"பெருவெடிப்புச் சித்திரம்"

[நவீனகவிதை / படக் கவிதை]

 


"பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய

சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக

உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர

காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள

மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில்

தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!"

 

"மாலைக் காற்று மெதுவாய் வீச

பாடும் குயில்கள் பறந்து செல்ல

வானவில் ஜாலங்கள் புரிய

மனதை நெருடி மகிழ்ச்சி தர

நாணம் கொண்ட என்னவளை நினைத்து

என் எண்ணத்தின் பெரு வெடிப்பில்

சிதறிய அவள் அழகுத் துகள்களை

பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து

ஓவியம் ஆக்கினேன்!"

 

"அகன்ற மார்பும் சிறுத்த இடையும்

ஒரு பக்கம் சரிந்த கார் குழலும்

இதலைத் தொட்டு கோர்த்த இரு கைகளும்

இதழில் மலரும் புன்னகையும்

தோளில் சரிந்து விழுந்து

முழங்காலை துப்பட்டா கொஞ்ச

அந்த அழகு சிலை

என் இதய பெரு வெடிப்பின்

அழகு துகள்களே!"

 

"அவள் அழகில்

தென்னை மரமும் குனிந்து ரசிக்க

ஞாயிறும் மயங்கி துயில் போக

தில்லை நடராஜன் ஒரு காலில் கூத்தாட

அவள் கயல் விழிகள் இமைத்தன

என்னைப் பார்த்து நாணம் கொண்டன!!"

 

-------------------[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment