''சிவவாக்கியர் உடைக்கும் மூடநம்பிக்கைகளும், இக்கால ஆன்மிகமும்!"


சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் - 048

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா

உடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா

விரிந்தபூ உதிந்த்தகாயும் மீண்டும்போய் மரம்புகா

இறந்தவர் பிழைப்பதில்லை இல்லை இல்லை இல்லையே! 

சென்றவை மீளா" என்பது பிரபஞ்சத்தின் ஆதி விதி. ஆனால், மனித மனம் எப்போதும் கடந்த காலத்தின் சாம்பலிலும், எதிர்காலத்தின் மாயையிலும் வாழவே விரும்புகிறது. இந்த மனமயக்கத்தை, தன் ஞானக் கோடாரியால் அடியோடு வெட்டிச் சாய்க்கிறார் சித்தர் சிவவாக்கியர்.அவர் பாடிய 48-வது பாடல், மரணத்தைப் பற்றிய பயத்தையும், மறுபிறவி மற்றும் போலிச் சடங்குகள் குறித்த மனிதனின் அறியாமையையும் தோலுரித்துக் காட்டுகிறது:"கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகாஉடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகாவிரிந்தபூ உதிந்த்தகாயும் மீண்டும்போய் மரம்புகாஇறந்தவர் பிழைப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!"இக்கால மனிதர்களின் தவறான நம்பிக்கைகளைச் சாடி, இன்றைய நவீன யுகத்திற்குத் தேவையான உண்மையான ஆன்மிகத்தை இந்தப் பாடலின் வழியே ஆராய்வோம்.பாடலின் எளிய விளக்கம்சிவவாக்கியர் அசைக்க முடியாத ஐந்து இயற்கை உண்மைகளை நம் கண்முன்னே நிறுத்துகிறார்:கறந்த பால் மீண்டும் பசுவின் மடிக்குள் போகாது.மோரைக் கடைந்து எடுத்த பின்பு, அந்த வெண்ணெய் மீண்டும் மோரோடு ஒன்றாகக் கலக்காது (தனித்துத் தான் நிற்கும்).உடைந்து போன சங்கு மீண்டும் ஒலிக்காது.மரத்திலிருந்து உதிர்ந்த மலரும், கனியும் மீண்டும் போய் கிளையோடு ஒட்டிக்கொள்ளாது.அதைப்போலவே, இந்த உடலை விட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் இந்த உடலுக்குள் வராது; இறந்தவர்கள் மீண்டும் பிழைக்கப் போவதே இல்லை! "இல்லை, இல்லை, இல்லையே" என மூன்று முறை அழுத்திச் சொல்வதன் மூலம், இதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்கிறார் சிவவாக்கியர்.இக்கால மனிதர்களின் தவறான நம்பிக்கைகளும், சிவவாக்கியரின் சாட்டையடியும்தொழில்நுட்பம் வளர்ந்த இந்த 2020-களில் கூட, மனிதன் மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து விடுபடவில்லை. சிவவாக்கியரின் வரிகள் இன்றைய மனிதர்களின் எந்தெந்தப் பிழையான போக்குகளை மறுக்கின்றன என்று பார்ப்போம்:மரணத்திற்குப் பின் செய்யும் போலிச் சடங்குகள்:இறந்த முன்னோர்களுக்கு உணவளிப்பதாகக் கூறிச் செய்யப்படும் சடங்குகளும், அவர்கள் திதி கொடுப்பதால் மீண்டும் ஆவியாக வந்து ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கையும் இன்றும் தொடர்கிறது. "உயிர்கள் உடற்புகா" என்ற வரியின் மூலம், போன உயிர் போனதுதான், அவர்கள் சடங்குகளுக்காகத் திரும்பி வரப்போவதில்லை என்பதைச் சிவவாக்கியர் தெளிவுபடுத்துகிறார்.போலிச் சித்தர்களும், 'மறுபிறவி' ஏமாற்றுகளும்:இன்றளவும் சில போலிச் சாமியார்கள் தாங்கள் இறந்தவர்களைப் பிழைக்க வைப்பதாகக் கூறி ஏழை மக்களை ஏமாற்றி வருகின்றனர். "இறந்தவர் பிழைப்பதில்லை... இல்லையே!" என்ற சித்தரின் முழக்கம், இத்தகைய ஆன்மிக வியாபாரிகளின் முகத்திரையைக் கிழிக்கிறது.கடந்த காலத்தைப் பற்றியே புலம்புதல்:"கறந்த பால் முலை புகா" என்பது ஒரு சிறந்த உளவியல் தத்துவம். நடந்து முடிந்த தவறுகளையோ, இழந்த வாய்ப்புகளையோ நினைத்து இக்கால மனிதர்கள் மன அழுத்தத்திற்கு (Depression) ஆளாகிறார்கள். கடந்த காலத்தை மாற்ற முடியாது என்பதை இயற்கை உதாரணங்கள் மூலம் சிவவாக்கியர் சுட்டிக்காட்டுகிறார்.இக்கால மனிதனுக்குரிய 'உண்மை ஆன்மிகம்' எது?இந்த நெகிழ்ச்சியற்ற உண்மையை உள்வாங்கிக் கொண்டால், இன்றைய மனிதன் எப்படி வாழ வேண்டும்? அதுவே சிவவாக்கியர் காட்டும் நவீன ஆன்மிகம்:பழைய/தவறான பார்வைசிவவாக்கியர் காட்டும் புதிய/உண்மை ஆன்மிகம்இறந்த பின் சொர்க்கம் போகலாம் என வாழ்தல்.இருக்கும் போதே நல்வாழ்வு: உயிர் இருக்கும் போதே பிறருக்கு உதவி செய்து, தர்மத்தோடு வாழ்வதே ஆன்மிகம்.இறந்தவர்களுக்காகச் சடங்குகளில் பணம் விரயம் செய்தல்.வாழும் போதே பெற்றோரைப் பேணுதல்: இறந்த பின் செய்யும் திதியை விட, வாழும் போது பெற்றோருக்குத் தரும் அன்பும் சோறுமே முக்கியம்.கடந்த காலத் தவறுகளை நினைத்து வருந்துதல்.நிகழ்காலத்தில் வாழ்தல்: உதிர்ந்த பூ மர புகாது. எனவே, 'இன்று' என்ற கணத்தில் விழிப்புணர்வோடு வாழப் பழகுதல்.முடிவுரைசிவவாக்கியரின் இந்த ஆன்மிகச் சிந்தனை, மனிதனைப் பயமுறுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல; மாறாக, அவனை மாயையிலிருந்து எழுப்புவதற்காகப் பாடப்பட்டது."இறந்தவர் பிழைப்பதில்லை" என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் போதுதான், மனிதனுக்கு இந்த 'வாழ்க்கை' எவ்வளவு மதிப்புமிக்கது என்பது புரியும். மரண பயம் நீங்கி, போலிச் சடங்குகளைக் கைவிட்டு, சக மனிதர்களிடம் அன்பைச் செலுத்தி, இயற்கையோடு இயைந்து வாழ்வதே இக்கால மனிதன் சிவவாக்கியரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆகச்சிறந்த ஆன்மிகப் பாடம்!

 

 தீபம் -ஆன்மிகம் வலம்

சிறு கதை -: 'மாயையின் மயக்கம்' -பகுதி: 01



ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர்.

அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட,  அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வெள்ளைப் பருத்தி சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி உடன் ஒரு உள்ளூர் வாலிபனாக பார்வைக்கு தோன்றினாலும், அவரது முகம் இன்னும் வெளிநாட்டு நிலங்களின் புத்துணர்ச்சியை பறைசாற்றிக் கொண்டுதான் இருந்தது. அது அவனால் மறைக்க முடியவில்லை. மற்றும் அவனது இதயம், தன் தாய் தந்தை பிறந்த மண்ணின் வாசனையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது.

முதலில், அவன் தமிழ் கடவுள் முருகனின் முன் உண்மையாக, பக்தியாக, பண்பாடாக வழிபடத் தான் அங்கு வந்தான். என்றாலும் பட்டு, நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான, 'அலங்கார கந்தனின்' மீது கண்கள் பதிந்த பொழுது அவன் தடுமாறினான்.

அந்த தடுமாற்றத்தில் தான், கூட்டத்தில், தன் தோழிகளுடன் நின்றிருந்த ஒரு இளம் பெண், அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அழகைக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டான். கோயில் விளக்குகளின் கீழ் அவளுடைய சேலை மின்னியது, அவளுடைய கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு அசைவிலும்  ஒலித்தன, ஒளிர்ந்தன. அவளுடைய கரும் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் காற்றோடு நடனமாடின. மேளம் மற்றும் கோயில் மணிகளின் சத்தங்களுக்கு மேலே அவளுடைய சிரிப்பு மின்னியது. அருணுக்கு, அவள் வெறும் பெண் அல்ல - அவள் "அலங்காரக் காந்தை"  யாகத்  தோன்றினாள்!

அன்று மாலை முதல், அருணின் உள்ளம் அவளை அமைதியாகத் தேடி அலையத் தொடங்கியது. அவன் இப்ப அலங்கார கந்தனுக்காக அல்ல, மாறாக அலங்கார காந்தைக்காகத் நல்லூர் வரத் தொடங்கினான்.

முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே

முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே 

உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா 

மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே!

சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே

சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே

பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே

கண்திறந்து பார்க்காயோ கருணை காட்டாயோ !!

திருவிழாவின் பத்தாம் நாள் இன்று. நல்லூரைச் சுற்றி பல பல குளிர்பானங்கள், வளையல்கள், சேலைகள் மற்றும் இனிப்புகளால் கடைகள் நிரம்பி இருந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் பொன் மஞ்சத்தில் வரும் ​​ஆகஸ்ட் ஏழாம் நாள். இந்த 7 ஆம் எண் மதத்தில் -   இஸ்லாத்தில் 7 வானங்கள், கிறிஸ்தவத்தில் 7 படைப்பின் நாட்கள், இந்து மதத்தில் 7 சக்கரங்கள் எனவும்,  இயற்கையில் - வாரத்தில் 7 நாட்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 இசைக் குறிப்புகள் எனவும்  மற்றும் வரலாற்றில் - உலகின் 7 அதிசயங்கள் எனவும் தோன்றுவதால், பல மேற்கத்திய மற்றும் கிழக்கு கலாச்சாரங்களில் 7 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அருண் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துபவன் அல்ல. என்றாலும், இன்று எனோ அது அவனுக்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. அந்த உற்சகம் கொடுத்த தைரியத்தில், அவன் அவளை அணுகி, "எக்ஸ்க்யூஸ் மீ [Excuse me]" என்றான்.

பச்சை நிற சுடிதாரில் பச்சைகிளி போல் போஸ் [Pose] கொடுத்துக் கொண்டு, வெள்ளைக் கொடி ஒன்று படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்தது போல, கொண்டையில் மல்லிகை மாலை சூடிக்கொண்டு, தன் தோழிகளுடன் நின்ற அவள் கண்களில் ஒரு கவர்ச்சி  தீபம் எரிந்து கொண்டு இருந்தது.

அவள் சற்று தலை நிமிர்ந்து, மென்மையான வார்த்தைகளில்சொல்லுங்க  ப்ளீஸ் [Please]’ .. என்ன வேணும்?” என்றாள். அந்தப்ளீஸ்அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாககாடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்றவைத்தது போல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.”யம் [I am] அருண்என்றான்.

அவள் கண்களால் ஒரு வித வலை வீசியபடி நான்ஆரணிஎன்றாள் தயங்கியபடி.பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும்போது அது இன்னும் அழகாகிவிடுகிறது! அது மட்டும் அல்ல, ஆலய வளவில், மாகாளி ; பார்வதி போன்ற இறைவிகளின் பெயரைக்  கொண்ட அவளில், மேலும் ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் அவனுக்குத் தானாக மலர்ந்தது  நாம் ரியோ [Rio] வுக்கு போகிறோம், நீங்களும் இணையலாம். ஆறுதலாக அங்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வோம், நீங்கள் பிரீ [free] என்றால்? எங்களுடன் வரலாம்" என்றாள், எந்த தயக்கமும் இன்றி, இதமான வரவேற்பு புன்னகையுடன்.

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 02 தொடரும்

👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக....