நாளைய தேவை


நாளைய தேவை எது என அறிந்து 
இன்றே போராடு மனமே 
போராடும் உயிரே
நிலையாக நகர்ந்து போகும் 
நாளைய தேவை எது என 
அறியாமல் இருந்தால் 
பாதைகள் திசை மாறி போய்
துன்பங்கள் அதிகமாகும் 
 நாளைய தேவை எது என 
சிந்திக்கிற மனிதன்
 வாழ் நாள் முழுதும் 
மகிழ்வில் திளைக்கிறான்

தேவைகள்
 உடன் பிறந்து வருவதில்லை 
அவை காலத்தின்  மாற்றத்தில்
  கலந்து இருக்கும் உடன் பிறப்பு

உன்னுடைய வாழ்வில் நாளைய தேவை
 எது என கவனி உன் எண்ணம் மலரும் 
வாழ்வும் உயர்ந்து
 மகிழ்வும் நிரந்தரமாகும் 

நாளைய தேவை 
எது என அறியவில்லை என்றால் 
வாழ்வில் இன்பமும் மலராது 
உறவிலும் பிரிவுகள் உருவாகும்

        :-அகிலன்,காலையடி-:         

1 comments:

  1. என்ன சார்! ரஜனி சாரையும் யோசிக்க பண்ணிட்டிங்களா?

    ReplyDelete