திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../17/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....

பாடல் - 81

தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,

நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,

வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும், - இம் மூவர்

ஆசைக் கடலுள் ஆழ்வார்.

 

விளக்கம்:

பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், மிக்க வட்டிக்கு கொடுத்துப் பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவார்.

 

பாடல் - 82

சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும்

தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து

கொள்ளாருள் கொள்ளாத கூறாமை, - இம் மூன்றும்

நல் ஆள் வழங்கும் நெறி.

 

விளக்கம்:

நற்குணங்கள் நிறைந்தவர்களால், நல்லோன் எனப்படுதலும், செல்வம் இருந்தபோதும், இல்லாதபோதும் நட்புடன் கருதப்படுதலும், தமது நற்சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரிடத்து சொல்லாதிருத்தலும் நல்லவர் குணங்களாகும்.

 

பாடல் - 83

உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;

நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;

செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்

செப்ப நெறி தூராவாறு.

 

விளக்கம்:

உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.

 

பாடல் - 84

வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்

தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்

கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர்

நல் குரவு சேரப்பட்டார்.

 

விளக்கம்:

வழி அமையா குளமும், வயிறு நிரம்ப தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அறிவில்லாத மாந்தரும், ஆகிய இம்மூவரும் வறுமைக்கு ஆளாவார்கள்.

 

பாடல் - 85

எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி

உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும்

ஒள்ளிய ஒற்றாள் குணம்

 

விளக்கம்:

தன் செயல்கள் பகைவருக்குத் தெரியாமலும், நடந்த காரியத்தைக் கேட்டு மறவாதிருத்தலும், அதனைத் தடையின்றி தெளிவாகச் சொல்லும் திறமையும் கொண்டவர்களே சிறந்த வேவுகாரனது குணமாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

...............................................................

 

"பேராசை" [சிறு கதை]



[பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டுவிட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும்எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுதுதான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.]

 

நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்கசொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தைநடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்துவிட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும்நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!

 

காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில்படுதோல்வி அடைந்துபாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்குநூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விடபாடசாலை முதல்வரை விடஎன்னுடன் படித்துசிறந்த சித்தி பெற்றுஇப்ப மருத்துவம்பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விடஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக்கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாகபெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!

 

 "தெருவோர   மதகில்  இருந்து

ஒருவெட்டி   வேதாந்தம் பேசி

உருப்படியாய் ஒன்றும்   செய்யா

கருங்காலி   தறுதலை  நான்"

 

"கருமம்      புடிச்ச     பொறுக்கியென

வருவோரும் போவோரும் திட்ட

குருவும்     குனிந்து    விலக

எருமை     மாடு       நான்"

 

இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோஎப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள்பாவம் அவர்கள் !!

 

நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையைவெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றைஎன் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!

 

 "வருடம்    உருண்டு    போக

வருமாணம் உயர்ந்து    ஓங்க

கருணை   கடலில்     மூழ்க

மிருக-மனித அவதாரம்  நான்"

 

"தருணம்   சரியாய்      வர

இருவர்   இரண்டாயிரம் ஆக

ஒருவர்   முன்         மொழிய 

தரும-தெய்வ அவதாரம்   நான்" 

 

என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக்கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளிபெரும் சாமிகூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்னவென்றால்எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோஅதன் ஐம்பதாவது ஆண்டுவிழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம் அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லைஅடித்து துரத்தப்பட்டவனுக்கு கம்பளி வரவேற்பு!

 

"ஊருக்கு    கடவுள்     நான்

பாருக்கு    வழிகாட்டி  நான்

பேருக்கு    புகழ்       நான்

பெருமதிப்பு கொலையாளி  நான்"

 

"குருவிற்கு  குரு       நான்

குருடருக்கு கண்      நான்

திருடருக்கு பங்காளி   நான்

கருவிழியார் மன்மதன்  நான்"

 

என் பேராசை இத்துடன் நின்றபாடில்லைபாவம் புண்ணியம் இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை! 

 

"குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து

கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு

குடை பிடித்து பதவி உயர்ந்து

குபேரன் வாழ்வை கனவு கண்டான்!"

 

கள்ள வழிகளில் கனவு நியமாவதும்பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லைஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லுமுல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டிபோட தொடங்கிவிட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன்எங்கோ ஒரு மாளிகையில்மஞ்சத்துக்கு போய்விட்டான்! இதைத்தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்துவிட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!   

 

"ஒவ்வொரு இதயத்தையும்ஒவ்வொரு மனதையும்

ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது

ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி

ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"

 

மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களேஏமாற்றி பிழைத்தவர்களேஅடித்த கொள்ளையை தந்துவிட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன்யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச்சோடி போய்விட்டது!

 

"நீர்க்கோல வாழ்வை நச்சி நான்

நீதியற்ற வழியில் நித்தம் சென்று

நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து

நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"

 

பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லதுகெட்டதுஎது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற்கொண்டு இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன் . நான் இப்பஇன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாகபணத்துடன் செல்வத்துடன் போய்க்கொண்டு இருக்கிறேன். மனைவிகூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:

 

[ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால்அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்லபிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால்அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள்முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்குமுகம் தெரியாதவர்களுக்குசாமானியர்களுக்குஉழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டிஅவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களேநானே பேராசை பிடித்தவன்]

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடியாழ்ப்பாணம்]


 

 


''அப்பா '' குறும்படம்

 


நடிகர்கள்
முனைவர்.S.தங்கவேல்
சேவுகன்
நாகேஸ்வரன்
தனலெட்சுமி
முத்துலெட்சுமி

இசை
சங்கர் ராஜா

எழுத்து..இயக்கம்
இளையகுமார்

✏✏✏✏✏✏✏✏✏

ஒளிமயமான எதிர்காலம் -3


கூகிளுக்கு ஆபத்தா?


ஓங்கி வரும் ChatGPT!.....தேங்கி விழும் Google!!

 

மனிதனின் செயற்கை நுண்ணறிவு மனித தொழில் நுட்பத்தின் முதல் படியாக ChatGPT எனப்படும் model இன் அறிமுகம், இப்பொழுது Google தேடல் பொறியினை அடியோடு வீழ்த்திவிடும் அளவுக்கு சாதனை புரியக்கூடியதாக இருக்கிறது.

 

ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன இயற்கை மொழி செயலாக்க மாதிரியாகும். இந்த மாதிரியானது பரந்த அளவிலான தூண்டுதல்களுக்கு மனிதனைப் போன்ற பதில்களை உருவாக்கும் திறன் கொண்டது, இது வாடிக்கையாளர் ஆதரவு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் உரையாடல் முகவர்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கான சக்திவாய்ந்த கருவியாக அமைகிறது.

 

அதன் மையத்தில், ChatGPT என்பது ஒரு மின்மாற்றி அடிப்படையிலான நரம்பியல் நெட்வொர்க் ஆகும், இது இணையத்தில் இருந்து ஒரு பெரிய அளவிலான உரை தரவுகளில் பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது, மனித மொழியைப் புரிந்துகொள்ளவும் பதிலளிக்கவும், நமது தகவல்தொடர்புகளில் உள்ளார்ந்த வடிவங்கள் மற்றும் நுணுக்கங்களைப் பிரதிபலிக்கும் மாதிரியை அனுமதிக்கிறது. இதன் விளைவாக கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய, ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்க மற்றும் பயனர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய அதிநவீன மாதிரி.

 

ChatGPT இன் முக்கிய பலங்களில் ஒன்று, தொழில்நுட்ப வாசகங்கள் முதல் ஆக்கப்பூர்வமான கதைசொல்லல் வரை பரந்த அளவிலான தலைப்புகள் மற்றும் வகைகளைக் கையாளும் திறன் ஆகும். இது ஒரு பரந்த அறிவுத் தளத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இது துல்லியமான மற்றும் பொருத்தமான பதில்களை வழங்குவதற்கு உதவுகிறது, இது தகவல் அல்லது ஆலோசனையை தேடும் பயனர்களுக்கு மதிப்புமிக்க ஆதாரமாக அமைகிறது. கூடுதலாக, அதன் மனிதனைப் போன்ற மொழி உருவாக்கத் திறன்கள் தங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த விரும்பும் வணிகங்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது.

 

ChatGPT இன் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் அளவிடுதல் ஆகும். OpenAI ஆனது API மூலம் மாடலைக் கிடைக்கச் செய்துள்ளது, டெவலப்பர்கள் அதை தங்கள் பயன்பாடுகளில் எளிதாக ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது. இது வணிகங்கள் தங்கள் செயல்பாடுகள் மற்றும் சலுகைகளை மேம்படுத்த மேம்பட்ட AI தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான புதிய சாத்தியங்களைத் திறந்துள்ளது.

 

முடிவில், ChatGPT என்பது ஒரு அதிநவீன இயற்கை மொழி செயலாக்க மாதிரியாகும், இது கணினிகளுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டது. அதன் மனிதனைப் போன்ற மொழி உருவாக்கத் திறன்கள் மற்றும் பரந்த அறிவுத் தளத்துடன், வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தவும் ஒரு சக்திவாய்ந்த கருவியை வழங்குகிறது. AI தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால், ChatGPT மற்றும் பிற ஒத்த மாதிரிகள் நமது அன்றாட வாழ்வில் பெருகிய முறையில் முக்கிய பங்கு வகிப்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

ஒளிமயமான எதிர்காலம்என் உள்ளத்தில் தெரிகிறது!

 [அடுத்த பகுதியினை வாசிக்க ,அழுத்துக Theebam.com: ஒளிமயமான எதிர்காலம் - 4:]

தகவல்:- செ.சந்திரகாசன்

 

மகாவம்சத்தில் புதைந்துள்ள…… (பகுதி 31)

               உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்


 

மஹிந்த தேரர் அரசனையும் அவருடைய நாற்பது ஆயிரம் படைகளையும் புத்த மதத்துக்கு மாற்றினார் என்கிறது தீபவம்சம். ஆனால் இது ஓர் சில நாட்களில் ஒரு சொற்பொழிவின் [பிரசங்கம் / sermon] பின் நடைபெறக்கூடிய ஒன்று அல்ல. மத மாற்றம் பொதுவாக வற்புறுத்தல், தூண்டுதல், சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான அதற்கான உழைப்பு தேவை. மஹிந்த தேரர் முதலில், புத்தர் செய்தது போலவே பயத்தை, திகிலை ஏற்படுத்தும் தந்திரங்களை பாவித்தார். அவர் ஒவ்வொரு முறையும் பூக்களை எறியும் பொழுது நிலநடுக்கம் ஏற்பட்டது. வட  அல்லது வடமேற்கு இந்தியா நிலநடுக்கம் ஏற்படும் இடங்கள் ஆகும், அந்த நினைவு மரபால் கதையை சோடித்து இருக்கலாம்?

 

மேலும் மஹிந்த தேரர், ஐந்து மாதத்தின் பின், இலங்கையில் புத்தரின் நினைவுச் சின்னம் ஒன்றும் வழிபட இல்லை என்று இந்தியா [ஜம்புதீப] போக விரும்பினார். என்றாலும் தேவநம்பிய தீசன், தான் ஒரு தாது கோபுரம் கட்டுவதாகவும், ஆகவே இங்கேயே வழிபடலாம் என்றும், அதற்கு புத்தரின் உடல் எச்சங்களை அல்லது தாதுப்பொருட்களை தேடும்படி கூறினார். எனவே மஹிந்த தேரர் சுமணாவை பாடலிபுத்திரத்திற்கு அனுப்பினார். அங்கே அசோகனிடம் அதை பெற்று வரும் படி. அசோகனும் மகிழ்வாக ஒரு அன்னதான கிண்ணம் நிரப்பி அதை வழங்கினார் என்று கூறுகிறது.

 

அசோகன் 84,000 துறவிமடங்கள் புத்தரின் உடல் எச்சங்களை நினைவு சின்னமாக வைத்து இந்தியாவில் கட்டினார் என்று பரவலாக இந்தியா மக்களால் நம்பப்படுகிறது. ஒருவரின் உடல் எச்சங்களை இந்த அளவுக்கு பிரித்து எடுக்கக் கூடிய தொழில் நுட்பம் இன்று கூட கிடையாது. அதன் பிறகு தான் அசோகன்  சுமணாவுக்கும் கொடுத்தார் என்பது என்னால் நம்பமுடியவில்லை? அது மட்டும் அல்ல, நாகர்கள் கொண்டு சென்ற புத்தரின் எட்டாவது பகுதி எச்சங்களை, அசோகனால் கண்டு பிடிக்கவோ / பறித்து எடுக்கவோ முடியவில்லை என்றும், ஆனால் துட்டகாமினி அதை நாகர்களின் பாதாள லோகம் [Naga’s underworld] போய் எடுத்து வந்தார் என்று மறைமுகமாக துட்டகாமினியை பெருமைப்படுத்துகிறது.

 

மேலும் இலங்கையிலும் அனுராதபுர காலம் வரை தமிழர்கள் பௌத்தத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தனர் என்பது தெளிவு. உதாரணமாக கந்தரோடை தலத்தில் அருகருகே அமைந்திருந்த பல தாதுகோபங்கள் தமிழ் பிக்குகள் வாழும் மடங்களாயிருந்து இருக்கலாம் என்பதும், யாழ்பாண தமிழர்கள் மற்றும் பழந்தமிழக மக்களிடையே முதல் சில நூற்றாண்டுகளில் சைவமதம் அல்லது இந்து மதம் மீண்டும் எழுச்சிபெறும் காலத்திற்கு முன்பு வரை தமிழ் வழி மகாயான (உயர்ந்த வழி) பௌத்தம் புகழ்வாய்ந்ததாக செல்வாக்கு செலுத்தி வந்ததற்கு சான்றாக இது அமைகிறது. பொதுவாக, அடித்தளம், அண்டம், தூபி ஆகிய மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது தாதுகோபம் ஆகும். மற்றது இன்று சிங்களவர்கள் ஆதரிப்பது தேரவாத பௌத்தம் (மூப்பர்களின் வழி) என்பது குறிப்பிடத் தக்கது. இதை ஒரு பழமைவாத தொகுதியாக சிலர் கருதுகின்றனர். இதுவே வடக்கே உள்ள சான்றுகள் சிங்களத்துக்கு சம்பந்தமற்றவை என்பதாகிறது. தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காதது. ஆனால் இன்று புத்த மதத்தை பின்பற்றுகிற அல்லது போதிக்கின்ற புத்த துறவிகள், புத்தர் விக்கிரகங்களை எங்கும், எதிலும் சிலவேளை வலுக்கட்டாயமாக, அங்கு வாழும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக, சிலவேளை மக்களின் காணிகளில் அல்லது பிற ஆலய காணிகளில் அத்துமீறி, நிறுவுவதில் கண்ணும் கருத்துமாக மூழ்கிப்போயிருக் கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. மணிமேகலை புத்த மதத்தில், அறம் என்பது என்ன என்று உரைக்கும் பொழுது:

 

"அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்

உண்டியும் உடையும் உறையளும் அல்லது

கண்ட தில்லை"  

 

என்று சுருக்கமாக, எல்லா உயிர்களுக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் பாதுகாப்பாக வாழ இடம் ஆகிய மூன்றினை இன்றியமையாதனவாகக் கூறி, அவற்றின் வைப்பு முறையிலேயே தனித்தனி ஒவ்வொன்றின் இன்றியமையாத் தன்மையினையையும் விளக்கிக் காட்டு கிறார். [“If one should ask what is the supreme form of charity, bear this carefully in mind that it is the maintenance of all living creatures with food and clothing and places to live in safety.”] இவ்வற்றை இன்றைய புத்த பிக்குகளும், பௌத்த அரசுகளும் சரியாக கடைபிடித்தால், கட்டாயம் எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை தானாகவே ஏற்படும். அதைத்தான் புத்தரும் உண்மையில் விரும்பினார். தன் சிலைகளை நிறுவி சர்ச்சை, அமைதியின்மை, பேதம் ஏற்படுத்தவல்ல?

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 32 தொடரும்

👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள ….(பகுதி 32):

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01: