சிரி..சிரிக்..சிரிக்கச் சில நிமிடம்

01

மனைவி: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?

கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான் .

02

டொக்ரர்: நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்

நோயாளி: அதுகள்  சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .

03

வந்தவர்: டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா.

டாக்டர்: எந்த அளவுக்கு பாக்குறாங்க ?”

வந்தவர்: கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!!

04

மனைவி: நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க ”

கணவன்: அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும் ”

05

டாக்டர்: உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு .

நோயாளி: நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும் .

06

ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

07

ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?

சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.

ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.

08

அலுவலகப் பையன்: எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .

பக்காத்துகாரர்: இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?

அலுவலகப் பையன்: நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

09

நண்பர் 1 : "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"

நண்பர் 2 : "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.

10

வந்தவர்: என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."

சமையற் காரர்: "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"

   தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment