ஆன்மீகம்:விவேகானந்தர்

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும்> அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும்> இறப்பு> பிறப்பு> இரவு> பகல்> இன்பம்> துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர்.. அன்பு> புனிதம்> கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். கடவுள் அவனை;; மனக்கண்ணில் நாம் காணவேண்டும்> ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்> அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு> எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால்> நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே> குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள்> குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா..

செயல் நன்று> சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும்> சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும்> நன்மையும் தீமையும்> அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா> அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம்> ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்..
-விவேகானந்தர்.

0 comments:

Post a Comment