"அறிவியல் நோக்கில்....பகுதி-44A -பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]



[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 44 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'மகிந்த மற்றும் சங்கமித்த இருவரும் அசோகரின் பிள்ளைகளா?'

 


அத்தியாயம் 7 அசோகனின் சமய நம்பிக்கை பற்றியது. பிக்குகளுக்கு பலவற்றைச் செய்ததாலும், எண்பத்து நான்காயிரம் மடங்களைக் கட்டியதாலும், தான் புத்த சமயத்தின் நம்பிக்கைக்கு உரியவராக  இருக்கத் தகுதியானவர் என்று அசோகர் நினைத்தார். இருப்பினும், மொகாலிபுத்த [Moggaliputta], அசோகன் தனது மகனையோ மகளையோ புத்த மத விசுவாசத்திற்கு [தெய்வ நம்பிக்கைக்கு] அர்ப்பணித்து, அவர்களுக்கு பப்பாஜ்ஜி நியமனம் [ Pabbajji ordination / ஒரு புதிய துறவி அல்லது கன்னியாஸ்திரியாக ஒரு நபரின் வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு புத்த சமய விழா.] செய்ய வேண்டும் என்று கூறினார். 7-17 பார்க்கவும். அசோகனின் மகன் மகிந்தவும் மகள் சங்கமித்தாவும் பாப்பாஜி நியமனம் பெற உடனடியாக ஒப்புக்கொண்டனர். தந்தை தன் ஆசையை அடைய அவர்கள் இருவரும் பாப்பாஜி நியமனத்தைப் பெற்ற போது மகிந்தவின் வயது ஆக 20 மற்றும் சங்கமித்தாவுக்கு 18 வயது. ஒரு தகப்பனும், அசோகனைப் போன்ற கருணையுள்ள ஒருவரும், இருபது மற்றும் பதினெட்டு வயதுடைய தனது இரு வாலிப பிள்ளைகளை பிக்கு மற்றும் பிக்குணியாக [பெண் துறவி] ஆக்கி, அதனால் தான் தெய்வ  நம்பிக்கைக்கு உரியவராக மாறலாம் என்று விரும்புவாரா? அல்லது அதனால் திருப்தி அடைவாரா? பெரும்பாலும் இருக்காது! அது மட்டும் அல்ல, மகாவம்சத்தின்படி சங்கமித்தா திருமணம் செய்து, அந்த நேரத்தில், அவளுக்கு ஒரு இளம் மகனும்  இருந்தான். அப்படி உண்மையில் நடந்து இருந்தால், இது கட்டாயம் அசோகனின் கொடூரமான செயல் அல்லவா? மேலும், மொகாலிபுத்தவின் முடிவு என்னவென்றால், பாப்பாஜி நியமனம் பெறுவதற்கு ஒரு மகன் அல்லது ஒரு மகள் இருக்க வேண்டும், அவ்வளவு தான், இருவரும் அல்ல. எனவே இது ஒன்றே இந்த தீபவம்சம் கதையின் உண்மையைப் புரியவைக்கும்?

அதாவது, மகிந்த மற்றும் சங்கமித்தா இருவரின் இருப்பை இது கேள்விக்குறி ஆக்கிறது. இந்த இருவருமே இலங்கை புத்த துறவி ஆசிரியர்களின் போலியான படைப்பாக இருக்க வேண்டும்? அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்று அசோகரின் மகன்கள் மற்றும் பேரன்களைப் பற்றி பேசுகிறது, ஆனால் மகிந்த மற்றும் சங்கமித்தாவைப் பற்றி அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. வேறு சில இந்திய ஆதாரங்களின்படி, அசோகருக்கு சாருமதி அல்லது சாருமித்ரா என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள், பின்னர் அவர் தனது கணவருடன் நேபாளத்தில் குடியேறினார், இருவரும் துறவிகள் ஆனார்கள் என்கிறது. இலங்கை துறவிகள் சிறிய மாற்றங்களுடன் இலங்கையை புத்த மதத்திற்கு மாற்ற, மேலே கூறிய இரண்டையும் நகலெடுத்திருக்க வேண்டும்.

