அடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது?


அலுவலகத்தில்,வீட்டில்மற்றும் சில இடங்களில்காட்ட முடியாத கோபத்தைவேறெங்கோ வீசிஎறிகிறோம்.கோபம்அமிலம் போன்றது.யாரோநம்மைவிட எளியவர்கள்பாதிக்கப்படுவது பற்றி நாம்கவலைப்படுவதில்லை.அடக்கிவைப்பதும் ஏதோஒருநாள் வெடிக்கவேசெய்யும்.வெளியே கொட்டும்வரை உடலையும்,மனதையும்அரித்துக்கொண்டே இருக்கும்.முகம் மாறஉறவுகளில் பாதிப்பைஏற்படுத்தும்.
    ஒருவர் தனது குழந்தையை கடைத்தெருவில் போட்டுஅடித்துக்கொண்டிருந்தார்.அவருடைய பையன் தான்.சுமார் எட்டு வயதுஇருக்கும்.அவ்வளவு பெரிய குற்றம் எதுவும் செய்திருக்கவாய்ப்பில்லை.எவர் ஒருவரும் உலகில் எந்த உறவையும் விட தனதுகுழந்தைகளை நேசிக்கிறான்.இருந்தும் ஏன்?
 எல்லா நேரங்களிலும் ஒருவர் இப்படி நடந்து கொள்வதில்லை.ஏதேதோசிக்கல்கள்.போராட்டங்கள் எங்கோ காட்ட வேண்டியகோபம்.எரிச்சல்.அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.சாதாரணசளி பிடித்தால் கூட எரிச்சலான மன நிலையில் இருப்பது பற்றிநினைத்தேன்.?
கோபம் ஒரு இயல்பான உணர்வு.இயலாமையில்,எதிர்பார்ப்புகள்சிதறும்போது சூழ்நிலைகளில் ஏற்படுவதைவிட,வலியவர்களிடம்வெளிப்படுத்த முடியாத கோபம் கொடுமையானது.பல நேரங்களில் நம் மீதுகோபப்படும்போது நம்மை அவர்கள் நேசிக்கவில்லை என்று நினைத்துவிடுகிறோம்.அதிகமாக பாதிக்கப்படுகிறோம்.
உங்கள் கோபத்தை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?ஏனென்றுஎனதுகோபம் சரியானதாஏன் நான் கோபப்பட்டேன்?கோபத்தை புரிந்துகொள்வதேஅதை வெல்ல சரியான வழி. தண்ணீர் குடிப்பது,ஒன்றிரண்டுஎண்ணுவது,இடத்தை விட்டு வெளியேறுவது, மௌனம் சாதிப்பதுபோன்றவற்றால் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.  
  நம்மைப்போலத்தான் மற்றவர்களும்.தவிர,மனிதர்கள் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை.மாத விலக்கு நாட்களில் பெண்களின்மனநிலையில் மாற்றம் இருக்கலாம்.உடல்நலம் இல்லாதபோதுசிடுசிடுவென்றுஇருக்கலாம்.ஏமாற்றங்கள்தோல்விகள்போன்றவையும்,இயலாமையும் தன் மீதோ,மற்றவர்கள் மீதோ கோபத்தைதூண்ட்த்தான் செய்கின்றன.
 விலங்குகளுக்குக் கூட கோபம் உண்டு.ஆனால்,சிந்திக்கத்திறன் பெற்றமனிதன் அதை மேலாண்மை செய்ய முடியும்.ஏற்கனவே நமக்கு கோபத்தால்ஏற்பட்ட இழப்புகளை நினைத்துப்பார்த்தால்,தொடர்ந்து அதன் தீமையைப்பற்றி எண்ணிவந்தால் மனம் பக்குவமடைந்துவிடும்.
  நியாயமான கோபமும் இருக்கத்தான் செய்கிறது.அநீதிக்கு எதிரான கோபம்தேவையானது.கோபம் உள்ளிட்ட உணர்வுகளுக்கு சிந்திக்க துவங்குவதுதான்வெளியே வர சரியான வழி.சிந்திப்பது மூலம் நம்மையும் பிறரையும்பாதிக்காமல் காத்துக்கொள்வது சாத்தியம்தான்.மனிதர்கள் அனைவருக்கும்சிந்திக்கும் திறன் இருக்கிறது.
                                                                                                                         

0 comments:

Post a Comment