"அறிவியல் நோக்கில்....பெளத்தம் ஒரு அலசல் . " :பகுதி:24A

 "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]



[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]

பகுதி: 24 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாக[Naga]வில் முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' 



மகசுழியின் மகன் குடகன்ன தீசன் [Kutakanna Tissa, also known as Makalan Tissa] இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். குடகன்ன திஸ்ஸ  என்பது தமிழ்ப் பெயராகவும் இருக்கலாம்?  அவர் மகாவம்சம் 34-30 படி அனுலாவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான்.  அவரது மகன் அபயன் (Abhaya / மகாவம்சத்தில் பட்டிகாபய / Bhatikabhaya) அவரது தந்தைக்கு பின் இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பிறகு, குடகன்ன தீசனின் மற்றொரு மகனான மகாதத்திக நாகன் [Mahadathika Naga] பன்னிரண்டு ஆண்டுகள் அரசாண்டான். தத்திக [Dathika] முன்பு கூறியது போல் ஒரு தமிழ் மன்னன். மகாதத்திக, என்பது பெரிய அல்லது உயர்ந்த தத்திக ஆகும். எனவே, மகாதத்திக ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும். நாகசாமி, நாகராஜா, நாகபூசன்னி, நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற பல தமிழ் பெயர்களுக்கு நாக என்பது மிகவும் பொதுவான முன்னொட்டு என்பதையும் கவனிக்க.

மகாதத்திக நாகனின் மகன் அமந்தகாமினி  [Amandagamani] ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி அவரது முழுப்பெயர் அமந்தகாமினி அபயன் [Amandagamani Abhaya, also referred as Aḍagamunu]. தந்தை தமிழராக இருந்ததைப் போல அவரும் தமிழராக இருக்க வேண்டும்? அவருக்குப் பிறகு அவரது இளைய சகோதரர் கனிராஜனு திஸ்ஸன் [Kanirajanu Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரும் வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும்? அமந்தகாமினியின் மகன் சூலபாயன் [Chulabhaya] அவனுக்கு ஒரு வருடம் கழித்து ஆட்சி செய்தான்; இவனும் தமிழனாக இருக்க வேண்டும்? தனது சகோதரர், மன்னர் அமந்தகாமினியைக் கொன்று அரியணை ஏறினார் என்பதால், மகாவம்சம் அரசன் கனிராஜனு திஸ்ஸாவை ஒரு தீய மன்னன் என்று குறிப்பிடுகிறது. அமந்தகாமினியின் மகள் சிவாலி அல்லது ரேவதி [Sivali, also known as Revati / சூலபாயனின் சகோதரியான சிவாலி], நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். அமந்தகாமினியின் சகோதரியின் மகன்  இளநாகன்  சிவாலியை ஆட்சியிலிருந்து அகற்றி ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இளநாக, அதாவது இளம் நாகம் என்பது தெளிவான தமிழ் பெயர். இளநாகனின் மகன் சந்தமுக சிவா [Candamukha Siva] எட்டு வருடமும் ஏழு மாதமும் ஆட்சி செய்தான். சந்தமுக சிவா என்பதும் தமிழ்ப் பெயராகும். அது மட்டும் அல்ல, சந்தமுக சிவாவின் வம்சாவளி தமிழர் ஆகும். தமிழில் ‘சந்திரமுகி’ [‘Chandramuki'] என்ற பெயரில் ஒரு படம் வந்தது. தமிழ் தேவி [Damila Devi] என்று அழைக்கப்படும் சந்தமுக சிவாவின் மனைவி, ஒரு பௌத்த நிறுவனமான அரமாவிற்கு தனது சொந்த வருமானத்தை வழங்கினார். பௌத்தத்தில், அரம (arama / आराम) என்றால் "துறவற வாழ்விடம்" என்று பொருள். அதாவது துறவிகள் வசிக்கும் மற்றும் அவர்களின் நம்பிக்கையை கடைப்பிடிக்கும் மற்றும் ஒன்றாக கூடும் இடம் என பொருள்படும். மன்னரும் ராணியும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றினாலும் அவர்கள் புத்த அராமாக்கு நன்கொடை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும், தீபவம்சம் பௌத்தத்திற்கு ஆதரவானது, ஆனால் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகாவம்சத்தில் அவரைப் பற்றிய ஒரு கதை உள்ளது, அதில் தமிழ் தொடர்பை ஊகிக்க முடியும். அடகெமுனுவுக்கும் (ஆமந்தகாபனி அபயன்)  வசபாவுக்கும் / வசபனுக்கும் [Adagemunue and Vasabha] இடையில் இருந்த ஏழு அரசர்களைப் பற்றி இராசவலிய கூறுகிறது, என்றாலும்  அவர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிடப்படவில்லை.

கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட,  கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24  – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva  /Chandramukhaseewa  / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது. அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது , அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார். [five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ்  சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை   பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன்?. இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன் 

மேலும்  பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக,  பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]
♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚

அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...


*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...




Part: 24 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is name ending in Naga indicate Tamils?' 



Kuttikannatissa, son of Mahachuli, reigned for twenty-two years. Kuttikannatissa could be a Tamil name too. He slew Anula as per the Mahavamsa 34-30. His son Abhaya (Bhatikaabhaya in the Mahavamsa) ruled twenty-eight years after his father. Then, Mahadathika Naga, another son of Kuttikannatissa reigned for twelve years. Dathika was a Tamil king as stated earlier. Mahadathika, big or great Dathika, must also be a Tamil name. Naga is very common prefix to many Tamil names, Nagasamy, Nagarajah, Nagapoosanny, Nagapattinam, Nagarkoil etc. Amandagamani, the son of Mahadathika Naga, reigned for nine years and nine months. His full name is Abhaya Amandagamani as per the Dipavamsa. He should also be a Tamil as his father was a Tamil. His younger brother, Kanirajanu ruled three years after him. He should also be a Tamil by descent. Amandagamani’s son, Culabhaya, ruled one year after him; must also be a Tamil. Amandagamani’s daughter Sivali, also known as Revati, another Tamil, ruled for four months. The son of Amandagamani’s sister, Illanaga, dethroned Sivali and ruled for six years. Illanaga, meaning young Naga, is clearly a Tamil name. Candamukha Siva is the son of Illnaga reigned eight years and seven months. Candamukha Siva is by descent a Tamil. Candamukha Siva is also a Tamil name. There was a Tamil movie with the title ‘Chandramuki”.  Candamukha Siva’s wife, known as Damila Devi, bestowed her own revenue to an Arama, a Buddhist institution. The king and the queen seem to be of Saiva faith but they donated to Buddhist Arama. Again, the Dipavamsa is clearly pro Buddhist, but not anti-Tamil. There is a story about him in the Mahavamsa, and it could be inferred Tamil connection in it. The Rajavaliya speaks of seven kings between Adagemunue and Vasabha and the lengths of their reigns are not given.
♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚♚
நன்றி  / Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] /[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 

பகுதி / Part: 24 B தொடரும் / Will Follow
--------------------------------------------------------
[தீபம் இணையத்தளத்தின் மேலும் ஒரு  சேவை. ZOOM MEETING .எந்த நாட்டிலிருந்தும்  இணைந்து பாடலாம், பேசலாம், தத்துவம், கவி , கதை , படித்ததில் பிடித்தது, நகைச்சுவை எதுவும் எடுத்து வரலாம் இணையுங்கள். கட்டணங்கள் இல்லை.  டொரோண்டோ நேரம் 

ZOOM MEETING                                                   ஞாயிறு 10.00 காலை    
 -தமிழரங்கம்                                                      ----                                                                  செவ்வாய் 4.00 பிப 
 -பல்சுவை  

ID: 5769260335 
Passcode: 12345
அன்புடன் அழைக்கிறோம்]


தேனில் உருவாகும் நச்சு

 – குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?



பாரம்பரிய உணவுகளில் தேன் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கையான இனிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு, மருந்து குணம் கொண்டது என பல காரணங்களால் தேன் மதிக்கப்படுகிறது. ஆனால் அதே தேன், குறிப்பாக ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே இன்றைய மருத்துவ ஆய்வுகள் கூறும் முக்கியமான உண்மை.

இந்த அத்தியாயம், தேனில் உள்ள பொட்டுலினம் (Botulinum) நச்சு, அது குழந்தைகளில் ஏற்படுத்தும் இன்ஃபேன்ட் பொட்டுலிசம் (Infant Botulism) என்ற தீவிர நோய், அதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள் ஆகியவற்றை உடல்நலக் காட்டுறை நூல் வடிவில் விளக்குகிறது.


தேனில் உள்ள பொட்டுலினம் என்றால் என்ன?

தேனில் சில சமயங்களில் Clostridium botulinum என்ற பாக்டீரியாவின் ஸ்போர்கள் (முளைநிலை விதைகள்) இருக்கலாம். இவை சாதாரணமாக வெளிப்படையாகத் தெரியாதவை.

பெரியவர்களின் உடலில்:

  • குடல் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு வளர்ந்திருப்பதால்

  • இந்த ஸ்போர்கள் செயல்படாமல் வெளியேற்றப்படுகின்றன

ஆனால் பச்சிளம் குழந்தைகளில்:

  • குடல் அமைப்பு முழுமையாக வளராததால்

  • இந்த ஸ்போர்கள் குடலில் வளர்ந்து

  • Botulinum toxin எனும் தீவிர நச்சை உற்பத்தி செய்கின்றன

இந்த நச்சே நரம்பு மண்டலத்தையும், மூளையையும் நேரடியாக பாதிக்கும்.


