முள்ளிவாய்க்காலில்
இரவு கனமாக இருந்தது, சொல்லொணாத் துயரம் கிசுகிசுக்கும் அமைதியற்ற அமைதியில் மறைந்திருந்தது. இந்த மண்ணில் நடந்த கொடுமைகளை வானமே புலம்பியது போல, மேலே உள்ள நட்சத்திரங்கள் மங்களாகி கும்மிருட்டாய் ஆகியது. இலங்கையின் நீண்ட மற்றும் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிப் போர்க்களமான முள்ளிவாய்க்கால், கேட்கப்படாத ஒரு ஆயிரம் ஆயிரம் அழுகையின் கனத்தைத் தாங்கியது. இந்த மண்ணிலிருந்து திருடிய அல்லது அழித்த எல்லா உயிர்களும், அந்த மோதலின் நிழலில் சிக்கிக்கொண்டு, அதன் எரிந்த பூமிக்கு அடியில் இருந்து, அவர்களின் குரல்கள்
இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது.
"உடைதலையும்
மூளையும் ஊன்தடியும் என்பும்
குடருங்
கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய்
பெருநடஞ்செய்
பெற்றித்தே"
"ஓகை
உயர்மாடத் துள்ளிருந்து – கூகை
படுபேய்க்குப்
பாட்டயரும் பண்பிற்றே"
போரில் அழிக்கப்பட்ட மாடத்தின் உச்சியிலிருந்து கூகை தாலாட்டு பாட அழிந்த நகரத்தில் பேய்கள் உறங்கும், இப்படி முத்தொள்ளாயிரம் கூறுகிறது. ஆனால் இங்கு முள்ளிவாய்க்காலில் வலுக்கட்டாயமாக, நீதிக்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரும் பேயாக மண்ணில் இருந்து எழுந்து நியாயம் கேட்கிறது!
மே
18, 2009 அன்றுதான், பல தசாப்தங்களாக உரிமைக்காகப்
ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று இலங்கை இராணுவம் வெற்றியை அறிவித்தது. ஆனால் அந்த வெற்றி ஒரு வேதனையான, நீதிக்கு அப்பாற்பட்ட இராணுவ
தாக்கங்களில் இருந்து வந்தவை - இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அல்லது "விசாரணைகளின்" பின் காணாமல் போனார்கள். அவர்களின் கனவுகள், அவர்களின் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணின் இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியது. அதை இன்னும், ஆண்டுகள் போனாலும், முள்ளிவாய்க்காலின் இரத்தம் தோய்ந்த மண்ணால் மறக்கமுடியவில்லை.
கடிகாரம்
நள்ளிரவைத் தாண்டியதும், அங்கு காற்று அமைதியாக, அமைதியாக்கப்பட்ட, மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, ஒவ்வொருவரின்
ஆத்மாவினதும் புலம்பல்களை, சுமந்துக்கொண்டு காற்று வீசியது. அந்தக் காற்றின் துக்கம், தன் நினைவுக்கு வருவது போல், இருளும் அடர்ந்த கருமையாக மாறியது. இடிபாடுகள், சாம்பல் மற்றும் நிழல்களில் இருந்து ஒவ்வொரு உருவங்களும் வெளிவரத் தொடங்கின. அவை புலன்கடந்த,
நுண்பொருளான, கட்புலனாகாத, காற்று போன்ற ஒன்றாக ஒளிஊடுருவக்கூடியதாக இருந்தது. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் துன்பத்தின் அடையாளங்களைச் சுமந்தனர்: எறிகணை துண்டுகளால் ஏற்பட்ட தழும்புகள், உடைந்த கைகால்கள் மற்றும் ஒருமுறை பயத்தில் மூழ்கிய கண்கள். இவை வெறும் தோற்றங்கள் அல்ல; அவர்கள் அநீதியின் கொடூரங்ககளால் மண்ணில் மூழ்கிய ஆன்மாக்கள்.
"வாருங்கள்,
வந்து கை கொடுங்கள்
இமைகள்
மூடி பல நாளாச்சு ...
சொல்லுங்கள்,
எங்கள் வேதனைகளை
வட்டமாய்
நின்று கும்மி அடித்தன --
தாருங்கள்,
நீதியை வஞ்சகம் இல்லாமல்
கேள்விகள்
கேட்டு துணங்கை ஆடின ..."
"நாக்கை
அறுத்தனன் நாதி யற்றவன்
நங்கை
நான் உண்மை
உரைத்ததாள் ...
