மோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்! – ஓர்ஆச்சரியத் தகவல்

தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூபித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் பென்சில் வேனியா பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒக்லின் பிராங்க், மேக்லைன் சாம்பர் லைன், ஸ்பிரிங்கர், ஸ்டேனியல் ஆகி யோர் அடங்கிய குழு சாக்கோ லேட், லாம் பிராடர் இன நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
கர்பபை புற்றுநோயை உருவாக்கும் செல் கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. பின் னர் கர்பபை புற்று நோய் சோதனைக்கு வந்த பெண்களுக்கு ரசாயன மருந்து கொடுத்து அதன் மூலம் வெளி யேறும் சிறுநீரில் கர்பபை புற்று நோயை உருவாக்கும் செல்கள் இருக்கின்றனவா என மோப்பம் பிடிக்க செய்த னர்.
அவ்வாறு மோப்பம் பிடித்து உறுதி செய் த பெண்களின் ரத்தத்தை பரி சோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கர்ப பை புற்றுநோய் இருந்தது தெரியவந்த து. அதன் மூலம் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கர்பபை புற்றுநோயை 100 சதவீதம் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் உறுதி செய்து ள்ளனர்.

1 comments:

  1. நாய்க்கு இப்படி பல நல்ல காலங்கள் இருக்கு.

    ReplyDelete