தொலைந்த நிழல்-சிறுகதை

 


அன்றைய மாலைப் பொழுது வழக்கம்போலவே அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தது. தனது சிறிய வணிக நிறுவனத்தின் கணக்குகளைப் பார்த்துவிட்டு, சோர்வோடு வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்தான் இளங்கோ. மனதில் ஏனோ ஒரு இனம் புரியாத பாரம்.

அடுத்த வாரம் அவனது நிறுவனத்தின் புதிய கிளையைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நேற்று மாலை அவனது உறவினர் ஒருவர் வந்து பேசிவிட்டுப் போனதுதான் இளங்கோவின் இந்த மனக்குழப்பத்திற்குக் காரணம். "இளங்கோ, நீ இன்னும் அந்தப் பழைய காலத்து எளிய பழக்கவழக்கங்களோடவே இருக்கிறாய். பிசினஸ் வட்டாரத்துல எல்லாரும் உன்னை மதிக்கணும்னா, நீ கொஞ்சம் ஆடம்பரமா மாறணும். காஸ்ட்லி கார் வாங்கணும், பெரிய மனிதர்கள் மாதிரிப் பேசப் பழகணும். அப்பத்தான் உனக்கு ஒரு கௌரவம் கிடைக்கும்," என்று வகுப்பெடுத்துவிட்டுப் போயிருந்தார்.

இளங்கோ இயற்கையிலேயே எளிமையையும், நேர்மையையும் விரும்பும் மனிதன். ஆடம்பரப் போலித்தனம் அவனுக்கு என்றைக்குமே செட் ஆகாது.

அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது, அந்த வழியே அவனது நீண்ட கால வழிகாட்டியான ஓய்வுபெற்ற அதிபர் இராஜரத்தினம் ஐயா நடந்து வந்தார். இளங்கோவின் முகவாட்டத்தைக் கண்டவர், திண்ணையில் அவனருகே வந்து அமர்ந்தார்.

"என்ன இளங்கோ, முகம் ஒரு மாதிரியா இருக்கு? ஏதும் பிரசினையா?" என்று அன்போடு விசாரித்தார்.

இளங்கோ தன் மனதில் இருந்த குழப்பத்தை அப்படியே அவரிடம் கொட்டினான். "ஐயா, இந்தச் சமூகத்துல எல்லாரும் ஒரு கௌரவத்தை, வெளிப்பூச்சைத்தான் பார்க்கிறாங்க போல இருக்கு. நானும் மத்தவங்க சொல்ற மாதிரி என்னை கொஞ்சம் மாத்திக்கிட்டாத்தான் சரிவருமோ எண்டு தோணுது," என்றான் ஆதங்கத்தோடு.

இராஜரத்தினம் ஐயா புன்னகைத்தார். சுற்றிலும் சூழ்ந்திருந்த அமைதியான அந்த மாலை நேரத்து மரங்களைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்.

"இளங்கோ, ஒரு சின்னக் கதை சொல்றேன் கேள்," என்றார் ஐயா.

"ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான். அவன் எல்லாரையும் திருப்திப்படுத்தணும், எல்லாரும் தன்னை மெச்சணும் எண்டு ஆசைப்பட்டான். ஒருநாள் அவன் வீதி வழியே போய்க்கொண்டிருந்தப்ப, ஒருத்தன் பார்த்துட்டு, 'நீ ரொம்ப மென்மையா, அமைதியா இருக்கிறாய், கொஞ்சம் முரட்டுத்தனமா, கண்டிப்பா இருந்தாதான் உலகம் மதிக்கும்' என்றான். இவனும் தன்னை அப்படி மாற்றிக்கொண்டான். அடுத்த நாள் இன்னொருத்தன் வந்து, 'என்னப்பா நீ எப்பவும் முகத்தை உப்ப வெச்சுக்கிட்டு இருக்காய், கொஞ்சம் கலகலப்பா, எல்லாத்துக்கும் தலையாட்டுறவனா இரு' என்றான். இவன் உடனே அப்படி மாறினான். இப்படியே ஒவ்வொருத்தர் சொல்லச் சொல்ல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தருக்காக அவன் தன்னை மாத்திக்கிட்டே இருந்தான். கடைசியில ஒருநாள் கண்ணாடி முன்னாடி போய் நின்னப்ப, அவனுக்குத் தன் சொந்த முகமே மறந்து போயிருந்தது. அவன் ஒரு வெறும் நிழலாக மட்டுமே மிஞ்சியிருந்தான்."

ஐயா இளங்கோவின் தோளைத் தட்டிவிட்டுத் தொடர்ந்தார்:

"யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே இளங்கோ! ஒருவேளை நீ மற்றவர்களுக்காக மாற நினைத்தால், இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அது உன்னுடைய சுயத்தையே நீயே கொல்வதற்குச் சமம்."

"உன்னுடைய இந்த எளிமையும், நேர்மையும், எதார்த்தமும்தான் உன்னுடைய உண்மையான பலம். அதை விரும்பி உன்னோடு இணையும் மனிதர்கள்தான் உனக்குத் தேவை. உன்னுடைய தனித்துவத்தை இழந்து நீ தேடும் எந்தவொரு கௌரவமும் வெறும் தற்காலிகமானதுதான். நீ நீயாகவே இரு," என்று கூறிவிட்டு ஐயா எழுந்து சென்றார்.

அவர் சொன்ன வார்த்தைகள் இளங்கோவின் மனதில் இருந்த இருளை அகற்றி, தெளிவைத் தந்தன.

புதிய கிளை திறப்பு விழா வந்தது. இளங்கோ எந்தப் போலித்தனமான ஆடம்பரமும் இல்லாமல், எப்போதும்போலத் தன் எளிய, நேர்மையான வழியிலேயே விழாவை நடத்தினான். அவனது இந்தத் தன்மையைக் கண்ட பல பெரிய முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்களும், "இன்றைய காலத்துல இப்படி ஒரு ஆடம்பரமில்லாத, உண்மையான மனிதரைப் பார்ப்பது அரிது. இவரோடு வணிகம் செய்வது எங்களுக்குப் பெருமை," என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.

அன்று இரவு இளங்கோ நிம்மதியோடு கண்ணாடி முன் நின்றான். அதில் தெரிந்தது யாரோ ஒருவருக்காகத் தைக்கப்பட்ட ஆடம்பர முகமூடி அல்ல; அவனது சொந்த முகம், அவனது நிஜமான நிழல்!

கண்ணதாசன் கருத்து (-யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டும்.)- தீபம்


ஆண் சான்றிதழ்

குறும்படம் 


கதைக்களம் சமூகப் பிரச்சினையை தொடுவதால் பொருள் கொண்டதாக உள்ளது.
உணர்ச்சி, காதல், குடும்ப உறவு ஆகியவற்றை இணைப்பதால் பொதுமக்களுக்கு எளிதில் தொடர்புபடக்கூடியது.
குறும்படத்தின் முக்கிய பலம் அதன் கருத்து; 
ஒரு வரி மதிப்பீடு: சமூக உணர்வும் காதலும் கலந்த, காணத் தகுந்த நல்ல முயற்சி
------------------📽தீபம் பகிர்வு /திரையின் பக்கம் 

விஞ்ஞானத்தின் விந்தை

விஞ்ஞானம்=அறிவியல்



🌟 1. விண்வெளி ஆய்வுகள் (Space Discoveries)

·        பழங்கால நட்சத்திரக் கூட்டத்தின் ரகசியம் (Stellar Sparkler)

o   கண்டுபிடித்தவர்கள்: NASA / ESA ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி குழு.

o   நாடு: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

o   விளக்கம்: பெருவெடிப்புக்கு (Big Bang) பிந்தைய பிரபஞ்சத்தின் தொடக்கக் கால வேதியியல் அமைப்பைக் கொண்ட 'NGC 6426' என்ற பழங்கால நட்சத்திரக் கூட்டத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் ஹைட்ரஜன், ஹீலியம் தவிர மற்ற கன உலோகங்கள் மிகக் குறைந்த அளவே உள்ளன.

o   பயன்: பிரபஞ்சத்தில் கிரகங்களும், உயிரினங்கள் உருவாவதற்கான மூலக்கூறுகளும் எவ்வாறு தோன்றின என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது


---------------------------

·        பால்வெளி மண்டலத்தின் புதிய எல்லை (Milky Way Expansion)

o   கண்டுபிடித்தவர்கள்: சந்திரா எக்ஸ்-ரே மற்றும் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள்.

o   நாடு: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA).

o   விளக்கம்: ஜூலை 1 அன்று வெளியான ஆய்வின்படி, நமது பால்வெளி மண்டலத்தின் (Milky Way) வெளிப்புறச் சுருள் கைகள் (Spiral arms) நாம் இதுவரை நினைத்ததை விட மிக தூரத்திற்கு விரிவடைந்து நீண்டுள்ளன என்பது தூசுப் படலங்களின் எக்ஸ்-ரே எதிரொளிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

o   பயன்: நமது சொந்த விண்மீன் மண்டலத்தின் துல்லியமான வடிவம் மற்றும் அளவை மறுவரையறை செய்ய இது பயன்படுகிறது. [1, 2]


🌿 2. பூமி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கண்டுபிடிப்புகள் (Environmental Breakthroughs)

