-01-
கணவன்: என் காஃபி கப்புல ஏன் லிப்ஸ்டிக் மார்க் இருக்கு?
மனைவி: அது
நான் நேத்து குடிச்ச கப்புங்க, அதை கழுவ
மறந்துட்டேன்.
-02-
மனைவி: கம்ப்யூட்டர்ல ரொம்ப நேரம் உக்காந்து (வேலை) பார்க்காதீங்க, கண்ணு கெட்டுப்போகும்
கணவன்:அப்போ உன்னை 50 வருடமாய் பார்த்துக்கிட்டு இருக்கேன். எனக்கென்ன, கண்ணு கெட்டா
போயிட்டுது?
-03-
மனைவி: வண்டி கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க, பக்கத்துல லாரி வருது.
கணவன்: பக்கத்தில இருக்கிற உன்மேல இல்லாத பயமா அந்த லாரிமேல எனக்கு!
-04-
மனைவி:என்னங்க, கலயாணத்துக்கு அப்புறம் என்ர சமையலால நீங்க கண்ட பயன் என்னங்க?
கணவன்: டொக்ரரும் நானும் ரொம்ப, ரொம்ப
க்ளோசா யிற்றோம்.
-05-
மனைவி: என்னங்க, கல்யாணத்துக்கு முன்னாடி "உனக்காக உயிரையே தருவேன்"னு சொன்னீங்க... இப்ப நான் சமைச்ச சாப்பாட்டை சாப்பிடவே மாட்டேங்குறீங்க?
கணவன்:அதுக்காக உன்ர சமையலை நான் சாப்பிட்டா
என் உயிரை நீ எடுக்கணும்?
-06-
மனைவி: இந்தாங்க காபி... எப்படி இருக்கு?
கணவன்: ம்ஹூம்... காபித்தூள் கம்மியா இருக்கு, சர்க்கரையும் கம்மியா இருக்கு.
மனைவி: (கோபமாக) உங்ககிட்ட அன்பும் பாசமும் கம்மியா இருக்கு, அதை நான் கேட்கிறேனா? கம்ப்ளைன்ட் பண்ணாம குடிங்க!
-07-
மனைவி: ஏங்க, தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போகுதே, என்ன பண்றது?
கணவன்: கவலைய விடு... நாமதான் தங்கம் வாங்கப் போறதே இல்லையே, அப்புறம் என்ன?
-08-
மனைவி: கல்யாணத்துக்கு முன்னாடி என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருப்பீங்க... இப்ப ஏன் பார்க்க மாட்டேங்குறீங்க?
கணவன்: அப்போ அது மேக்கப் முகம் மேல
"லவ்" மா... இப்போ இது "பயம்மா"!
-09-
கணவன்: ஆபீஸ்ல எங்க மேனேஜர் ரொம்ப டார்ச்சர் பண்றாரு மா... எப்ப பாத்தாலும் கத்திக்கிட்டே இருக்காரு. வேலைய விடணும் போல தோணுது!
மனைவி: வீட்டில நீங்களும் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறீங்க! எனக்குமட்டும் உங்களை விடணும் எண்டு தோணுதா?
-10-
மனைவி: ஏங்க, கண்ணாடியில பார்க்கும்போது எனக்கே வயசான மாதிரி தெரியுது... முகமெல்லாம் சுருக்கம் விழுந்துடுச்சு. எனக்கு ஒரு ஆறுதலான வார்த்தை சொல்லுங்களேன்?
கணவன்: உன் கண் பார்வை இன்னும் நல்லாத்தான் இருக்கு மா, கவலைப்படாத!
-11-
மனைவி: உங்க போன் பாஸ்வேர்ட் என்னங்க?
கணவன்: நம்ம கல்யாண தேதிதான் மா.
மனைவி: (யோசித்துவிட்டு)... சரி விடுங்க, நானே அப்புறமா கேட்டுக்கிறேன்!
-12-
போலீஸ்: பூட்டிய வீட்டுக்குள்ள எப்படி நுழைஞ்சே?
திருடன்: அது என் தொழில் ரகசியம் சார்!
போலீஸ்: ஏன்?
திருடன்: உங்களுக்குச் சொன்னா நீங்களும் திருட ஆரம்பிச்சிடுவீங்க!
-13-
போலீஸ்: உனக்குக் கடைசி ஆசை என்ன?
கைதி: நீங்க எனக்குப் பதிலா ஜெயிலுக்குப் போகணும் சார்!
