இதயக் கதவைத் திறக்கும் சாவி: சிவவாக்கியர் காட்டும் ஆன்மிகப் பாதை


சிவவாக்கியர் ஒரு ஆழமான உண்மையை நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்:

சிவவாக்கியம்-057

"எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான் 

முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர் 

சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்

அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே."

எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான் இருக்கிறார் என்று.
அதாவது, கடவுள் ஒரு இடத்தில் மட்டும் இல்லை. எல்லா இடத்திலும் இருக்கிறார். எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.

ஆனால், நாமென்ன செய்கிறோம்?

கடவுளைத் தேடி, ஆலயத்திலிருந்து ஆலயத்துக்கு அலைகிறோம்.
ஒரு கோவில் போதவில்லைஇன்னொரு கோவில்.
ஒரு விரதம் போதவில்லைஇன்னொரு விரதம்.

ஏன்?

எதாவது கிடைக்குமா?”
ஒரு வேண்டுதல் நிறைவேறுமா?”
இந்த எண்ணத்தோடு நாம் கடவுளை அணுகுகிறோம்.

அன்புடையீர், இது ஆன்மிகமா?
அல்லது ஒரு வியாபாரமா?

சிவவாக்கியர் சொல்கிறார்உண்மையான கோவில் கல்லால் கட்டப்பட்டது இல்லை.
அது நம்முடைய உள்ளம்.

சித்தம் தெளிந்தபின் தான் வேதக் கோயில் திறக்கும் என்று அவர் கூறுகிறார்.
மனம் தூய்மையாகாதவரை, எத்தனை ஆலயங்கள் சென்றாலும் பயன் இல்லை.

ஒரு சிறிய உதாரணம்:
ஒருவர் தினமும் ஆலயத்திற்கு சென்று விளக்கு ஏற்றி வணங்குகிறார்.
ஆனால் வீட்டில் கோபம், பொறாமை, சுயநலம் நிறைந்து இருக்கிறார்.

மற்றொருவர் ஆலயத்துக்கு செல்லாமல் இருந்தாலும்,
மனிதர்களுக்கு உதவுகிறார், நல்ல மனதுடன் வாழ்கிறார்.

யார் அருகில் கடவுள் இருக்கிறார்?

சிவவாக்கியரின் பதில் தெளிவாக இருக்கிறது
உள்ளம் தூய்மையானவரிடமே கடவுள் இருக்கிறார்.

அன்புடையீர்,

கடவுளை வெளியில் தேட வேண்டாம்.
அவர் உள்ளத்தில் இருக்கிறார்.

உள்ளம் திறந்தால்அதுவே கோவில்.
மனம் தெளிந்தால்அதுவே வழிபாடு.
அன்பு பிறந்தால்அதுவே இறைவன்.

இதை உணர்ந்தவுடன்,
வெளிப்புற அலைச்சல்கள் குறையும்.
உள்ளத்தில் அமைதி பிறக்கும்.

அதுவே ஆன்மிகம்.
அதுவே சிவவாக்கியர் சொன்ன சத்தியம்.

தீபம் ஆன்மீக வலம்

"முகமூடி மனிதனாவாய்!" / 'தானே தனக்குள் ஏனோ சிரிக்கின்றாள் / 'பக்கத்துவீட்டு பருவமச்சான் பார்வையிலே கதைபடிச்சான்'



"முகமூடி மனிதனாவாய்!"

பல்லாயிரம் மாந்தர்; பல்லாயிரம் விருப்பம்!

ஒவ்வொரு மனித னுக்கும்

ஒவ்வொரு குணமுண் டாகும்!

செவ்விதிவ் வுலகில் வாழும்

சிலரவர் விருப்பத் திற்காய்

வெவ்வேறாய் உன்னை மாற்ற

விரும்பிநீ முயல்வா யாயின்,

எவ்வழி நடப்பாய் நெஞ்சே?

