வள்ளுவனும்,அவ்வையும் ..

திருவள்ளுவர்:
திருவள்ளுவர் எந்தச் சமயத்தினர் என்பது தெரியாது. அவர் சைவமாய் இருக்கலாம் என்பது ஒரு ஊகமே.
இவர் வாழ்ந்த காலம் கி.மு. 200 - கி.பி. 800 இடையில் இருக்கலாம். இவர் படங்களில் தீட்டப்பட்டுள்ள திருநீறு நம்மவரின் சேர்க்கையே.
* புத்தரைக் குறிக்கும் எண்குண வழி, தாமரைக் கண், மறுபிறப்பு என்று கதைத்தாலும், அவர் போதனைகளில் ஒன்றான மனிதனே கடவுள், வேறு ஒரு உயரிய கடவுளே இல்லை என்ற கொள்கைகளுக்கு மாறாகப் பல கடவுளர், சாதி வேறுபாடு பற்றிப் பேசுவதால் அவர் பௌத்தர் அல்ல.
* இவர் கூறும் அகிம்சை, தவம், வீடுபேறு என்பன சமண-பௌத்த மதக் கொள்கைகள். அக்காலத்தில், சைவ சமயத்தினை விட இந்த மதங்களே செழித்தோங்கி இருந்தன. இவர் காலத்தில் இயற்றப்பட்ட ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் சமண, பௌத்த புலவர்களாலேயே இயற்றப்பட்டன. ஆதலால் இவர் சமணராய் இருக்கலாம்.
*சாதி,மறுபிறப்பு, மோட்சம் என்று கதைத்திருப்பதால் சீக்கிய, வைணவ, சைவ சமயியாய் இருக்காலம். ஆனால், அக்காலத்தில் சீக்கிய மதம் தென் பகுதியில் பரவி இருக்கவில்லை. ஆதலால் சீக்கியரும் அல்ல.
*வேதங்களில்  வரும் கடவுளர் பற்றிய விடயங்களை நேரடியாக எடுத்துக் கையாண்டு இருக்கிறார். வேதம் போல இவரும் தாய் தந்தையரை வாழ்த்தித் தொடங்குவதாலும், இலக்குமி  பற்றிக் கூறியபடியாலும் வைணவர் தானோ தெரியாது.
* சைவ நாயன்மார்கள் உபயோகித்த கடவுள் பெயர்கள் பலவற்றை இவரும் சேர்த்திருக்கிறார். உதாரணமாகத் திருமூலரின் அறவாழி அந்தணன் என்னும் சிவனைக் குறிக்கும் வார்த்தை இவர் குறளிலும் உண்டு. ஆதலால் சைவராய்  இருக்குமோ?
* எந்தச் சமயத்தினரும் அவரவர் ஆலயங்களில் இவருக்கு ஒரு சிலைதானும் வைத்தார் இல்லை.  இவர் தான் என்ன சமயத்தினர் என்று ஒருபோதும் காட்டிக்கொள்ளவே இல்லையே!
* அவர் என்ன சமயத்தினராக இருந்தாலும் அவர் கூறிய பல அறிவுரைகள் எல்லாச் சமயத்தினருக்கும் ஏற்புடையதாக இருக்கின்றன.
ஔவையார்:
ஔவையார் என்றால், ஒருவர் மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். பல ஔவையார்களின் சேர்க்கைதான் நமது ஔவையார். அதில் முக்கியமாக மூவரைக் குறிப்பிடலாம்.
-1 :கி.பி. 100 - 200 களில்  தமிழ் சங்கப்  பாரி, பரணர், கபிலர், திருவள்ளுவர் காலத்தில், கடுந்தமிழில் புறநானூறின் ஒருபகுதியை எழுதியவர். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவரும் இவரே.
-2 :கி.பி. 900 - 1000 களில்,இலகு தமிழில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன்,மூதுரை,நல்வழி முதலியவற்றை  எழுதியவர்.
My Photo-3 :கி.பி. 1200 - 1300  களில்,சோழ இராட்சியத்தில்,கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் விநாயகர் அகவல் முதல் பல தத்துவ, சமய, யோகக் கலைகள் பற்றிப் பாடல்கள்,பழமொழிகள் எழுதியவர்.
அத்தோடு,எல்லா ஔவையார்களும்,கே.பி.சுந்தராம்பாள் போல மூதாட்டி என்று நினைக்க வேண்டாம்!
                                     ஆக்கம்:-செல்லத்துரை,சந்திரகாசன்   

0 comments:

Post a Comment