சிந்தனைஒளி

பதவி உங்களுக்குப் பெருமை தருவதைவிட நீங்கள் தான் அதைப் பெருமைபடுத்த வேண்டும்.
ஒரேயடியாக உச்சிக்குப் போய்விட வேண்டுமென்று முயற்சிதான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது.
மனிதனுக்கு துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.
உன்னை உண்மையிலேயே புரிந்து கொண்டிருக்கும் நண்பன்தான் உன்னையே உருவாக்குகின்றான்.
தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவன்தான் உலகிலேயே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி.


புரடியூசர், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் – நடிகை நீலிமா ராணி


எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் முக்கிய பாத்திரங் களில் முகம் காட்டி வரும் வளரும் நடிகை நீலிமா ராணி, அங்கொ ன்றும் இங்கொன்றுமாக பெரிய திரைப்படங் களிலும் இரண்டாவது மூன்றாவது நாயகியா க, நண்பியாக தலைகாட்டி வருவதைப் பார்த் திருக்கலாம்! அம்மணி மீது யார் கண்பட்ட தோ., சமீபத்தில் ரிலீஸ் ஆன காதல் பாதை என்றொரு படத்தில் இரண்டொரு சீன் களில் மட்டுமே வந்து போனார். இது பற்றி நீலிமா ராணி இவ்வாறு புலம்பி வருகிறார்.
தயாரிப்பாளரும், இயக்குநரும் கேட்டதை யெல்லாம்., ( கேட்ட தேதிகளை எல்லாம் ) கொடுத்தேன். என்னை இரண்டு நாயகிகளில் ஒருவர் என சொல்லி புக் பண்ணி படம் பண்ணி, இரண்டொரு சீன்க ளில் மட்டும் வரும்படி எடிட் பண்ணி விட்டனர்.
இனி பெரிய திரையுலக புரடியூசர்கள், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்… என்று நீலிமா கண்ணீர் வடித்து வருகிறாராம்.

அறிவித்தல்----:காற்றுவெளி


எழுதுங்கள் காற்றுவெளி
மாதம் மாதம் மின்-இதழாகவும் வெளிவரும் இதழுக்கு
கவிதை
சிறுகதை
சமய/ஆன்மீக கட்டுரைகள்
தங்கள் படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன.
இதழ் முகவரி: http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
மின்னஞ்சல்:mullaiamuthan@gmail.com

மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!


imagesசமீபகால சினிமாவில் படத்துக்குப்படம் எதையாவது வித்தியாசமாக செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம், ரசிகர்களின் எதிர்பார்ப்புதான். அந்த வகையில், வித்தியாசத்துக்கு பேர்போன நடிகரான விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் ஐ படத்தில் பல மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே அந்நியனில் மூன்றுவிதமான கெட்டப்பில் தோன்றியவர், இந்த ஐ படத்தில் மிருக மனிதனாகவும் ஒரு கெட்டப்பில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கெட்டப்புக்கான காட்சிகளை தமிழ்நாட்டில் படமாக்கினால் இப்போதே செய்தி வெளியாகி விடும் என்பதால், அமெரிக்காவில்தான் அந்த காட்சிகளை படமாக்கியுள்ளாராம் ஷங்கர். சமீபத்தில் தான் நடித்த படங்களில் பெரிய அளவில் வித்தியாசம் காட்டி நடிக்காத விக்ரம், இதுமாதிரி இன்னொரு நடிகர் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கவே முடியாது என்கிற அளவுக்கு இந்த படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு”


735a3c6c-096c-4768-90e3-f670f9b48e4a_S_secvpf

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஒன்பதுல குரு’. இதில் நாயகனாக வினய், நாயகியாக லட்சுமிராய் நடித்துள்ளனர். பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஷாம் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

செல்லத்துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். “கே” இசையமைத்துள்ளார். காமெடி கதையாக தயாராகியுள்ளது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது. ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதால் பெரிய நடிகர்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.

