சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:9

சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு

பக்தி/A

             பக்தி என்ற சொல்லிற்கு ஒரு சீவன், வேறு ஒரு பொருளின் மீது, அல்லது வேறு ஒரு சக்தி மீது முழு நம்பிக்கை கொண்டு, அதனை ஆதாரமாக பற்றி கொண்டு வாழ்வது, அதாவது தன்னைத் தவிர, வேறு ஒன்றை பற்றி கொள்வதை பக்தி என்று கூறலாம்.
             இன்றைய மனிதர்கள் பக்தி என்ற பெயரில் பல விதமான வழிமுறைகளை கடைபிடித்து வாழ்கின்றார்கள். கடவுள் வழிபாடு, இறை வழிபாடு, குரு வழிபாடு என வழிபாட்டு முறைகளை பக்தி என்று கூறிக் கொள்கின்றார்கள். கடவுளை வணங்கி, பக்தி செலுத்தினால் வாழ்வில் நன்மை உண்டாகும், தான் செய்யும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பி வாழ்பவர்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள் என்ற பிரிவினர்.
             சிலர் தன் குடும்பத்து முன்னோர்கள், தாய், தந்தை, பெற்றோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம், அனுகிரகம் நம்மை காப்பாற்றி, வாழ்வில் உயர்வை தரும், என முன்னோர்களை வழிபாடு செய்து வருபவர்கள் முன்னோரை வழிபடும் பிரிவினர்.
              சிலர் குரு என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு, குருவின் அருளாலே தன் வாழ்வு வெற்றியும், மேன்மையும் அடையும், என்று குருவை வழிபட்டு, வருபவர்கள் குருபக்தி குருவழிபாடு கொண்டவர்கள். இது போன்று தன்னைத் தவிர வேறு ஒன்றினை பற்றி பக்தி செலுத்தி வாழ்ந்து வருபவர்கள் இன்றைய மனிதர்கள்.
             இதில் கடவுள் பக்தி கொண்டவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் சைவம், வைணவம் என்ற பேதம் கொண்டு ஒரு மதத்திற்கு ஒரு கடவுள், ஒரு கொள்கை, மந்திரம், நாம பாராயணம், பூசை முறைகள், என மதசின்னங்களை தனித்தனியே அமைத்துக் கொண்டு, அவரவர் செய்யும் ஆகம முறையே உண்மையான பக்தி என்று கூறிக் கொள்கின்றார்கள். இன்னும் சில மனிதர்கள் கணபதி, முருகன், காளி, சக்தி, அய்யப்பன் என கடவுளை தனித்தனியாக பிரித்து, அவரவர் மனத்திற்கு பிடித்த தெய்வ உருவங்களை வணங்கி பக்தி என்ற கூறிவருகின்றார்கள். இவர்களில் சில பேர், தான் வணங்கும் தெய்வங்களின் அருள், அனுகிரகம் பெற்று உள்ளோம், என கூறி உபாசகர், அடியார் என்ற பட்டத்தை தாங்களே வைத்துக் கொள்கின்றார்கள். சக்தி உபாசகர், முருகன் உபாசகர், அனுமன் உபாசகர் என தன்னை கூறிக் கொள்கின்றார்கள். இது போன்றவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வங்களே பெரிது, சக்தி வாய்ந்தது என்று கூறி தெய்வங்கள் இடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி விடுகின்றார்கள். சிலர் கடவுள் பக்தி என்று கூறி கொண்டு, கடவுளை வணங்கும் போது தன் முன்னோர்கள் கூறியுள்ள முறைகள் என்று கூறி கடவுளை வழிபட்டு வருகின்றார்கள். இவர்கள் உருவ வழிபாட்டினை பெரிதாக செய்து வருபவர்கள். இந்த பக்தி செலுத்தும் முறை உலக மக்கள் இடையே தேசத்திற்கு, தேசம் மாறுபட்டே