"அறிவியல் நோக்கில்....பகுதி-26 -"பெளத்தம் ஒரு அலசல்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 26 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'சோழ மன்னன் ஒருவன் 12000 இலங்கையரைத் சிறைபிடித்தானா?'

 



வசபாவின் [வசபனின்] மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasikatissa] அவனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் வசபாவின் மாமா மற்றும் மாமன் மகள் பற்றிய ஒரு கதை உள்ளது. வங்கனாசிகதிஸ்ஸ இராசவலியில் வன்னேசினம்பாபா [Vannesinambapa] ஆகும். சோழ நாட்டு மன்னன் ஒருவன் படையுடன் வந்து பன்னிரண்டாயிரம் பேரைத் தன் நாட்டிற்கு சிறைபிடித்து அழைத்துச் சென்றதாக இராசவலிய கூறுகிறது. இந்த மன்னனைப் பற்றிய ஒரு கதை  இராவலியில் காணப்படுகிறது, இது இராமாயணத்தில் உள்ள ஒரு கதையை ஒத்ததாகவும், தமிழில் உள்ள பொற்கை குலசேகர பாண்டியனைப் பற்றிய மற்றொரு கதையைப் போலவும் உள்ளது. இருப்பினும், மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. கி.பி 3ஆம் நூற்றாண்டு (கி.பி. 201) முதல் கி.பி 6ஆம் நூற்றாண்டு (கி.பி. 501) வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு முன்பு இலங்கை மீது படையெடுக்கும் திறன் கொண்ட ஒரு சோழ மன்னன் இருந்தான் என்பது நம்பகமானதல்ல.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த பொற்கைப் பாண்டிய மன்னனைப் [Golden Handed Pandya] பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் (குறிப்பு: மதுரை காண்டம் - கட்டுரை காதை) உள்ளது. இவனுக்கு  தங்கத்தால் செய்யப்பட்ட செயற்கைக் கை பொருத்தப்பட்டது. என்றாலும் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.

 

கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான்

பொற்கையான் ஆனகதை போதாதோ- நற்கமல

மன்றலே வாரி மணிவா சலையசைக்கத்

தென்றலே ஏன் வந்தாய் செப்பு?”

[கம்பர்]

 

ஒருமுறை கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் மனைவியுடன் படுத்திருந்தார். இருவரும் உறங்கும் நேரம் வந்ததும் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்ட கம்பர் படுக்கையில் இருந்து எழுந்து கதவைத் திறந்தார். அப்பொழுது தென்றல்தான் கதவைத் தட்டியது என்பதை உணர்ந்தார். உடனடியாக  'காற்றுடன் பேசுவது' போல இந்த பாட்டை பாடி,'கொற்கை பாண்டியன் குலசேகரப் பெருமான், ஊரார் வீட்டுக் கதவைத் தட்டிய ஒரே தவறுக்காக பொன் கை பாண்டியனாக மாறிய கதை உனக்குத் தெரியுமா?' என்று காற்றிடம் கேட்டார்.

 

அவன் மகன் கஜபாகுக்க காமினி [Gajabahuka Gamani] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கஜபாகுக்க காமினி என்பது இராசவலியில் உள்ள முதலாம் கஜபாகு [Gajabahu I] என்றும், மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் சொல்லப்பட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக, இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறுகிறது. முன்பு குறிப்பிட்டது போல் வசபா ஒரு தமிழனாக இருக்கலாம்? எனவே கஜபாகுக்க காமினியும் தமிழனாக இருக்கலாம்?

 

சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்த போது, மன்னனின் அழைப்பின் பேரில், இந்திர விழாவிற்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை அரசனான கஜபாகுவும் (முதலாம் கஜபாகு) ஒருவன் ஆகும். பல்லவ மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய மன்னர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாததன் அடிப்படையில், இந்த இதிகாசத்தின் காலம் முதன் முதலில் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. பின்னர் கஜபாகுவின் காலத்தின் அடிப்படையில், கி.பி. 171 முதல் 193 வரை, அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த தமிழ் மன்னர்களுக்கும் இலங்கை மன்னர்களுக்கும் அன்றைய கால கட்டத்தில் பகை ஒன்றும் இருக்கவில்லை. இலங்கை மன்னர் கஜபாகு தென்னிந்தியாவின் தமிழ் மன்னர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தீபவம்சமும் மகாவம்சமும் அதைப் பற்றி மௌனமாக இருக்கின்றன. கஜபாகு என்ற மன்னன் இலங்கையில் அண்மைக் காலம் வரை நிலவிய பத்தினி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தான். தீபவம்சமும், மகாவம்சமும் கஜபாகு மன்னனைப் பற்றி அதிகம் சொல்லவில்லை.