இன்ஃபேன்ட் பொட்டுலிசம் (Infant Botulism)

இன்ஃபேன்ட் பொட்டுலிசம் என்பது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் தீவிரமான, உயிருக்கு அச்சுறுத்தலான நோய்.

நோய் ஏற்படும் விதம்

  • தேன் அல்லது தேன் கலந்த உணவு குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது

  • அதிலுள்ள Clostridium botulinum ஸ்போர்கள்

  • குழந்தையின் குடலில் வளர்ந்து நச்சை உற்பத்தி செய்கின்றன

  • அந்த நச்சு நரம்புகளின் செயல்பாட்டைத் தடுக்கிறது

இதன் விளைவாக சுவாசம், தசை இயக்கம், செரிமானம், ரத்த ஓட்டம் போன்ற அடிப்படை உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.


பிரதான அறிகுறிகள்

ஆய்வுகளின் அடிப்படையில், இன்ஃபேன்ட் பொட்டுலிசத்தின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

  • குமட்டல், வாந்தி

  • தாய்ப்பால் அல்லது உணவு குடிக்க சிரமம்

  • குழந்தை மிகுந்த சோர்வுடன் இருப்பது

  • அடிக்கடி அழ முடியாமல் மெலிந்த குரல்

  • மலச் சிக்கல் (Constipation)

கூடுதல் மற்றும் தீவிர அறிகுறிகள்

  • முக தசை சுருக்கம் / பிடிப்பு

  • முகத்தில் அசைவு குறைவு

  • தசைகள் தளர்வாக இருப்பது

  • மூளை பாதிப்பு

  • வலிப்பு

  • உடல் வெப்பநிலை குறைவது

  • சுவாசப் பிரச்னைகள்

⚠️ சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காவிட்டால், உயிரிழப்புக்கும் வழிவகுக்கலாம்.


ஏன் குழந்தைகளில் தீவிரம் அதிகம்?

பச்சிளம் குழந்தைகளில்:

  • நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் வளர்ந்திருக்காது

  • உணவுகளை செரிமானம் செய்யும் திறன் குறைவாக இருக்கும்

  • குடல் இயக்கம் முழுமையாக உருவாக 12 மாதங்கள் தேவைப்படும்

அதனால் தான்:

  • ஆரோக்கியமான, தூய தேன் கூட

  • ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு ஆபத்தானதாக மாறுகிறது


தாய்ப்பால் மற்றும் ஆரம்ப உணவு வழிகாட்டுதல்

உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் கூறுவது:

  • 0 – 6 மாதம்:

    • தாய்ப்பால் மட்டுமே

    • தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது

  • 6 – 12 மாதம்:

    • மென்மையான திட உணவுகள் (மருத்துவர் ஆலோசனையுடன்)

    • தேன் மற்றும் தேன் கலந்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்

  • 12 மாதங்கள் கடந்த பிறகு:

    • குழந்தையின் குடல் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு வளர்ந்திருப்பதால்

    • தேன் கொடுக்கலாம் (மிதமான அளவில்)


பொட்டுலிசம் – எல்லா வயதினருக்கும் வருமா?

ஆம்.

  • பொட்டுலிசம் அனைத்து வயதினருக்கும் ஏற்படலாம்

  • ஆனால் குழந்தைகளில் அதன் தீவிரம் மிக அதிகம்

பெரியவர்களுக்கு:

  • கெட்டுப்போன அல்லது போலித்  தேன்

  • தவறாக பதப்படுத்தப்பட்ட உணவுகள்

மூலம் பாதிப்பு ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு:

  • ஆரோக்கியமான தேன் கூட போதும்

  • பாதிப்பு ஏற்பட


தடுப்பே சிறந்த பாதுகாப்பு

இந்த நோய்க்கு மிகச் சிறந்த தீர்வு – முன்கூட்டிய தடுப்பு.

  • ஒரு வயதுக்கு முன் தேன் கொடுக்கவே கூடாது

  • வீட்டுச் சிகிச்சை என்ற பெயரில் தேன் பயன்படுத்த வேண்டாம்

  • மூத்தவர்கள் கூறும் பழக்க வழக்கங்களை மருத்துவ அறிவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்

  • சந்தேகமான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்


நிறைவு

தேன் ஒரு சிறந்த இயற்கை உணவாக இருந்தாலும், வயது அறியாமல் பயன்படுத்தப்படும் போது அது மருந்தல்ல – விஷமாக மாறலாம்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது, இன்ஃபேன்ட் பொட்டுலிசம் என்ற உயிருக்கு அச்சுறுத்தும் நோயை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும், பராமரிப்பாளரும் அறிந்திருக்க வேண்டும்.

அறிவு தான் உண்மையான பாதுகாப்பு. குழந்தை நலன் – சமூகத்தின் பொறுப்பு.

