"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
-வெளிப்புற அழகை மீறும் உள் பராமரிப்பு (உடல்நலம்)
மனிதன் தன் முகத்தை எவ்வளவு அக்கறையுடன் பராமரிக்கிறானோ, அதே அளவு கவனம் பெறாமல் பின்தங்கிக் கிடப்பது தலைமுடியும் உச்சந்தலையும் ஆகும். பளபளக்கும் கூந்தல் என்பது வெறும் அழகுக் குறியீடு மட்டுமல்ல; அது உடல்நலத்தின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஷாம்பூ பயன்படுத்துதல், தலைமுடி கழுவும் முறை, மற்றும் பராமரிப்பு குறித்து பரவலாக நிலவும் நம்பிக்கைகள் பலவும் அறிவியல் ஆதாரமற்றவையாக இருப்பது கவனிக்கத்தக்கது.
முதலில், “குளிர்ந்த நீரில் தலைமுடி கழுவினால் அது பளபளக்கும்” என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டாலும், அது முழுமையான உண்மையல்ல. தலைமுடியின் ஆரோக்கியம் நீரின் வெப்பநிலையால் மட்டுமல்ல, வேதியியல் பொருட்கள், வெப்ப கருவிகள், மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களிலிருந்து அதை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதில்தான் அதிகம் சார்ந்துள்ளது. அதே நேரத்தில், மிக அதிக சூடான நீரில் தலைமுடி கழுவுவது முடியை வறட்சியடையச் செய்து, உச்சந்தலையையும் பாதிக்கக் கூடும். எனவே, மிதமான வெப்பநிலை நீரே தலைமுடிக்கு சிறந்தது.
இன்றைய சந்தையில் “சேதமடைந்த முடியை முற்றிலும் சரிசெய்யும்” என வாக்குறுதி அளிக்கும் பல தயாரிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில், ஒருமுறை சேதமடைந்த முடியை முழுமையாக பழைய நிலைக்கு மாற்ற எந்தப் பொருளாலும் முடியாது. அவை தருவது தற்காலிக மென்மையும் வெளிப்புற மேம்பாடும் மட்டுமே. எனவே, அதிக விலைமதிப்புள்ள தயாரிப்புகளின் விளம்பர வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல், சரியான பராமரிப்பை முன்னிலைப்படுத்துவது புத்திசாலித்தனமாகும்.
“முடியை அடிக்கடி வெட்டினால் அது வேகமாக வளரும்” என்ற நம்பிக்கையும் அறிவியல் ஆதாரமற்றதே. முடி வளர்ச்சி வேகம் மரபியல், உணவு, மற்றும் உடல்நல காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது; வெட்டுதல் அதன் வளர்ச்சியை வேகப்படுத்தாது. அதனால், வெளிப்புற நடவடிக்கைகள் அல்ல, உடலின் உள்ளார்ந்த ஆரோக்கியமே முடி வளர்ச்சியின் அடித்தளமாகிறது.
சிலர் தலைமுடி “தானாக சுத்தப்படுத்திக் கொள்ளும்” என நம்பி, அடிக்கடி கழுவாமல் இருப்பது நல்லது எனக் கருதுகின்றனர். ஆனால் இது தலைமுடிக்கும் உச்சந்தலையிற்கும் பாதகமானது. மனித உச்சந்தலையில் ஆயிரக்கணக்கான எண்ணெய் சுரப்பிகள் செயல்படுகின்றன. அவற்றை முறையாக சுத்தம் செய்யாமல் விட்டால், எண்ணெய், அழுக்கு, மற்றும் மாசுக்கள் சேர்ந்து பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கும். இதன் விளைவாக அரிப்பு, பொடுகு, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் தீவிரமடையும்.
உண்மையில், துணிகளில் இருக்கும் எண்ணெய் அல்லது அழுக்கை வெறும் தண்ணீரால் மட்டும் அகற்ற முடியாதபோல, தலைமுடியின் அழுக்கையும் நீரால் மட்டும் முழுமையாக சுத்தம் செய்ய முடியாது. இங்கு ஷாம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. அது உச்சந்தலையில் தேங்கும் அதிக எண்ணெய், தூசி, மற்றும் தயாரிப்பு மீதிகளை அகற்றி, சுத்தமான சூழலை உருவாக்குகிறது. இதன் மூலம் தலைமுடி சுவாசிக்கும் இடம் கிடைத்து, ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
முடியின் தன்மைக்கேற்ப ஷாம்பூ தேர்வு செய்வதும் அவசியம். மிக அதிக எண்ணெய் பசையுள்ள முடி கொண்டவர்கள் வலுவான சுத்திகரிப்பு ஷாம்பூவை பயன்படுத்தலாம். ஆனால் வறண்ட அல்லது மென்மையான முடி கொண்டவர்கள் சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடி அதிகமாக எண்ணெய் பசையாக இருந்தாலோ அல்லது அதிக ஸ்டைலிங் தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டாலோ, ஒரு நாள் விட்டு ஒரு நாள் கழுவுவது ஆரோக்கியமான பழக்கமாகும்.
நவீன வாழ்க்கை வேகத்தில், ட்ரை ஷாம்பூ பலரின் வசதியான தேர்வாக மாறியுள்ளது. அது தலைமுடியை தற்காலிகமாக புத்துணர்ச்சி பெறச் செய்யலாம்; ஆனால் தலைக்குக் குளிப்பதற்கான மாற்றாக இதை கருத முடியாது. தொடர்ந்து பல நாட்கள் ட்ரை ஷாம்பூ பயன்படுத்தி, சரியான சுத்தம் செய்யாமல் விட்டால், உச்சந்தலையில் தேங்கும் படிவங்கள் பூஞ்சை வளர்ச்சியை ஊக்குவித்து அரிப்பு மற்றும் செதில் பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் உண்டு.
– ஒரு மறைமுக மனநோயா?
இதுவே FOMO-வின் முதல் விதை.
ஒரு இளைஞர் தினமும் சமூக வலைதளங்களில் மற்றவர்களின் சாதனைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தால்:
தன்னம்பிக்கை குறையும்
கவனம் சிதறும்
வாழ்க்கை திருப்தி குறையும்
இவை அனைத்தும் மனச்சோர்வின் ஆரம்ப அடையாளங்களாக மாறலாம்.
இந்த எண்ணமே மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
அடிக்கடி மொபைல் திறக்கும் பழக்கம்
அறிவிப்புகள் வந்தாலே பதட்டம்
ஓய்வெடுத்தாலும் மன அமைதி இல்லாமை
மற்றவர்களின் வாழ்க்கையை ஒப்பிடும் மனநிலை
இவை அனைத்தும் உள்ளத்தில் ஓடும் அமைதியான மனப் போராட்டத்தின் அறிகுறிகள்.
இதுவே FOMO-வின் உச்ச நிலை.
🔴🔴🔴தீபம் உளவியல் உலகம் 🔴🔴🔴
“பண்டுநான் பறித்து எறிந்த பன்மலர்களை எத்தனை?” என்று தொடங்கும் இவ்வரிகள், ஒரு சாதாரண கவிதை அல்ல; அது மனிதனின் உள்ளத்தை உலுக்கும் ஆன்மிகத் தன்னிலையாய்வு. கடந்த காலத்தில் நாம் செய்த வீணான செயல்கள், அறியாமையால் நிகழ்ந்த தவறுகள், இன்பத்தின் பெயரில் செய்த பாவங்கள்—இவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கும் ஒரு உள்ளக் குரல் இதுவாகும்.
இதுவே இக்கால மனிதனின் வாழ்க்கைச் சுழற்சி.
இயற்கையை அழிக்கிறான்
உறவுகளை புறக்கணிக்கிறான்
மன அமைதியை வீணடிக்கிறான்
இது “பறித்து எறிந்த மலர்கள்” என்பதற்கே நவீன விளக்கம்.
கோபத்தில் எழுதப்படும் கருத்துக்கள்
பொய்யான விமர்சனங்கள்
மற்றவரை இழிவுபடுத்தும் பதிவுகள்
முன்பு வாயால் கூறிய பாவம் இன்று விசைப்பலகையால் பெருகுகிறது.