 

👉👉👉👉

 

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

 

 

Part: 26 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did a Chola king capture 12,000 Sri Lankans?'

 


Vasabha’s son Vankanasikatissa ruled after him for three years. There is s story about Vasabha’s uncle and uncle’s daughter in the Mahavamsa. Vankanasikatissa is the Vannesinambapa in the Rajavaliya. The Rajavaliya says that a king of Soli country came with an army and took twelve thousand people to his country. There is a tale in the Rajavaliya about this king, which is very similar to a story in the Ramayana and similar to another story about the Golden Hand Kulasekara Pandiyan in Tamil. However, the other two chronicles did not say anything in this regard. The period from the 3rd century A. D. (201 A. D.) to the 6th century A. D. (501 A. D.) is considered a dark period in the history Tamil Nadu as there is no detail available about this period. It is not trustworthy to believe that there was a Chola king with the capacity to invade Lanka just prior to this period. His son Gajabahukagamani ruled for twenty-two years. Gajabahukagamani is the Gajaba in the Rajavaliya and ruled for twenty-four years, instead of twenty-two in the other two chronicles. As indicated earlier, Vasabha could be a Tamil. Therefore, Gajabahukagamani could also be a Tamil. He is the Gajabahu who went to Tamil Nadu to participate in the Indravill(zz)a on the invitation of the very famous Chera king Cheran Senguttuvan. There was no enmity between the Tamil kings in Tamil Nadu and the Lanka kings. He, the king Gajabahu, brought the Pattini cult to Ceylon, which prevailed in Lanka until very recently. The Dipavamsa and the Mahavamsa have nothing much to say about the king Gajabahukagamani.

 

 

நன்றி 

Thank

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

 

பகுதி / Part: 27 தொடரும் / Will follow

கடனையும் கடந்துவிடு

 


துர்நாற்றத்துடன் ‘வாயு’ வெளியேறுதல்

குடல் சொல்லும் மறைமுகச் செய்தி

 


வயிறும் குடலும் மனித உடலின் அமைதியான இயந்திரங்கள். அவை நன்றாக இயங்கினால் உடல் முழுவதும் சீராக இருக்கும்; சிறிய மாற்றமே ஏற்பட்டாலும் பல அறிகுறிகள் மூலம் உடலுக்குள் ஏதோ சமநிலை குலைந்துள்ளது என்று உணர்த்தும். அவற்றில் பொதுவாக பலர் கவனிக்காமல் விடும் ஒன்றுதுர்நாற்றத்துடன் வாயு (gas) வெளியேறுதல்.

 

இயல்பானதா? அல்லது எச்சரிக்கையா?

மனித உடலில் வாயு உருவாகுவது ஒரு இயல்பான ஜீரண செயல்முறை. நாம் உணவு எடுத்துக்கொள்ளும் போது, அது குடலில் உடைந்து ஜீரணமாகும். குறிப்பாக நார்ச்சத்து (fiber) நிறைந்த உணவுகள் குடலில் உள்ள நன்மைபுரியும் பாக்டீரியாக்களால் உடைக்கப்படும் போது ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் உருவாகின்றன. இவை உடலிலிருந்து வெளியேறுவது இயல்பானதே.

ஆனால், அந்த வாயுவிற்கு துர்நாற்றம் அதிகமாக இருந்தால், அது சாதாரண ஜீரணத்தை விட குடல் சூழலில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

 

துர்நாற்றம் உருவாகும் அறிவியல் காரணம்

குடலில் உள்ள சில பாக்டீரியாக்கள் சல்பர் (Sulfur) சார்ந்த சேர்மங்களை உடைக்கும் போது ஹைட்ரஜன் சல்பைடு போன்ற துர்நாற்ற வாயுக்கள் உருவாகின்றன. இதுவேமுட்டை அழுகியநாற்றம் போன்ற வாசனைக்கு முக்கிய காரணம்.

உணவு, குடல் நுண்ணுயிர்கள் (gut microbiome), மனநிலை, தூக்கமின்மை ஆகியவை இந்த வாயு உற்பத்தியை நேரடியாக பாதிக்கின்றன.

 

எந்த உணவுகள் துர்நாற்ற வாயுவை அதிகரிக்கும்?

