ஒளிர்வு-(41)- பங்குனி,2014 எம்மைப்பற்றி....,

அனைவருக்கும் வணக்கம்,
தீபம் சஞ்சிகையின் வாசகர்களை நோக்கிய பணலாப நோக்கமற்ற கலைப் பணி தொடரும் வேளையில், யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக எனும் எண்ணத்துடன் யாம் செயற்பட ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கும் அனைவரினையும் நன்றியுடன் நோக்குகிறோம்.
பொறாமை என்பதனை நாம் என்றும் எதிரியாகவே எண்ணுகிறோம்.அதன் பாதகமான விளைவுகளை அவ்வப்போது எமது சஞ்சிகையில் வெளியிட்டும் வந்திருக்கிறோம்.ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்த்தி எனும் கவியரசின் சிந்தனை கொண்டு அனைவரும் இணைந்து வளர அனைத்து ஊடகங்களுடனும் கைகோர்த்து நிற்கிறோம்.முதலில்,
 சிந்தனைஒளி
நன்மையையும் தீமையும் மனிதனுக்கு இறைவனால் அளிக்கப்படுவதில்லை. மனிதனால் மனிதனுக்கு கிடைக்கப்பெறுகிறது.
ஒருவரின் பாவமோ அல்லது புண்ணியமோ இன்னொருவர் சுமப்பதற்கு அவை அரிசியோ, மாவோ அல்ல.அவரவர்தான் சுமக்க வேண்டும்.

உயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்

 1902ம் ஆண்டில் W.W.Jacobs என்பவரால் எழுதப்பட்ட சிறுகதை Monkey;s Paw( குரங்கு நகம்) என்பதாகும். இது பின்னர் ஓரங்க நாடகமாகவும், பல தடவை திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டது.

ஒரு சிறிய அன்பான குடும்பம். தந்தை, தாய், ஒரு அன்பான மகன். மூவர் மாத்திரமே. தொலைதூரமெல்லம் போய்வரும் ஒரு நண்பர், இந்தியாவில் கிடைத்ததென்று ஒரு குரங்கு நகத்தை அவர்களுக்கு கொடுக்கிறார். மூன்று விருப்பங்களைக் கேட்டால் அது தரும் என்று சொல்கிறார். மனைவி பணத்தேவை வர பணம் கிடைக்கவேண்டுமென்று கேட்கிறார். பணம் அப்படியே கிடைக்கிறது. ஆனால் பெரிய இழப்போடுதான் அது வருகிறது. அவர்களின் மகன் வேலை செய்யும் தொழிற்சாலையில் விபத்தில் இறந்துவிட நட்ட ஈடாக கிடைக்கிறது. அடுத்த விருப்பமாக, மகன் மீண்டும் திரும்பி வரவேண்டுமென்று தாய் கேட்கிறார்.. உடனே கதவு தட்டிக் கேட்கிறது. இறந்து 10 நாட்களாகியபின்னர், அடக்கம் செய்தபின்னர், விபத்தினால் சிதைந்து போன மகனின் கோலம் எப்படியிருக்கும் என்று தெரிந்த தகப்பன், நகத்தை அவசரமாக எடுத்து "நீ போ" என்கிறான். சத்தம் நின்றுவிடுகிரது.

இந்த ஓரங்க ஆங்கில நாடகநூல், நான் கொழும்பில் இருக்கும்போது, எனக்கு
கிடைத்தது. வாசித்தபோது இதை தமிழில் மேடையேற்றலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. நண்பருக்கு இரவல் கொடுத்து அது திரும்பி வராமல் போக அதை மறந்தும் விட்டேன்.

கனடா வந்ததின் பின்னர் இந்த கதை எனக்கு சொல்லப்பட்டது. அதாவது இதை திரைப்படமாக்கப் போவதாகவும், இதன் திரைக்கதையை எழுதுவதோடு, கதையின் ஒரு முக்கியமான பாத்திரமான தந்தையாக நடிக்கவேண்டுமென்றும் கேட்டார்கள்.

எனக்கு நன்றாகத் தெரிந்த கதை. நான்கு பாத்திரங்களுடன் மேலும் பாத்திரங்களைச் சேர்த்து, தமிழ்மயப்படுத்தி திரைக்கதை, வசனத்தை எழுதினேன்.

ஜனகன் பிக்ஷர்ஸ் சிறீமுருகன் என்பவர் தயாரிப்பாளர். ரவி அச்சுதன் இயக்கம்,
படப்பிடிப்பு என்பவற்றை பார்த்துக்கொள்ள, படத்தில் எனது மனைவியாக ஆனந்தி சிறீதாஸ் (சசிதரன்) மகனாக ரமேஷ் புரட்சிதாசன், எங்கள் குடும்ப நண்பனாக சிறீமுருகன், குடும்ப மருத்துவராக கீதவாணி ராஜ்குமார் என்று முக்கியமான பாத்திரங்களில் நடிக்க படப்பிடிப்பு ஆரம்பமாகியது.

மிசிசாகாவில் ஒரு நண்பர் வீட்டில்தான் பெரும்பான்மையான காட்சிகள் படமாகின. அதே வீட்டுக்காரரின் தொழில் நிறுவனத்திலும், வெலெஸ்லி மருத்துவமனையிலும் முக்கிய காட்சிகள் சில எடுக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிவடைந்தபின்னர், படத்தொகுப்பு, இசை சேர்த்தல், குரல் கொடுத்தல் போன்ற வேலகள் ஆர்.கே.வி.எம்.குமாரின் கவனிப்பில் நடந்து முடிய, படம் வெளியிட தயாராகி விட்டது.

படம் வெளியாகிய முதள் நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கு நிறைந்த காட்சி என்பது கனடா தமிழ்ப் படத்திற்கு அதுவே முதல்தடவை. எதுவாக இருந்தாலும், பார்வையாளர்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியும்வரை, நானும், ஆனந்தியும் Projection Room உள்லே இருந்து கொண்டோம். படம் முடிவடைந்து பலத்த கரகோஷம் எழுப்பபட தான் வெளியே வந்தோம்.

கதையின் தன்மையையிட்டு சர்ச்சைகள் இருந்தாலும் எங்கள் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. முக்கியமாக ஆனந்தி சிறப்பாக நடித்திருந்தார். நல்ல விமர்சனங்கள் வந்தன. மீண்டும் பல தடவைகள் திரையிடப்பட்டது.

நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு வீட்டிற்கு போனபொழுது, அங்கிருந்த ஒரு முதியபெண் மகனை இழ்ந்து தகப்பனும், தாயும் அழுத காட்சியின் பாதிப்பு தனக்கு இப்போழுதும் இருக்கிறது, என்று நினவு மீட்டினார். மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

கனடாவில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அடிகோலியது உயிரே உயிரேதான். அதற்காக தயாரிப்பாளரை பாராட்டலாம்.
அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..தொடரும்

அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :12


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[2]சுமேரியா [பண்டைய மேசொபோடமிய/மெசெப்பொத்தோமியா],இன்றைய ஈராக்/Sumeria [Ancient Mesopotamia],corresponding to modern-day Iraq


[படம்-[1]:1935 இல் ஒல்டுவை பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஆய்வுப்பயணம்.தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ் லீக்கி[மத்தியில்] +தொல்பொருளியல் மாணவி மேரி நிகோல்[வலது பக்கம்].இவர்கள் பின் 1936 இல் திருமணம் செய்து கொண்டார்கள்./A 1935 expedition to Olduvai/Louis Leakey(center) and archaeology student Mary Nicol (right). They wed in 1936]

[படம்-[2]:ஆரம்ப  மனிதக் குடும்பத்தின் எச்சங்களின் புதைகுழிகள் நிரம்பிய முக்கியமான இடங்கள்/Major early hominin sites]






[படம்-[3]:
ஹோமோ எரெக்டஸ்
/Homeoerectus]





[படம்-[4]:எசுன்னா நகரத்தின் ஒரு பகுதியான காபாஜேயிலும் [கி மு 2500],லகாஷ் நகரத்திலும் [கி மு 2350] கண்டுபிடிக்கப்பட்ட சுமேரியன் உருவச் சிலைகள் /Left - 2500 BC Sumerian statue from Khafaje/part of the city-state of Eshnunna; Right - Sumerian scribe circa 2350 BC from Lagash.]

பேராசிரியர் மீவ் லீக்கி[Professor meave leakey/இவர் தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ் லீக்கியின் இரண்டாவது மகனை திருமணம் செய்தவர்] தலைமையிலான  குழு கிழக்கு ஆஃப்ரிக்காவில் கண்ட முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்களை (fossil) தொடர்ந்து ,உலகில் இரண்டு மிகப் பெரிய மனித இடப்பெயர்வு நடந்து இருக்கலாம் என தெரிகிறது.மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படும் ஹோமோ எரெக்டஸ்[Homo erectus:இதன் கருத்து நிமிர்ந்து நிற்கும்/நன்கு நிமிர்ந்து நடக்கும் மனிதன்],  இன மக்களின் பெரிய மனிதப் புலப்பெயர்வு 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன் முதல் ஆரம்பமானது.இந்த இனம் ஆஃப்ரிக்காவில் தோன்றி ஜார்ஜியா[இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடு ]இந்தியா,இலங்கை,சீனா,ஜாவா[ இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு ] வரை பரவியது.இது[ ஹோமோ எரெக்டஸ்] கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்ததுடன் நெருப்பை தமது கட்டுப்பாட்டில் வைக்கக் கூடிய ஆற்றல் உடைய முதல் மனித இனமாகவும் இருந்துள்ளது. இதுவே இன்றைய நவீன மனிதனின் நேரடியான மூதாதையர் ஆகும்.இது எம்மைப்போல உடல் அமைப்பை கொண்டுள்ளது ஆனால் சின்ன கையுடனும் நீண்ட காலுடனும் ஆகும்.இது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 2000,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது.இதன் பிரதான உணவு இறைச்சி ஆகும்.இது ஒரு வேடுவர் சமூகமாக இருந்துள்ளதுஅதன் பின்பு, நீண்ட இடைவெளியின் பிறகு ஹோமோசப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஆஃப்ரிக்கா முழுவதும் 150,000 வருடங்களுக்கு முன் குடியிருந்து,70,000 வருட அளவில் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.
                        
அதன் பின்பு ஒரு நீண்ட இடை வெளியின் பின்  கோமோ சப்பியன்ஸுக்கு  உரிய ஆதிமுன்னோர் சார்ந்த திராவிடர்கள் ஆபிரிக்காவில் இருந்து உணவு, புகலிடம் தேடி சுற்றித்திரிந்தது மத்தியத் தரைக்கடல் [மெடிடேரியன் கடல்] பகுதியை அடைந்தார்கள்.கூட்டமாக வாழ்ந்து.மிருகங்களை வேட்டையாடியும், சைகை மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டும், மற்றும் நெருப்பை கண்டுபிடித்து இருந்தாலும் அவர்களை நாகரிகம் அடைந்தவர்கள் என அழைக்க முடியாது இவர்கள் மினாஸ் பக்கத்தில் இருந்த  பண்டைய கோஸ் தீவை[The old island of “Cos” near MINAS] தமது வாழ்விடமாக அமைத்தார்கள் என கிமு 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க  வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் [கி.மு484-425/Egyptian historian Hiridotus] சான்று கூறுகிறார்.பின் அது எரிமலை வெடிப்பால் அழிந்து போக,அங்கு வாழ்ந்தவர்கள் சிதறி சுமேர் என அழைக்கப்படும் தெற்கு மேசொபோடமியா பகுதிக்குள் நுழைந்தார்கள்.இவர்கள் திராவிடர்கள் தான் என்பது பின்வருவன வற்றில் இருந்து நம்பப்படுகிறது. தென் இந்தியாவில்/இலங்கையில்  பேசப்படும் தமிழைப் போன்ற திராவிட மொழியுடன் சுமேரியன் மொழி ஒரு சேய்மை தொடர்பு[remote relationship] கொண்டுள்ளது.சுமேரியர்கள் முதலாவது சிறப்புமிக்க பாரிய  கோயிலையும் நகரத்தையும் மேலும் எழுத்தையும் கண்டுபிடித்தவர்கள்.அந்த நகரத்தை ஊர் என்றே அழைத்தனர் என்பது கவனிக்கத்தக்கது.ஆலய வழிபாடு,குன்றில் சந்திரன்  தெய்வம் வழிபாடு போன்றவை சுமேரியனுக்கும் தமிழனுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது.

சுமேரியன் தங்களை கறுத்த தலையர்["Sag-giga" meaning the “black-headed"]என அழைக்கின்றனர் . கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் இரண்டு விதமான எதியோபியனை குறிப்பிடுகிறார் . ஆஃப்ரிக்காவில் வாழும் மேற்கு எதியோபியனும் இந்தியாவில் வசிக்கும் கிழக்கு எதியோபியனும் கறுத்த நிறத்தவர் எனவும்,ஆக ஒருவர் சுருட்டை மயிரையும் மற்றவர்   நேரான மயிரையும் கொண்டவர் என்கிறார்.மேலும்"The Ancient History of the Near East, pp. 173–174, London, 1916." இல் சுமேரியனை கறுத்த தலையர் அல்லது கறுத்த முகம் உடையவர் என்கிறது. நினைவுச் சின்னங்கள் தாடி இல்லாமலும் மொட்டை தலையாகவும் உள்ளது.இது இவர்களை செமிடிக் பபிலோனியர்களிடம் இருந்து வேறு படுத்துகிறது. பபிலோனியாரின் இதிகாசத்தில் இருந்தும் பாரம்பரியத்தில் இருந்தும் நாம் அறிவது அவர்களுடைய[சுமேரியர்களின்] பண்பாடு தெற்கில் இருந்து வந்தது என. ஆகவே சேர்  ஹென்ற ரோலின்சன்[Sir Henry Rawlinson] என்பவர்
சுமேரியர் ஆஃப்ரிக்கா எதியோபியன் என இதில் இருந்தும் வேறு சான்றுகளில் இருந்தும் முடிவுக்கு வருகிறார்.ஆனால் இந்த கொள்கையை டாக்டர் எச்.ஆர். ஹால்[Dr Henry Reginald Holland Hall] முற்றாக நிராகரிக்கிறார்.இந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை நாகரிகமாக்கினார்கள் என வாதிடுகிறார்?சுமேரியர்களின் இன மாதிரி அவர்களின் உருவச் சிலைகளில் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவை அவர்களை சுற்றி இருந்தவர்களிடம் இருந்து முற்றாக வேறுபடுவதாகவும் அப்படியே  மொழியிலும் என்கிறார்.இந்தியா திராவிட இன மாதிரியுடன் அவர்கள் ஒத்து போவதுடன் செமிடிக் அற்ற,ஆரியர் அற்ற இவர்களே மேற்கை நாகரிகமாக்க கிழக்கில் இருந்து வந்தவர்கள் என்றும்,இதை நாம் எமது கண்களாலேயே எப்படி இந்தியனும் சுமேரியனும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபடுகிறார்கள் என காண முடியும் என்றும் கூறுகிறார்.

ஹோமோ எரெக்டஸை ஆஃப்ரிக்காவிற்கு வெளியே பரவிவிட்டு  பின்  அது திரும்பி வந்து மீண்டும் ஆஃப்ரிக்காவில் ஹோமோசப்பியன்ஸ் ஆக படிவளர்ச்சியுற்று மீண்டும் ஆஃப்ரிக்காவை விட்டு வெளி யேறியது என்பது ஒரு விந்தையாக உள்ளது.அதாவது ஹோமோசப்பியன்ஸ் எல்லாம் ஒரே இடத்தில் தோன்றியது என்று சொல்லுவது எனக்கு புரியவில்லை, ஏனென்றால் அதற்கு முதல் ஹோமோ எரெக்டஸை இந்தியா,இலங்கை உட்பட பல இடங்களுக்கு பரவி விட்டது என
கூறிவிட்டு.பின் இது வேறு இடங்களில் உயர் படிவளர்ச்சி அடைய ஒரு சந்தர்ப்பமும் இல்லை என கூறுவது போலவும் அல்லது மீன் முழுவதும் ஒரு கடலிலோ அல்லது  ஒரு குளத்திலோ படிவளர்ச்சியுற்றது என கூறுவது போலவும் உள்ளது?பூமத்திய ரேகை பகுதியில் பல இடங்கள் படிவளர்ச்சி அடையக்கூடிய சூழ் நிலையை கொண்டுள்ளன.இந்த கருத்தே முன்பு தொடக்கத்தில் நாம் சுட்டிக்காட்டிய இன்னும் ஒரு கொள்கைக்கு வழி வகுத்தது.இது பல்பிராந்திய மாதிரி ஆகும்.முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா ,ஆசிய,ஐரோப்பியா பிராந்திய குழுக்களில் இருந்து ஒரேசமயத்தில் அந்தந்த இடங்களில் நவீன மனிதர்களாக பரிணாமம் அடைந்ததாக கருதுகிறது.இந்த மாதிரி தான் பரிணாமம் அடைந்தது என்றால்,நாம் மிக இலகுவாக டாக்டர் எச்.ஆர். ஹால் இன் மேல் கூறிய கூற்றையும் புரிந்து கொள்ள முடியும் 

சுருக்கமாக,"ஆஃப்ரிக்காவிற்கு  வெளியே" மாதிரி இரண்டாவது இடப்பெயர்வு 100,000 ஆண்டு களுக்கு முன்பு நடை பெற்று,பழைய மனித இனத்தை முற்றாக  ஈடு செய்தது என்கிறது[Model A). பல்பிராந்திய மாதிரி Model D ஆகும்  அல்லது பங்கிட்டுக்கொடுக்கும் பல்பிராந்திய மாதிரி Model C ஆகும்  ஒரு சமரச இணக்கம் கொண்ட ஆஃப்ரிக்கா வெளியே மாதிரி Model B ஆகும்

(பகுதி-12 அடுத்தவாரம் தொடரும்)