இப்படியும் மனிதர்கள்

வஞ்சனை நிறைந்த உலகமடா _ நெஞ்சில்
வஞ்சனை என்றும் உலவுமடா
செய்தது ஆயிரம் நன்மைகள் -என்பினும்
சென்றபின் செருக்கிலே இகழுமடா



கண்களில் நீரோ கரையுமடா -அவர்
கனிந்த சொல் நெஞ்சில் உரையுமடா
தொடுப்பது எல்லாம் பொய்மையடா-அவர்
நடப்பது எல்லாம் நடிப்பதடா

                       நெஞ்சமோ நஞ்சாய் இருக்குமடா - ஆனால்
     சொல்பவை மட்டும் இனிக்குமடா
வஞ்சனை ஆயிரம் பேசினும் -நீ
வந்தபின் வாயாலே புகழுமடா.

செல்வங்கள் வந்ததும் சேருவார்- அவை
செல்லும் என அறிந்ததும் மாறுவார்
உழைத்தது நீ என்று பேசுவார்- கொஞ்சம்
தாழ்ந்தால் அண்டிபிழைத்ததால் போனது
என்று ஏசுவார்   

               வாழ்வதை கண்டால் எரியுமடா- அவன்
வீழ்ந்ததும் நெஞ்சம் குளிருமடா
             தான் கோடிகள் கொட்டி வாழ்ந்தாலும்
                                      மற்றவன் கோவணம் வாங்கினும் பொறுக்காதடா.

போலியாய் வாழ்விலே இருப்பானடா- மற்றவர்
போற்றனும் என்று தான் நினைப்பானடா
உண்டது காஞ்சி தான் என்றாயினும்
கையில் நெய்யிட்டு காட்டுவானடா.

                                         ஊருக்கு ஆயிரம் உபதேசம்
                 உண்மையில் அகத்திலே பொய்வேஷம்
                     தான் கரமெல்லாம் கறையாக இருப்பீனும்
                மற்றவர் காலிலே கறை என்று உபதேசம்

பேருக்கு திருமணம் செல்வாரடா _ அங்கே
போய் வந்து ஆயிரம் சொல்வாரட _ பெண்ணுக்கு
மூக்கு என்று எடுபாரடா இறுதியில்
பாக்குதான் பத்தவில்லை என முடிபாரடா


பேரு வர படிப்பதை மறந்தாரடா _ சும்மா
         பேருக்கு படிபாதாய் இருந்தரடா _ வியற்றிலே
வறுமை தான் வாடும்போடும் _ வாயிலே
வசதியாய் காட்டுவாரடா

பொய் சொன்னால் பிடிகாது
என்பாரடா _ அதுவே அவர்
சொல்லும் பொய் என்று
உணரதவரடா

  சாதனையால் பெயர் எடுக்க
வேண்டாமடா _ இத்தனை
சாத்தானையும் சமாளித்து
வாழ்ந்தாலே போதுமடா  ..


நன்றி:V . Natarajan 

0 comments:

Post a Comment