சிரி......சிரிப்......சிரிப்பு வருது!

 


01

மனைவி: ஏங்க! உங்க மண்டையில களிமண்தான் இருக்கு!

கணவன்: ஆமாண்டி! நிச்சயமா! அதனாலதான் உன்னைபோய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே!

02

மனைவி :“என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”

கணவன் :“அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”

மனைவி :“அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”

03

சோமு: என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?

ராமு : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...

04

கமலா: "உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி மையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"

விமலா: "கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர் இல்லயா, அதனாலதான்டி."

05

மாப்பிள்ளை வீட்டார் :"என்னங்க இது மணப்பெண்ணுக்கு கைகழுத்து, நெற்றியிலலாம் பூவாலேயே அலங்காரம் பண்ணியிருக்கீங்க?"

பெண் வீட்டார் :"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்சொல்லி நீங்கதானே சொன்னீங்க?"

06

வேலு :"உங்க வீட்ல இன்னைக்கு ஒரே சிரிப்புச்  சத்தமாயிருக்கே, ஏன்?"

பாலு :"எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!"

07

கணவன் :"இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்"

மனைவி :"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

கணவன் :"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் எழுப்பிவிடலை"

08

வந்தவர்: "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"

கடைக்காரர் :"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"

வந்தவர்: "ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"

கடைக்காரர்: "ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"

வந்தவர்: "அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"

09

கலா: "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."

மாலா: "என்ன செய்தே?"

கலா: "சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"

10

ஆசிரியை : "ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"

மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள் விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"

11

கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்

காசா கிடக்குது?"

மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்

சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!"

12

திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்"

திருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே?''

திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு

அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு சொல்லிட்டார்"

13

திருமண விருந்தில்...

பந்தி பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும் சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே?"

சாப்பிடுபவர்: "ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி

அதிகமுங்க. எனக்கு ஜீரண சக்தி அதிகமுங்க"

14

விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு

வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்

உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல

உன் கணவர் யாருன்னு காட்டேன்"

கலா: "அந்த மூணாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "தலையில் சுருள் முடியோட..."

விமலா: "ஆமாம்"

கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா:"ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."

விமலா: "ஆமாம்"

கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான் என் கணவர்!!!"

15

பாலு: நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!

வேலு: நிஜமாவா, எப்படி?

பாலு: அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!’

16

ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்:

“”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன். அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது”

கணவன் நிதானமாகச் சொன்னான்: “”கவலைப்படாதே… வேறு நாய் வாங்கிக்கலாம்”

17

அப்பா: படிக்கற வயசுலே உனக்கு எதுக்கடா செல்போன் வாங்கித் தரணும்?

மகன்: சரி, அப்ப நான் படிக்கலை! செல்போன் வாங்கிக் கொடுங்க!

18

மனைவி:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்க  அம்மாவை  உங்க  அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்லுங்க?

கணவன்:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?

மனைவி:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!

தொகுப்பு : செ.மனுவேந்தன் 

 

 

0 comments:

Post a Comment