காணப்படுகிறது. இறைவழிபாடு உலகில் ஒன்று போல் அமைந்து இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தன் சிறுவயதில், தன்முன்னோர்கள் கூறிய வழி காட்டுதல்படி ஏதாவது ஒரு கடவுளை வழிபட்டு வந்த போதும் வயது முதிர்ச்சி அடைந்து தானே சுயமாக சிந்திக்கும் அனுபவமுதிர்ச்சி நிலை ஏற்படும் போது அவரவர் விருப்பத்திற்கும், தன் மனத்திற்கும் பிடித்த வேறு ஒரு கடவுளை வழிபடும் சூழ்நிலையும் காணப்படுகின்றது. இன்னும் சிலர் தான் பிறந்த மதங்களையே மாற்றிக் கொண்டு வேறு மத வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வாழ்ந்து வருபவர்களும் உண்டு. இது போல் கடவுள் பக்தி அடிக்கடி மாற்றி கொள்ள கூடியதாக உள்ளது.
               மனிதர்களின் மனம் புத்தி மாறும் போதும், மனிதர்களின் எதிர் பார்ப்புகள் நிறைவேறாத போதும், தான் வணங்கும் கடவுளிடம் எதாவது ஒரு காரியம் நிறைவேற பிரார்த்தனை செய்து, அந்த காரியம் நடக்காத போதும் இதுவரை தான் பக்தி செலுத்தி, நம்பிக்கை வைத்து வணங்கிய கடவுளின் மீது நம்பிக்கை மாறுவதும் உண்டு. இந்த கடவுள் பக்தி என்பது நிலையானது அல்ல. இது மனம் மாறும் போதெல்லாம் மாறிக் கொண்டே போகும். எனவே இந்த பக்தி என்பது "மாயை" என கூறுவார்கள். இது மாயா தத்துவத்தை சேர்ந்தது. ஒரு மனிதன் தன் வாழ்வில் தன்னையறியாமல், பிறசக்திகளின் துணை கொண்டு பூசை, ஹோமம், யாகம், மந்திரம், அர்ச்சனை, அபிஷேகம் என வேறு ஒன்றின் துணையை நாடி தன் வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும், தடைகளையும் தீர்த்துக் கொள்ளலாம் என மனம் நம்பிக்கை கொள்ள செய்வதே மாயையின் முதல் செயலாகும். இது போன்ற எண்ணம் கொண்டவர்கள் மாயாவாத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என கூறலாம்.
               இன்னொரு பிரிவு மக்கள் குருபக்தி கொண்டவர்கள். இவர்கள் எதாவது ஒரு பீடாதிபதியையோ, அல்லது மாடாதிபதியையோ, தன் முன்னோர்கள் கூறிய "வம்ச குரு" என்று ஓருவரை குருவாக ஏற்றுக் கொண்டு, அந்த குரு மீது முழு நம்பிக்கை கொண்டு தன் வாழ்வின் எந்த ஒரு செயலை செய்யும் முன் அந்த குருவிடம் வாக்கு கேட்டு அதன்படி எதனையும் செய்து வருவார்கள். தாங்கள் குருபக்தியை வெளிப்படுத்த குருவின் காலில் வீழ்ந்து வணங்கியும், குருவின் மடத்திற்கு சொத்து, பொருள், என தானம் கொடுத்தும் வருபவர்கள் குருபக்தி உடையவர்கள்.
               இவர்கள் வணங்கும் குரு என்பவர், தன்னை நம்பிவரும் மக்களிடம் வேதம், சாஸ்திரம், புராணம் இவைகளில் இருந்து ஏதாவது ஒரு கடவுளை வணங்க சொல்வார்கள். இவர்கள் தன்னை நம்பும் பக்தரின் கஷ்டங்களை தன் சுய சக்தியால் நீக்கும் திறன் அற்றவர்கள். இன்னும் சில குரு என்பவர்கள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை வரவழைத்து கொடுத்து தன்னிடம் ஏதோ சக்தி இருப்பதாக வெளிப்படுத்தி, தன்னை நம்பும்படி செய்து விடுவார்கள். காலி காலத்தில் சொத்து, போகம், பொருள்கள், பெண்கள் மீது ஆசை கொண்ட குருமார்களே அதிகம் இருப்பார்கள், என என் குரு கொங்கண சித்தர் கூறுவதை கேளுங்கள்.

