ஒளி பெறுமா என் வாழ்வு.


என் இதயம்
உன் பிரிவை தாங்க 
ஒன்றும்
 வலி தாங்கும்
சுவர் இல்லை பெண்ணே!

நீ இல்லாத இந்த நேரம் 
என் விழி
இரண்டும் சோர்வடைந்து 
உன் எண்ணங்களை சுமந்து
நான்   படும் பாடு
 உனக்கு எப்படிப் புரியும்!

வாசம் இன்றி மலர்
 உயிர்  பெறாது  பெண்ணே! 
உன் சுவாசம்  இன்றி நானும்
 உயிர் வாழ்வது
முடியாது கண்ணே!

நீ மீண்டும்
வந்து சேர்ந்து விட்டால்
வையகம்
 என் வசம் ஆகும். 
இல்லை எனில்

என் வாழ்வும் இருள் கொள்ளும்.
 [அகிலன் தமிழன்] 

0 comments:

Post a Comment