முலையை
சீவினான் கொடூர படையோன்
பேதை
நான் காமம் சுரக்காததாள் ...
வரிசையில்
நின்று கூத்து ஆடின
இடையில்
சின்னஞ் சிறுசு சிலஆயிரம் ... "
"முழங்கினர்,
கதறினர் குரவை ஆடினர்
விசாரணை
எடு -உண்மையை நிறுத்து ...
கூடுங்கள்,
ஒன்றாய் உண்மையை உரையுங்கள்
கூடிநின்று
'கும்மிருட்டில் நடனம்' ஆடின ... "
அங்கே
பல பல மகாகாளியின் வேண்டுதல்
மற்றும் முறையிடுதல் காற்றை நிரப்பியது, வலி மற்றும் துயரத்தில் பிறந்த பாடல் அது. இது அன்று நடந்த அட்டூழியங்களின் புலம்பலாக இருந்தது - பெண்கள் மீது மீறப்பட்ட கதைகள், குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து பிரிந்த கதைகள் மற்றும் ஆண்கள் விசாரணையின்றி காணாமல் ஆக்கப்பட்ட கதைகள். ஒவ்வொரு ஆத்மாவும் பேய்களாக 'கும்மிருட்டில் நடனம்' ஆடின, அவற்றின் அசைவுகள் வேதனையையும் கண்ணீரையும் தந்தன, ஆனாலும் உறுதியானவை. அவர்கள் அசைந்து சுழன்று கூத்தாடினார், ஒவ்வொரு முத்திரையும் அடிகளும் தங்கள்
தங்கள் கதைகளை, உண்மையாக நடந்தவற்றை விவரித்து கேள்விகேட்டன. ஒரு தாய் கண்ணுக்குத் தெரியாத குழந்தையைத் தொட்டிலிட்டு நடனமாடினாள், அவளுடைய பாடல் தனது குழந்தையின் திருடப்பட்ட எதிர்காலத்திற்கான வேண்டுகோள். ஒரு இளைஞன் தடுமாறி முன்னோக்கிச் சென்றான், அவனது உடல் தன்னைத் துளைத்த தோட்டாக்களை இன்னும் உணர்வது போல் நெளிந்தது நெளிந்து வேதனைப்பட்டது.
இந்த
பேய்களின் கூட்டத்தின் ஒரு மூலையில், ஒரு மூத்த ஆவி, தமிழ் மக்களின் பெருமையைக் கொண்டாடிய, சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்து புலவர், ஈழத்துப் பூதன்தேவனாரின் பாடல்களை பாடத் தொடங்கியது.
"அரவுக்
கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு
நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்திழை
அல்குல், பெருந்தோள் குறுமகள்
மணி
ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇக்,
கூதிர்
முல்லைக் குறுங்கால் அலரி
மாதர்
வண்டொடு சுரும்பு பட முடித்த"
அவள்
தன் அல்குல் பகுதியில் திருந்திய மணி கோத்த ஆடை அணிந்திருப்பாள். அது பாம்பு உரித்த தோல் போல் மென்மையான ஆடை. அதன் ஊடே அவள் அல்குல், கண் இமைப்பது போல் அவ்வப்போது தெரியும். அவள் அகன்ற மார்பகத் தோள் கொண்ட சின்னப் பெண் (குறுமகள்). தூசு இல்லாமல் நூய்மையாகக் கழுவி, கருநீல மணி போல் அழகொழுகத் தோன்றும் கூந்தலை உடையவள். குளிர் காலத்தில் பூக்கும் குறுகிய காம்பை உடைய முல்லை மலரை அந்தக் கூந்தலில் சூடிக்கொண்டிருப்பாள். அதில் வண்டுகள் மொய்க்கும்.
அப்படித்தான்
நானும் இருந்தேன். ஆனால் இன்று, அது கண்ணீருடன் அந்தப்பாடலை திருப்ப திருப்ப பாடிக்கொண்டு இருந்துது. அதன் அருகில், மகாவம்சத்தைத்தில் கூறிய, நாட்டைவிட்டு துரத்திவிடப்பட்ட இளவரசர்
விஜயனின் வருகையை, மற்றொரு ஆவி விவரித்தது. "அவர்கள் அதை வரலாறு என்று அழைக்கிறார்கள், ஆனால் இது மத குருவால், " பௌத்தர்களது [பௌத்த
பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது" [“serene joy of the
pious”], என்ற அறைகூவலை திருப்ப திருப்ப
பதித்து எழுதப்பட்ட கதை,"
என்று அது கூறிக்கொண்டு இருந்தது. “ விஜயன் இந்த மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த மண்ணை உழுது அரசுகளை உருவாக்கினார்கள். நாங்கள் புதியவர்கள் அல்ல; நாங்கள் இலங்கையின் மூத்த குடிமக்களில் ஒருவன் . 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் திராவிடர்களின் இருப்புக்கு சாட்சியாக இருந்த தொல்பொருள் சான்றுகள் - பொம்பரிப்புவில் உள்ள பெருங்கற்கால புதைகுழிகள், தமிழ் பிராமி எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுகள் பற்றி இன்னும் ஒன்று பேசிக்கொண்டு இருந்தது.
கும்மிருட்டு முடியும் மட்டும் நடனம் தொடர்ந்து, உரையாடலின் ஒவ்வொரு துணுக்குககளும் காற்றில் பறந்தன. மற்றொன்று யாழ்ப்பாணத்தில்
உள்ள நூலகம் எரிக்கப்பட்டபோது தங்கள் புனித நூல்களை இழந்துவிட்டதாக புலம்பியது . "அவர்கள் எங்களை அழிக்க முற்பட்டனர்," இன்னும் ஒரு பெண் கிசுகிசுத்தது, அவள் குரல் எனோ நடுங்கியது. "ஆனால் வரலாறு என்பது எங்கள் இதயங்களிலும் கற்களிலும் எழுதப்பட்டுள்ளது." என்று பெரும் அறைகூவலுடன் நடனம் ஆடியது.
அவர்கள் ஒன்றாக
மரணம் வேதனையின் பயங்கரமான ஓலத்தை எழுப்பினர்.
“வாழ்க்கையில் நாங்கள்
அமைதியாகிவிட்டோம்;
மரணத்தில்
நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
எங்கள்
கதைகள் எதிரொலிக்கும், எங்கள் வலி பேசும்.
முள்ளிவாய்க்காலின்
சாம்பலில் இருந்து நீதி எழும்”
என்று
விடியும் வரை கூக்குரலிட்டனர். ஆவிகளின் புலம்பல் பயங்கரங்களை விவரிப்பதோடு நிற்கவில்லை. அவர்கள் தங்கள் கைகளை நீட்டி, உயிருள்ளவர்களை அழைத்தனர்:
"எங்களை
மறந்துவிடாதே,
இருள்
உண்மையை விழுங்க விடாதே.
ஒன்றாக
நில், ஒன்றாக எழு,
நீதி
எங்கள் ஒளியாக இருக்கட்டும்."
பேய்களின் "கும்மிருட்டில்
நடனம்" ஒரு சடங்காக மாறியது, இறந்தவர்களுக்கு நீதி கேட்டு அவர்களைக் கௌரவிக்கும் கூட்டுப் பொறுப்பை நினைவூட்டியது. ஒவ்வொரு
ஆண்டும், போர் முடிவடைந்த ஆண்டு நிறைவில், ஆன்மாக்களின் இருப்பு வலுவடைந்தது. முள்ளிவாய்க்கால் புனித பூமியாக மாறியது, வென்றவர்களுக்காக அல்ல, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, அழிந்தவர்களுக்காக, நினைவுகூரப்பட வேண்டும் என்று கோருபவர்களுக்காக!
உயிருள்ளவர்களிடையே
கிசுகிசுக்கள் செயல் உருவம் பெற்றது. தப்பிப்பிழைத்தவர்கள் திரளத் தொடங்கினர். அவர்களின் மெழுகுவர்த்திகள் கும்மிருட்க்கு எதிராக மின்னியது. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் பெயர்களை கோஷமிட்டனர்.
இன்று
முள்ளிவாய்க்காலின் கும்மிருட்டு நடனம் மற்றும் முள்ளிவாய்க்காலின் முழக்கங்கள் உலகிற்கு ஒரு பேரணியாக மாறியது: "இனி ஒருபோதும் இது வேண்டாம்"
நன்றி
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி,
யாழ்ப்பாணம்]
"கும்மிருட்டில்
நடனம்" [சுருக்கிய கதை]
முள்ளிவாய்க்காலில்
இரவு கனமாக இருந்தது, இந்த மண்ணில் நடந்த கொடுமைகளை வானமே புலம்பியது போல, மேலே உள்ள நட்சத்திரங்கள் மங்களாகி கும்மிருட்டாய் ஆகியது. இந்த மண்ணிலிருந்து திருடிய அல்லது அழித்த எல்லா உயிர்களும், அந்த மோதலின் நிழலில் சிக்கிக்கொண்டு, அதன் எரிந்த பூமிக்கு அடியில் இருந்து, அவர்களின் குரல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது.
