உழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]


வாழ்வில் 
 மகிழ்ச்சியின்   மூலதனம்
  உழைப்பே
 உழைப்பின் மீது
 மோகம் கொண்டால்
தோல்வியும் 
வெறுப்பு கொண்டு 
வெற்றியை
 உன் வசம் மாக்கும்

சோம்பல் மீது
  விருப்பு க்கொண்டு 
உழைப்பின்  மீது 
 கவனம் இன்றி ப்போனால்
 தோல்வியும் 
விருப்பு கொண்டு 
 வெற்றியை  
வலுவிழக்க செய்யும் 

உழைப்பால்
 நீ உயர்ந்து 
வெற்றி படியை  த்தொட்டால் 
சமூகமும் 
தலை வணங்கும் 
உறவுகளும் 
பெருமை  கொள்வார் 

ஏழை எளியவன் ஆனாலும்
 உழைப்பின்   மீது 
 உணர்வு கொண்டால்  
வாழ்வில் 
உயர்வு உண்டாகும் 
பணக்காரன் ஆனாலும்
  உழைப்பின்   மீது 
உணர்வு  இல்லை எனின்
 தாழ்வு குடி கொள்ளும்  

சிலந்தியை போன்று 
உழைப்பில்  முயற்றி உடையவன் 
மனதில் புயல் வந்தாலும் 
வெற்றியை தன தாக்குகிறான்.

உலகத் தொழிலாளர் தினமாகிய -மே1-இனை ஒட்டி இக்கவிதை வெளியாகிறது.

1 comments: