உங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க...

உங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது நோயெதிர்ப்பு மண்டலம் தான். இத்தகைய நோயெதிர்ப்பு மண்டலம் நமது ஒருசில செயல்களால் பாதிக்கப்பட்டு அழிவிற்குள்ளாகிறது. இச்செயல்கள் அப்படியே நீடித்தால், பின் கடுமையான நோய்க்கிருமிகளால் உடல் பாதிக்கப்பட்டு, அதனால் அபாயத்தை சந்திக்க நேரிடும்.

ஆகவே ஒவ்வொருவரும் தங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் செயல்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இங்கு நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் பழக்கவழக்கங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அளவுக்கு அதிகமாக ஒருவர் பயணத்தை மேற்கொண்டால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலமானது கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்க கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக புதிய இடத்தில் உள்ள உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றால் கிருமிகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். எனவே பயணம் செய்யும் முன் யோசியுங்கள்.

பலர் வயிற்று பிரச்சனைகளுக்கு ஆன்டாசிட்டுகளை எடுப்பார்கள். இப்படி எதற்கு எடுத்தாலும் ஆன்டாசிட்டுகளை எடுத்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் தான் பாதிக்கப்படும். எனவே மருத்துவர்களின் பரிந்துரையின்றி ஆன்டாசிட் மாத்திரை, மருந்துகளை எடுக்காதீர்கள்.

மதுபானம் இரத்த செல்களின் உற்பத்தியைக் குறைக்கும் என்பது தெரியுமா? இப்படி இரத்த செல்களின் உற்பத்தி குறைந்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவாறு பாதிக்கப்படும்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், தனிமையாக வாழ்க்கை வாழ்பவர்களின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. எனவே ஆரோக்கியமாக வாழ தனிமையில் இருப்பதைத் தவிர்த்து, சமூகத்துடன் ஒன்று சேர்ந்து வாழுங்கள்.

எடையைக் குறைக்கிறேன் என்ற கடுமையான டயட்டுகளை பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் கடுமையான டயட்டுகளால் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்காமல், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிப்பிற்குள்ளாகும்.

சில உடல் நல பிரச்சனைகளுக்கு ஆன்டி-பயாடிக்ஸ் எடுக்க வேண்டி வரும். ஆனால், இப்படி ஆன்டி-பயாடிக்குகளை அதிகமாக எடுத்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் அழியக்கூடும். எனவே இதுக்குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

தொடர்ச்சியாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து வருவதனால், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தொல்லை ஏற்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பிற்குள்ளாகும். எனவே எதற்கெடுத்தாலும் மருந்து, மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.


ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காவிட்டால், அதனால் முதலில் பாதிக்கப்படுவது நோயெதிர்ப்பு மண்டலம் தான். நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் தான், தூக்கமின்மையால் மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடுகிறது.

0 comments:

Post a Comment