"உடைதலையும்
மூளையும் ஊன்தடியும் என்பும்
குடருங்
கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய்
பெருநடஞ்செய்
பெற்றித்தே"
இரத்த
வெள்ளத்தில் நிணமும், தசையும் எலும்பும் மிதந்துவரும் போர்க்களத்தில் பேய்க் கூட்டங்கள் மகிழ்ச்சியினால் கூத்தாடும். ஆனால் இங்கு முள்ளிவாய்க்காலில் வலுக்கட்டாயமாக, நீதிக்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரும் பேயாக மண்ணில் இருந்து எழுந்து நியாயம் கேட்கிறது!
இறுதி
போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அல்லது "விசாரணைகளின்" பின் காணாமல் போனார்கள். அவர்களின் கனவுகள், அவர்களின் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணின் இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியது. அதை இன்னும், ஆண்டுகள் போனாலும், முள்ளிவாய்க்காலின் இரத்தம் தோய்ந்த மண்ணால் மறக்கமுடியவில்லை.
கடிகாரம்
நள்ளிரவைத் தாண்டியதும், அங்கு காற்று அமைதியாக, இடிபாடுகள், சாம்பல் மற்றும் நிழல்களில் இருந்து ஒவ்வொரு உருவங்களும் வெளிவரத் தொடங்கின. அவைகள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் துன்பத்தின் அடையாளங்களைச் சுமந்தனர்: எறிகணை துண்டுகளால் ஏற்பட்ட தழும்புகள், உடைந்த கைகால்கள் மற்றும் ஒருமுறை பயத்தில் மூழ்கிய கண்கள். இவை வெறும் தோற்றங்கள் அல்ல; அவர்கள் அநீதியின் கொடூரங்ககளால் மண்ணில் மூழ்கிய ஆன்மாக்கள். ஒவ்வொரு ஆத்மாவும் பேய்களாக 'கும்மிருட்டில் நடனம்' ஆடின. அவற்றின் அசைவுகள் வேதனையையும் கண்ணீரையும் தந்தன. ஒவ்வொரு முத்திரையும் அடிகளும் தங்கள் தங்கள் கதைகளை, உண்மையாக நடந்தவற்றை விவரித்து கேள்விகேட்டன. ஒரு தாய் கண்ணுக்குத் தெரியாத குழந்தையைத் தொட்டிலிட்டு நடனமாடினாள், அவளுடைய பாடல் தனது குழந்தையின் திருடப்பட்ட எதிர்காலத்திற்கான வேண்டுகோள். ஒரு இளைஞன் தடுமாறி முன்னோக்கிச் சென்றான், அவனது உடல் தன்னைத் துளைத்த தோட்டாக்களை இன்னும் உணர்வது போல் நெளிந்தது நெளிந்து வேதனைப்பட்டது.
இந்த பேய்களின் கூட்டத்தின் ஒரு மூலையில், ஒரு மூத்த ஆவி, தமிழ் மக்களின் பெருமையைக் கொண்டாடிய, சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதன்தேவனாரின் பாடல்களை பாடி ஆடியது . அதன் அருகில், விஜயனின் வருகையை, மற்றொரு ஆவி விவரித்தது. "அவர்கள் அதை வரலாறு என்று அழைக்கிறார்கள், ஆனால் இது மத குருவால், " பௌத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்ட கதை," என்று அது கூறிக்கொண்டு இருந்தது.“ விஜயன் இந்த மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த மண்ணை உழுது அரசுகளை உருவாக்கினார்கள். நாங்கள் புதியவர்கள் அல்ல; நாங்கள் இலங்கையின் மூத்த குடிமக்களில் ஒருவன் என்று இன்னும் ஒன்று நடனம் ஆடிக்கொண்டு இருந்தது.
'கும்மிருட்டு
நடனம்' விடியும் மட்டும் தொடர்ந்து, அவர்கள் ஒன்றாக மரணம் வேதனையின் பயங்கரமான ஓலத்தை எழுப்பினர்.
“வாழ்க்கையில் நாங்கள்
அமைதியாகிவிட்டோம்;
மரணத்தில்
நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
முள்ளிவாய்க்காலின்
சாம்பலில் இருந்து நீதி எழும்”
-[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி,
யாழ்ப்பாணம்]