திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../16/
[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]
திரிகடுகம்
தொடர்கிறது.....
பாடல்
- 76
மாரி
நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக்
காரியத்தில்
குன்றாக் கணிகையும், வீரியத்து
மாற்றம்
மறுத்து உரைக்கும் சேவகனும், - இம்
மூவர்
போற்றற்கு
அரியார்,
புரிந்து.
விளக்கம்:
மழைக்காலத்தில்
வந்த விருந்தினரும்,
பொருள் வருவாயில் நாட்டம் கொண்ட வேசையும், வெற்றியை
விரும்புகின்ற வீரனும், போற்றுதற்கு உரியராவார்.
பாடல்
- 77
கயவரைக்
கையிகந்து வாழ்தல், நயவரை
நள்
இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி
வடுவான
வாராமல் காத்தல், - இம் மூன்றும்
குடி
மாசு இலார்க்கே உள.
விளக்கம்:
கீழ்மக்களைச்
சேராமல் வாழ்தலும்,
நீதியுடையவரை நட்பு செய்து கொள்ளுதலும், தனக்குப் பழி
வரும் செயல்களைச் செய்யாதிருத்தலும், நல்லவர் செய்கைகள் ஆகும்.
பாடல்
- 78
தூய்மை
உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று
வாய்மை
உடைமை வனப்பு ஆகும்; தீமை
மனத்தினும்
வாயினும் சொல்லாமை; - மூன்றும்
தவத்தின்
தருக்கினார் கோள்.
விளக்கம்:
தூய்மையுடையவராய்
இருத்தலும், உண்மையுடையவராயிருத்தலும், தீமையைத் தருவதனை
நினையாமலும், சொல்லாமலும்
இருத்தலும், தவத்தார்
மேற்கொண்ட கொள்கைகளாகும்.
பாடல்
- 79
பழி
அஞ்சான் வாழும் பவுசும், அழிவினால்
கொண்ட
அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து
இல்
அஞ்சி வாழும் எருதும், - இவர் மூவர்
நெல்
உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய்.
விளக்கம்:
பழிக்கு அஞ்சாமல்
பசு போல் உயிர் வாழ்கின்றவனும், கேடு வந்த போது அரிய தவத்தினை விட்டவனும், தனக்கு
உட்பட்டவளாக இருந்தாலும் மனைவிக்கு அஞ்சி எருது போல் வாழ்பவனும், எப்பொழுதும்
துன்பப்படுவர்.
பாடல்
- 80
முறை
செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்
நிறை
இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்
தேற்றாதான்
பெற்ற வனப்பும், - இவை மூன்றும்
தூற்றின்கண்
தூவிய வித்து.
விளக்கம்:
முறையறிந்து
செய்யாத தலைவனும்,
உறுதி இல்லாதவன் தவமும், ஒழுக்கமில்லாதவன்
அழகும், ஆகிய இம்மூன்றும், புதரில் தூவிய
வித்துக்களாகும்.
திரிகடுகம்
தொடரும்.... ››››››
...............................................................
"மண்ணில் வந்த நிலவே"
"மண்ணில் வந்த
நிலவே, மரகதமே!
கண்ணில் கவர்ந்த என்னிடம் வந்தாயோ?
விண்ணில் மேகம் உன்னை மறைத்ததோ?
வண்ண அழகை இருட்டி மூடியதோ?"
செண்பகமே, என் மனம்
கவர்ந்தவளே!
கண்டதும் காதல் நெஞ்சை வருத்த
பெண்மை சொல்லும் உந்தன் வனப்பு
சுண்டி என்னை இழுப்பது எனோ?
ஆண்மை வளர்ந்து முழுமை பெற
எண்ணிய எண்ணம் விரிந்து மலர
மண்டி இட்டு உன்னிடம் கேட்கிறேன்
கண்மணியே அருகில் வராதது எதோ?
பண்பு போற்றும் மரபுத் தமிழிச்சியே!
வெண்மை உள்ளம் கொண்ட மகளே!
கண்ணியம் தவறா இவன் கேட்கிறான்
கண்ணீர் மல்கா விடை தராயோ?