“ஒன்பதுல குரு” படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள “வா மச்சி வா மச்சி வீட்டை விட்டு” பாடல் ஹிட்டாகியுள்ளது. இன்டெர் நெட்டில் இரண்டு லட்சம் பேர் கேட்டுள்ளனர். பவர் ஸ்டார் சீனி வாசனும் இதில் “அலையாத சும்மா சும்மா” பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் திரையுலக முக்கியஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டன. இதை பார்த்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சிறந்த காமெடி படமாக வந்துள்ளது என்று இயக்குனர் பி.டி.செல்வ குமாரை பாராட்டினார்.

அவர் கூறியதாவது:-

நடிகர் விஜய் வீட்டில் இருபது வருடமாக பி.டி. செல்வகுமார் பணியாற்றுகிறார். அவர் இயக்கியுள்ள “ஒன்பதுல குரு” படம் ஜாலியான காமெடி படமாக வந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த படமாக உருவாக்கி உள்ளார். விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ஜீவா பேசும் போது, இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி “ஒன்பதுல குரு” படத்தை எடுத்துள்ளனர். கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். சில காட்சிகளை பார்த்து மிகவும் ரசித்தேன் என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது:-

“ஒன்பதுல குரு” படத்தின் கதை எனக்கு தெரியும். பிரேம்ஜி அடிக்கடி இந்த படத்தை பற்றி என்னிடம் கூறுவது உண்டு. இன்றைய இளைஞர்கள் காமெடி படங்களை அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த படம் வந்துள்ளது. இளைஞர்களின் ஜாலி கலாட்டாக்கள், திருமணமாகி சந்திக்கும் பிரச்சினைகள் இதில் அலசப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இசையமைப்பாளர் ‘கே’ கூறும்போது, “வா மச்சி வா” பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது. நிறைய பாராட்டுகள் குவிகிறது. பெண்களுக்கும் இப்பாட்டு பிடித்துள்ளது என்றார். “ஒன்பதுலகுரு” படத்தை காஸ்மா அன்ட்பாஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சிவக்குமார், ஆர்.சிவக்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவிலிருந்து பாதுகாத்துகொள்ள...


பாலியல் வல்லுறவிலிருந்து தற்காப்பை ஏற்படுத்திகொள்ளும் வகையில் பெண்களுக்கான உள்ளாடை ஒன்றை இந்திய பொறியியல் துறை மாணவர்கள் தயாரித்துள்ளனர். 

பெண்களிடம் யாரேனும் தவறாக  நடக்க முயற்சிக்கும்போது, அவர்கள் இவ் ஆடையினூடாக 3,800 கிலோவோல்ட் அதர்ச்சியை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் உள்ளாடையானது அதர்ச்சியினால் எதிரியை முடக்கிய பின்னர், செய்மதி வலையமைப்பினூடாக தானாகவே குறுந்தகவலை பொலிஸ் நிலையங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆடையில் உணர்த்திகளானது மார்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. வன்முறையான அழுத்தம் காரணமாக குறித்த ஆடைகளில் பொருத்தப்பட்டுள்ள உணர்த்திகள் 82 வரையிலான மின்சார அதர்ச்சிகளை தாக்குவோர் மீது தரும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இச் சாதனத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற மனிஷா மோஹன் என்பவர் தெரிவிக்கையில், 'இந்த உள்ளாடையானது செய்மதி வலையமைப்பினூடாகவும் கையடக்கத்தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பொலிஸாருக்கும் பெற்றோருக்கும் தகவல்களை உடனடியாக தெரிவிக்கின்றது' என்றார்.  

'நபர் ஒருவர் ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயலும்போது அந்நபர் இப்பெண்ணின் உள்ளாடையில் பொறுத்தப்பட்டுள்ள உணர்த்திகளினூடாக மிக பெரிய மின்சார அதிர்ச்சியை எதிர்கொள்வார். இதன்போது மேற்படி வலையமைப்பிகளினூடாக குறுந்தகவல்கள் உடனடியாக பறிமாற்றப்படுகின்றன' என அவர் மேலும் தெரிவித்தார்.


இரட்டை வேடத்தில் சந்தானம்!


இரட்டை வேடத்தில் சந்தானம்!ப்போதைக்கு அவ்ளோ ரிஸ்க் வேண்டாமே என்று தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது பட்டத்து யானை படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தால் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று ஒரு காமெடி ட்ராக்கை ரெடி பண்ணி கொடுத்தாராம் இயக்குனர் பூபதி பாண்டியன். அவர் அந்த ட்ராக்கை நகர்த்தியிருந்த விதம் சந்தானத்தை கவர்ந்து விட்டதாம். 

அதனால், டபுள் ரோல் பண்ண இதுதான் சரியான நேரம் என்று அவதாரமெடுத்திருக்கிறார் சந்தானம். மேலும், ரெண்டு வேடம் என்கிறபோது ஒன்றுக்கொன்று நடிப்பில் வேற்றுமை தெரிய வேண்டுமே என்பதற்காக, தனது கெட்டப், டயலாக் பேசும் விதம் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறாராம். அதோடு, சநதானத்துக்கு ஜோடியெல்லாம் உள்ளதாம். அதனால் ரொமான்ஸ் காட்சிகளிலும் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு புகுந்து விளையாடி வருகிறாராம்.

வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'

உடல் பருமனை குறைக்க உதவும் மைக்ரோ சிப் மின்னனுக் கணினிச் சில்லு ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அதை விரைவில் முழுமையாக ஆய்வு செய்த பின் வெளியிடும் போது மனித குலத்திற்கே பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மைக்ரோ சிப்களை உடலில் பொருத்திக் கொண்டவருக்கு அதிகம் பசிக்காது என்பதால் அறுவை சிகிச்சையெல்லாம் செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
எப்படா வரும் இந்த மைக்கிரோ சிப், என்று பலர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது


கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.

 இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.
அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் இந்த இணைப்பில் (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta) சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.
உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.
இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.
இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.
இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.
மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம

இரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்


ஒலிப் பதிவு ஒன்றின்போது ஏற்படும் தேவையற்ற இரைச்சல்களை அதிலிருந்து நீக்குவதற்கு Vocal Remover எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனானது ஸ்டீரியோ சேனல்களின் 180 டிகிரியில் உருவாக்கப்படும் இரைச்சல்களை துல்லியமாக நீக்கக்கூடியதாகவும்இரண்டு சேனல்களினதும் தரத்தை அதிகரிக்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அப்பிளிக்கேஷனை தனியாக இயக்க முடியாது காணப்படுவதுடன் Winamp மற்றும் DirectX போன்ற மென்பொருட்களுடன் இணைத்தே பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன்

மனைவிக்காக இல்லேன்னாலும், பிள்ளைக்காக சரியாகிடுவாருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு.
எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாயும் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச் சாங்களா...னு கூடஎட்டிப் பார்க்கலை என் காதல் கணவர். பொண்ணை தூக்கி வளர்த்தோம்.

இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா.

ஆண் பிள்ளை பிறந்திருக்குன்னு அவருக்குச் சொல்லி அனுப்பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன் பார்க்கப் போயிருக்கார்.

அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது. ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனானு எதுவும் தெரியாது.

ஆனா, அவன் விளையாடின விளையாட்டுதான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.

இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துனு சொல்லிருக்கான் ஜோசியக்காரன்.

நல்ல புருஷனா இல்லன்னாகூட ஒரு நல்ல தகப்பனா இருக்கிற வாய்ப்புல பெரிய குழிதோண்டி தன் வார்த்தைகளால மண்ணை அள்ளி கொட்டிட்டான் அந்த புண்ணியவான்.

ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட்கார்ந்தேன்.

குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை. உள்ள போனா, குந்தையோட தொடை சிவந்திருக்கு. பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான்.

வன்மத்தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன்.

நடிகை மனோரமா

நகுல், சந்தானம் இணையும் நாரதன்

கொலிவுட்டில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான நகுல் தற்போது வல்லினம், அமளிதுமளி, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் கொமடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கொமடியை மையமாகக் கொண்ட இப்படத்தை நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். கே.வி.ஜெயராம், எம்.செல்வகுமார் தயாரிக்கின்றனர்.
நாரதன் படத்தின் பூஜை வடபழனியில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடந்துள்ளது.
இதில் கவர்னர் ரோசைய்யா பங்கேற்று 'கிளாப்' அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்து, படபூஜையில் கலந்து கொண்டார்.

"நலமுடன் வாழ வெந்நீர் "

வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது.அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். 

மாட்டிறைச்சி சாப்பிடுவதால்.....

 மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது.

மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. "Myoglobin" என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட "Myoglobin" அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ”ஹாட் டாக்”(சாஸேஜ்) எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

April Links

செயற்கை சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது


பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது.
இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது.
ஆனாலும்இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம்உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக நேச்சர் மெடிஸின் என்ற மருத்துவச் சஞ்சிகை கூறுகிறது.
உடலில் இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களையும் மேலதிக நீரையும் வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்களே செய்கின்றன.
அத்துடன்மாற்று-அறுவை சிகிச்சைகளிலும் மிக அதிகளவில் தேவைப்படுகின்ற உடல் உறுப்பும் சிறுநீரகம்தான். மாற்று- அறுவைச் சிகிச்சை செய்துகொள்வதற்காக பொருத்தமான சிறுநீரகத்துக்காக காத்திருப்போரின் பட்டியலும் நீண்டே காணப்படுகின்றது.
இப்போது நம்பிக்கையளிக்கத் தொடங்கியுள்ள இந்தத் தொழிநுட்பத்தில்,பழுதடைந்த சிறுநீரகமொன்றை எடுத்துஅதிலுள்ள பழைய செல்களை அகற்றிவிட்டுதேன்-அடை போன்ற அதன் தோற்றத்திலிருந்து புதிய செல்களை உருவாகச் செய்வது தான் மருத்துவ விஞ்ஞானிகள் நோக்கம்.
இப்படியாக வளர்த்தெடுக்கப்படும் சிறுநீரகங்கள் நோயாளிகளோடு பொருந்திப் போவதுடன்நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்று-அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளவும் தேவையான அளவில் கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே மருத்துவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மஸாச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதற்கட்டமாக எலிகளிடத்தில் இந்தப் பரிசோதனையை செய்து பார்த்திருக்கிறார்கள்.

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு விருது





தூத்துக்குடியில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவருக்கு ‘‘தங்கக்குரலோன்‘‘ விருது வழங்கப்பட்டது.
பாராட்டு விழா
தூத்துக்குடி மாவட்ட டாக்டர் டி.எம்.சவுந்தரராஜன் பாடல் மன்றம் சார்பில் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு பாராட்டு விழா நேற்று மாலை தூத்துக்குடி அபிராமி மகாலில் நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக டி.எம்.சவுந்தரராஜன் நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். மாலை 7 மணிக்கு விழா அரங்கத்துக்கு வந்தார். அங்கு நடந்த விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட டி.எம்.சவுந்தரராஜன் பாடல் மன்ற தலைவர் எம்.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் எஸ்.மதுமதி முன்னிலை வகித்தார். டி.எம்.சவுந்தரராஜனின் மகன்கள் செல்வக்குமார், பால்ராஜ் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். அப்போது ஏராளமான மக்கள் திரளான சென்று டி.எம்.சவுந்தரராஜனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
தங்கக்குரலோன்விருது
விழாவில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு தங்கக்குரலோன் விருதை தூத்துக்குடி மாவட்ட டி.எம்.சவுந்தரராஜன் பாடல் மன்ற தலைவர் எம்.கோவிந்தராஜ், சீலன், ஜோசப் ஆகியோர் வழங்கினர். விழாவில் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது கூறியதாவது:–
மகிழ்ச்சி
இதுவரை நான் இது போன்ற கூட்டத்தை பார்த்தது இல்லை. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விழாவுக்கு நீண்டநாட்களாக அழைத்து கொண்டே இருந்தார்கள். தற்போது தான் இங்கு வர முடிந்தது. மக்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்து இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இங்கு மக்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இவ்வாறு டி.எம்.சவுந்தரராஜன் கூறினார்