"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில்
[நாளாகமம்களில்]'
ஒரு
பார்வை"
/ "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In
Tamil & English]
[This
detailed Tamil article is based on the unfinished historical book 'History of
Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The
English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 26 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'சோழ மன்னன் ஒருவன் 12000 இலங்கையரைத் சிறைபிடித்தானா?'
வசபாவின் [வசபனின்] மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasikatissa] அவனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் வசபாவின் மாமா மற்றும் மாமன் மகள் பற்றிய ஒரு கதை உள்ளது. வங்கனாசிகதிஸ்ஸ இராசவலியில் வன்னேசினம்பாபா [Vannesinambapa] ஆகும்.
சோழ நாட்டு மன்னன் ஒருவன் படையுடன் வந்து பன்னிரண்டாயிரம் பேரைத் தன் நாட்டிற்கு சிறைபிடித்து அழைத்துச் சென்றதாக இராசவலிய கூறுகிறது. இந்த மன்னனைப் பற்றிய ஒரு கதை இராவலியில் காணப்படுகிறது, இது இராமாயணத்தில் உள்ள ஒரு கதையை ஒத்ததாகவும், தமிழில் உள்ள பொற்கை குலசேகர பாண்டியனைப் பற்றிய மற்றொரு கதையைப் போலவும் உள்ளது. இருப்பினும், மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. கி.பி 3ஆம் நூற்றாண்டு (கி.பி. 201) முதல் கி.பி 6ஆம் நூற்றாண்டு (கி.பி. 501) வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது,
ஏனெனில் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு முன்பு இலங்கை மீது படையெடுக்கும் திறன் கொண்ட ஒரு சோழ மன்னன் இருந்தான் என்பது நம்பகமானதல்ல.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த பொற்கைப் பாண்டிய மன்னனைப்
[Golden Handed Pandya] பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் (குறிப்பு: மதுரை காண்டம் - கட்டுரை காதை) உள்ளது. இவனுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட செயற்கைக் கை பொருத்தப்பட்டது.
என்றாலும் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.
“கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான்
பொற்கையான் ஆனகதை போதாதோ- நற்கமல
மன்றலே வாரி மணிவா சலையசைக்கத்
தென்றலே ஏன் வந்தாய் செப்பு?”
[கம்பர்]
ஒருமுறை கவிச்சக்கரவர்த்தி
கம்பர் தன் மனைவியுடன் படுத்திருந்தார்.
இருவரும் உறங்கும் நேரம் வந்ததும் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்ட கம்பர் படுக்கையில் இருந்து எழுந்து கதவைத் திறந்தார். அப்பொழுது தென்றல்தான் கதவைத் தட்டியது என்பதை உணர்ந்தார். உடனடியாக 'காற்றுடன் பேசுவது' போல இந்த பாட்டை பாடி,'கொற்கை பாண்டியன் குலசேகரப் பெருமான், ஊரார் வீட்டுக் கதவைத் தட்டிய ஒரே தவறுக்காக பொன் கை பாண்டியனாக மாறிய கதை உனக்குத் தெரியுமா?' என்று காற்றிடம் கேட்டார்.
அவன் மகன் கஜபாகுக்க காமினி
[Gajabahuka Gamani] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கஜபாகுக்க காமினி என்பது இராசவலியில் உள்ள முதலாம் கஜபாகு [Gajabahu I] என்றும், மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் சொல்லப்பட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப்
பதிலாக, இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறுகிறது. முன்பு குறிப்பிட்டது போல் வசபா ஒரு தமிழனாக இருக்கலாம்? எனவே கஜபாகுக்க காமினியும் தமிழனாக இருக்கலாம்?
சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்த போது, மன்னனின் அழைப்பின் பேரில், இந்திர விழாவிற்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை அரசனான கஜபாகுவும் (முதலாம் கஜபாகு) ஒருவன் ஆகும். பல்லவ மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய மன்னர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாததன் அடிப்படையில், இந்த இதிகாசத்தின் காலம் முதன் முதலில் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது.
பின்னர் கஜபாகுவின் காலத்தின் அடிப்படையில், கி.பி. 171 முதல் 193 வரை, அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த தமிழ் மன்னர்களுக்கும் இலங்கை மன்னர்களுக்கும் அன்றைய கால கட்டத்தில் பகை ஒன்றும் இருக்கவில்லை. இலங்கை மன்னர் கஜபாகு தென்னிந்தியாவின் தமிழ் மன்னர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தீபவம்சமும் மகாவம்சமும் அதைப் பற்றி மௌனமாக இருக்கின்றன. கஜபாகு என்ற மன்னன் இலங்கையில் அண்மைக் காலம் வரை நிலவிய பத்தினி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தான். தீபவம்சமும், மகாவம்சமும் கஜபாகு மன்னனைப் பற்றி அதிகம் சொல்லவில்லை.
👉👉👉👉
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
Part: 26 / The Kings who ruled after
Vijaya and the related affairs / 'Did a Chola king capture 12,000 Sri Lankans?'
Vasabha’s son
Vankanasikatissa ruled after him for three years. There is s story about
Vasabha’s uncle and uncle’s daughter in the Mahavamsa. Vankanasikatissa is the
Vannesinambapa in the Rajavaliya. The Rajavaliya says that a king of Soli
country came with an army and took twelve thousand people to his country. There
is a tale in the Rajavaliya about this king, which is very similar to a story
in the Ramayana and similar to another story about the Golden Hand Kulasekara
Pandiyan in Tamil. However, the other two chronicles did not say anything in
this regard. The period from the 3rd century A. D. (201 A. D.) to the 6th
century A. D. (501 A. D.) is considered a dark period in the history Tamil Nadu
as there is no detail available about this period. It is not trustworthy to
believe that there was a Chola king with the capacity to invade Lanka just
prior to this period. His son Gajabahukagamani ruled for twenty-two years.
Gajabahukagamani is the Gajaba in the Rajavaliya and ruled for twenty-four
years, instead of twenty-two in the other two chronicles. As indicated earlier,
Vasabha could be a Tamil. Therefore, Gajabahukagamani could also be a Tamil. He
is the Gajabahu who went to Tamil Nadu to participate in the Indravill(zz)a on
the invitation of the very famous Chera king Cheran Senguttuvan. There was no
enmity between the Tamil kings in Tamil Nadu and the Lanka kings. He, the king
Gajabahu, brought the Pattini cult to Ceylon, which prevailed in Lanka until
very recently. The Dipavamsa and the Mahavamsa have nothing much to say about
the king Gajabahukagamani.
நன்றி
Thank
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
[Kandiah
Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 27 தொடரும் / Will follow