மனிதன்



பசிக்கு உணவு இல்லையே
என்று வருந்துகிறான் ஏழை,
உணவை உண்ணப் பசியில்லையே
என்று வருந்துகிறான் பணக்காரன்.
பணம் மிகுதியாய் உள்ளவனிடம்
மக்கள் நற்குணத்தைத் தேடவில்லை,
பணம் இல்லாதவனின் நற்குணத்தை
மக்கள் மதிக்கவில்லை.
ஏழைகளுக்காகப்  பாடுபடுகின்ற பலரும் கூட
பணக்காரர்களுக்குத் தான் நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஏழையின் உறவினை உதாசீனம் செய்யும் மனிதன்
 பணக்காரனின் உறவை பல விதங்களில் தேடுகிறான்.

0 comments:

Post a Comment