திருக்குறள் தொடர்கிறது…
106.
இரவு
👉குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின்
கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
மு.வ உரை:
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம்
இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது
இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால்
பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.
கலைஞர் உரை:
கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே
ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான்
பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.
English Explanation:
If you meet with those that may be
begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame
and not yours.
👉குறள் 1052:
இன்பம் ஒருவற் கிரத்தல்
இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
மு.வ உரை:
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால்,
அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல்
தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
கலைஞர் உரை:
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும்
துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும்
அதனால் இன்பமே உண்டாகும்.
English Explanation:
Even begging may be pleasant, if
what is begged for is obtained without grief (to him that begs).
👉குறள் 1053:
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார்
முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து.
மு.வ உரை:
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும்,
உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது
என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.
கலைஞர் உரை:
உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும்
கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.
English Explanation:
There is even a beauty in standing
before and begging of those who are liberal in their gifts and understand their
duty (to beggars).
👉குறள் 1054:
இரத்தலும் ஈதலே போலும்
கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
மு.வ உரை:
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும்
அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப்
பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
கலைஞர் உரை:
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக்
கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்.
English Explanation:
To beg of such as never think of
withholding (their charity) even in their dreams, is in fact the same as giving
(it oneself);
குறள் 1055:
கரப்பிலார் வையகத் துண்மையாற்
கண்ணின்றிரப்பவர் மேற்கொள்வது.
மு.வ உரை:
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை
மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
சாலமன் பாப்பையா உரை:
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால்
கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர்
இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.
கலைஞர் உரை:
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும்
பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.
English Explanation:
As there are in the world those
that give without refusing, there are (also) those that prefer to beg by simply
standing before them.
👉குறள் 1056:
கரப்பிடும்பை யில்லாரைக்
காணின் நிரப்பிடும்பையெல்லா மொருங்கு கெடும்.
மு.வ உரை:
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக்
கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக்
கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
கலைஞர் உரை:
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும்
இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.
English Explanation:
All the evil of begging will be
removed at the sight of those who are far from the evil of refusing.
👉குறள் 1057:
இகழ்ந்தெள்ளா தீவாரைக்
காணின் மகிழ்ந்துள்ளம்ள்ளுள் உவப்ப துடைத்து.
மு.வ உரை:
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக்
கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக்
கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.
கலைஞர் உரை:
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும்
வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.
English Explanation:
Beggars rejoice exceedingly when
they behold those who bestow (their alms) with kindness and courtesy.
👉குறள் 1058:
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா
ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று.
மு.வ உரை:
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின்
இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய்
விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின்
போக்குவரத்தாகவே ஆகிவிடும்.
கலைஞர் உரை:
வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை
நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும்
வேறுபாடே இல்லை.
English Explanation:
If there were no beggars, (the
actions done in) the cool wide world would only resemble the movement of a
puppet.
👉குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம்
இரந்துகோள்மேவார் இலாஅக் கடை.
மு.வ உரை:
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக்
கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர்
இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?
கலைஞர் உரை:
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில்,
பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
English Explanation:
What (praise) would there be to
givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).
👉குறள் 1060:
இரப்பான் வெகுளாமை வேண்டும்
நிரப்பிடும்பைனேயும் சாலும் கரி.
மு.வ உரை:
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க
வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது;
வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான
சான்றாகும்.
கலைஞர் உரை:
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது
தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.
English Explanation:
He who begs ought not to be angry
(at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient
reason (for so doing).
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக