சிரிக்க சில நிமிடம்..

நகைச்சுவை -ஜோக்ஸ் 

சந்திரகாசன் செல்லத்துரை அவர்களின் தயாரிப்பில் ....


01………………………….

ஒருவன்: என் மனைவி பாடினா எங்க காலனில எல்லோரும் என்னை அதிசயமாப் பார்ப்பாங்க

மற்றவன்: அவ்வளவு அழகான குரலா?

ஒருவன்: இல்லை. இவ பாட்டைத் தொடர்ந்து கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கேன்னுதான்.

 

02………………………..

ஒருத்தி: என் மாமியாரு பச்சைக்கிளி மாதிரி...

மற்றவள்: அவ்வளவு அழகா?

ஒருத்தி: இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிகிட்டு இருப்பாங்க.

 

03……………………………..

ஒருவன்: மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...

மற்றவன்: பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.

 

04……………………………..

ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?

 

05…………………………….

ஒருவன்: நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?

மற்றவன்: இடைவேளை நல்லா இருந்தது...!

 

06…………………………..

ஒருவன்: என்ன வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு...?

மற்றவன்: ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்!

 

07…………………………

வந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!

டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

வந்தவர்:இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?

டாக்டர்:அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது!

 

08………………………….

வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?

டாக்டர்:எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?

வந்தவர்:சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.

டாக்டர்:இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.

 

09…………………………..

ஒருவன்: என் மனைவி பொறுமையில் எல்லை மீற மாட்டாள்

மற்றவன்: எப்படி?

ஒருவன்: எத்தனையோ நாள் என்னை அடிச்சிருக்காள்... ஒரு நாள் கூட அடித்துக் காயமேற்படுத்தினதில்லை... வீக்கம் மட்டுதான் இருக்கும்.

 

10………………………………………

ஒருத்தி: முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வந்துக்கிட்டிருந்தார்...

மற்றவள்: இப்போ...?

ஒருத்தி: ஒரு டைப்பிஸ்ட் பொண்ணைக் கொண்டு வந்திருக்கிறார்.


🤣🤣🤣தொகுப்பு: தீபம் இணையத்தளம் 

தொல்காப்பியம்.... /04/- அமைப்பு


பொருளதிகாரம்

அகத்திணையியல்

புறத்திணையியல்

களவியல்

கற்பியல்

பொருளியல்

மெய்ப்பாட்டியல்

உவமவியல்

செய்யுளியல்

மரபியல்

 

பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது. பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.

முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன.

மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள்.

ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது.

ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும் புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது.

ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது.

எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும் நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது.

ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும் அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன.

உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப்பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13-ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன.

மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும் தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம்.

 

இலக்கணம் - சொல்விளக்கம்

தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்.

 

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்

தொல்காப்பிய ஆறு பண்டை உரையாசிரியர்கள்

இளம்பூரணர்-எழுத்து, சொல், பொருளதிகாரத்திற்கு

பேராசிரியர்-

சேனாவரையர்- சொல்லதிகாரத்திற்கு

நச்சினார்க்கினியர்

தெய்வச்சிலையார்

கல்லாடனார்

 

தொல்காப்பியம் - ஆங்கில மொழிபெயர்ப்பு

சுப்பிரமணிய சாத்திரி, இலக்குவனார், முருகன் ஆகியோர் மொழிபெயர்ப்பின் வழி செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்