இன்றைய நகைச்சுவைகள்

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... 
சோமு : என்னாச்சு? 
ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே

ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.
ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.

சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள். 
( நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)

ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு 
சோமு : எப்படி? 
ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..

சோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன் 
ராமு : எப்படிச் சொல்றே? 
சோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு 

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
பாபு : "முடியவே முடியாது".

மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்

பாக்கி : என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .
ரமனன் : என்னாச்சு ?
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா

மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..

கோபு : ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?ஏன்னா...
பாபு : அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்..

டீச்சர்: உனக்கு பிடித்த விலங்கு எது?
ஹரி: பூனை டீச்சர்
டீச்சர்: ஏன்?
ஹரி:பூனை குறுக்க வந்தா பாட்டி என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. அதான்!

கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

மனைவி:“ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?”
கணவன்:“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…
ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்”

பெண்: என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!"
 டாக்டர்:"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"


😀😁😆😛தொகுப்பு: தீபம் இணையத்தளம் 

நவீன உலகில் தமிழ்மொழியின் நிலை

 


தமிழ்மொழி உலகின் தொன்மையான, இலக்கிய செழுமை கொண்ட ஒரு சிறப்பியல்பான மொழியாகும். சங்க காலத்திலிருந்து இன்று வரை தமிழ் பல பரிணாமங்களை கடந்து வந்துள்ளது. நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி, உலகமயமாக்கல், மற்றும் சமூக மாற்றங்கள் தமிழ்மொழியின் நிலையை பலவிதமாக மாற்றியுள்ளன. தமிழின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால முன்னேற்றப் பாதையை இந்த கட்டுரையில் பார்ப்போம்.


1. கல்வியில் தமிழ்மொழியின் நிலை

  • தமிழ்நாட்டிலும், சில தமிழ் பேசும் பகுதிகளிலும் தமிழ் பள்ளிக் கல்வியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியியல், இலக்கியம், மற்றும் வரலாறு தொடர்பான பாடநெறிகள் வழங்கப்படுகின்றன.
  • ஆனால், உலகமயமாக்கலால் ஆங்கில கல்விக்கு முக்கியத்துவம் அதிகரித்து, தமிழில் உயர் கல்வி தேர்வதற்கான எண்ணிக்கை குறைவதற்கான சவால்கள் உள்ளன.

2. தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்மொழி

  • தமிழில் கணினி வழியாக தட்டச்சு செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கின்றன (Tamil Keyboard, Google Input Tools, NHM Writer).
  • Google Translate, Speech-to-Text, Voice Assistants போன்ற தளங்களில் தமிழ்மொழி வளர்ந்து வருகிறது.
  • Tamil Wikipedia, தமிழ் இணைய இதழ்கள், தமிழ் வலைப்பதிவுகள் ஆகியவை இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரிக்க உதவுகின்றன.
  • இருப்பினும், Artificial Intelligence (AI), Machine Learning (ML), மற்றும் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு சாதனங்களில் தமிழின் பங்கு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.

3. சமூக ஊடகங்கள் மற்றும் தமிழ்மொழி

  • Facebook, Twitter, Instagram, YouTube போன்ற சமூக ஊடகங்களில் தமிழ் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
  • தமிழ் மீம்கள், பதிவுகள், வீடியோக்கள் என பல வகைகளில் தமிழ் பரவிவருகிறது.
  • ஆனாலும், சில சமயங்களில் தமிழ்மொழியின் தரம் குன்றிய நிலையில் பயன்படுத்தப்படுவது கவலைக்குரியது.

4. தமிழ் இலக்கியம் மற்றும் மின்னூல்கள்

  • நவீன தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதைகள், புதினங்கள், மற்றும் கவிதைகள் எழுதுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
  • மின்னூல்கள் (E-books), ஆடியோ புத்தகங்கள், மற்றும் PDF வடிவில் தமிழ் படைப்புகள் பரவலாகக் கிடைக்கின்றன.
  • ஆனாலும், தமிழில் அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மருத்துவம் சார்ந்த நூல்கள் குறைவாக இருக்கின்றன.

