ஒளிர்வு-(39)- தை,2014

வணக்கம்,
அனைவருக்கும் நேரம் பொன்னானது.வள்ளுவன் குறளில்
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று." என்று அதாவது பேசுவதற்கு நல்ல பல விடயங்கள் இருக்கும்போது அனாவசியப் பேச்சுக்கள் பேசுவது  -சுவை மிகுந்த கனிகள் இருக்க அதைவிடுத்து கசக்கும் காய்களை நாடுவது போன்றது, எனக் கூறுவதை நாம் நோக்குகிறோம்.அதேபோல் அனைவருக்கும் பயன்படு வகையில் பயனுள்ள விடயங்களுடன் உங்கள் நேரத்தை நற் பலனுடன் கழியும் வகையில் உங்களை சந்திப்பதில் தீபம் சஞ்சிகை மகிழ்வடைகிறது.



சிந்தனைஒளி
தை இதழ் தரும்  பொன்மொழிகள்
எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.


எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.


அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.


நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு குதியானது உங்களுக்கு ண்டிப்பாக கிடைத்தே தீரும்.


வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிகப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.
*******************************************


சிரிக்க,,,நகைச்சுவை.

""பரீட்சைக்கும் விஷப் பரீட்சைக்கும்
என்ன வித்தியாசம்?''
""என்கிட்டே கேட்காதே... சாதாரண பரீட்சையே எனக்கு ஒரு விஷப் பரீட்சைதான்''
***********************
கணவன்: ""உனக்கு வாக்கப்பட்டிருப்பதைவிட, ஒரு கழுதைக்கு வாக்கப்பட்டிருக்கலாம்..?''
மனைவி: ""நேற்று வரைக்கும் என்னை "ஏய் கழுதை'ன்னுதானே சொன்னீங்க..!
கணவன்: ""?!..?!..?!''
**********************
""வெயில் வாட்டி எடுக்கிறது. அடிக்கடி குடை வாங்க வேண்டியிருக்கிறது.''
""ஏன் ஒரு தடவை வாங்கினால் போதாதா?''
""நான் இரவல் வாங்குவதைப் பற்றிச் சொன்னேன்!''
**********************
மனைவி:""என் ஜாதகப்படி எனக்கு அறிவு அதிகமாம்.''
கணவன்:""இப்பப் புரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்பறதில்லைனு!''
**********************
""தலைவர் ஏன் சாக்கடையில் விழுந்துட்டேன், சாக்கடையில் விழுந்துட்டேன்னு புலம்பறார்?''
""அவர் அரசியலில் இறங்கியதற்காக வருத்தப்படறார்.''
**********************
மாமியார்: நேற்று, நான் போன சினிமாவைப் பார்த்து, "சிரிச்சு சிரிச்சு' பாதி உயிர் போயிடுச்சு!'
மருமகள்: ""அப்படியா அத்தை! அந்தப் படத்தை, இன்னிக்கும் ஒரு தடவைபோய் கண்டிப்பாகப் பார்த்துட்டு வாங்க..!
**********************
""சார், மணி பன்னிரண்டு ஆவுது... கடையைச் சாத்தலாமா?''
""சரி, சரி... எதுக்கும் குவிஞ்சு கிடக்கிற அந்தப் புடவைக் குவியலுக்குள்ளே லேடீஸ் யாராவது மாட்டிக்கிட்டிருக்காங்களான்னு ஒரு தரம் நல்லாப் பார்த்துடு!''
**********************
மனைவி: ட்ரெயின் கிளம்பிடுச்சு... ஏங்க... அந்த ராமாயண புத்தகத்தை எடுத்து வச்சீங்களா?
கணவன்: நாம போறதோ ஹனிமூன்... எதுக்கு ராமாயண புத்தகம்?
மனைவி: அதுலதான் ட்ரெயின் டிக்கட்டை வச்சிருந்தேன்.
*********************
பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதைப் பார்த்தார்.
ஆசிரியர்: உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.
மாணவன்: நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பணுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.
*********************
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
*************************
ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"
மற்றவள்: "ஏன் கேட்குறே?"
முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"
********************
"என் மனைவி மாசத்தில பாதி நாளு ஹீரோயின்; பாதி நாளு வில்லி"
"
எப்படி?"
"
பணம் இருக்கும் நாள்வரை ஹீரோயின். பணப் பற்றாக்குறை சமயத்தில வில்லி"
********************
ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"
மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளைவெறுப்பேத்துவேன்."
*******************

நண்பன்       :    சத்து   குறைஞ்சுடுச்சுனு  டாக்டரிடம்  போனேண்டா
 .நண்பன்   :    என்னாச்சுடா 
நண்பன்       :    சொத்து   குறைஞ்ச்சுடுச்சுடா .


******************************