எவருக்கு?எது? அநாகரிகம்.


சம்பிறதாயம் என்பது(சம்பு + பிறம் + தாயம்) நாம் பிறந் ததை தொடர்ந்து, தாய் வழியாக வாழ்ந்து வரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையே சம்பிரதாயம் என பொருள்படும். இதற்கிணங்க ஒவ்வொரு நாட்டு மக் களும் வெவ்வேறு வகையான சம்பிறதாயங்களை கொண் டுள்ளனர். இவ்வாறு உலகில் சில நாட்டு மக்கள அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்களை பார்போ மேயானால்,

ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப் படுகின்றது.

சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருது கின்றார்கள்.

அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

2 comments:

  1. தமிழரின் அநாகரிகம் குறிப்பிடப்படவில்லை.தமிழருக்கு மட்டும் உள்ள பழக்கம் என்னவெனில் எந்த நாட்டுக்காரன் சூழ் நிலையிலை வாழுகிறானோ அவனைப்போல் உணவு,உடை,பழக்க வழக்கங்களை மாத்தியிடுவான்.அப்படி மாறாது தமிழனாய் வாழ்வது அநாகரிகம் என்று கருதுவதே தமிழரின் பழக்கம்

    ReplyDelete
  2. தமிழனை அல்லது தமிழ்க் குழந்தைகளைக் கண்டால் அவர்களுடன் தமிழில் கதைப்பதனை தமிழர் அநாகரிகமாகக் கருதுவர்.

    ReplyDelete