யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரம் நெய்தல் கிராமம். மாலை அலைகள் கரையை முத்தமிட, பறவைகள் தம் கூடுகளுக்குத் திரும்பின. சிவாசிதம்பரம் ஒரு பழைய நாற்காலியில் அமர்ந்து கடலை நோக்கினார். அவர் கண்களில் இருந்தது நடந்த சம்பவத்தின் நினைவில் ஆழ்ந்திருந்தார்..
அது.......
♧♧♧
அம்சமான அந்த வீட்டின் உள்ளே, விஜயனின் மனைவி இவர்களுடன் விஜயனின் தந்தை சிவாசிதம்பரமும் வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் அவரின் மருமகளுக்கு சிவாசிதம்பரமும் தங்களுடன் இருப்பது பிடிப்பே இல்லாதிருந்தது.
ஒருநாள்,
மாலா கைகளைக் கட்டிக் கொண்டு கோபத்துடன் சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.
என்று சினந்துகொண்டாள் .
அந்தச் சொற்கள் குத்தியபடி விஜயன் தூக்கம் இல்லாது புரண்டு ,புரண்டு அவனால் நிம்மதியாக படுத்துக்க கொள்ள முடியவில்லை..
மறுநாள் காலையில், மகனின் வேண்டுகோளை ஏற்று சிவாசிதம்பரம் அமைதியாக கூடை ஒன்றில் தன் சில புத்தகங்களையும் பழைய புகைப்படத்தையும் வைத்துக்கொண்டார். அவரின் கண்களில் எதுவும் குற்றம் இல்லை— கேள்வி மட்டுமே.
மருமகளுடன் புறப்பட ஆயத்தமான மகனிடம்
வண்டி நகரத்தைத் தாண்டி அன்பு இல்லம் என்ற முதியோர் இல்லத்தை அடைந்தது. அவ்விடத்தில் மலர்கள் அலங்கரித்து இருந்தன. பொறுப்பாளர் ஒருவன் புன்னகையுடன் வரவேற்றான்.
விஜயன் அதிர்ந்தான்.
சிவாசிதம்பரம் அமைதியாகவே நின்றுகொண்டிருந்தார்.. விஜயன் சில நிமிடங்கள் உயிரே கேள்வியாக மாறியபடி இருந்தான். இதுவரை தான் பெற்றோர் என தான் எண்ணியவர்கள் தன்னைக் காப்பாற்றிய தனது வளர்ப்பு தாய் தந்தையர் என்று உணர்ந்தான். தன்னை காப்பாற்றியதற்காக நன்றியுடன் நிற்கும் அவன் எங்கே! தன்னை வளர்த்த தாய் ,தந்தையை மதியாத தான் எங்கே! என்று எண்ணியபோது அவன் மனம் கூசியது, நெஞ்சம் வெடித்தது, தாங்கமுடியாமல் ஓவென்று அலறியவண்ணம் வளர்த்த தந்தையின் காலில் விழுந்தான். புலம்பினான்.
மாலா(அழுதுகொன்டே): ஓம் மாமா! நானும் நிறைய உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன். எங்களை மன்னிச்சிடுங்க மாமா!
சிவாசிதம்பரம்: பிள்ளையள் அதை ஒண்டையும் நான் மனசில வைச்சிருக்கேல்லை. அதை அப்ப அப்பவே நான் மறந்திடுவன்
மீண்டும் வீடு திரும்புகையில் இருவரினதும் புலம்பல்கள் சிவாசிதம்பரத்திற்கு அவர் நெஞ்சினை நன்றாகவே வருடிக்கொண்டன.
மருமகளின் பாயச விருந்துடன் அன்று மாலை ஒரு பெரும் நிம்மதி பெருமூச்சினை அவர்கள் விட்டதனை சிவசிதம்பரம் கவனிக்காமலில்லை.
நடந்தவற்றை ஒருமுறை இரைபோட்டு தனக்குள் சுவைத்துக்கொள்ளவே முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து கடலை நோக்கினார்.
'தான் தான் பரவாயில்லை, எத்தனை முதியோர்கள் பிள்ளைகளால் துரத்தப்பட்டு முதியோர் இல்லங்களில்......அவர்களின் கஷ்டங்களை அவர் எண்ணுகையில்...
அவ்வேளையில் வானத்திலிருந்து பறந்து வந்த குருவி ஒன்று அவரருகே வந்து 'கீச் ,கீச் ,கீச் 'என்று கத்திச் சென்றது.
நினைவுகள் கலைந்த அவர் கை மணிக்கூடு பார்த்த அவர் நேரம் வந்ததை உணர்ந்து அமைதியாகவே படுக்கை நோக்கி சென்றார்.செல்லும்போது கடலையும் ஒருமுறை அவதானித்தார். ஆம்.அதுவும் அமைதியாகவே இருந்தது.
🔺🔺🔺🔺🔺🔺🔺 செ. மனுவேந்தன்🔺🔺🔺🔺🔺🔺🔺