எவரடி போற்றி நிற்பாய்?

 

எல்லாரையும் திருப்தி செய்ய இயலாது!

இனியொரு மனிதன் வந்து, "இப்படி வாழ்க" என்பான்;

கனியொரு மனிதன் வந்து, "கடுமையாய் மாறுக" என்பான்;

துனியுறு மனிதன் உன்னைத் "துணிவிலன்" என்று சொல்வான்;

இனிதுனை மாற்றிக் கொண்டே இருந்தால்உன் வாழ்வு மெய்யோ?

 

உன் சுயத்தை இழக்காதே!

கடலினில் அலைகள் போலே

கருத்துக்கள் மாறும் நாளும்!

உடலினில் உயிரைச் சுமக்கும்

உன்னதத் தனித்துவம் விடுத்து,

அடுத்தவர் சொல்லுக் கெல்லாம்

அடிபணிந்து உருவை மாற்றின்,

தொடுத்திடும் உலக மாந்தர்

தொலைத்துன் பொலிவை அழிப்பர்!

 

இறுதியில் எஞ்சுவது பூஜ்ஜியம்!

ஆளுக்கொரு முகமூடி அணிந்து கொண்டே போனால்,

நாளைக்குன் சொந்த முகம் நழுவியே மறைந்து போகும்!

கோழைக்குக் குணம்மா றாதே! கோலங்கள் உனக்கேன் தோழா?

நாளைக்குன் தனித்த வீறு நலிந்திடா துகாக்க வேண்டும்!

 

தத்துவம்

மண்ணினில் உனக்கோர் பாதை!

மனதினில் உனக்கோர் வேகம்!

விண்ணினில் பறக்கும் பறவை

வேறொரு பறவை யாகக்

கண்ணிமைப் பொழுதும் மாறாக்

காரணம் இயற்கை அன்றோ?

உண்ணிறை குணத்தைக் காப்பாய்!

உனைநீயே போற்றி வாழ்வாய்!

-செ .மனுவேந்தன்


🌢...🌢...🌢...🌢...🌢...🌢 


'தானே தனக்குள் ஏனோ சிரிக்கின்றாள்'

தானே தனக்குள் ஏனோ சிரிக்கின்றாள்

தனிமைப் பொழுதில் காதலை நினைக்கின்றாள்

உள்ளத்தில் ஏதோ மாயம் செய்கின்றாள்

உதட்டுச் சுழியில் கவிதை நெய்கின்றாள்

கண்கள் மூடி கனவில் ஆடுகின்றாள்

காதலன் வரவை எண்ணி வாடுகின்றாள்

நாணப் புன்னகை பூவாய் உதிர்க்கின்றாள்

நாட்கள் முழுதும் இன்பம் காண்கின்றாள்

ஆசை நெஞ்சில் ரகசியம் சொல்கின்றாள்

அழகிய நிலவாய் எங்கும் மின்னுகின்றாள்

🌢...🌢...🌢...🌢...🌢...🌢 

'பக்கத்துவீட்டு பருவமச்சான் பார்வையிலே கதைபடிச்சான்'


பக்கத்துவீட்டு பருவமச்சான் பார்வையிலே கதைபடிச்சான்

மாடத்தில் நின்று தூக்கத்தைக் கலைத்தான்!

வெட்கத்தை விடுத்து மெல்லப் பார்த்தேன்

வாட்டாத நிலவில் இதயம் தொலைத்தேன்!

மொட்டு விரிந்து வாசனை தந்தது

ஒட்டிய உடையில் கம்பீரம் தெரிந்தது!

தட்டுத் தடுமாறித் திகைத்தே நின்றேன்

எட்டிப் பார்த்து இன்பம் கொண்டேன்!

மட்டுமிலா ஆசை நெஞ்சில் பிறந்தது

கட்டிப் போட்டான் காதல் பார்வையிலே!

🌢...🌢...🌢...🌢...🌢...🌢 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]