மடையரப்பா வெறும் வீணர் சாம்பல் பூசி
    மாடுபோற் ரிறிந்தலையு முலுத்தர் கோடி
 சடையரப்பா சிலபேர்கள் தீனியாசை
   சமுசார மாயை யிலேலலைவார் கோடி
 அடையாளஞ் சொன்னாலு மறிய மாட்டார்
   அறிவிலாச் சவங்கலென் றசென்மங்கோடி
 உடையாளி வந்தாற் போற் பூசை செய்வார்
 உருளுவான் குருக்களென்ன்பான் குருட்டுமாடே.

என்று இவர்களின் உண்மையான குணத்தையும், உள்நோக்கத்தையும், ஏமாற்றி பிழைக்கும் தன்மையையும் தெளிவாக கூறி, இவர்களை நம்பி குருபக்தி கொண்டு அலையும் மக்கள் அறிவில்லாத பிணத்திற்கு சமமானவர்கள் என்று  கூறுகின்றார். இது போன்ற குருமார்களை நம்பும் மனிதர்கள் ஒன்றுமே தெரியாத, கண் தெரியாத குருட்டு மாட்டிற்கு ஒப்பானவர்கள் என்கிறார்.
               இந்த போலி குருமார்களை பற்றி என்குரு பதஞ்சலியார் கூறுவதை கேளுங்கள்.

மருகினார் சிலது பேர் வாதவித்தை
வந்தவர்போற்சொல்லியவம் பிளைப்போ மென்று 
உருகினார்யோகதண்டு காசாயங்கள்
                              யோக நிட்டை 
பெற்றவர்போ லுருக் கொள்வாரே
 கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
 குறடுமிட்டு நடை நடப்பார் குகையிற் காப்பார்
     விள்ளுவார் வாதமொடு யோக ஞானம்
   வேதாந்தம் அதீதம் விசாரித்தாற் போலத்
  துள்ளுவாரு பதேசம் செய்வோ மென்பார்
  சூதமணி கட்டுகிறேன் தொழிற் பாரென்பார்
 தள்ளுவார் பொருளாசை நமக்கே யென்பார்
  சவுக்கார குருமுடிக்கத் தனமென்பாரே.

                இது போன்ற குணம் கொண்டு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நபர்கள் தான் கலி காலத்தில் தன்னை "குரு" என்று கூறிக்கொண்டு அலைவார்கள். இன்றைய மக்கள் இந்த போலி குருமார்களை நம்பி ஏமாந்த பிறகே புரிந்து கொள்கின்றார்கள்.
                 இந்த குரு பக்தியும், இறைபக்தியும் தன் வாழ்வில் பிரச்சனைகளை தீர்க்க, நல் வாழ்வு அடைய உதவாது இவை எல்லாம் மாயை செய்யும் ஏமாற்று வித்தைகள் ஆகும் என்கிறார்.

என் அம்மாவுக்கு அர்ப்பணம்


என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான்
வணங்கும் தெய்வமும் தாயம்மா -என்
கண்கண்ட தெய்வமும் நீயம்மா....

என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான்
வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா -என்
தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியேம்மா....

என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா
உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே....நான்
மீண்டும் ஒருமுறை வேண்டுவது உன் கருவறையம்மா…

வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை
பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என்
வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா....

தாயின் காலடியும் ஒரு ஆலயமே....அன்பு
சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான்
கண்ட முதல் வைத்தியரும் நீயேயம்மா....

மண்ணும் பெண்ணும்  என்சுவாசமே  அம்மா....தாய்மை
பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா -என்
அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே.....

நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே
என்றும் நான் உன் மழலை அம்மா....தெய்வம்
உனக்கு தந்த குழந்தை அம்மா

🤶ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்


ஒருவனுக்கு ஒருத்தி - short film



கனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடுத்தல் ]

  

                                        12.10.2019
அன்புள்ள அப்புவுக்கு,

நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக!