மூன்றாவது பௌத்த மாநாடு அசோகரின் ஆதரவில் ஒன்பது மாதங்கள் நீடித்தது. வரலாற்று முக்கியத்துவம் இல்லாத பல மத விவரங்கள் இங்கு உள்ளன. பலர் தங்களின் சுயலாபத்திற்காகவும், நம்பிக்கைக்கு சேதம் விளைவிப்பதற்காகவும் தந்திரமாக, புத்த விசுவாசத்தில் சேர்ந்தனர். பின்னர் மொகாலிபுத்த மூன்றாவது புத்தமத சபையை நடத்தி, சமயப் பிளவுகளை அகற்றினார். அத்துடன், போலித் துறவிகளை மன்னர் அசோகன் சமய நடவடிக்கைகளில் இருந்து அகற்றினார். இந்திய ஆதாரங்களில், மூன்றாவது பௌத்த சபை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதாவது எங்கு மூன்றாவது பௌத்த சபை நடந்ததோ, அங்கிருந்து எந்தச் சான்றுகளும் இல்லை. எனவே மூன்றாம் பௌத்த சபையின் உண்மைத்தன்மை பல அறிஞர்களால் சந்தேகிக்கப்படுகிறது. மீண்டும் இந்த அத்தியாயம் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல.

 

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

 

 

Part: 44 / Appendix – Dipavamsa / 'Are both Mahinda and Sanghamitta, children of Asoka?'

 


Chapter 7 is about Asoka’s intention to become the relation of the Faith. He thought that he was fit to be the relation of the faith as he did a lot to the Bikkhus, and also constructed eighty four thousand monasteries. Moggaliputta, however, told that he should give his son or daughter to the Faith and cause them to receive Pabbajji ordination [a Buddhist ceremony that marks the beginning of a person's life as a novice monk or nun.] to become the relation of the Faith, 7-17. Asoka’s son Mahinda and the daughter Sanghamitta  readily agreed to receive Pabbajji ordination. Mahinda was 20 years of age and Sanghamitta  was 18 years of age when they both received Pabbajji ordination so that their father could attain his desire. Would a father and a benevolent one like Asoka, make his young children of twenty and eighteen years to become a Bikkhu and a Bikkhunni so that he could satisfy his desire to be a relation of the Faith? Most probably would not! Sanghamitta had a young son, as per the Mahavamsa, by that time. It is a cruel act on the part of Asoka. Furthermore, the Moggaliputta’s decision was that either a son or a daughter to be made to receive the Pabbajji ordination, and not both. This is also of the reasons to doubt the bona fide of both Mahinda and Sanghamitta; both must be the bogus creation of the monkish authors of Lanka. One of the Asoka’s inscriptions speaks of sons and grandsons of Asoka, but not about Mahinda and Sanghamitta. Asoka had, as per Indian sources, a daughter by the name Charumati or Charumitra, and later she settled in Nepal with her husband, and both became monks. Lanka monks must have copied these two to convert Lanka to the Faith with small modification.

 

Third Buddhist Council took place under the aegis of Asoka which lasted for nine months. There are quite many religious details which are not of historical significance. Many furtively joined the Faith for their own gain, and doing damage to the Faith. Then Moggaliputta held the Third Buddhist Council, and demolished the schisms, and the bogus monks were disrobed by the King Asoka. There is no information about the Third Buddhist Council from the Indian sources. Therefore the veracity of the Third Buddhist Council is suspected by many scholars. This chapter is also not about human historical events that took place in Lanka.

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 44 B தொடரும் / Will follow

உடல் கடிகாரமும் உணவு நேரமும்:

இரவு உணவுக்கான சிறந்த நேரமும், அதிக உணவின் அளவும்!


நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அதை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. நமது உடலின் உயிரியல் கடிகாரம் (Circadian Rhythm) செரிமானம், இன்சுலின் சுரப்பு, வளர்சிதை மாற்றம் (Metabolism) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. 'காலை உணவை மன்னரைப் போலவும், மதிய உணவை இளவரசரைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும்' என்ற பழமொழி வெறும் அறிவுரை அல்ல; அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

எந்த வேளையில் அதிக உணவு சாப்பிடலாம்?