5. தமிழ்மொழி எதிர்கொள்ளும் சவால்கள்

  • ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால், சில இளைஞர்கள் தமிழுக்கு மாறாக ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
  • தொழில் முனைவோர், வணிகத்துறையில் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்துவதே வழக்கமாகி வருகிறது.
  • தமிழ் புத்தக வாசிப்பு பழக்கம் மிதமடங்கி வருவதால், இலக்கிய வளர்ச்சி சற்றே பின்னடைவு கண்டுள்ளது.

6. தமிழ்மொழியை பாதுகாக்கும் வழிகள்

  • பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தமிழில் கல்வியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரிக்க வேண்டும் (Tamil blogs, Wikipedia, Online courses).
  • தமிழ் இலக்கியங்களை, அறிவியல் நூல்களை வெளியிட எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் தொழில்நுட்ப பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டும் (AI, ML, Robotics, Data Science).


தமிழ்மொழி நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்துகொண்டு பரவிவரும் ஒரு மொழியாக திகழ்கிறது. இருப்பினும், தமிழ்மொழியின் நிலையை மேம்படுத்த தகுந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். மொழியைக் காப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நாம் தமிழில் பேசவும், எழுதவும், படிக்கவும் உறுதிபூண்டு செயல்பட்டால், தமிழ் வளர்ச்சியில் ஒரு சிறந்த பங்காற்ற முடியும்.

தமிழ்மொழி வளர்க! தமிழ் வாழ்க! 

:செ.மனுவேந்தன்

மூதுரை -(ஒளவையார்) -


மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம் ”(வாக்கு+உண்டாம்) என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 31 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.


மூதுரை✏✏✏✏✏✏✏✏✏✏வளரும்

வெண்பா 04:-




வெண்பா 03:-



வெண்பா 02:



வெண்பா 01:-


👈👈👈👈👈👉👉👉👉👉

தூக்கமின்மைக்கு காரணம் என்ன? - உலக உறக்க தினம்:

மார்ச் 14 - 'உலக உறக்க தினம்" அனுசரிக்கப்படுகிறது. வருடத்தில் இந்த ஒரு நாள் நம்முடைய அவசர வாழ்க்கையில் நிராகரிக்கப்படும் உறக்கத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உரக்கச்சொல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

உறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான். அதில் என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? 24 மணி நேரத்தில் சராசரியாக எட்டு மணிநேரம் உறங்குகிறோம் எனும்போது நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு உறக்கத்தில் செலவிடுகிறோம். தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஆரோக்கியமான உறக்கத்திற்கான வழிமுறைகள் பற்றி விளக்கவே இந்த கட்டுரை.

நம்முடைய இயற்கையின் அமைப்பில் சூரியனும் சந்திரனும் பகல்-இரவு என்ற சுழற்சியை சீராக செயல்படுத்துவது போலää நம்முடைய உடலிலும் செயல்களை சீராக்கும் 'Circadian Clock' என்ற ஒரு கடிகாரம் மூளையில் செயல்படுகிறது. அந்த அகசுழற்சி சரியாக இயங்குவதற்கு ஆரோக்கியமான ஆழமான உறக்கம் மிக முக்கியம். நம் உடலில் உள்ள பல்வேறு ஹார்மோன்கள் சரியாக சுரப்பதற்கு அதுவே அடிப்படை. சரியாக தூங்கவில்லை என்றால் அந்த நாளில் நம்முடைய செயல்திறன் குறைவதை நாம் உணர்ந்திருப்போம்.

