நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
மனைவி: வீட்டுல நீங்க சொல்றதுதான் நடக்குமா, இல்ல நான் சொல்றதுதான் நடக்குமா?
கணவன்: கண்டிப்பா நான் சொல்றதுதான் நடக்கும்.
மனைவி: (கோபமாக..குறுக்கிட்டு)) என்ன சொன்னீங்க?
கணவன்: " கண்டிப்பா நான் சொல்றதுதான் நடக்கும்"னு நீங்க சொல்லணும்னு சொல்ல வந்தேன்!
-02-
மனைவி: ஏங்க, நம்ம கல்யாண மணவறை போட்டோவை ஏன் இவ்வளவு நேரமா பார்த்துட்டு இருக்கீங்க?
கணவன்: அந்த போட்டோவுல , மணவறைக்கு நீ வரமுதலில , மணவறையில இருக்கிற அந்த சிரிச்ச மூஞ்சிக்காரன் யாருன்னு யோசிச்சுட்டு இருக்கேன்!
-03-
மனைவி: என்னங்க, கல்யாணத்துக்கு முன்னாடி "உனக்காக ஆகாயத்துல இருந்து நிலவையே கொண்டு வருவேன்"னு சொன்னீங்களே?
கணவன்: இப்போ நிலவே என் வீட்டுக்குள்ள இருக்கும்போது, நான் எதுக்கு வெளிய போகணும்? (உஷார்!)
-04-
கணவன்: டாக்டர், என் மனைவிக்கு காது சுத்தமா கேட்கலைன்னு நினைக்கிறேன்.
டாக்டர்: டெஸ்ட் பண்ணலாம், அவங்க பின்னாடி போய் மெதுவா கூப்பிடுங்க.
கணவன்: (மனைவி பின்னால் போய்) "என்ன சமையல்?" (பதில் இல்லை. இன்னும் நெருங்கி போய்) "என்ன சமையல்?" (பதில் இல்லை. காதருகே போய்) "என்ன சமையல்?"
மனைவி: (கடுப்பாகி) மூணு தடவை "முட்டை குழம்பு"ன்னு சொல்லிட்டேன், உங்களுக்குத்தான் காது கேட்கலையா?
-05-
மனைவி: கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு, ஒரு தடவை கூட எனக்கு ஒரு தங்க நகை வாங்கித் தரலையே!
கணவன்: தங்கமான மனசு இருக்கிறவங்களுக்கு எதுக்குமா தங்கம்?
-06-
மனைவி: ஏங்க, பக்கத்து வீட்டுக்காரர் அவங்க மனைவியை எவ்வளவு அன்பா "கண்ணே, மணியே"னு கூப்பிடறாரு, நீங்க ஏன் அப்படி கூப்பிடறது இல்லை?
கணவன்: அட! அவங்க பேரு எனக்கு நீ இப்ப சொல்லும்வரை தெரியாதுல்ல, அதான்!
-07-
மனைவி: நான் இன்னைக்கு சமைச்சது எப்படி இருக்கு?
கணவன்: சமையல் சூப்பரா இருக்கு, ஆனா இத சாப்பிட்டதுக்கப்புறம் நான் படுக்கையிலிருந்து உயிரோட நித்திரையால நாளைக்கு எழும்புவனோ என்று தான் பயமா இருக்கு!
-08-
கணவன்: எதுக்கு அழுதுட்டு இருக்க?
மனைவி: சீரியல்ல வர்ற ஹீரோயின் செத்துப்போயிட்டாங்க.
கணவன்: (முனகிக்கொண்டே) நிஜ ஹீரோ இங்க உயிரோடயே செத்துக்கிட்டு இருக்கான், இவளுக்கு அந்த கவலை இல்லை!
-09-
மனைவி: ஏங்க, நம்ம நாய் ஏன் இப்படி என்னைப் பார்த்தே குரைக்குது?
கணவன்: அதுக்கு உன்மேல எந்த தப்பும் இல்லை, அது நீ போட்டிருக்கிற மேக்கப்பைப் பார்த்து பயப்படுது!
-10-
மனைவி: ஏங்க, நான் அழகா இருக்கேனா?
கணவன்: (பேப்பர் படித்துக்கொண்டே) ஆமா!
மனைவி: பார்க்காமலேயே எப்படிச் சொல்றீங்க?
கணவன்: பார்த்துட்டு சொன்னா அப்புறம் பொய் சொல்ல முடியாதுல்ல!
-11-
நிருபர்: நீங்க ஏன் கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்க?
அரசியல்வாதி: ஒரே இடத்துல இருந்தா பாசி பிடிச்சுடும்ல, அதான் 'சுழற்சி முறை'யைக் கடைபிடிக்கிறேன்!
-12-
அரசியல்வாதி: நான் செத்த பிறகு என் உடலைத் தானம் பண்ணிடலாம்னு இருக்கேன்.
நண்பர்: ரொம்ப நல்ல விஷயம், ஆனா உங்க 'நாக்கை' மட்டும் யாருக்கும் கொடுத்திடாதீங்க, அது பாவம் நிறைய பொய் பேசிப் பழகிடுச்சு!
-13-
பையன்: அப்பா, அரசியல்வாதிக்கும் சாதாரண மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
அப்பா: சாதாரண மனுஷன் தப்பு பண்ணா, சட்டம் அவனை ஜெயிலுக்கு அனுப்பும், , அரசியல்வாதி தப்பு பண்ணா சட்டம் ஜெயிலுக்குப் போயிடும்!
-14-
தொண்டர்: தலைவரே, எதிர் கட்சியினர் நம்ம ஊழலைப் பத்தி பேசுறாங்க.
தலைவர்: அவங்களுக்கெல்லாம் 'பகிர்ந்து' கொடுக்கலையான்னு கேளு!
-15-
வாக்காளர்: உங்களுக்கு ஓட்டு போட்டா எங்களுக்கு என்ன கிடைக்கும்?
அரசியல்வாதி: அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை என்னைப் பார்க்குற 'பாக்கியம்' உங்களுக்கு கிடைக்கும்!
-16-
மனைவி: ஏன் தூக்கத்துல கத்திட்டு இருக்கீங்க?
கணவன்: கனவுல நான் ஒரு நேர்மையான அரசியல்வாதியா இருந்தேன், அந்த அதிர்ச்சியிலதான் கத்துறேன்!
-17-
ஆசிரியர்: உலகத்துலேயே ரொம்பப் பழமையான விலங்கு எது?
மாணவர்: 'வரிக்குதிரை' சார். ஏன்னா அது இன்னும் கருப்பு,வெள்ளை யாகவேதான் இருக்கு!
-18-
நேர்காணல் செய்பவர்: எங்க கம்பெனிக்கு ஏன் வர விரும்புறீங்க?
வேலை தேடுபவர்: ஏன்னா, உங்க கம்பெனி வாசல் கதவுல "ஆட்கள் தேவை"ன்னு போட்டுருந்தது, அதான் வந்தேன்!
-19-
கைபேசியில் டாக்டர்: ஒரு மாதம் முன் நான் சொன்ன மாதிரி தினமும் காலையில 5 மைல் ஓடுறீங்களா?
கைபேசியில் நோயாளி: ஆமா டாக்டர், இப்போ நான் வீட்டுல இருந்து 150 மைல் தள்ளி இருக்கேன். இனிமே எப்படி வீட்டுக்குத் திரும்புறதுன்னு தான் தெரியல!
-20-
ஊழியர்: சார், எனக்குச் சம்பளம் பத்தல, கொஞ்சம் ஏத்திக் கொடுங்க.
முதலாளி: இப்போதான் உனக்குக் கல்யாணம் ஆச்சுன்னு சொன்னாங்க?
ஊழியர்: ஆமா சார்.
முதலாளி: ஆபீஸ்ல நடந்த விபத்துக்கு நாங்க நஷ்ட ஈடு கொடுப்போம், ஆனா வீட்டுல நடந்த விபத்துக்கு (கல்யாணம்) நாங்க பொறுப்பில்லை!
தொகுப்பு : செ .மனுவேந்தன்/
theebam.com / ttamil.com / dheebam / theebam web