புடவை பலவிதம்,அவை உருவான வரலாறு

பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி,
ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி!
என்னதான் சுடிதார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் என மாடர்ன் உடைகள் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்தாலு ம், தழையத் தழைய புடவை கட்டிக்  கொ ண்டு, கூந்தலில் மல்லிகைசரம்  சூடி  ஒய்யா ரமாக நடந்து வரும் அழகே தனி. பீரோவில் ஒரு புடவை கூட இல்லாத பெண்களை பார்க்க முடியாது. அந்தள வுக்கு ஈருடல்  ஓருயிராக மாறியிருக்கிறது புட வை.
‘‘ஆங்கிலத்தில்சாரிஎன்றழைக்கப்படும் புடவை, மிகப்பழமையானது. சிந்து சமவெ ளி நாகரீகத்திலேயே இந்த உடை இருந்ததற்கான ஆதாரங்கள்  கிடைத்திருக்கின்றன…’’ 
‘‘சிலப்பதிகாரத்திலும் புடவை இருந்திருக்கிற து. பெண்களின் தொப்புள் பகுதி
ஓருயிரை உருவாக்கும் தன்மை கொண்டதால்சங்க காலப் பெண்கள்,  தொப்புள் தெரியும்படி புட வைகளை அணிந்து வந்தனர்பிறகு தர்ம நூல் கள்இப்படி அணியக் கூடாது என்ற மரபை தோற்றுவித்ததும்இடுப்பை  மறைத்தபடி பெரி  ஜாக்கெட்அதன் மேல் புடவைகள் என பெண் கள் உடுத்த ஆரம்பித்தனர்.புடவையில் முதன் முதலில் வந்தது நிவி ஸ்டைல்அதைத்தான் நாம் இன்றும் கடைப்பிடித்துவருகிறோம்மகா ராணி இந்திராதேவிதான் ஷிபான்  புடவைக ளை அறிமுகம் செய்தார்இளம் வயதிலேயே விதவையான இவர்வெள்ளை புடவை மட்டு மே அணிந்து வந்தார்பிரான்சிலிருந்து  இறக்கு மதியான இந்தப் புடவை அழகான டிசைன்களு டன் காட்சியளித்தது.
ஷிபான் மிகவும் மெல்லிய துணி என்பதால், வெயில் காலத்தில் பெண்கள் அதை விரும்பி அணிய ஆரம்பித்தனர். திரைப்படங்கள் வெளி வர  ஆரம்பித்ததும் டிசைன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித் தது. எனவே ஃபேஷன் டிசைனிங் துறையும் வளர்ந்தது. சுருக்கமாக இந்தி சினிமாதான்  புடவைகளின் வகைகளை பிரபலப்படுத்தியது என் று சொல்ல லாம்…’’ புடவையின் முன் பாதிதான் பாவாடை தாவணி  என்கிறார்.
‘‘கவுன், பேன்ட், ஸ்கர்ட் எல்லாம் இன்றைய வடிவங்கள். ஆரம்பத்தி ல் பருவம் அடையும் வரை பெண்கள் பாவாடை, சட்டைதான் அணி ந்து வந்தார்கள்பருவம் எய்திய பிறகு, இது வே பாவாடை, தாவணி யானது. இன்று பாவடை, லாங் ஸ்கர்ட், பிஷ்கட் ஸ்கர்ட், லைன் ஸ்கர்ட் என்று மார்டனாக  மாற்றியுள்ளது. அதே போல் தாவ ணியும் ஸ்டோல், ஸ்கார்ப் என உருமாறியுள்ள து. மற்ற உடைகளை போல் பாவாடை தாவ ணியிலும் எம்பிராய்டரிசம்கி வேலைப்பாடு கள் இப்போது செய்யப்பட்டு வருகின்றன…’’ என்று சிரித்தவர், புடவைகளில் இருக்கும் வகைகளை பட்டியலிட ஆரம்பித்தார்.
‘‘டெனிம் புடவை, பார்க்க டெனிம் துணி போலி ருக்கும். ஆனால், பட்டு துணியால் நெய்யப்பட் புடவை இது. ரவிவர்மனின் ஓவியங்களை வைத்து  உருவானது ஹம்ச தமயந்தி புடவை. இடுப்புப் பகுதியில் சின்ன பாக்கெட் கொண்டிருப்பது பாக்கெட் புடவை. எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக்கட்டுவது ரிவர் சபிள் புடவை. ஜாக்கெட்டிலும் புடவையிலு ள்ள டிசைன்களை அமைத்தால், அது ஷர்ட் காம்போ. இதை கல்யாண கலெக்ஷன் என் றும்  அழைக்கலா ம்.