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
என்னவள் - எனக்கானவள் (குறும்படம்)
ஒளிமயமான எதிர்காலம் 2:
பறக்கும் கார்கள்!சமீபத்திய ஆண்டுகளில் பறக்கும் கார்கள் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நடந்துள்ளன. பல நிறுவனங்கள் பறக்கும் கார்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்கின்றன, மேலும் பல முன்மாதிரிகள் மற்றும் கருத்துகள் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணங்களில் ஒன்று Terrafugia Transition என்ற சீன நிறுவனம் உருவாக்கிய பறக்கும் கார். இந்த வாகனம் புறப்பட்டு செங்குத்தாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பாரம்பரிய கார் போன்று சாலைகளில் ஓட்ட முடியும். இது வீட்டிலும் விடக்கூடியதாக அனுமதிக்கும் மடிப்பு இறக்கைகளைக் கொண்டுள்ளது, மேலும் சுமார் 640 கி.மீ. தூரம் பறக்கக் கூடியது.மற்றொரு உதாரணம் PAL-V Liberty என்ற , டச்சு நிறுவனம் உருவாக்கிய பறக்கும் கார். இந்த வாகனத்தை கார் போன்று சாலைகளில் ஓட்டி, பின்னர் காற்றில் பறக்கக்கூடிய ஊர்தி ஆக மாற்ற முடியும். இது சுமார் 800 கி.மீ. வரை செல்லும். மேலும் 170 கி.மீ. வேகத்தை எட்டும்.இந்த குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளுக்கு மேலதிகமாக, Uber and Airbus போன்ற பல நிறுவனங்களும் பறக்கும் டாக்ஸி சேவைகளின் வளர்ச்சியில் முதலீடு செய்கின்றன. இந்த சேவைகள் பறக்கும் கார்களைப் பயன்படுத்தி பயணிகளையும் பொருட்களையும் விரைவாகவும் திறமையாகவும் பாரம்பரிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை கடந்து செல்லும்.பறக்கும் கார்கள் ஒரு பரவலான யதார்த்தமாக மாறுவதற்கு முன் இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருந்தாலும், இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதையும், பறக்கும் கார்கள் நமது எதிர்கால போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்பதையும் இந்த முன்னேற்றங்கள் நிரூபிக்கின்றன.ஒளிமயமான எதிர்காலம், என் உள்ளத்தில் தெரிகிறது!
🚓தகவல்:செ.சந்திரகாசன்
சிரிக்க.... சில நிமிடம்
நகைச்சுவை-ஜோக்ஸ்
1.😼
நீதிபதி: [குற்றவாளியிடம்] இந்த திருட்டுக் குற்றத்திற்கு
உனக்குப் பத்தாயிரம் ரூபா அபராதம்
விதிக்கிறேன். கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை.
குற்றவாளி: என்னை
ஒரு மணி நேரம் வெளியே விடுங்கள். அபராதத்தை கொண்டு வந்து கட்டி விடுகிறேன்.
2.
[இரண்டு பெண்கள்]
முதல்பெண்: என் கணவர் திருமணமான
புதிதிலேயே என்னை தேவயானி தேவயானி என்று கொஞ்சுவாரு.
இரண்டாமவள்: இப்போ எப்பிடியோ?
முதல்பெண்: தேவையா, நீ தேவையா நீயென்னு எரிஞ்சு விழுகிறார்.
3.
அப்பா: என்னடா... ரிப்போர்ட் காட் டில ரொம்ப கம்மியா மார்க் வாங்கிட்டு வந்திருக்கே?
பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுதப்பா. எதையுமே நிறைய வாங்க முடியல.
4.
நோயாளி:[டாக்டரிடம்] டாக்டர் இந்த
ஆபரேஷனில் நான் பிழைப்பேனா?
டாக்டர்: கவலைப்படாதீங்க....
உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளிவிபரப்படி.....பத்தில் ஒருவர் பிழைப்பார்களாம்..... இது எனக்கு பத்தாவது ஆப்பரேஷன். அதனால நீங்கள்
பிழைச்சுடுவீங்க.
5.
நீதிபதி: ஏன் உங்க
மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: ஆறு மாதமாய்
அவ என்கிட்டே பேசுறதே இல்லை.
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு
வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்.
6.
டாக்டர்:அந்த நோயாளி ரஜினி இரசிகர்
இன்று நினைக்கிறேன்.
நேர்ஸ்: எப்பிடி சொல்லுறீங்க டாக்டர்.
டாக்டர்: ஊசி போட்டு முடிந்ததும் ''என் வலி தனி வலி''
என்று சொல்லுறாரே.
7.
மகன்:அப்பா,உங்களால இருட்டில கையெழுத்துப்
போட முடியுமா?
தந்தை:ஏன் முடியாது!
மகன்: அப்பிடியெண்டால் என்னோட ரிப்போர்ட் காட் ல இப்ப ஒரு
கையெழுத்துப் போடுங்க.
8.
மனைவி:சாப்பிடும்போது டிவி பார்க்காதீங்க அப்பா. சாப்பாட்டின்ர டேஸ்ட்டே(ருசி) தெரியாது.
கணவன்: சாப்பாடு டேஸ்டாய்(ருசியாய்) இருந்தா, சாப்பிடும்போது நான் ஏண்டி டிவி பார்க்கிறன்.
9.
குமாஸ்தா:போடா,நீ ஒரு முட்டாள்.
டைப்பிஸ்ட்:போடா,நீ தான் முட்டாள்.
மனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நானும்
ஒருத்தன் இங்க இருப்பது உங்களுக்குத் தெரியலையா?
10.
காதலி:ஒண்ணு நாம் கல்யாணம்
பண்ணிக்கவேணும்....இல்ல தற்கொலை பண்ணிக்க வேணும்..... என்ன கோபால் சொல்லுறீங்க?
காதலன்:எப்பிடியும் நான் தப்பிக்க
வழியே இல்லையா கீதா...?
11.
குடிகாரன்1:குடி குடியைக் கெடுக்கும்
என்கிறது சரியாய் போச்சு.
குடிகாரனை2: எதனாலப்பா?
குடிகாரன்1: கல்யாணமாகின
உடனேயே என் பெண்டாட்டி என்னை இனிமே
குடிக்கக் கூடாது எண்டு சொல்லியிற்றா.
12.
நண்பன்1: தபால்காரன் மனைவிக்கு வைத்திய சாலையில் குழந்தை
பிறந்திருக்கு.
நன்பன்2: அதுக்கென்ன
நண்பன்1:குழந்தையின் நிறைக்கு ஏத்த மாதிரித்தான் வைத்திய சாலைக்கு
பணம் கட்டுவன் என்று தகராறு பண்ணியிற்றார்.
13.
மாணவன்: ரீச்சர், நான் போய் யூரின் பாஸ்
பண்ணியிற்று வாறன்.
ஆசிரியர்: அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.
14.
பெண்: வர்ற ஒண்ணாம் தேதி வந்து
எக்கப்பவை வந்து பாருங்க.
பையன்: நிச்சயம் பண்ணவா?
பெண்: என் பின்னாடியே பல நாட்களா
வர்றிங்களே, அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கத்தான்.
15.
டைரக்டர்:(நடிகையிடம் ).. மேடம் இந்த காட்சியில வில்லன்
உங்களை கெடுக்க வாரான். நீங்க அவன் கையில சிக்காம தப்பிச்சு ஓடுறிங்க.
நடிகை:சார்..இரண்டு நாளாய் காலில சுளுக்கு. இன்னைக்கு
போடமுடியாது. பேசாம வில்லனின்ர ஆசைக்கு இணக்கிடுறேனே.
டைரக்டர்:.....!!!!!!
16.
வேலைக்காரி: (முதலாளியிடம்) ஐயா, உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வை ஒரு மாதிரி
இருக்குதுங்க.
முதலாளி: கவலைப்படாதே, சித்தி என்கிற முறையில பார்த்திருப்பான்.
17.
காதலன்: கண்ணே, உனக்காக இமயமலையைக் கூடத்
தாண்டுவன்.
காதலி:சரி,சரி அது கிடக்கட்டும். இப்ப
எதுக்காக உங்க காலை நொண்டுறீங்க.
காதலன்:உங்க வீட்டுக் கேட்டை தாண்டும்போது விழுந்திட்டன்.
18.
(பரீட்சை மண்டபத்தில்)
ரகு: வயித்தைக் கலக்குதடா
ரவி: எல்லாப் பாடத்தையும் கரைச்சுக்
குடிக்காதே எண்டு அப்பவே சொன்னன் கேட்டியா?
19.
நிருபர்: நீங்க எழுதின நாவல் ரொம்ப சுவையாக இருக்கே, எப்படியுங்க?
எழுத்தாளர்: கிச்சினில நான் சமையல் பண்ணிய பொது எழுதின
கதையாச்சே..
20.
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை
கொடுங்க, றெயினைப்
பிடிக்கவேணும்
கடைக்காரர்:சொறி சேர். ரெயிலை
புடிக்கிற அளவுக்குப் பை எங்க கடையில இல்லிங்க.
தொகுப்பு:செ.மனுவேந்தன்