உடனடி இன்பம் விரும்புகிறார்கள்
பொறுமையை இழக்கிறார்கள்
இலக்கை விட லைக்ஸைத் தேடுகிறார்கள்
ஆனால் உண்மையில் இளமை என்பது:
வீணடிக்க வேண்டிய காலம் அல்ல; உருவாக்க வேண்டிய காலம்.
உடல் வலிமை, சிந்தனை சக்தி, கனவு—இவை அனைத்தும் இளமையில் உச்சத்தில் இருக்கும். அதை சிற்றின்பங்களில் செலவழிப்பது, வாழ்க்கையின் பொக்கிஷத்தை கைவிடுவது போன்றதே.
ஆலயம் செல்வோம்
விரதம் இருப்போம்
பிரார்த்தனை செய்வோம்
இவ்வரிகள் நமக்கு சொல்லும் மிகப் பெரிய உண்மை:
வாழ்க்கை வீணாகச் செல்கிறது என்பதை உணராததே மிகப் பெரிய இழப்பு.
அதனால் இன்றைய மனிதன்:
செயலை செய்யும் முன் சிந்திக்க வேண்டும்
வார்த்தையை பேசும் முன் கருணை கொள்ள வேண்டும்
இன்பத்தை அனுபவிக்கும் முன் அளவை அறிய வேண்டும்
ஆன்மிகத்தை தண்டனையாக அல்ல, வழிகாட்டியாக ஏற்க வேண்டும்
புத்தனின் விஜயம்
அருளொளி ஆனந்த குரு
அகம் நிறை கருணை தீபம்,
அஹிம்சையின் அமுத வார்த்தை
அனைத்துலகும் விதைத்த நாதன்.
தனிமையில் தாழ்ந்து வந்து
தீவு மண்ணை நோக்கி நின்றார்;
தம்மம் மலர்ந்திடும் என
தரும நிலம் கருதிச் சென்றார்.
ஆனால் அங்கே கண்ட காட்சி—
அன்பின் பெயரில் பகை நிழல்,
சமயத்தின் சுவர் உயர்ந்து
சாந்தியின் சொல் சிதைந்த நிலம்.
“கருணையே என் மார்க்கம்” என்ற
கல்வி களங்கம் அடைந்ததைக் கண்டு,
மௌனத்தின் மொழி பேசும் கண்கள்
மனித துயர் அளவை எண்ணின.
அவ்வேளையில் வியப்பொன்று—
அமைதி நிலம் நடுங்கியது;
சிலைபோல் நின்ற உருவம் ஒன்று
சிதறிய மனம் போல எழுந்தது.
அடுத்தவர் நிலத்தில் கூட
அறியாது ஊடுருவி நிற்கும்,
திடீரென முளைக்கும் சிலையால்
பிரிவு எண்ணம் வளர்ந்ததைக் கண்டு.
கருணைக் கடல் கண்கள் மூடி
காலம் சாட்சி மண்ணைத் தொட்டு,
மயங்கினார் போதிச் சுடர்—
மனித நேயம் காய்ந்ததினால்.
விழுந்தது உடல் அல்லோ;
விழுந்தது அவரது கனவு.
எழுந்திடும் மௌன போதம்:
“மனிதம் மேலே; சமயம் கீழே;
அன்பே நிலம், அமைதியே சிலை.”
-செ மனுவேந்தன்
ஆரம்பம் : ஐப்பசி ,2010
நோக்கம் :இணைந்த வளர்ச்சி
தேடல் : வளரும் வாசகர்கள்
போடல் : பயனுள்ள தகவல்கள்
நாடல்: நல்லதோர் சமுதாயம்
ஆக்குவோர்:
தில்லை விநாயக லிங்கம்[u.k]
செல்வதுரை சந்திரகாசன்[aus.]
செல்லத்துரை மனுவேந்தன்[can.]
காலையடி அகிலன் [can.]
அகிலா, பரந்தாமன்[S.L]
தொடர்பு:
s.manuventhan@hotmail.com