[[மருத்துவ ஆதாரங்கள்-

✅ Canada Government (Health Canada / Canada.ca)

✅ California Department of Public Health – Infant Botulism Treatment & Prevention Program

✅ US CDC (Centers for Disease Control and Prevention)

✅ ANSES (France – Food Safety Authority)]]

[தீபம் இணையத்தளத்தின் மேலும் ஒரு  சேவை. ZOOM MEETING .எந்த நாட்டிலிருந்தும்  இணைந்து பாடலாம், பேசலாம், தத்துவம், கவி , கதை , படித்ததில் பிடித்தது, நகைச்சுவை எதுவும் எடுத்து வரலாம் இணையுங்கள். கட்டணங்கள் இல்லை.  டொரோண்டோ நேரம் 

ZOOM MEETING                                                   ஞாயிறு 10.00 காலை    

 -தமிழரங்கம்                                                      ----                                                                  செவ்வாய் 4.00 பிப 
 -பல்சுவை  

ID: 5769260335 
Passcode: 12345
அன்புடன் அழைக்கிறோம்]

🍯🍯🍯🍯🍯🍯🍯🍯-தீபம் உடல்நலம் / Theebam / dheepam / www.ttamil.com

தனிமை: தேர்வா அல்லது தண்டனையா?

(உளவியல் கட்டுரை)




ஒரு காலத்தில் தனிமை என்பது துறவியின் நிழல். இன்று அது நகர மனிதனின் நிலை.

இன்றைய மனிதன் எங்கும் தனியாக இல்லை. ஆனால் எங்கும் தனிமையில்தான் இருக்கிறான். உறவுகளின் நடுவில், திரைகளின் வெளிச்சத்தில், சத்தங்களின் கூட்டத்தில்—அவனுள் மட்டும் ஒரு அமைதி அல்ல, ஒரு வெறுமை.

தனிமை இனி ஒரு இடம் அல்ல. அது ஒரு மனநிலை.


ஒரு வீட்டில் உறவினர்கள் கூடியிருக்கிறார்கள். சிரிப்புகள், உணவின் வாசனை, பழைய நினைவுகளின் ஓசை—அனைத்தும் இருக்கிறது. ஆனால் பிள்ளைகள் தனித்தனியாக கைபேசிக்குள். பெரியவர்கள் தொலைக்காட்சியின் முன். பேசப்படாத உரையாடல்கள் காற்றில் மிதக்கின்றன.

அங்கே யாரும் தனியாக இல்லை. ஆனால் அனைவரும் தனிமையில்.

உறவுகள் அருகில் இருக்க, உணர்வுகள் தொலைவில் நிற்கும் இந்த நிலையே நவீன தனிமை.


உளவியல் சொல்கிறது: மனிதன் தொடர்புக்காகப் பிறந்தவன். பேசப்படுவதற்காக அல்ல—புரிந்துகொள்ளப்படுவதற்காக.

இன்றைய மனிதன் பலருடன் பேசுகிறான். ஆனால் தன்னைப் பற்றி யாரிடமும் பேசுவதில்லை. கேட்கப்படுகிறான்; ஆனால் உணரப்படுவதில்லை. இந்த இடைவெளிதான் தனிமையை உருவாக்குகிறது.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமை அல்ல. மெதுவாக மனிதனுக்குள் புகுந்து, அவனைச் சோர்வடையச் செய்யும் அமைதியான தண்டனை.


ஆனால் எல்லாத் தனிமையும் தண்டனை அல்ல.

சில தனிமைகள் மனிதனை மீட்டெடுக்கின்றன. சத்தம், எதிர்பார்ப்பு, போட்டி, ஒப்பீடு—இவைகளிலிருந்து தப்பி, மனிதன் தன்னைச் சந்திக்கத் தேடும் தருணம் அது.

இந்தத் தனிமை கேள்விகளை உருவாக்கும்:

“நான் யார்?” “என்ன தேவை?” “எது உண்மை?”

இத்தகைய தனிமை மனிதனை உடைப்பதில்லை. அவனை ஆழப்படுத்துகிறது.


ஆனால் தனிமை தேர்வாக இல்லாமல் பழக்கமாக மாறும் போது, அது ஆபத்தாகிறது.

ஒரு மனிதன் எல்லாவற்றையும் தனியாகச் சமாளிக்க முயல்கிறான். உதவி கேட்கத் தயங்குகிறான். உணர்ச்சிகளைச் சொல்ல வெட்கப்படுகிறான். மெதுவாக மனிதர்களிடமிருந்து விலகுகிறான்.

அப்பொழுது தனிமை அவனுக்கு ஓய்வாக இல்லை—சுமையாகிறது.


திரை இந்தத் தனிமையின் முக்கிய காரணியாக மாறியுள்ளது.