அப்பு உங்கள் கடிதம் கிடைத்தது.உறவுகள் சுகம் யாவும் அறிந்தேன்.மகிழ்ச்சி.
ஆனால் மாமியாவையின் நிலை குறித்து வருத்தமாக இருந்தது. வாழ்வதற்கு பல வழிகளிருக்க ஏன் அவுஸ்திரேலியா கப்பலில்  போக முயற்சி எடுத்தார்கள் என்று புரியவில்லை. அந்த நாடு எவரையும் இந்த வழியில் அகதிகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று இலங்கையும் ,அவுஸ்திரேலியாவும் பலமுறையும் திடமாகக் கூறியதுடன் , ஏற்கனவே கப்பலில் வந்தவர்கள் எவரையும் உள்ளே அனுமதிக்காது கிரிஸ்மாஸ் தீவில் தடுத்து வைத்திருப்பது தெரிந்தும் ,என்ன துணிவில் சென்று ஏமாந்து அவர்களும் தீவில் நின்று கஷ்ட்டப்படுகிறார்கள். கடைசியாக  இருந்த கொஞ்ச சொத்துக்களையும் இழந்து இடையில் எதுவும் இல்லாது  நிற்கிறார்கள்.
 அப்பு, சென்ற வருடம் கனடா வந்து சேர்ந்த கனகர் மகன் கோபிக்கு என்ன நடந்தது? ஏன் கனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டான்?  என கடிதத்தில் கேட்டிருந்தீர்கள்.
அப்பு,கோபி கனடா வந்த வேளையில் ,அவ்வருடம் புதிதாக கனடா வந்து சேர்ந்த சிறி என்பவருடன் இருவரும் கனடாவுக்கு புதியவர்கள் என்ற வகையில் பழக்கம் ஏற்பட்டது. அப்பழக்கம், இருவருக்குமிடையில் ஏற்பட நட்பின் காரணமாக இருவரும் இணைந்து ஒரு வீடு எடுத்து ,செலவுகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.
இருவரும் அகதிநிலை கோரி விண்ணப்பித்தவர்கள் என்ற அடிப்படையில் ,தங்கள் அனுபவங்களுடன்  கனடாவுக்கு வந்த விதங்களையும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி பங்கிட்டுக் கொண்டனர்.
இந்த வேளையில் கோபி தான் கனடா வரமுதல்  சுவீடனில் இருந்த அனுபவங்களையும் கூறியதுண்டு.

கோபியும்  ஆவலுடனும் ஏக்கத்துடனும் காத்திருந்த அவனது அகதி நிலைக் கோரிக்கைக்கான வழக்குக் குரிய அறிவித்தல் கடிதம் இரண்டு வருடத்தின் பின்னரே அவனுக்கு  அனுப்பியிருந்தார்கள். அவனும்  அத்தேதியில் அதற்குரிய பத்திரங்களுடன் தனக்கு  நீதி கிடக்கவேணும் என்று தான் அறிந்த கடவுளெல்லாவற்றையும் வேண்டிக்கொண்டு சென்றான்.
அங்கே வழக்கு ஆரம்பமானதும் அவன்  இலங்கை அல்லாது வேறு நாட்டிலிருந்து வந்தவனா என விசாரித்தார்கள். ஏனெனில் அவன்  அப்படி வேறு நாட்டிலிருந்து வந்திருந்தால் எனது அகதிநிலைக் கோரிக்கையை  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இங்கு யாரும் அதனைக் கூறுவதில்லை. ஆனால் அவன்  எதிர்பாராதது நடந்துவிட்டது.
அவர்கள் அவனிடம் ஒரு கடிதத்தினை நீட்டினார்கள். அதில் அவன் தன்  நண்பனென நம்பி சிறியுடன் அலட்டிய அவனது  சுவீடன் அனுபவங்களெல்லாம் அழகாக எழுதபட்டிருந்தன. எனவே அவனது அகதிநிலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏன்இப்படி செய்தாய் என சிறியிடம் நான் கேட்டபோது ,ஊருக்கு அனுப்ப  கடனாகக் காசு கேட்டபோது, கோபி  அந்த உதவியினை செய்யவில்லையாம். அந்த ஆத்திரத்தில் அப்படி செய்தானாம் என்று சர்வசாதாரணமாகச் சொல்லிக்கொண்டான். 
அப்பு,இதற்காக நீங்கள் கலங்கவேண்டாம். இங்கு இப்படி எத்தனை,எத்தனையோ நடக்கின்றன. சில்லறைத்தனமான விடயங்களுக்கெல்லாம் அடுத்தவர்களின் எதிர்காலத்தினை துவம்சம் செய்கின்றனர்.ஏனோ தெரியவில்லை எம்மினத்தார் சிலர் எமினத்திற்கே எதிரியாகவுள்ளனர்!.
இப்படியான எம்மவர்களின் செயற்பாடுகளே வெவ்வேறு துறைகளிலும் எம்மினத்தாரை பின்நோக்கி வீழ்த்திக் கொண்டுள்ளது. இதனால் எம்மை நண்டுகள் இனம் என கூறுவோர் உண்டு. ஏனெனில் பெட்டிக்குள் இருக்கும் நண்டுகள் ஒன்றினை ஒன்று வீழ்த்தி ஒன்றுமே வெளியேறி தப்ப முடியாமல் செய்திடுமாம். இவற்றினை இவர்கள் என்றைக்கும் உணரப்போவதில்லை.

