திருவள்ளுவரும்,சிவவாக்கியரும்

  
    
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
என்ற திருவள்ளுவரின் கருத்தையும்
    “மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”
என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.

     ஒருவர் பலரிடத்தும்  பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம், ஞானியாகவும்   இருக்கலாம்,   யோகம்  செய்து  கொண்டும்   இருக்கலாம், நாட்டைத்  துறந்து  காட்டிலே போய்க்கூட வாழலாம்.  ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன விரதங்கள்  யாவும்  பாழாய்  முடியும்.  உள்ளத்திலே குற்றங்களை வைத்துக் கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.

     அப்படியானால்  உண்மையான  கடவுள்தான்  யார்? என்ற வினாவுக்கு அறிவுதான்  இறைவன்  என்று  விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு தான்  இறைவன் என்றால்  அறிவாளிகள் மட்டும்தான்  இறைவனைத் தொழ இயலுமோஎன்ற  வினாவும்  எழுகிறது.  இல்லை  பாமர  மக்களும்  தம் அன்பினால்  இறைவனைத்  தரிசிக்கலாம்   என்றும்   இறைவன்   எங்கும்
நிறைந்திருக்கிறான்  என்ற  கருத்தையும்   சிவவாக்கியர்  தம்  பாடல்களில்

நிறைத்துக் காட்டுகின்றார்.
                           

0 comments:

Post a Comment