சிரிக்க....சில நிமிடம்



01.

ரமணன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. ..

வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்.


02.

காதலன் : அன்பே! இந்த கடற்கரை, குளிர்ந்த காற்று, தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ?

காதலி : வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது.


03.

நெப்போலியன் : - என்னுடைய அகராதியில்முடியாது’ என்கின்ற வார்த்தையே கிடையாது

சர்தார்ஜி : - இப்போ சொல்லி என்ன பிரயோசனம், அகராதி வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்.


04.

ஜோ : போன வாரம் போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

நண்பர் : நீ என்ன தப்பு செய்தே?

ஜோ : கடைக்குப் போய் ஷாப்பிங் செய்தேன்.

நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க?

ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்.


05.

வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ, அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!


06.

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !


07.

நண்பர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்கள்லேயே கடைசியா எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் ?

டைரக்டர் : கடைசிவரைக்கும் கதை என்னன்னு எனக்கே புரியலையே.


08.

இயக்குனர் : படத்தோட முடிவுல ஹீரோவான நீங்க, வில்லனா மாறிடறீங்க.

நடிகர் : பேசின சம்பளத்தை உடனே தரல்லேன்னா, இப்பவே வில்லனா மாறிடுவேன்.


09.

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!


10.

டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.

ஜோதி: ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?


11.

தணி : முன்னே உங்க பையன் லா-காலேஜ் போறான்னு சொன்னீங்க, இப்ப மெடிக்கல் போறான்னு சொல்றிங்களே ?

ஓமப்பா : ஆமா முன்னே லா காலேஜ் பெண்கள் பின்னாடி சுத்தினவன், இப்ப மெடீக்கல் காலேஜ் பொண்ணுங்க பின்னாடி சுத்துறான் !


12.

ஆசிரியர் : "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"

ராமு : "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"


13.

காதலி : நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?

காதலன் : அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.


14.

அப்பா : டேய் ‌‌ங்க ன்னடா ண்ணிக்கிட்டு இருக்க?

மகன் : கடிகாரம்நின்னுப் போச்சுப்பா?

அப்பா : சாவி கொடுடா ரியாகிடும்.

மகன் : அதான்பா ரொம்ப நேரமா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அது வாங்கவே மாட்டேங்குதுப்பா...


15.

நோயாளி : டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

 டாக்டர் : எங்கப்பா கடிச்சுச்சு?

நோயாளி : வீட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!


16.

வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?

டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.


17.

ரமனன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. ..

வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்.

 

18.

ராமு: சொந்த ஊரு எது ?

ஜோதி : அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க, சொந்த வீடுதான் இருக்கு!

 

தொகுப்பு:-செ.மனுவேந்தன். comedy , jokes , siri நகைச்சுவை nakaichchuvai sirippu சிரிப்பு 

 



 

 

0 comments:

Post a Comment