அப்பு,.உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.மேலும் புதினங்களை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.
 இப்படிக்கு 
அன்பு மகன் 
செ.மனுவேந்தன் 
             

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 81(முடிவுரை )

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]        
பெர்லின் நகரத்தின் பேர்க்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு 12 வயது மதிக்கத்தக்க ஒரு சுமேரிய பையனின் எலும்புக் கூடு
எமக்கு எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது தெரியாது.அதே போல இவர்களின் வழித்தோன்றல்கள் யார் என்பதும் சரியாக தெரியாது.இன்று வரை இந்த பண்டைய சுமேரியர்களின் டிஎன்ஏ யை பரிசோதனை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையும் இருக்கவில்லை.என்றாலும் அண்மையில் பண்டைய சுமேரிய நாகரிகத்தின் தலை நகரமான ஊரில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 4500 ஆண்டை சேர்ந்த ஒரு முழுமையான எலும்பு கூடு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாந்தவியல், தொல்லியல் பற்றிய அருங் காட்சியகத்தில்[Penn Museum] 2014 ம் ஆண்டு திரும்ப கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.பொதுவாக தொல் பொருள் ஆய் வாளர்கள் நிலத்தில் தான் அகழ்வின் போது இப்படியானவற்றை கண்டுபிடிப்பார்கள்.ஆனால் இதுவோ,அருங்காட்சி யகத்தின் சேமிப்பு அறையில் கடந்த 85 வருடமாக சவப்பெட்டி போன்ற பெட்டி ஒன்றில் பாதுகாத்து வைத்திருந்த இந்த எலும்பு கூட்டை கண்டுபிடித்து உள்ளார்கள்.இது 1929–30 ஆண்டில் பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் லியோனாட் வூல்லேயால்[Sir Leonard Woolley] கண்டுபிடிக்கப்பட்டது.இதில் ஆச்சிரியம் தரக்கூடிய விடயம் என்ன வென்றால்,இதின் கெடாத பல்லில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய போதுமான மென்மையான திசு அதிகமாக இருக் கலாம் என்பதே.அப்படி இருந்து பரிசோதனை செய்யும் பட்சத்தில்,இந்த முதலாவது நகர நாகரிக குடி மக்கள் எங் கிருந்து வந்தார்கள்,அவர்களின் சமகால வழித்தோன்றல்கள் யார் என்பதை விரைவில் வெளிப்படுத்தலாம்.சுமேரி யர்களின் இடம்பெயர்வு ஒரு மர்மமான சொல்லப்படாத கதையாகவே இருக்கிறது.எனவே டிஎன்ஏ பரிசோதனை ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம்.மேலும் நான் ஒரு தகவலை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும்,யூப்ரடிஸ் டைகிரிஸ் ஆறுகளை அண்டியும்,இறுதியாக சிந்து நதி கரையிலும் அமைந்த முன் னைய நாகரிகத்தை அமைத்தவர்கள் அனைவருமே கருத்த தோல் மனித அடையாளத்தை கொண்டவர்கள். இது  தற்செயலாக அமைந்து இருக்க முடியாது.மேலும் இந்தியாவிற்கு இருதரம் 1288 இலும் 1293 இலும் பயணித்த இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது.இவர் அங்கு வாழ்ந்த தமிழரைப் பற்றி குறிக்கும் போதுமிகவும் மதிப்புடனும் கருப்பு நிறம் அற்ற மற்றவர்களை விட தான் நன்றாக வாழ்வதாக கருதும் கருத்த மனிதன் இங்கு இருக்கிறான்.நான் இந்த உண்மையை கூறவிடுங்கள்.இந்த மக்கள் தமது கடவுளை,விக்கிரகங்களை கருப்பாக சித்தரிக்கிறார்கள்.பிசாசுகளை பனி போன்ற வெள்ளையில் சித்தரிக்கிறார்கள்.அவர்கள் கடவுளும் எல்லா ஞானி ளும் கருப்பு என்றும் கெட்ட தேவதைகள் எல்லாம் வெள்ளை என்கிறார்கள்.