இரவில் தூங்காமல் அதை ஈடுகட்ட பகலில் தூங்குவது இன்று சகஜமாக காணும் சூழலே. எத்தனை மணி நேரம் பகலில் தூங்கினாலும் அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது. கால் சென்டர்களில் இரவு நேரம் வேலை செய்பவர்கள் பொழுது போக்கிற்காக இரவு கண் விழிப்பவர்கள் என அனைவருக்கும் 'Circadian Rythm" சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவில் ஒரு வருடத்தில் 10 மில்லியன் மக்கள் தூக்கமின்மையால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. தூக்கமின்மை என்பது பல வகையில் இருக்கலாம். படுத்த பின் தூங்கமுடியாமல் மெத்தையில் புரண்டு கொண்டு இருப்பது, சில மணிநேரம் தூக்கத்திற்கு பிறகு முழிப்பு வந்து விட்டால், அதன் பிறகு தூங்க முடியாமல் போவது, இல்லையேல் பல மணி நேர தூக்கத்திற்கு பிறகும் அசதியாக உணர்வது, என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தூக்கமின்மை என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக கருதப்பட்டாலும், அது பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுடன் நெருங்கிய தொடர்புடையது.

உடல்வலி ஆஸ்துமா, மூட்டு சம்மந்தமான கோளாறுகள், தைராய்ட் சுரப்பி அளவிற்கு அதிகமாக செயல்படுவது (Hyperthyrodism) இரத்த சோகை போன்ற பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறியாக தூக்கமின்மை இருக்கலாம். பொதுவாக பதற்றம் சார்ந்த கோளாறுகள் உடையவர்களுக்கு தூக்கத்தின் தொடக்கம் கடினமாக இருக்கும்.

சில மணிநேரங்கள் கழிந்த பிறகே தூக்கம் ஏற்படும். 'மனஅழுத்தம்" உள்ளவர்களுக்கு இயல்பாக தூங்க ஆரம்பித்தாலும் விடியற்காலையில் அவர்கள் பொதுவாக எழுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே தூக்கம் கலைந்துவிடும். ஏதோ ஒரு நாள் தூங்கவில்லை என்றால் பரவாயில்லை. வாரத்தில் மூன்று நாட்கள் 'தூக்கமின்மை" ஏற்பட்டு அது மூன்று மாதங்கள் வரை நீடித்தால் அது 'Chronic Insomnia" எனப்படும். அதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

தூக்கமின்மைக்கான காரணங்கள் பல. வேலைப்பளு குடும்பத்தில் சிக்கல்கள், மதுப்பழக்கம், புகைப்பிடித்தல், உடல் ரீதியான கோளாறுகள் இரத்தக்கொதிப்பு, சுவாசம் சம்பந்தமான கோளாறுகள் என பல காரணங்களினால் ஒருவரின் தூக்கம் பாதிப்படையலாம். உறங்கும் இடத்தில் வெளிச்சம், சத்தம், அதிக உஷ்ணம் போன்ற சில வெளிக்காரணங்களும் ஒருவரின் தூக்கத்தை பாதிக்கும். இன்றைய காலகட்டத்தில், பலர் இரவு நேரம் தாமதமாக உண்பது, சாப்பிட்டவுடன் உறங்குவது, இரவு நேரங்களில் காபி, டீ அருந்துவது போன்ற பழக்கங்கள் நம் உறக்கத்ன் தரத்தை குறைத்துவிடும். தலைவலி, உடல் பருமன்ää மனசோர்வு நோய் போன்ற பல பிரச்சினைகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம். சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு போன்ற பல கோளாறுகளும் தூக்கமின்மையால் தீவிரமடையும் என்பது உங்களுக்கு தெரியுமா?

நாம் எவ்வளவு மணிநேரம் தூங்குகிறோம் என்பதைப் போல எவ்வளவு ஆழமாகத் தூங்குகிறோம் என்பதும் முக்கியம். 'எவ்வளவு தூங்கினாலும் இந்த டையர்ட்னெஸ் போகவில்லை" என்று கேட்டிருப்பீர்கள். உறக்கத்தின் தரம் பாதிப்படையும் போது வருகின்ற பிரச்சனைகள் பல. படுக்கப்போவதற்கு முன் நம்மில் பலர் கைபேசியில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக கொண்டிருப்போம்.

அது நம் உறக்கத்தின் தரத்தை கெடுத்துவிடும். உறங்கும் நேரத்தில் இயற்கையாக 'Melatonin" எனப்படும் உறக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரக்க வேண்டும். அது நாம் ஒரு விஷயத்தை கைபேசியிலோ மடிக்கணினியிலோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது சுரப்பதில்லை. தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்தல் அன்று நடந்த பிரச்சனையை மற்றவர்களோடு விவாதித்தல் போன்ற செயல்கள் நம்முடைய உறக்கத்தின் தரத்தை பாதிக்கும். நாளடைவில் அதுவே நம் உடல் ஆரோக்கியத்திற்கும் மன நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

நாம் உறங்கும்போது நம்முடைய மூளையின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். நம்முடைய மூளை அன்று நாம் கற்ற புதிய விஷயங்கள் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள், இவை அனைத்தையும் அசைபோட்டு எது தேவையற்றதோ, அதை நீக்கி தேவையான தகவல்களை பதிவு செய்து கொள்ளும். படிக்கும் குழந்தைகள் குறைந்த பட்சம் 6-7 மணி நேரமாவது தூங்கினால் மட்டுமே அவர்கள் ஞாபகத்திறன் மேம்படும். பரீட்சையில் படித்த விஷயங்களை சரியாக நினைவு கூர்ந்து எழுத முடியும். உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு தரும் உறக்கத்தை இரண்டாம் பட்சமாக கருதக் கூடாது.

நம் அழகை நாம் பராமரிக்கிறோம் அல்லவா? அதுபோல நம் உறக்கத்தின் தரத்தையும் பராமரிப்பதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் நாம் உறங்கும் நேரமும், காலையில் எழும் நேரமும் சீராக இருக்க வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்த்து, நமக்கு பிடித்த பொழுது போக்குகளை செய்ய முயற்சிக்கலாம். உறங்குவதற்கு சில மணிநேரங்கள் முன்பு வெளிச்சத்தை ஏற்படுத்தும் கைபேசிகளையும், மடிக்கணினிகளையும் தவிர்த்து, புத்தகம் வாசிப்பது, பாட்டு கேட்பது போன்ற விஷயங்களை செய்யலாம்.

மாலைப் பொழுதிற்கு பிறகு காபி, டீ, புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்த்தால் உறக்கத்தின் தரம் மேம்படும். உறங்குவதற்கு நான்கு மணி நேரம் முன்பு பளுவான வேலைகள், உடற்பயிற்சி போன்றவற்றை செய்யக்கூடாது. உடற்பயிற்சிக்கு காலை வேளையே உகந்தது. இரவு உணவு எளிமையாக ஜீரணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இரவு உணவிற்கும் உறங்குவதற்கும் குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளி இருப்பது நல்லது. நாம் உறங்கும் சூழல் அமைதியானதாகவும், வெளிச்சம் அதிகம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

படுக்கையில் அமர்ந்து உணவு உண்ணவோ, வேலை செய்யவோ கூடாது. மது பழக்கம் உறக்கத்தின் தரத்தை குறைத்து பிரச்சனைகளை அதிகப்படுத்தவே செய்யும். மேற்கூறிய விஷயங்களை பின்பற்றிய பிறகும் 'உறக்கமின்மை" நீடித்தால் ஒரு மனநல மருத்துவரையோ, பொதுநல மருத்துவரையோ சந்தித்து அதன் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

நாமாகவே தூக்கமாத்திரைகள் பயன்படுத்துவது சரியான தீர்வு அல்ல. அமைதியான ஆழமான தூக்கம் நம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். இந்த வருடத்திற்கான உலக உறக்க தின கருப்பொருள் "Healthy sleep, healthy ageing". ஆரோக்கியமான உறக்கம், ஆரோக்கியமான வயோதிகத்திற்கு முக்கியம். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் மேம்படுத்துவோம்.

'உலக உறக்க தினம்" உள்ளத்தில் நல்ல மாற்றத்தை உண்டு பண்ணட்டும்.

பிபிசி தமிழ்/ரம்யா சம்பத்

மனநல மருத்துவர்