----------------------

·        முருங்கை விதைகள் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் சுத்திகரிப்பு (Moringa Water Purification)

o   கண்டுபிடித்தவர்கள்: ஐரோப்பிய சுற்றுச்சூழல் வேதியியல் ஆராய்ச்சியாளர்கள்.

o   நாடு: ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் (முக்கியமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி).

o   விளக்கம்: குடிநீரில் கலந்துள்ள மனித உடலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் பிவிசி (PVC) ரக மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை, இயற்கை முருங்கை மரத்தின் விதைகள் (Moringa Seeds) மூலம் 90% மேல் வடிகட்ட முடியும் என அண்மைய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

o   பயன்: செயற்கை ரசாயன வடிகட்டிகளுக்கு மாற்றாக, மிகக் குறைந்த செலவில் தூய்மையான குடிநீரைப் பெற இது வழிவகுக்கிறது

-------------------------

·        காற்றிலிருந்து கார்பனை உறிஞ்சும் பூஞ்சைகள் (Carbon-Sucking Fungi)

o   கண்டுபிடித்தவர்கள்: உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள்.

o   நாடு: இங்கிலாந்து மற்றும் கனடா.

o   விளக்கம்: மண்ணுக்கு அடியில் வாழும் குறிப்பிட்ட சில வகை பூஞ்சை (Fungi) தாவரங்கள், வளிமண்டலத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை மிக வேகமாக உறிஞ்சி மண்ணுக்குள் நிலைநிறுத்துவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

o   பயன்: புவி வெப்பமயமாதலைத் தடுப்பதிலும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இந்த இயற்கை முறை பெரும் திருப்புமுனையாக அமையும்


🏥 3. மருத்துவத் துறையின் அரிய அறுவைசிகிச்சை வெற்றிகள் (Surgical Breakthroughs)

-----------------

·        எண்ணக் அலைகள் மூலம் இயங்கும் செயற்கை உறுப்புகள் (Neuro-Sensor Prosthetics Surgery)

o   கண்டுபிடித்தவர்கள்: நரம்பியல் மற்றும் பயோ-மெடிக்கல் பொறியியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள்.

o   நாடு: அமெரிக்கா மற்றும் ஜப்பான்.

o   விளக்கம்: தண்டுவடம் மற்றும் மூளை பாதிப்பால் கை, கால்களை இழந்த நோயாளிகளின் மூளையின் மோட்டார் கார்டெக்ஸ் (Motor Cortex) பகுதியில் அதிநவீன சென்சார்கள் அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன. நோயாளிகள் தங்களின் செயற்கைக் கைகளை "வெறும் எண்ணங்கள் மூலமாகவே" மிகத் துல்லியமாக அசைக்கச் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

o   பயன்: பக்கவாதம் மற்றும் விபத்துகளால் முடங்கியவர்கள் யாருடைய உதவியும் இன்றித் தங்களின் அன்றாட வேலைகளைச் செய்ய இது உதவும்

-------------------------------


·        AI மற்றும் ரோபோடிக்ஸ் ஒருங்கிணைந்த டிஜிட்டல் அறுவைசிகிச்சை (Data-Driven Robotic Surgery)

o   கண்டுபிடித்தவர்கள்: டிஜிட்டல் சர்ஜரி இன்னோவேஷன் நிபுணர்கள்.

o   நாடு: அமெரிக்கா.

o   விளக்கம்: அதிநவீன ரோபோடிக் கருவிகளுடன் செயற்கை நுண்ணறிவை (AI) இணைத்து, அறுவைசிகிச்சையின் போது உடலின் உட்பகுதிகளை 3D இமேஜிங் முறையில் நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணித்துச் செய்யப்படும் புதிய டிஜிட்டல் அறுவைசிகிச்சை முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

o   பயன்: மருத்துவர்களின் சிறிய மனிதத் தவறுகளையும் (Human errors) தடுத்து, மிகக் குறுகிய காலத்தில், ரத்தப்போக்கு இல்லாமல் சிக்கலான உள்உறுப்பு அறுவைசிகிச்சைகளைச் செய்ய முடிகிறது

இது பெரும்பாலும் “உடலை அறுக்காமல்”  “மிகச் சிறிய கீறல்கள் மூலம்” செய்யப்படும் குறைந்தபட்ச ஊடுருவும் (minimally invasive) அறுவைசிகிச்சை ஆகும். ரோபோடிக்/AI உதவியுள்ள அறுவைசிகிச்சையில் மருத்துவர் ஒரு கன்சோலில் இருந்து கருவிகளை இயக்குகிறார்; உடலுக்குள் சிறிய கருவிகளும் 3D கேமராவும் சென்று, உள்ளுறுப்புகளை தெளிவாகக் காண உதவுகிறது


தீபம் அறிவியல்