நாளினுடைய தொடக்கத்திலும், முற்பகுதியிலும்தான் உடலின் இன்சுலின் உணர்திறன் மற்றும் கலோரியை எரிக்கும் திறன் அதிகமாக இருக்கும். எனவே, காலை மற்றும் மதிய வேளைகளில் அதிக சத்துக்களும் ஆற்றலும் கொண்ட உணவுகளைச் சாப்பிடுவதே சிறந்தது.

  • காலை உணவு: நாளின் தொடக்கத்திற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. நார்ச்சத்து நிறைந்த முழுத் தானியங்கள், புரதம் ஆகியவற்றை இக்காலத்தில் தாராளமாக உட்கொள்ளலாம்.
  • மதிய உணவு: அன்றைய நாளின் மிகப்பெரிய உணவாக (Heavy Meal) மதிய உணவை அமைப்பதே உடலுக்கு மிகவும் நல்லது. பகல் வேளையில் உடல் சுறுசுறுப்பாக இருப்பதால் கார்போஹைட்ரேட்டுகளை உடல் எளிதில் கரைத்துவிடும்.
  • இரவு உணவு: மாலையில் உடலின் மெலட்டோனின் (Melatonin) ஹார்மோன் அளவு அதிகரிக்கும் போது, குளுக்கோஸைக் கட்டுப்படுத்தும் திறன் குறைகிறது. எனவே, இரவில் மிகக் குறைந்த அளவிலான, லேசான புரத உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

இரவு உணவுக்கான சிறந்த நேரம் எது?

இரவு உணவை நாம் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்.

இரவு தாமதித்துச் சாப்பிடும்போது, கொழுப்பு கரையாமல் சேமிக்கப்படுவதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உருவாகிறது. மேலும், வயிறு நிறைந்த உணர்வைத் தரும் 'லெப்டின்' ஹார்மோன் சுரப்பு குறைந்து மறுநாள் அதிக பசியையும் உண்டாக்கும்.

உணவு உண்பதற்கான சரியான நேர அட்டவணை

நமது உடலின் உயிரியல் கடிகாரத்துடன் ஒத்திசைந்து வாழ, தினமும் ஒரே சீரான நேரத்தில் உணவருந்துவது அவசியமாகும்:

உணவின் வேளை

பரிந்துரைக்கப்படும் நேரம்

உணவின் இயல்பு

காலை உணவு

காலை 7:00 - 8:30

மன்னரைப் போல (சத்துக்கள் நிறைந்த, முழுமையான உணவு)

மதிய உணவு

மதியம் 12:30 - 2:00

இளவரசரைப் போல (அன்றைய நாளின் முக்கிய உணவு/கார்போஹைட்ரேட்)

இரவுச் சிற்றுண்டி / உணவு

மாலை 6:30 - 7:30

ஏழையைப் போல (மிக லேசான, எளிதில் செரிக்கும் புரத உணவு)

ஆரோக்கிய வாழ்விற்கு நினைவில் கொள்ள வேண்டிய முக்கியக் கருத்துகள்

  • 3 மணி நேர விதி: இரவு உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 3 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
  • முன்கூட்டியே சாப்பிடுதல்: மதிய உணவையும் இரவு உணவையும் முன்கூட்டியே சாப்பிடுபவர்கள் வேகமாக உடல் எடையைக் குறைப்பதோடு, சீரான ரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கின்றனர்.
  • இரவில் லேசான உணவு: இரவில் கொட்டைகள், விதைகள், மீன் அல்லது கோழி இறைச்சி போன்ற டிரிப்டோஃபான் (Tryptophan) நிறைந்த புரத உணவுகளைக் குறைந்த அளவில் எடுப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும்.
  • தூக்கமும் பசியும்: போதுமான தூக்கம் இல்லையெனில், அடுத்த நாள் உடல் அதிக ஆற்றல் கொண்ட உணவுகளை விரும்பத் தொடங்கும். எனவே, சீரான தூக்கமும் உணவு நேரத்தைக் கட்டுப்படுத்த அவசியமாகும்.

தீபம் உடல்நலம்