அனுபவ தத்துவ முத்துக்கள்

 இல்லறம் ஒரு நல்லறம் என்பதாலேயே ஆத்திசூடியும் ,திருக்குறளும் அதற்கு முதலிடம் கொடுத்தது. அவ் இல்லறத்தில் வாழ்ந்து இறந்தோரை நினைவுகூர்தல் வாழும் இல்லத்தார்களின் ஓர் கடமையென திருவள்ளுவர் தனது பொய்யாமொழியில் 43 ஆவது குறளில் கூறுகிறார்.
------------------------------
அன்பினால் நாயின் வாலைக்கூட ஆட்டிட முடியும். உணர்வற்ற ஜடங்களை பணம்,பொருள் போன்ற சடப்பொருட்கள் கொண்டே அசைக்க முடியும்.
---------------------------------------
ஒரு மனிதனிடம் சிக்கனம் இருக்கலாம். கஞ்சத்தனம் இருக்கவே கூடாது.
-------------------------------------------
நன்றி கெட் டவர்கள், நம்பிக்கைத் துரோகிகள் ,சுயநலவாதிகள் இவர்களெல்லாம் மிருக இனத்திலும் கீழானவர்களே!
--------------------------------------------
ஒரு இனத்தை அழிக்க வேணுமெனில் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும்.ஆனால் நாம் எம்மொழியினை அழித்துக்கொண்டு ஆள்பவன் எம் இனத்தினை அழிக்கிறான் என்று கூக்குரலிடுவது அர்த்தமற்றது.
-------------------------------------------
இருக்கும் உறவினை முறித்துக்கொள்ளல் எளிது. அதனைப் புதுப்பித்தல் என்பது கடிதிலும் கடிது
-------------------------------------------
இன்ப காலத்தில் இணைந்து சிரித்தவர்கள் துன்ப காலத்தில் தூர நின்று வேடிக்கை பார்ப்பார்களாயின் அவர்கள் அனைத்துஜீவராசிகளிலும் பார்க்க த்தாழ்ந்தசாதிகளேயாவார்..

0 comments:

Post a Comment