ஒரு புடவை, இரண்டு பிளவுஸ் பிட்ஸ் என் றிருப்பவை மா பேட்டி புடவை. அம்மா பெண் இருவரும் இதனை அணியலாம். இப்படி காலத்துக்கு ஏற்ப  நிறைய மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன…’’ என்றவர், புடவையை அணிவ திலும் பல வகைகள் இருப்பதாக சொல்கிறா ர்.‘‘சாதாரணமாக எல்லா பெண்களும்  கட்டு வது நிவி ஸ்டைல். இதிலேயே முந்தானையை வலது பக்கமாக முன்னால் கொண்டு வந்தால், அது குஜராத்தி ஸ்டைல்.
ஆண்களின் பஞ்சகச்சம் போல் கட்டப்படுவது கொங்கினி. பிராமண சமுதாயத்தில் அணியும் ஸ்டைல், மடிசார். பொதுவாக கொசுவம் முன்னா ல் வரும்அதையே பின்னால் வருவதுபோல் அணிந்து முந் தானையை குஜராத்தி ஸ்டைலில் கொண்டு வந்தால், அது குடகு ஃபேஷன்.இப்படி மாநிலத்துக்கு  மாநிலம் புடவை கட்டும் ஸ்டைல் மாறுபடுகிறது.
இதையே கலந்துக் கட்டி புதிது புதிதாக ஸ்டைல் களை உருவாக்கி வருகிறார்கள், ஃபேஷன் டிசைனர்கள். கல்யா ணம், பார்ட்டி என அந்தந்த  விசேஷங்களுக்கு தகுந்தபடி புடவை அணிந்தால் எடுப்பா கவும், அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும். ஆனால், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடிதான்  புடவை அணிய வேண்டும். குண்டாக இருப்பவ ர்கள், மெல்லிய துணியாலான புடவைக ளை கட்டலாம்.
இது அவர்களது உடல் எடையை குறைத் துக் காட்டும். அதே போல் ஒல்லியாக இருப் பவர்கள் திக்கான புடவைகளை கட்டினால், பூசினாற்போல்  தெரிவார்கள்.’’ என்ற தபசும்,
புடவைகளை எப்படி பராமரிக்கவேண்டும் என்றும் டிப்ஸ் தருகிறா ர்.
   
டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே நூல் கண்டு போல் சுற்றி வைக்க வேண்டும்.
ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவை களை மல்லு துணி கொண்டு சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் பந்து களை பயன்படுத்த வேண் டாம்.
உடையின் மேல் வாசனை திரவியம் தெளிக்கக் கூடாது. அது, றையாகும்.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வே ண்டும். அதே போல் நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக்  கூடாது.
ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.
நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைக ளை சோப்புத் தண்ணீ ரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.
சில சமயம் ஜாக்கெட்டில் அக்குள் பகுதி யில் வியர்வை கரை படியு ம். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து  குறிப்பிட்ட பகுதியில் துடைத்தால் கரை மறையும்.
புடவையின் நிறம் மங்கினால் மறு படியும் டை செய்துக் கொள்ள லாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.
இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைக ளை மடித்து வைக்கலாம்.

அனுப்பியவர்:பரந்தாமன்

0 comments:

Post a Comment