ஒரு வீட்டுக்குச் சென்றாலும், அங்குள்ள மனிதர்களைப் பார்க்கும் முன் திரையைத் திறக்கும் பழக்கம். அருகில் இருப்பவர்களை விட, தூரத்தில் இருப்பவர்களோடு அதிக நேரம். இது உறவினர்களுக்கு இடையில் உறவுகளை வளர்த்துக்கொள்ளாது மாறாக பெரும் இடைவெளியினை உருவாக்குகிறது.

இதனால் உறவுகள் அழிவதில்லை. ஆனால் உறவு  வளர்வதில்லை.

உறவுகள் பேசப்படாமல் போனால், அவை மெதுவாக மௌனமாகி விடுகின்றன.

இது ஒவ்வொரு மனிதனையும் தனிமையாக்கி விடுகிறது.


தனிமை எப்போது பிரச்சனையாக மாறுகிறது?

தனிமை வலியாக உணரப்படும் போது. பகிர விரும்பியும் பகிர முடியாதபோது. “யாருக்கும் நான் தேவையில்லை” என்ற எண்ணம் ஆழமடையும் போது.

அப்போது தனிமை தேர்வு அல்ல. அது மனதிற்கு விதிக்கப்படும் தீர்ப்பாக மாறுகிறது.


இலக்கியம் எப்போதும் தனிமையோடு பயணித்திருக்கிறது.

கவிஞன் தனியாக அமர்ந்து உலகை எழுதுகிறான். எழுத்தாளர் தனக்குள் இறங்கி மனிதரை கண்டெடுக்கிறான்.

ஆனால் அந்த தனிமை பிறரை விலக்குவதற்காக அல்ல—பிறரை அணுகுவதற்காக.


தனிமை ஒரு கத்தி போன்றது.

அதைச் சிந்திக்கப் பயன்படுத்தினால்—அது கருவி. அதை மனதை வெட்டப் பயன்படுத்தினால்—அது ஆயுதம்.

இன்றைய மனிதன் தீர்மானிக்க வேண்டியது ஒன்றே:

இந்த தனிமையை நான் தேர்ந்தெடுத்தேனா? அல்லது அதை எதிர்கொள்ளாமல் தவிர்த்தேனா?

இந்தக் கேள்விக்கான பதில்தான், மனித வாழ்வின் திசையை மாற்றும்.

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

- தீபம் உளவியல் / Theebam / Deepam / www.ttamil.com

அஞ்செழுத்தும் ஆன்மிகப் பாதையும்: சிவவாக்கியம்

இன்றைய மனிதர்களின் தவறுகள் மற்றும் தீர்வுகள்



சிவவாக்கியம் -024
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே
பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்
நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் 

இன்றைய மனிதர்கள் பல இடங்களில் தங்கள் ஆன்மிக வாழ்வில் பிழைகள் செய்கிறார்கள். குறிப்பாக, அஞ்செழுத்து போன்ற ஆழமான ஆன்மிக உண்மைகளை புரிந்து கொள்ளாமல், வெறும் பரம்பரை வழிகாட்டுதல்களை மட்டும் பின்பற்றுவதால் உண்மையான ஆன்மிக அனுபவம் இல்லை. சிவவாக்கியம் -024 இல் சொல்லப்பட்டதைப் போல, அஞ்செழுத்து என்பது வெறும் எழுத்து அல்ல; அது ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்களாகவும் உடம்பில் இயங்கும் ஆழமான சக்தி ஆகும்.

அஞ்செழுத்தை அறியாமல், பலர் அதை வெறும் வாயால் மட்டுமே பிதற்றுகிறார்கள். அதாவது, கவனம், உணர்வு, மனம் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, சிதறிய முறையில் அந்த எழுத்தை உச்சரிப்பதில் தான் அவற்றின் நோக்கம் நிறைகிறது என்று நம்புகின்றனர். இதனால்:

  • ஆன்மிக அடிப்படை உருவாகவில்லை: சிந்தனை, உணர்வு, மனச் சுத்தி இல்லாத நிலை.

  • உண்மையான சக்தி வெளிப்படவில்லை: சிவமாகும் அஞ்செழுத்தின் சக்தி அனுபவிக்கப்படவில்லை.

  • ஆரோக்கியமான ஆன்மிக அனுபவம் இல்லை: தியானம், மன ஓய்வு, ஆனந்தம் இல்லாமல் சுருங்கிய பக்தி மட்டுமே.

தவறான கருத்துகள்

  1. வாய்வழி மட்டுமே பக்தி:
    மக்கள் “மந்திரத்தை உச்சரிப்பதே போதும்” என்று நினைக்கிறார்கள். ஆனால் வாசிப்பும், மனதின் உணர்வும் இல்லாத போது, அந்த சக்தி உணரப்படாது.

  2. புறநிலை அடிப்படையிலான பக்தி:
    தோட்டமோ, கோவில் பார்வையோ, உடற்பயிற்சியோ மட்டும் ஆன்மிகம் என்று எண்ணுவோர். ஆன்மிகம் உடலிலும் வெளிப்படுவதாக இருந்தாலும், மனம் தியானமில்லாமல் இருந்தால் ஆழமான அனுபவம் கிடையாது.

