"அறிவியல் நோக்கில்....[பகுதி-37A] பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 37 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சத்தின் அத்தியாயம் 1 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பயங்கரவாத தந்திரங்களை புத்தர் உண்மையில் கையாண்டாரா?'

 


அத்தியாயம் 1, புத்தர் காற்றில் பறந்து தனது முதல் பயணத்தை இலங்கைக்கு செய்தது மட்டும் அல்ல, புத்தர் தீவின் பழங்குடியினர் மக்களை, இயக்கர்கள் (Yaksha), பூதங்கள் மற்றும் அரக்கர் என அவர்களை 'மனிதர்கள் அல்லாதவர்கள்' [non-humans; Yakkhas, Bhutas and Rakkhasas.] என்றும் விவரிக்கிறார். இது புத்தரின் சிறந்த புனிதத்தன்மையை மதியாது செய்யும் அல்லது வர்ணிக்கும் அடாச்செயல் போல் தெரிகிறது. இது கட்டாயம் அவரின் குணங்கள் மீதான துரோகமாகும். இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதரல்லாத மனிதர்கள் உலகில் எங்கும் வாழ்ந்தார்கள் என்பதை இந்தக் காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். அதற்கான அறிவியல் சான்றுகளும் இல்லை. பகை உணர்வு கொண்ட  துறவிகள் மற்றும் கேவலமான அரசியல்வாதிகள் மற்றும் குழுநல அக்கறை மட்டுமே கொண்ட  கல்வியாளர்களின் மனதில் தவிர, இப்படியான பொய்யான வர்ணனை, முரணான செயல்கள் இடம் பெறாது என்பது வெளிப்படை. பழங்குடியினர்களின் நிலங்களை, அவர்களின் மண்ணை  முறைகேடாக அபகரிக்க முடிவு செய்யப்பட்டு, மனிதர்கள் அல்லாதவர்களின் கதையை உருவாக்கியது போலத் தோன்றுகிறது.

 

இரண்டு மனித பெற்றோருக்கு பிறந்த புத்தர், காற்றில் பறந்தார் என்பது வெறும் புராணக்கதை மட்டுமே. அது போலவே மற்றோரு புராணக் கதையான, மகாவம்சத்துக்கு முன்பே எழுதிய இராமாயணக் காவியத்தின்படி, அனுமன், அதுவும் ஒரு கையில், ஒரு மலையைக் காவியபடி,  இலங்கைக்குப் பறந்தார் என்று கூறுகிறது. அது மட்டும் அல்ல, அவர்கள் போரில் ஈடுபட்டு, சீதையை மீட்டு, இலங்கையை விட்டு திரும்பினர் என்று மேலும் அந்த கதை கூறுகிறது. ஆனால் அவர்கள் , அதை ஒரு சாட்டாகக் கூறி,  இலங்கைத் தீவைத் தங்களுக்குத் தான் என எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, அனுமானால் பறக்க முடியுமா இல்லையா என்பதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படவில்லை. ஆனால், புத்தரை இங்கு ஒரு பண்டைய நாள் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுகிறார்; அவர் கனமழை, குளிர் காற்று மற்றும் இருளால், அந்த பண்டைய இலங்கை  மக்களை பயமுறுத்துகிறார். துறவி ஆசிரியர்கள் தங்கள் கொடூரமான கருத்துக்களை, மிகவும் கருணையான கண்ணியமான நபரான புத்தரின் குரல் மற்றும் செயல்கள் மூலம், உண்மையில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!. அது இன்னும், அதே வழியில் வந்த துறவிகளால், வடக்கிலும் கிழக்கிலும் தொடர்கிறது, அதற்கு அரசும் அரசியல் வாதிகளும், அரச படைகளும்  வெள்ளைக்கொடி ஏந்துகிறார்கள் என்பது, நாம் இன்று காணும் உண்மை. இவர்களுக்கு ஒத்து ஊதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் மற்றும் கல்வி கற்ற அறிஞர்களையும் கூடாக் காண்கிறோம். பாவம் புத்தர்!

 

"இதோ இயக்கர்களை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தும் புத்தரின் செயல் முடிவடைகிறது" என்று அத்தியாயம் 1 முடிவடைகிறது. இது என்னத்தைக் காட்டுகிறது?  தீபவம்சத்தின் அத்தியாயம் 1-ல் கூறப்பட்டுள்ள பயங்கரவாத தந்திரங்களை புத்தர் ஒருபோதும் கையாண்டிருக்க மாட்டார். தங்கள் நாகரிக ஐரோப்பியர்கள் என்று பெருமை கூறிக்கொண்டு, காலனித்துவ நாடுகளின் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளை நாகரிகப்படுத்த வந்தனர் என்று ஐரோப்பிய காலனித்துவவாதிகள் இதே போன்ற தர்க்கத்தைத் தான்  பயன்படுத்தினர் என்பதை கொஞ்சம் ஞாபகப் படுத்துங்கள். உதாரணமாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் போர்த்திறஞ்சார்ந்த [மூலோபாய] இராணுவ தளங்களை நிறுவுவதற்கு அவர்கள் பல பூர்வீக மக்களை வேரோடு பிடுங்கினார்கள் என்பது இன்றைய உண்மை வரலாறு!.

---------------------------------------------------

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக..

 

Part: 37 A / Appendix – Dipavamsa / 'Is Buddha resorted to such terror tactics as outlined in the chapter 1 of the Dipavamsa?'

 


Chapter 1 is about the Buddha’s purported first visit to Lanka by flying through air. The Buddha describes the original (aboriginal) inhabitants of the island as non-humans; Yakkhas, Bhutas and Rakkhasas. This is sacrilege on the excellent benevolent and genial qualities of the Buddha. No one in this age would believe that non-humans lived two thousand five hundred years ago anywhere in this world, except in the minds of the nefarious monks and the vile politicians and the vested interest academicians of same ilk. It was decided to misappropriate the lands of the original inhabitants, and concocted the story of non-humans. The capability of flying by humans, the Buddha was born to two human parents, is mere legend. Hanuman, as per the epic Ramayana, flew with a mountain in one of his hands to Lanka. They came, in the Ramayana Epic, fought a battle and returned with their lady. It was not to take the island for themselves, and, therefore, no one cared whether it could be possible to fly or not. The Buddha is portrayed here as an ancient day terrorist; terrorizing the inhabitants with heavy rains, cold winds and darkness. Monkish authors expose their cruel ideas through the alleged voice and actions of the Buddha who is a very decent person. The chapter 1 ends thus “Here end (Buddha’s) subjection of the Yakkhas”. Buddha would never have resorted to such terror tactics as outlined in the chapter 1 of the Dipavamsa. The European colonizers used similar logic that the civilized Europeans came to civilize the uncivilized barbarians of the colonized countries. They uprooted many native peoples to establish strategic military bases in the Indian Ocean and the Pacific Ocean areas.

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

 

 

பகுதி / Part: 37 B தொடரும் / Will follow

 

குத்த வைத்து அமர்வது (Deep Squat):{உடல்நலம்}

 நவீன வாழ்வில் நாம் தொலைத்த ஆரோக்கிய ரகசியம்!



அமர்வது என்பது மனித உடலின் மிக அடிப்படையான அசைவுகளில் ஒன்றாகும். ஆனால், இன்று நாம் அமரும் முறை முற்றிலும் மாறிவிட்டது. உடற்பயிற்சி உலகிலும் ஆரோக்கிய விவாதங்களிலும் தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் 'ஏசியன் ஸ்குவாட்' (Asian Squating) என்று அழைக்கப்படும் குத்த வைத்து அமரும் முறை ஆகும். இது சாதாரண ஸ்குவாட் பயிற்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

பாதங்களை அகலமாக விரித்து, மார்பை நேராக வைத்து, தொடையின் பின்புறத்தைக் கெண்டைக்கால் தசைகளில் சாய்த்தவாறு, முழங்கால்களை முழுமையாக வளைத்து அமரும் இந்த முறை நம் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

குழந்தைகள் எளிதாகச் செய்யும் 'டீப் ஸ்குவாட்'... பெரியவர்களால் ஏன் முடிவதில்லை?

குழந்தைகள் எந்தவொரு சிரமமும் இன்றி மிக இயற்கையாகக் குத்த வைத்து அமர்வதைக் நாம் பார்த்திருப்போம். அதற்கு அவர்களின் மூட்டுகளில் இருக்கும் அதிக நெகிழ்வுத்தன்மையும் (Flexibility), உடலின் மாறுபட்ட விகிதாச்சாரமும் முக்கியக் காரணங்கள் ஆகும். ஆனால், பெரியவர்கள் பலர் இந்தத் திறனை இழந்துவிடுகிறார்கள். அதற்கு உடற்கூறியல் மாற்றங்கள் மட்டும் காரணமல்ல; நம்முடைய நவீன வாழ்வியல் முறையே முக்கியக் காரணம்!

"நீங்கள் எதைப் பயன்படுத்தவில்லையோ, அதை இழந்துவிடுவீர்கள்" (Use it or lose it)

பவர்ஸ் (உடல் அசைவு மற்றும் முழங்கால் காயங்கள் குறித்த ஆய்வாளர்)

நாம் நாற்காலிகள் மற்றும் உயரமான மேற்கத்திய கழிவறைகளைப் (Western Toilets) பயன்படுத்தத் தொடங்கியதில் இருந்து, அன்றாட வாழ்வில் குத்த வைத்து அமர வேண்டிய அவசியம் அரிதாகிவிட்டது. இந்த அமர்ந்தே இருக்கும் வாழ்வியல் முறை (Sedentary Lifestyle), காலப்போக்கில் நமது உடலின் நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் வெகுவாகக் குறைத்துவிடுகிறது.