அதனால் தான் நான் விவரித்த வாறு வர்ணிகிறார்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆஃப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும்.ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள்.மற்ற இன்றைய மக்கள் அனைவ ரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்பவேண்டும்.முன்னைய ஆஃப்பிரிக்க மக்களின் ஆதி  இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால்,மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள்.அது மட்டும் அல்ல,ஆஃப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது.மனித இனம் பல கட்டங்களாக ஆஃப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுட வியலாளர்கள் நம்புகிறார்கள்.ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன் ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆஃப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு,ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.அது மட்டும் அல்ல இந்த காலத்திலேயே அவன் தீ உண்டாக்கக் கற்றுக்கொண்டான் என்பார்கள் அறிஞர்கள்.இன்றும் உலக மக்களின் பண்பாடுகளோடு பங்குகொள்ளாமல் தனித்து வாழும் சில தொல்குடி மக்கள் சிலர் தீக்கடைக் கோல் எனப்படும் மரக்குச்சியால் உரசியோ தேய்த்தோ,அதை  தீ உண்டாக்க பயன்படுத்துகின்றனர்.2000 ஆண்டுகளுக்கு முற் பட்ட தமிழில் இவற்றை ஞெலிகோல் என்றும் கூறிவந்தனர்.அதியமான் நெடுமான் அஞ்சி,வீட்டு இறைப்பில்செருகப் பட்ட தீக்கடை கோல் போல் தன் ஆற்றல் வெளியே தோன்றாது ஒடுங்கி இருப்பான்;என்று புறநானுறு 315 "இல்லி றைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றாது இருக்கவும் வல்லன்;" என்று கூறுகிறது.மனிதக் கூர்ப்பில், கொரி ல்லா மற்றும் லூசி என்று பிரபலமாக அறியப்படும் ஆசுத்திராலோபித்தேக்கசு அஃபெரென்சிசு [Australopitheus Afarensis] க்குப் பிறகே ஹோமோ எரக்டஸ் என்னும் இந்த மாந்த இனத்தின் மூதாதையர் உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்.இந்த ஆதிவாசிகளே முதன்முதலாக சமைத்து உண்டவர்கள்.இதே சமயத்தில் தான் நம் மூதாதை யர்கள் தாங்கள் உடல் உரோமத்தை இழக்க ஆரம்பித்திருக்க வேண்டும்.அதன் பின்,நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால்[Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்,ஹோமோசேப்பியன்ஸ்  [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன் இரண்டாவது அலையாக ஆஃப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது,ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் தற்போதைய மனிதர்களை விட நியான்டர்தால் மனிதர்கள் , புத்திசாலிகளாக இல்லாததால் அழிந்து போயினர் என ஆய்வு ஒன்று கூறுகிறது.சேப்பியன் (Sapien) என்பதற்கு அறிவு என்பது பொருள்.ஹோமோ என்பதன் பொருள் மனிதன் என்பதாகும்.இதனால்,மதிமனிதன் அல்லது அறிவு மனிதன் (Homo sapien) என இவனை அழைக்கின்றனர்.இவன்,அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர் களை வெற்றி கொண்டான் என்கின்றனர்.இந்த கருதுகோளின் படி இன்றைய நவீன மனிதன் இந்த ஹோமோ சேப்பி யன்ஸின் சந்ததி ஆகும்.பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தான்.இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் எப்படி பல கிலோ மீட்டர் கடல் பகுதியைத் தாண்டி தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் வந்திருக்க முடியும் என நீங்கள் ஆச்சிரியப் படலாம்?