சில உணவுகள் குடலில் அதிக காற்று மற்றும் நாற்றத்தை உருவாக்கும்:

🫜முட்டைகோஸ், ப்ரோக்கோலி, காலிஃப்ளவர் போன்ற கீரை வகைகள்

🫜பயறு, கொண்டைக் கடலை போன்ற பருப்பு வகைகள்

🫜முட்டை மற்றும் அதிக புரதம் கொண்ட உணவுகள்

🫜எண்ணெய் மற்றும் ஆழ் வறுத்த உணவுகள்

🫜அதிக சர்க்கரை மற்றும் ஜங்க் உணவுகள்

🫜பால்வர்க்க உணவுகள் (லாக்டோஸ் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு)

இவை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் குடலில் பாக்டீரியா காய்ச்சல் (fermentation) அதிகரித்து வாயு மற்றும் நாற்றம் உருவாகிறது.

 

குடல் ஆரோக்கியத்துடன் உள்ள தொடர்பு

துர்நாற்ற வாயு சில சமயங்களில் குடல் சமநிலை குலைந்ததற்கான சிக்னலாக இருக்கலாம். குறிப்பாக:

🍖குடல் பாக்டீரியா சமநிலை மாற்றம் (Dysbiosis)

🍖செரிமான கோளாறு

🍖“குடல் எரிச்சல் கோளாறு”Irritable Bowel Syndrome (IBS)

🍖லாக்டோஸ் இன்டாலரன்ஸ்

🍖குடல் அழற்சி

🍖மலச்சிக்கல்

ஒரு நாளில் 10–20 முறை வாயு வெளியேறுவது சாதாரணம். ஆனால் 20–30 முறை மீறி, அதுவும் கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், அது உணவு அல்லது குடல் சூழல் மாற்றத்தைக் குறிக்கலாம்.

 

வாழ்க்கை முறை காரணங்களும் முக்கியம்

உணவு மட்டுமல்ல, நமது வாழ்க்கை முறை கூட குடல் செயல்பாட்டை தீர்மானிக்கிறது:

⚡தூக்கமின்மை

மன அழுத்தம்

வேகமாக உணவு சாப்பிடுதல்

தண்ணீர் குறைவாக குடித்தல்

உடற்பயிற்சி இல்லாமை

மன அழுத்தம் அதிகரித்தால் குடல் இயக்கமும் மாறி வாயு பிரச்சனை அதிகரிக்கலாம். “குடல்மனம் (Gut-Brain connection) என்பதே இதற்கான முக்கிய காரணம்.

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பின்வரும் அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்:

🌖கடுமையான துர்நாற்ற வாயு தொடர்ந்து இருப்பது

🌖வயிற்று வீக்கம் மற்றும் வலி

🌖அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்

🌖உணவு எடுத்துக்கொண்ட உடன் அதிக காற்று

🌖உடல் எடை திடீர் குறைவு

இவை நீடித்தால் அது குடல் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

 

குடல் ஆரோக்கியத்தை பேணும் எளிய வழிகள்

🥘நார்ச்சத்து நிறைந்த இயற்கை உணவுகளை சமநிலையாக சாப்பிடுங்கள்

🥘தினமும் போதுமான தண்ணீர் குடிக்கவும்

🥘மெதுவாக நன்றாக மென்று சாப்பிடும் பழக்கம் உருவாக்கவும்

🥘தயிர், மோர் போன்ற ப்ரோபயாட்டிக் உணவுகள் சேர்க்கவும்

🥘உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி அவசியம்

🥘அதிக எண்ணெய் மற்றும் செயற்கை உணவுகளை குறைக்கவும்

🥘மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த தியானம் அல்லது யோகா செய்யவும்

 

👉

துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது எப்போதும் நோயின் அறிகுறி என்றில்லை; ஆனால் அது குடல் ஆரோக்கியத்தின் ஒரு சிறிய சுட்டுக்காட்டாக இருக்கலாம். உடல் எப்போதும் சின்ன சின்ன அறிகுறிகள் மூலம் நமக்கு தகவல் தருகிறது. அவற்றை கவனித்து உணவு, வாழ்க்கை முறை மற்றும் குடல் ஆரோக்கியத்தை சீராக பேணினால், ஒட்டுமொத்த உடல் நலனும் மேம்படும்.

சீரான குடல்சுறுசுறுப்பான உடல்என்பதே நீண்டநாள் ஆரோக்கியத்தின் அடிப்படை உண்மை.

 

தீபம் உடல்நலம்