-14-
போலீஸ்: சிக்னல்ல ரெட் லைட் எரியுறது தெரியலையா?
டிரைவர்: லைட் தெரிஞ்சுது சார், ஆனா நீங்க நிக்கிறது தெரியல!
-15-
போலீஸ்: நாங்க துரத்தும்போது ஏன்டா நிக்காம ஓடுன?
குற்றவாளி: நீங்க எல்லாரும் "திருடன்... திருடன்..."னு கத்திக்கிட்டே ஓடி வந்தீங்களா சார்... யாரோ பெரிய திருடன் வர்றான்னு பயந்துதான் நானும் ஓடுனேன்!
-16-
போலீஸ்: கோர்ட்ல உனக்காக வாதாட வக்கீல் யாராவது வச்சிருக்கியா?
குற்றவாளி: இல்லை சார்... ஆனா, நான் திருடுன பணத்துல ஒரு பகுதியை வச்சு, ஜட்ஜையே விலைக்கு வாங்கிடலாம்னு ஒரு பிளான் வச்சிருக்கேன்!
-17-
போலீஸ்: ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுனா 1000 ரூபாய் ஃபைன் தெரியாதா?
குற்றவாளி: சார்... வண்டியே திருடுன வண்டிதான், இதுல ஹெல்மெட்டுக்கு நான் எங்க சார் போவேன்?
-18-
ஆசிரியர்: உன்கிட்ட 5 ஆப்பிள் இருக்கு, அதுல 3 ஆப்பிளை ராமு வாங்கிட்டான். இப்போ உன்கிட்ட என்ன இருக்கும்?
மாணவன்: ராமு மேல பயங்கர கோபம் இருக்கும் சார்!
-19-
ஆசிரியர்: பெருசானதும் நீ என்னவாகப் போறே?
மாணவன்:
ஒரு டீச்சர் ஆக வந்து
உங்களை மாதிரி வகுப்பில மாணவரையும் நித்திரையாக்கி, நானும் நித்திரை கொள்ளப்போகிறேன்.
-20-
ஆசிரியர்: உலகத்துலேயே மிகக் கடினமான வேலை எது?
மாணவன்: நீங்க பாடம் நடத்தும்போது தூங்காம நடிக்கிறதுதான் சார்!
-21-
நண்பன் 1: மச்சான், நான் பரீட்சையில ஃபெயில் ஆயிட்டேன்டா!
நண்பன் 2: கவலைப்படாதடா, நானும் தான் ஃபெயில்.
நண்பன் 1: அப்பாடா! நீயும் ஃபெயில்னு கேட்டதுக்கு அப்புறம்தான் என் நெஞ்சு வலியே குறைஞ்சது!
-22-
நண்பன் 1: அவசரமா ஒரு 2000 ரூபாய் கடன் வேணும்டா, அடுத்த வாரம் தந்திடுறேன்.
நண்பன் 2: என்கிட்ட பணம் இல்லடா, ஆனா ஒரு நல்ல அட்வைஸ் தர்றேன்.
நண்பன் 1: அட்வைஸ் வச்சு நான் என்னடா பண்றது?
நண்பன் 2: "யார்ட்டயும் கடன் வாங்காதீங்க" - இதான் என் அட்வைஸ்!
-23-
நண்பன் 1: மச்சான், எனக்கு வேலை கிடைச்சிருச்சு, இன்னைக்கு உனக்கு பெரிய ஹோட்டல்ல ட்ரீட்!
நண்பன் 2: நிஜமாவாடா? ரொம்ப தேங்க்ஸ்டா!
நண்பன் 1: ஆனா ஒரு சின்ன கண்டிஷன்... பர்ஸ் நீதான் கொண்டு வரணும்!
-24-
நண்பன் 1: மச்சான், உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன், யார்கிட்டயும் சொல்லிடாத.
நண்பன் 2: என்னை நம்பலாம்டா, நான் நம்ம குரூப்ல இருக்கிற மத்த நாலு பேர்கிட்ட மட்டும்தான் சொல்லுவேன்!
-25-
நண்பன் 1: நாம எப்பவுமே பிரியக் கூடாதுடா மச்சான்.
நண்பன் 2: ஆமாடா, நீ வாங்குன கடனைத் திருப்பித் தர்ற வரைக்கும் நான் உன்னை விட்டுப் போகவே மாட்டேன்!
தீபம் நகைச்சுவை