of foods prepared with six tastes;Being rich and pompous,He takes only one handful leaving the rest untouched,from the varieties of food prepared,the remaining food is wasted".Further,Millets formed a major part of the food in rural areas,consumed until recently.In fact, in remote
villages of Tamil Nadu,food items made of millets were staple food and rice was consumed occasionally.They had nelluchoru (food made of rice) once in a while during festival periods.However,
Over a period of time,the eating habits drastically changed and millets started disappearing from the plates in rural areas.The prayer offered to Lord Muruga in Tamil starts with the words "Thaenum Thinai Maavum" (I offer honey with Thinai flour ie. Foxtail millet) shows how
millets were valued by our ancestors.The gruel made of Thinai was the staple food of ancient Tamils and is called "kali and koozh".It was consumed even during the Sangam era.

7th century Appar refers to eating tortoise in his devotional songs,thevaram.The tortoise["Amai"] is put in a big vessel of water. It feels a bit cold.When people start to cook it,ironically the tortoise feels happy because the water gets to be warm and cozy,It swim and dance in water.It does not realize the oncoming disaster! When the water reaches a certain degree of heat, that tortoise sudden feel the pain and before it could realize that it is in danger, it will suddenly die as water will begin to boil in few seconds gap. 

"the five organs of sense which are like robbers.
remaining surrounding me.
draw near me and make me tremble.
trying the feet.
setting a pot of water on the fire for cooking rice.
in the water which was heated by burning fire.
I who have no clarity like the tortoise which bathes in the water without ceasing.
I am enjoying this life, being exhausted."

PART :21 WILL FOLLOW.........                                                                  

தமிழரின் உணவு பழக்கங்கள்//பகுதி:20

[இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள்]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
கி பி மூன்றாம் ஆண்டுடன் சங்க காலம் முடிவுற்றது.முடிவுறும் காலத்தை பிந்தைய சங்க காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர,சோழ,பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர்.சேர நாடு,சோழ நாடு,பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்தும் கொண்டனர் என்பர்.பொதுவாக களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர்.இருப்பினும் இவர்களின் தோற்றம்,இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை.எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம்,பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது.இவர்கள் பாளி மொழியை
ஆதரித்தாகவே தெரிகின்றது.எனினும்,தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது.எம் மதமும் சம்மதம் என்ற தமிழர்களின் உன்னதமான மனப்பான்மை இப்படியான மாற்று கொள்கைகளுக்கும் பிற மதத்திற்கும் இடம் கொடுத்தன.மேலும் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படியும் இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதுடன் சமயம்,சமுதாயம் பண்பாட்டுத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களையும் தோற்றுவித்தது.உதாரணமாக,நல்ல நடத்தைக்குரியவை பற்றியும்,உலகத்தில் கூடாதவை என்னென்ன
என்பது பற்றியும் மற்றும் நீதிகளைப்பற்றியும் உரைக்கும் நூல்களான இன்ன நாற்பது,இனியவை நாற்பது,நாலடியார் போன்றவை தோன்றின.களப்பிரர்கள் கி பி ஆறாம் ஆண்டு வரை,முன்னூறு ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டார்கள்.என்றாலும் இவர்களைப்பற்றி அவ்வளவு பெரிதாக அறிய முடியவில்லை.இதனால் தான் இதை இருண்ட காலம் என பொதுவாக அழைக்கப்படுகிறது.தமது இறுதி காலத்தில் களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர்.எப்படியாயினும் இவர்கள் கொடுங்கன் பாண்டியனாலும் சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் தோற்கடிக்கப்பட்டு இவர்களின் ஆட்சி நிறைவுக்கு வந்தது.இவர்களின் இறுதி காலத்தில் பக்தி இயக்கம் தளைத்தோங்க தொடங்கியது.இந்த பக்தி இயக்கம் சைவம்,வைணவம் என்னும் இரு கிளைகளாக ஓங்கியது. 

காலப்போக்கில் உணவைப்பற்றிய சில சுவாரஸ்யமான கருத்துக்கள் தமிழகத்தில் தோன்றின.தமிழ் நாட்டிலோ அல்லது சங்க காலத்திலோ இல்லாத மரக்கறி உணவுக் கொள்கை அல்லது புலால் உண்ணாமை,சமணம்,பெளத்தம் போன்றவற்றின் செல்வாக்கால் அங்கு வெளிப்பட தொடங்கின.இது தமிழர்களின் உணவு பழக்கங்களில் மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது.மேலும் சுவைகளை ஆறு வகையாக,துவர்ப்பு,இனிப்பு,புளிப்பு,கார்ப்பு,கசப்பு,மற்றும் உவர்ப்பு என்ற அறுசுவையாக பிரித்தனர்.அத்துடன் எல்லா உணவுகளையும் இரண்டு பரந்த பிரிவுகளில்,சூடு,குளிர் சாப்பாடுகளாக வகுத்தார்கள்.இன்றும்
தமிழர் உணவுகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஆயுர்வேதம்,சித்த மருத்துவம் போன்றவை உடலின் ஆறு முக்கிய
தாதுக்களுடன்[ இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,நரம்பு,உமிழ்நீர்] இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி,உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.அது மட்டு அல்ல களப்பிரர்கள் கால தமிழ் இலக்கியமான நாலடியார்:"அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண்டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின்,செல்வம் ஒன்று உண்டாக வைக்கற்பாற்றன்று." என்ற பாடலில் அறுசுவையை குறிப்பிடுகிறது. அதாவது,ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க,ஒரு கவளமே கொண்டு,மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியவராகி,வேறோர் இடம் போய்,எளிய கூழ் உணவை இரந்து உண்பர்.ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று என்கிறது.

மேலும் அங்கு கிராமப்புறங்களில் தினை முக்கிய உணவாக இருந்தன.அது அண்மைய காலம் வரை தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.உண்மையில் இப்பவும் தொலைதூர அல்லது பழைமையான தமிழ் நாட்டு கிராமங்களில் திணை அவர்களின் பிரதான உணவாக இருப்பதுடன்,அங்கு எப்போதாவது சிலவேளையே சோறு உண்ணப்படுகிறது.அதிகமாக கொண்டாட்ட நாட்களிலேயே இந்த நெல்லுச் சோறு உண்
ணப்படுகிறது.எப்படியாயினும் நாளடைவில் உணவு பழக்கங்கள் மாற்றம் அடைந்து திணை இப்ப மெல்ல மெல்ல கிராமப்புறங்களில் இருந்தும் மறைய தொடங்குகின்றன.முருகனுக்கு தேனும்,தினை மாவும் உகந்த பிரசாதம் என்பார்கள்.அதனால் அவனுக்கு கொடுக்கும் வழிபாடு "தேனும் தினை மாவும்" என்ற அடிகளுடன் ஆரம்பிக்கின்றன.இது எமது மூதாதையர்கள் திணைக்கு கொடுத்த முக்கியத்தை கொடுக்கிறது.பண்டைய தமிழர்களின் பிரதான உணவாக திணை கஞ்சி இருந்தது.இதை களி,கூழ் என அழைத்தார்கள்.இது சங்க காலத்திலும் கூட உட்கொள்ளப்பட்டது.

கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர்,தமது தேவாரத்தில் ஆமை உணவாக உட்கொள்ளப்பட்டத்தை தெரிவித்துள்ளார்.

"வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே."

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால்,எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க,அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன்.வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? என கேட்டு முறையிடும் இந்த தேவாரத்தில் ஆமையை நீரில் வேகவைப்பதை உதாரணமாக அவர் கையாளுவதன் மூலம் இந்த உணவு முறையையும் நாம் அறிகிறோம்.
பகுதி :21 தொடரும்...........................................................................

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.

“இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்” என்று ஆதங்கப்படுகிறார். 

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார்வைத்தியர்.
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.


எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்துவிடும்.
                                                                                                                                            நன்றிகள்.

ராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்?

ராமர் பாலம் என்று கூவும்  கோஷ்டிகளுக்கு முதலில் ஒரு கேள்வி. சீதையை மீட்டெடுப்பதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து ராமரும், லட்சுமணரும், இன்னபிற வானர சேனைகளும், இலங்கைக்கு பயணப்படுவதற்காக அமைக்கப்பட்டதுதான், இந்த ராமர் பாலம் என்பது உங்கள் வாதம். ரொம்பச் சரி. முதலில், ராமரும், அவரது சகோதரர் லட்சுமணனும், வானர சேனைகளும் ராமேஸ்வரத்தை அடைந்தது எப்படி? அதை விளக்குவீர்களா?
ராமேஸ்வரம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ராமேஸ்வரம் என்பது
ஒரு தீவுப்பகுதி. சகலபுறங்களும் கடலால் சூழப்பட்ட தீவுப்பகுதி. மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்பவர்கள் கவனித்திருக்கலாம். மண்டபம் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டரைக் கடந்தால், கடல் வந்து விடும். அந்தக் கடலை கடக்க ரயில் பாலமும், அடுத்ததாக பஸ் பாலமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கரையில் இருந்து அந்தக்கரை வரை கடலின் நீளம் 2.7 கிலோ மீட்டர். கடலின் நடுப்பகுதி ஆழமானது. சிறிய ரக கப்பல்கள் இன்றும் கூட இந்தக் கடல்பகுதியை கடந்து சென்றும், வந்தும் கொண்டிருக்கின்றன என்பதில் இருந்து இது ஆழ்கடல் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். ராமர் அண்ட் கோ இலங்கைக்கு போனது அப்புறம். முதலில் படை, பரிவாரங்களுடன் அவர் எப்படி ராமேஸ்வரம் போனார்? குறிப்பாக, அந்த 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய கடல் பகுதியை அவர் கடந்தது எப்படி? அவருடன் சென்றவை பெரும்பாலும் வானரசேனைகளே என்றாலும், ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் நீளமுடைய அந்த கடலை அத்தனை வானரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தாவிக் குதித்து கடப்பதெல்லாம் கஷ்டம். கார்ட்டூன் படம் எடுத்தாலும் கூட இவ்வளவு பெரியலாங் ஜம்ப்சாத்தியமில்லாத விஷயம். வானரங்களே கடக்க கஷ்டபடுகின்றன என்றால், ராமர், லட்சுமணன் போன்ற ராஜகுமாரர்களுக்கு அது ரொம்பவும் கஷ்டம்.

ஆகவே, அந்த கடற்பரப்பை கடந்து அவர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்திருக்கவேண்டுமானால், நிச்சயமாக இப்போது பாம்பன் பாலம் இருக்கிற இடத்திலும் அவர்கள் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். இல்லையா? பாலம் அமைந்திருந்தால் மட்டுமே கடலைக் கடந்து ராமேஸ்வரம் அடைந்திருக்க முடியும். ஆக, ராமர் முதன்முதலாக இந்தக் கடல் பகுதியில்தான் பாலத்தைக் கட்டியிருக்கவேண்டும். அப்படியாயின் அப்பாலம் இராமர் பாலம் என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படிக் கட்டித்தான் இராமேஸ்வரம் போனார்கள் என்று எக்குறிப்பும் எந்த இராமாயணமும் கூற வில்லையே!

அப்படியாயின் இராமாயணம் ?