  3. சட்டத்தினை பின்பற்றுவதே ஆன்மிகம் என்று நினைத்தல்:
    நெஞ்சம் உருகாமல், விதிகளின் பெயரில் கடுமையாக ஒழுங்கு செய்தாலும், ஆன்மிகம் சிந்தனையோடு இணைந்துவிடாது.

ஆன்மிகத்திற்கு ஆரோக்கியமான வழிகள்

  1. மனச் சுத்தி மற்றும் கவனம்:
    அஞ்செழுத்து, மந்திரம், தெய்வ சக்திகள் அனைத்தும் உணர்வின் வழியாகவே செயல்படும். மனம் சுத்தமாக, உள்ளம் கண்ணீருடன் உருகும் போது மட்டுமே சக்தி பூரணமாக வெளிப்படும்.

  2. அறிவு + உணர்வு இணைப்பு:
    அஞ்செழுத்து என்ன என்பதை அறிந்து, அதன் அர்த்தத்துடன் மனதை இணைத்தால், அது சிவமாகி அனாதியாக தோன்றும்.

  3. தியானம் மற்றும் நிகழ்நிலை உணர்வு:
    கண்ணீர் கசிந்து, உள்ளத்தில் நினைவு நிறுத்தி தியானிக்கும் போது, மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைந்து சக்தி பெருகும்.

  4. வெறுமனே வழிபாடு அல்ல, செயல்முறை பக்தி:
    ஆன்மிகம், பக்தி, சமய வழிபாடு அனைத்தும் மனநிலையை உயர்த்தும் ஒரு நடைமுறை. செயல்களில் கவனம் வைப்பது அவசியம்.

தீர்வு

இன்றைய மனிதர்களுக்கான தீர்வு:

  • பக்தி வாய்வழி மட்டும் அல்ல, மனச்சிந்தனை மற்றும் உணர்வுடன் இணைக்க வேண்டும்.

  • அஞ்செழுத்தின் ஆழ அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  • தியானம், மன ஓய்வு, ஆனந்தம் ஆகியவற்றை அனுபவிக்கும் வகையில் பக்தி வழியை அமைக்க வேண்டும்.

  • உடல், மனம், ஆன்மா ஒன்றுபட்டு செயல்படும் போது மட்டுமே உண்மையான ஆன்மிக சக்தி வெளிப்படும்.



அஞ்செழுத்து, தெய்வ சக்திகள், ஆன்மிக வழிகள் அனைத்தும் வெறும் சொல்லாடல் அல்ல. அது மனத்தின் ஆழ சுத்தி, கவனம் மற்றும் உணர்வோடு இணைந்தால் மட்டுமே உண்மையான அனுபவத்தை தரும். இன்றைய மனிதர்கள் அந்த அடிப்படை உண்மைகளை பின்பற்றினால் மட்டுமே ஆரோக்கியமான ஆன்மிக வாழ்க்கை மற்றும் ஆனந்தம் அடைய முடியும்.
📿📿📿📿📿📿📿📿
--------------------------------தீபம் ஆன்மிக வளம் 

"கரை கடந்த புயல்" - சிறுகதை -



நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு செய்யவிருந்தார். அரவிந்த் அடுத்த வாரம் உயர் படிப்பைத் தொடர லண்டனுக்குப் புறப்பட இருப்பதால், அவன் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் காதலை, திருமணப் பதிவாக, அதை இரு குடும்பத்தார்களின் மத்தியில் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். ஆனால், அவன் திரும்பி வந்த பின்புதான், குடும்ப மரபின்படி [சம்பிரதாய முறைப்படி]  திருமணம் செய்வதென்றும் முடிவெடுத்தனர்.  

இலங்கையில், நவம்பர் 27 2024 புதன்­கி­ழமை மாலை வரை, நிலவும் சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை இரண்டு இலட்­சத்தைத் தாண்­டி­யுள்­ளதுடன் நால்வர் உயி­ரி­ழந்­துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்­ளனர். இது தவிர 9 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்துடன் 8 வீடுகள் முழு­மை­யா­கவும், 620 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன என அரசு அறிவித்தது. இவைகளில், திரு­கோ­ண­ம­லையில் 1537 குடும்­பங்­களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்­வதால் அப்­ப­கு­தி­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 40 – 50 கிலோ மீற்­ற­ராகக் காணப்­படும் எனவும்  ஆழ்­கடல் பகு­தி­களில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் என்­பதால் கடற்­றொ­ழி­லா­ளர்கள் கட­லுக்கு செல்­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரி­வித்தது.

செல்வராஜாவும் மீனாவும் தங்கள் வீட்டில் இருந்து கடலை நோக்கினார்கள். அங்கே, அவசர அவசரமாக கரைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் மீன்பிடி படகு ஒன்று, புயல் காற்றினால்  கவிழ்வதைக் கண்டனர்.  

"கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு"

'கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்று கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட, கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து' என நற்றிணை (30: 7-8) கூறுவதை செல்வராஜா ஒப்பிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் சிந்தியது.
 
இந்த பெஞ்சல் புயல் மேகங்கள் மெல்ல மெல்ல பெரிதாக திரண்டதால், செல்வராஜா குடும்பத்தின் கவலைகளும் அதிகரித்தன. அவர்களின் சாதாரண வீட்டிற்கு மேலும் பலமான காற்றுடன் மழை பெய்தது, அந்தக் கடலோரக் காற்று அச்சுறுத்தலாக வளர்ந்தது. எனவே திருமண பதிவை ஒத்திவைக்கலாமா என்று செல்வராஜாவும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் அலுவலகம் கூட அருகில் இல்லை, சில கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது.

அதேவேளை இலங்கை வானொலி, எச்சரிக்கை அறிவித்தல்களை தொடர்ந்து அவசரம் அவசரமாக அறிவித்துக்கொண்டு இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன .கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர் என ஒரு பட்டியலையே கொடுத்துக் கொண்டு இருந்தது. 

"கடற்கரை ஊருகள், நகரங்கள் அழிந்திடுமாம்    
வெள்ளம், ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம் 
சீருந்துகள் [மகிழுந்து], படகுகள் அழிந்திடுமாம்     
வீடுகள், பாடசாலைகள் வெள்ளம் நுழைந்துடுமாம்  
சோலைகளும் மரங்களும் வேர்கள் பிடுங்கிடுமாம்" 

"புயல் தீவிரமடைந்தால் என்ன செய்வது?" மீனா கேட்டாள், அவள் குரல் கவலையில் கனத்தது. "இது மிகவும் ஆபத்தானது." ஆனால் கவிதா, அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக இருந்தாள். 

“அம்மா, இது எங்களுக்கு முக்கியம். புயல் நம்மைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க முடியாது. அரவிந்தும் தலையசைத்தான், அமைதியான உறுதியால் அவர்கள் இருவரினதும் கண்கள் நிரம்பி ஒளிர்ந்தன. "இதை ஒன்றாகச் சந்திப்போம்," என்று அவன் உறுதியளித்தான்.

"உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:         
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே"

'அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல், வாடைக்காற்று வீச்சில், மகளிர் வண்டல் விளையாடும் களத்தில் வந்து விழும் ஊர் நம் [கடற்கரை] ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர் தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல், தான் இல்லை என்று வாழ்பவர். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் [நெய்தல் நிலத்து மகன் ] அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன்.' என்கிறது நற்றிணை 299 கூறுகிறது. அப்படித்தான்  கவிதா  இருந்தாள். 

நவம்பர் 29 காலை இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுடன் விடிந்தது. வெளியே குழப்பம் இருந்தாலும், செல்வராஜா குடும்பத்தினர் அன்றைய தினத்திற்கு தங்களை தயாராக்கினர். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் எல்லாவித உதவிக்கும் விருப்பத்துடன் உள்ளே வந்தனர். கையில் குடைகள் மற்றும் மழையங்கிகளும் கொண்டுவந்தனர். மற்றும் பதிவாளர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய ஒரு வேனையும் [கூண்டுந்து] கொண்டு வந்தனர். கவிதாவின் சகோதரர்கள், 15 வயது ரமேஷ் மற்றும் 12 வயது சஞ்சய், மழையில் இருந்து அக்காவை பாதுகாக்க, ​​குடைகளைப் பிடித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

செல்வராஜா குடும்பம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்லும்போது, ​​மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அங்கும் இங்கும் விழுந்து கிடந்தது . வேன், அங்கு வீதியில் ஓடாமல் தேங்கி இருக்கும் வெள்ளத்தில் பல முறை சறுக்கியது, ஆனால் ஓட்டுநர், அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசி,  திறமையாக அந்த வீதியில் சமாளித்து ஓட்டினான். "நாங்கள் சரியான நேரத்துக்கு முன் அங்கு போவோம்," என்று அவன் அவர்களுக்கு உறுதியளித்தான், “பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்” எனப் புறநானூறு 89 இல் கூறும் 'மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியான' ஊளையிடும் காற்றையும் மீறி அந்த அவனது குரல் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
 
பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சில தம்பதிகள் மட்டும், புயலையும் தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் குடும்பத்துடன் பதிவு திருமணம் செய்ய அங்கு வந்திருந்தனர். வளிமண்டலம் பதட்டமாக இருந்தாலும், தங்கள் நல்ல நாளை பின்போடாமல், நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்வாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். கவிதா மற்றும் அரவிந்தின் முறை வந்ததும், பதிவாளர் விழாவை விரைவாக, சுருக்கமாக ஆனால் ஆடம்பரமாக நடத்தினார். இளம் தம்பதிகள் ஒருவருக்குஒருவர் சபதம் பரிமாறிக் கொண்டார்கள்.  அவர்களின் காதல், வெளியில் வீசும் புயலை விட பலமாக இருந்தது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள், ஒரு திருமணக் கோரிக்கை  அல்லது முன்மொழிதல்  உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு , இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. அங்கு பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாய பங்கான, மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். பெண் தெய்வம் குலாவிற்கான [goddess Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு  நிலைகளை "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு  மனைவி, நான் ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"].என கூறுகிறது. அப்படித்தான் இன்று கவிதா மகள் நிலையில் இருந்து மணமகள் நிலைக்கு வந்துள்ளார்.  

"புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி    
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை"

திருமண பதிவு நிலையத்தில் கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த திருமணமான மகளிரும் தம் தம் கணவருடன் சேர்ந்து கூடிநின்று ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். கவிதாவின் தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. அவள் மகிழ்ச்சியின் ஒரு எல்லைக்கே போய்விட்டாள்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலை கொள்ளுமென வானிலை ஆய்வு மையம் அன்று தெரிவித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தது. எனவே வீட்டிற்கு திரும்பிய குடும்பம், அவசரம் அவசரமாக ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு கூடியது. அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து வாழ்த்துக்கள் [ஆசிர்வாதம்] கூறிர். அரவிந்தும் கவிதாவும் எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, மாலைப் பொழுதை தங்கள் வீட்டின் சுற்றாடலில் கழித்தனர்

"புயல்கள் கரையைத் தாக்கினாலும், கடல் கிசுகிசுக்கிறது: எங்கள் காதல் நிலைத்திருக்கும்." என்ற உணர்வுதான் அவர்கள் இருவரிடமும் இருந்தது. புயல் ஓயாமல் தொடர்ந்தாலும், அவர்களின் இதயம் அமைதியாக இருந்தது, அவர்களின் அன்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாலும் அது நங்கூரமிட்டது. மறுநாள் காலை, வானம் தெளிவாகத் தொடங்கியது. என்றாலும் இருவர் குடும்பமும் மற்றொரு சவாலை எதிர்கொண்டது: அரவிந்தை கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. பொது போக்குவரத்து தடைப்பட்டதால், செல்வராஜா ஒரு நம்பகமான வேனை ஏற்பாடு செய்தார். ஆனால் மரங்கள் முறிந்து விழுந்த மற்றும் உடைந்த பாலங்கள் நிறைந்த சாலைகளும் இடைவிடாத மழையும் பயணத்தை அவர்களுக்கு  கடினமாக்கியது. எது எப்படியாயினும் அவர்கள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தனர்.

புறப்படும் வாயிலில் கவிதாவும் அரவிந்தும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். அரவிந்த் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். “தினமும் உன்னுடன் பேசுவேன், எழுதுவேன், இந்த ஆண்டுகள் விரைவில் கடந்துவிடும்" என்று ஆறுதல் கூறினான். அவன் சென்றதும், கவிதா தன் கண்ணீரைத் துடைத்தாள், அவளுடைய இதயம் கனமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தது. அவர்களின் காதல் தூரத்தையும் நேரத்தையும் தாங்கும் என்று அவளுக்குத் தெரியும்.

செல்வராஜா குடும்பத்தினர் அன்று மாலையே திருகோணமலைக்குத் திரும்பினர். புயல் அவர்களின் நெகிழ்ச்சியை சோதித்தது, ஆனால் அவர்கள் அதை ஒன்றாக எதிர்கொண்டனர். கவிதா மற்றும் அரவிந்துக்கு, புயல் இயற்கையின் சக்தி மட்டுமல்ல, அவர்களின் அன்பின் வலிமைக்கு ஒரு சான்றாக இருந்தது, கடுமையான காற்று கூட அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டியது. காதலும் கரையைப் போலவே ஒவ்வொரு புயலையும் தாங்கும் என்பதை உணர்ந்தாள்.

"புளகாங் கிதமே புறவேலி யாக. 
கன்னந் தனில் நீ சின்ன மாகள். 
அடைக்கலப் பொருள்போல் அமையப்  பேணும்" [காதா சப்த சதி 1 - 69]

[காதா சப்த சதி' என்பது கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்]

ஒரு பொருளை ஒருவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தால், அதை பாதுகாப்பது அவரின் அறத்தின் கடமை. அதைப்போலத்தான் அரவிந், விமான நிலையத்தில் பிரியும் முன் கவிதாவை காதலுடன் முத்தமிட்ட பற்குறியை கவிதா கண்ணாடியில் காணும் போதெல்லாம் புளகிதம் அடைந்து, அதை அரவிந்தின் நினைவாக விரும்பி பாதுகாத்தாள்!
➖➖➖➖➖➖➖➖➖➖➖
நன்றி   
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]