ஆசிய கலாச்சாரமும் ஆரோக்கியமும்

ஜப்பான் போன்ற ஆசியாவின் சில பகுதிகளில் இந்த வாழ்வியல் மாற்றங்கள் இன்னும் உடலை முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை. அங்கு உணவகங்களுக்குச் சென்றால் கூட, காலணிகளைக் கழற்றிவிட்டு, 'டடாமி' (பாரம்பரிய ஜப்பானிய பாய்) மீது தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் இன்றும் உள்ளது.

ஆசியாவின் பல பகுதிகளில் குத்த வைத்து அமரும் பாரம்பரிய கழிவறைகளே (Indian/Asian Toilets) பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறை மலம் கழிக்கும்போதும் இந்த முறையில் அமர்வதால், அந்த உடற்திறன் அவர்களுக்கு இயல்பாகவே நீடிக்கிறது. இத்தகைய வாழ்வியல் முறைகள் இடுப்பு மற்றும் கால்களை வலுப்படுத்த உதவுகின்றன.

ஆய்வுகள் கூறும் நன்மைகள்:

🌰உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

🌰முதுகுவலி குறையும்.

🌰வயதான காலத்திலும் மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக வாழ வழிவகுக்கும்.

குத்த வைத்து அமர்வது எப்படி? (ஆரம்பக் காலப் பயிற்சிகள்)

"ஆரோக்கியத்திற்கு நல்லது" என்பதற்காகத் தயாரிப்பு ஏதுமின்றி உடனே தீவிரமாக முயல வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவசரப்பட்டு அடிமட்டம் வரை முழுமையாக அமர முயன்றால் காயங்கள் ஏற்படலாம்.

படிப்படியாகப் பழகும் முறை:

நாற்காலி அல்லது சமையலறை மேடை போன்ற உறுதியான ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஆதரவோடு செய்யத் தொடங்குங்கள்.

எவ்வளவு தூரம் உங்களால் வசதியாகக் கீழ்நோக்கிச் செல்ல முடிகிறதோ அவ்வளவு தூரம் மட்டும் செல்லுங்கள்.

இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சில வாரங்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நெகிழ்வுத்தன்மை கூடி, உங்களால் இன்னும் கொஞ்சம் ஆழமாக அமர முடிவதை நீங்களே உணரலாம்.

வயதானவர்களுக்கான சவால்களும் எச்சரிக்கைகளும்

வயது கூடும்போது மூட்டுகள், முதுகெலும்பு, இடுப்பு மற்றும் முக்கியமாகக் கணுக்கால்களில் உள்ள நெகிழ்வுத்தன்மை இயல்பாகவே குறைகிறது. இதனால் வயதானவர்களுக்கு இந்த 'டீப் ஸ்குவாட்' சவாலாக மாறலாம்.

வலி உள்ளவர்கள் தவிர்க்கவும்: ஏற்கனவே முழங்கால், இடுப்பு அல்லது முதுகு வலி உள்ளவர்கள் இதை ஒரு இலக்காக வைத்துக் கொண்டு கட்டாயம் செய்ய முயலக் கூடாது.

உடல்வாகு மாறுபாடு: ஒவ்வொரு நபரின் உடல் வடிவமும் வித்தியாசமானது. நீளமான தொடை எலும்புகள், குறைவான கணுக்கால் நெகிழ்வுத்தன்மை அல்லது மாறுபட்ட இடுப்பு அமைப்பைக் கொண்டவர்கள் தங்களது உடற்தகுதி நன்றாக இருந்தாலும், இதில் சமநிலையை இழக்க நேரிடலாம்.

 👉

நீண்ட காலத்திற்குத் தினமும் டீப் ஸ்குவாட் பயிற்சி செய்பவர்களின் உடலில் ஏற்படும் நீண்டகால நன்மைகளை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் தற்போது இல்லை என்றாலும், இது உடலின் இயல்பான இயக்க மீட்டெடுப்பிற்குப் பெரிதும் உதவுகிறது.

ஒரு நபர் தரையிலிருந்து சில அங்குல தூரம் வரை முழுமையாக அமர முடிகிறதா என்பது முக்கியமல்ல; மாறாக, நவீன வாழ்க்கை முறை காரணமாக மக்களிடம் படிப்படியாகக் குறைந்து போன உடல் இயக்கங்களை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வருவதும், வயதாகும்போது மற்றவர்களைச் சாராமல் தன்னிச்சையாக இயங்க முடிவதுமே மிக முக்கியமானது!

தீபம் உடல்நலம்