அ.தி.மு.கழகம் பிளவுபடுமா?

இந்திய அரசியல் வாதிகளிற்கு ஒத்துப் போகாதவர்கள் விடுதலைப் புலிகள் என்பதால் வழக்கம்போல்  அவர்களுக்கு [இராவணனுக்கு அரக்கன்] பயங்கரவாதி முத்திரையிட்டு அழித்தனர்.
தங்கள்அரசியலுக்கு ஒத்துபோகாத அரசியல் வாதிகள் அழிப்பதற்கு உளவு நிறுவனங்களை உபயோகிப்பதுவும், அரசியலற்ற  அமைப்புகள் எனில் பயங்கரவாத பட்டம் சூட்டி அழிப்பதுவுதும் தான் இன்றைய அரசியல்.
ஆதாரங்கள் மக்கள் மத்தியில் வெளிப்படடாலும் அதன் வெளிப்படுத்துவோர் தேடி எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.கடத்தப்படுகின்றனர் 
ஜெயலலிதா இருக்கும்வரையில் வேறு  எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழ் நாட்டில் தலையெடுக்க முடியாது  என்பது உண்மை. எனவே அக்கடசியினை பலவீனப் படுத்த .....சசிகலாவா? மோடியா? இல்லை மறைந்திருக்கும் அந்த மர்ம நபர் யார்? என்பதே தற்போதைய தமிழ்மக்களின் கேள்வியாக இருக்கின்றது.
ஒரு அரசியல் தலைவர் இறந்தால் கட்சியினை உடைத்துக் கொண்டு வேறு கட்சி உருவாக்குவது வழமை.அவ்வேளையில் ஒருவரை ஒருவர் தாக்கும்போது முதலமைச்சர் மறைவின் மர்ம முடிச்சுகள் அவிழலாம். ஆனால் அப்படியான நிலை வராமல் தடுப்பதில் மோடி அரசு முயற்சி செய்வதாக செய்திகள் கூறுகின்றன. அங்கே சந்தேகம் மேலும் வலுவாகிறது.
அரசியல் வாசிகளுக்கு பேராசை அதிகம்.அடுத்த தேர்தல் நெருங்க கடைசி நேரத்தில் ஆவது உடைத்துக்கொண்டு வருவார்கள்.புதியகட்சி தோன்றும்.

கழகம்உடைவதில்எமக்கொன்றும் சந்தோஷமுமில்லை. துக்கமுமில்லை. ஆனால்,சுவாதி கொலை வழக்கில் பல நாட்களை எடுத்துக்கொண்டு மர்மமாக முடிந்த வழக்குப்போல முதலமைச்சரின் மரணமும் முடியாமல் இருக்க தமிழ்மக்கள் விழித்துக்கொள்வதே பொருத்தமானதாகும். இல்லாவிடில் இன்னும் பல  தலைவர்கள் இலகுவாக அழிக்கப்படலாம், என அரசியல் விமர்சகர்கள் அச்சம்  தெரிவித்துவருகின்றனர்.
-விழித்தெழு தமிழகமே [சண்டியன் -சரவணை ]

1 comments:

  1. அத்தை ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை!- தீபக் பேட்டி -இதை[உண்மையெனில்] சொல்ல இவ்வளவு காலம் தேவையில்லை.

    ReplyDelete