நல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி?

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
எல்லா காரியங்களிலும் குறை கூறுகிற ஒருவரால் எந்த இனிமையான சூழ்நிலையையும் மகிழ்ந்து அனுபவிக்க முடியாது.

ஆசை

நேர்மறையான நபராக மாறுவதற்கு முதலில் தேவைப்படுவது, நேர்மறையான எண்ணம்.
நேர்மறை என்பது ஒரு நறுமணம் போன்றது, நேர்மறையாக இருந்தால் அறிமுகம் இல்லாதவர்களும் கனிவாக நடந்து கொள்வார்கள், உடன்பணியாளர்கள் பாராட்டுவார்கள், சுலபமாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

புதிய முயற்சிகள்

தினசரி வாழ்க்கை சம்பவங்களை பார்த்து, அவற்றை நேர்மறையாக எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து யோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்ற, ஐந்து வழிகளை யோசிக்கவும்.

முக பாவணைகளை வைத்து காரியங்களை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ளலாம். மற்றவரை நம்புகிற தன்மை நேர்மையை வெளிப்படுத்தும்.

பேச்சு மற்றும் உடல் பாவணை

தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளில் நேர்மறையாக இருக்கவும். நட்பு உடையவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் காணப்படும்படி உடல் பாவனைகளை பயன்படுத்த வேண்டும்.

ஒருவர் வியக்கத்தக்கவாறு இருந்தால் அவரை பார்த்து வியக்கவும், நகைச்சுவைகளுக்கு சிரிக்கவும், ஒருவர் புதிதாக செய்தால் அவரை பாராட்டவும், ஒரு காரியத்தை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்ல அனுமதிக்கவும்.

செயல்பாடுகள்

எப்போதும் செயல்பாடற்று ஆழ்ந்த சிந்தனையோடே இருக்கக்கூடாது. பிறருடனோ அல்லது தனியாகவோ நேர்மறையான செயல்பாடுகளை செய்ய வேண்டும்.

நல்ல நகைச்சுவையை பகிர்ந்துகொள்ளவும், இனிமையான ஒரு சம்பவத்தை விவரிக்கவும், விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், வேலை நேரத்திற்கு பிறகு மாலையில் நன்றாக ஓடவும்,

நல்ல ஆரோக்கியமான உடல் உறவை பெற்றிடுங்கள் இவற்றின் மூலமாக நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதை காணலாம்.

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும்

வாழ்க்கை தினந்தோறும் பல அதிர்ச்சிகளை கொடுக்கும். அதன் தாக்கத்தை குறைத்து, தோல்களை குலுக்கி அவற்றை உதரிச் செல்ல வேண்டும்.

சில காரியங்களை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டால் மற்றவர்களுடன் எளிதாக நடந்துகொள்ளலாம்.

ஒரு குறிப்பேட்டை பராமரிக்கவும்

நாளின் எல்லா நிகழ்வுகளையும் எழுதி வைப்பதற்கு பதிலாக, நேர்மறையான காரியங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து அவற்றை குறித்து வைக்கவும்.

சிறிய காரியங்களில் நேர்மறையான காரியங்களை பார்க்கும் போது, எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் இருக்காது.

0 comments:

Post a Comment