ஒளிர்வு-(42)- சித்திரை,2014

வணக்கம்,
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ''
சொந்த  ஊரினை விட்டு  புலம் பெயர்ந்து வாழும் எங்களுக்கு கண்ணதாசனின் இவ்வரிகள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தவைகளாம். இருந்தாலும் தீபம் சஞ்சிகை மூலம் பிரிந்து வாழும் தமிழ் உள்ளங்களை இலக்கிய வடிவில் நெருங்கிவாழும் உணர்வு நம்மைப் போன்றோருக்கு மகிழ்ச்சியினையே கொடுத்து வருகிறது.மூட நம்பிக்கையற்ற நல்ல சிந்தனைகளும்,இனிமையான உரையாடலும், ஆரோக்கியமான பணிகளும் மனிதனை நலவாழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்பவை மட்டுமல்ல மனித ஆயுளையும் நீடிக்க வல்லன என்பது அனுபவசாலிகளின் கருத்து.. அதற்காக  தீபம் சஞ்சிகை என்றும் உறுதியுடன் உழைக்கும் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
www.theebam.com

நமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல் லாம கிணறு வெட்டுனா ங்க??? . . .
கிணறு அமைப்பது என்ப து அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கி ணற்றில் தண்ணீர் வராமல் போய்விட் டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடை யில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல் லா ம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதா வது ஒரு பகுதியில் அதிகள வு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இட த்தில் கிணறு தோண்ட கு றைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனா ல் நல்ல நீரூற்று என அறிவ து எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல்நாள் இரவு தூவி விடவே ண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவ து தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறுவெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கு ம் என்கிறார்கள் .
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடை த்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்க ளை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச் சியான இடத்தில் படுத்து அசை போடுகி ன்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.


தெனாலிராமன் - விமர்சனம்!

   மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் திறமைவாய்ந்தவர் என்ற பெயரை தன் முதல் படமான போட்டாப்போட்டி படத்தில் நிரூபித்தவர் இயக்குனர் யுவராஜ் தயாளன். வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த தெனாலிராமன் என்ற கதாப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கலகலப்பாகவும் அதேநேரத்தில் ஒரு சமூக பொறுப்புணர்ச்சியோடும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது, வடிவேலு இரட்டைவேடங்களில் அசத்தியிருக்கும்தெனாலிராமன்’.

தன்னை சுற்றி இருப்பவர்களை சொல்வதைக்கேட்டு அதிகம் சிந்திக்கத் தெரியாத ஒரு மன்னன், அவனைச் சிந்திக்க வைக்க சில செயல்களை செய்து, நாட்டு மக்கள் நலமாய் வாழ வழி செய்யும் ஒரு நாயகன். கிட்டத்தட்டஇம்சை அரசன்படத்தை நினைவுபடுத்துகிற கதையமைப்பு தான் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ‘டும் டும் டும்என்றும்அடடா டா அடடடடாஎன்று வடிவேலு அவருக்கே ஏற்ற பாணியில் ராஜா வேடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்துகிறார். சின்னக் குழந்தையாக நடித்துக் காட்டி அசத்தினாலும், சீரியஸ் வசனங்களை அள்ளி வீசி ஆச்சரியப்படுத்துகிறார் தெனாலிராமனாக வரும் இன்னொரு வடிவேலு.

சீன நாட்டு வியாபாரிகள் விஜயநகரில் தங்களின் முதலீட்டை செய்ய துடிக்கும் நிலையில், அமைச்சர்களின் தவறான ஆலோசனையின் பெயரில் மன்னரும் அதை அனுமதிக்கிறார். மக்களின் அவஸ்தைகளை மன்னருக்கு புரியவைக்க தெனாலிராமன் போடும் திட்டத்தால் மக்களோடு மக்களாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார் மன்னர். மழையிலும் வெயிலிலும் அவதிப்படுவதோடு கூழ் குடிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடும் மன்னர்ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னாட்டு மக்களோடு வாழும் போது பல உண்மைகள் விளங்குகிறது. சீன நாட்டு வியாபாரிகளால் தன் நாட்டு சிறு வியாபாரிகள் வறுமையில் வாடுவதும், சீனாக்காரர்கள் குறைந்த சம்பளத்தில் மக்களை அதிக வேலைகள் வாங்குவதும் என அனைத்து விஷயங்களையும் மன்னர் உணர்ந்துகொள்கிறார்.
பிறகென்ன, நாட்டில் கிளர்ச்சி ஏற்படுகிறது, அமைச்சர்கள் செய்த துரோகம் அம்பலமாகிறது, சீன நாட்டு சகுனிகள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். தன் தந்திரத்தை பயன்படுத்தி சீன நாட்டு கயவர்களிடமிருந்து மன்னரை மீட்டு மீண்டும் நல்லாட்சியை தொடரச் செய்கிறார் தெனாலிராமன்.

பாடல்களில் ஆட்டமாய் ஆடி கலக்கியிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவின்ரம்பப... ரம்பப...’ பாடல் குழந்தைகளுக்கு குதூகலம் தான். அந்தப்பாடலில் பாடகர் முகேஷின் குரலுக்கும் இசையமைத்த டி.இமானின் விரலுக்கும் ஈடுகொடுத்திருக்கிறது வடிவேலுவின் இடுப்பு! ஆணழகு என்ற மெல்லிசை பாடல் மதுரமாய் இனிக்கிறது. நெஞ்சே... நெஞ்சே... என வடிவேலு உணர்ச்சிபெருக்கோடு பாடும் பாடலின் பாடல் வரிகள் நெகிழவைக்கிறது. ‘ஒருவன் லட்சியம் நிறைவேறும் வரை மறைவாக இருப்பது தான் நல்லது. இது உலகின் அனைத்துப் போராளிகளுக்கும் பொருந்தும் மன்னாஎன்ற கலை வித்தகர் ஆரூர்தாஸின் வசனத்திற்கு இதயம் கைத்தட்டுகிறது.

காமெடி மட்டுமல்ல தன்னால் கருத்துக்களை பேசியும் நடிக்க முடியும் என்பதையும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் அழுத்தமாய் ஆழமாய் பதிவு செய்கிறார் வைகைப்புயல் வடிவேலு. அவரின் நீண்ட கால இடைவெளியை மறக்கடிக்கிற வகையில் அனைத்துக் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார். மீனாட்சி தீக்ஷித் கண்களாலும், இடையாலும் படத்திற்கு தேவையான கவர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

அந்நிய முதலீட்டால் என்னென்ன பிரச்சனையை சந்திக்க வேண்டியது வரும் என்பதை வெள்ளித்திரை வழியாக பாமரனுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட புரிகிற வகையில் எளிமையாய் பதிவு செய்கிறது தெனாலிராமன். குடும்பத்துடன் குதூகலிக்க சம்மர் சீசனை கொண்டாட சரியான படம் தெனாலிராமன்.


தெனாலிராமன் - சிரிப்பைவிட சிந்தனையே அதிகம்!