ஆனால், அந்த பழங்காலத்தில் கண்டங்கள் எல்லாம் இணைந்து இருந்தன,அவை பனியுகம் (Ice age) அல்லது "பனிப்படல யுக(Glacial Age) த்தின் பிறகே பிரிந்தன.18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளி யும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன.பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல்மட்டம் தணிந்திருந்தது. அப்போது உலகத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் தணிந்து,உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப் படுகிறது!ஆகவே அவர்கள் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இருக்கலாம்.ஆஃப்பிரிக்காவில் இருந்து பரந்த உலகிற்கான இந்த இடம் பெயர்வு பெரும்பாலும் 60,000-70,000 ஆண்டுகளிற்கு முன்பு நடைபெற்று இருக்கலாம்.இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள்[beachcombers] விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டு களுக்கு முன்பு அடைந்தார்கள்.அதன் பிறகு,கொஞ்சம் காலம் கடந்து,இரண்டாவது குழு ஆஃப்பிரிக்காவை விட்டு வெளியேறி,மத்திய கிழக்கு,தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள்.உலகின் ஒவ்வொரு மூலையையும் மனித இனம் ஒரு நாள் நிரப்ப இந்த இடம்பெயர்வே வழி வகுத்தது.அந்த தொடக்க துணிகர இடம் பெயர்வு காலத் தில்,வேட்டை மற்றும் உணவு சேகரிப்பதுமே அவர்களின் அன்றாட வாழ்க்கையாக இன்னும் இருந்ததுSculpture of the celestial wedding of Shiva and Parvati at Meenakshi temple at Madurai.இந்த மனி தர்கள் சில நூறு தனிப்பட்டவர்களை கொண்ட சிறு சமுகமாக,அனேகமாக வாழ்ந்தார்கள்.சமூகப் பிணைப்புகள் அங்கு அவர்களுக்கு இடையில் உண்டாகி,அது இந்த சிறிய மக்கள் கூட்டங்கள் தங்களுக்கு இடையில் உணவு வளங்களை பகிரவும் ஒன்றாக இணைந்து வேட்டையாடவும் உதவின.இந்த பிணைப்பு மலர்ந்து,இன்று நாம் அறிந்த சமூகம் மற்றும் கலாச்சாரம் போன்ற ஒன்று அவர்களுக்கு இடையில் தோன்ற மொழி வளர்ச்சி உதவியது.இந்த மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக்குறிப்புகள் உதவின. அதுதான்,நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது எனலாம்.கி மு 14,000-9500 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. நாடோடிகளாக  வேட்டை யாடி உணவு சேர்ப்பதில் இருந்து அவர்கள் வாழ்வு மற்றம் அடைந்தது.இந்த கால கட்டத்தில் மழை வீழ்ச்சி உச்ச நிலையை அடைந்து சஹாரா,வட ஆஃப்பிரிக்கா போன்ற பகுதிகள் பசுமையா மாறின.இந்நிலையில்,வேளாண்மை அங்கு பிறந்தது;காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங் களை,தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்து கொண்டான்.அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை என்கின்றனர்.நைல் நதி,மற்றும் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த மெசொப்பொத்தேமியாவின் டைகிரிஸ் யூப்ரதீஸ் நதிகளை உள்ளடக்கிய இளம் பிறை வடிவம்[Fertile Crescent lands] கொண்ட செழுமையான பகுதியில் முதல் விவசாயி பிறந்தான் என நம்பப்படுகிறது.முதலில்,உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான்.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:
பகுதி 82 வாசிக்க → Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:82

பகுதி :82 முடிவுரை தொடரும்...