சிரிக்க...!


கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.
மனைவிஎன்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்கயாருங்க இது?.
கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….!!!!!

ரமனன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. ..
வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்

இண்டர்வியூவில் அதிகாரி : என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
வேலு : நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!

ரமனன் : சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை ..
போலீஸ் : கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்.

ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார்.
ஆசிரியர் : !!

ஒருவர் : உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.
மற்றொருவர் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.

கோபு : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
பாபு : கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க
கணவன் : எனக்கு மறந்து போச்சு
மனைவி : இது கூடவா ?
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

இன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல?
போலிஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.

பாக்கி : என் மனைவியோடு ஹொட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .
ரமனன் : என்னாச்சு ?
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா

மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .
கணவன் : வேற என்னதான் போட்ட?
மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்

மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?
கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?
மனைவி : இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.

ரமனன் : எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு . . . என்னால ஜீரணிக்கவே முடியல்ல.
முராரி : அய்யய்ய நீங்க நாயெல்லாம் சாப்பிடுவீங்களா?

வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
பாக்கி : நீ என்னாவே....?
வேலு : காலியாயிருவேன்.

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..
ரமனன் : ஏன் .. ..
வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..

0 comments:

Post a Comment