தொழில்நுட்ப செய்திகள்

பரீட்சை எழுதும் மாணவர்களை கண்காணிக்க உளவு விமானம்
பரீட்சை (தேர்வு) நடைபெறும் அறைகளில் மாணவ, மாணவிகள் சரியாக எழுதுகிறார்களா? காப்பி அடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதற்கும் மேலாக பறக்கும்படை அதிகாரிகளும் திடீரென்று போய் ஆய்வு செய்கிறார்கள். பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இதை கண்காணிக்க தற்போது புதுமையான யுக்தியை புகுத்தி இருக்கிறார்கள்.
அதாவது மேஷெலிம் நகரில் அமைந்துள்ள தாமஸ் மோர் பள்ளிக்கூடத்தில் பரீட்சை எழுதும் மாணவர்களை கண்காணிக்க உளவு விமானம் பயன்படுத்தி சோதனை மேற்கொண்டார்கள். மிகவும் சிறிய வடிவிலான இந்த உளவு விமானத்தில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. இது மாணவ, மாணவிகளின் தலைக்கு மேல் பறந்து சென்று கண்காணித்து கேமராவில் படம் பிடிக்கிறது. இந்த உளவு விமானத்தை ஒருவர் இயக்குகிறார். மற்றொருவர் கேமராவில் பதிவாகும் காட்சியை கண்காணிக்கிறார். மாணவர் யாராவதுதில்லுமுல்லுசெய்தால் உடனே கையும்களவுமாக சிக்கி விடுவார்கள்.

மோதிரம்  மூலம் கணனியை இயக்கும் தொழில்நுட்பம்!
முன்னெல்லாம் ஆண்டுதோறும் தொழில்நுட்பத்தில் அடைந்து வளர்ந்து வந்த வளர்ச்சியை இப்போது நாள் தோறும் அடைந்து கொண்டிருக்கிறோம் .அதிலும் குறிப்பாக இப்போதெல்லாம்தொழில்நுட்பத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்லலாம்.எங்கும் தொழில்நுட்பம், எதிலும் தொழில்நுட்பம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.ஒவ்வொரு நிறுவனமும் மக்களை கவர்வதற்காக எண்ணற்ற வசதிகளை புகுத்திக் கொண்டே உள்ள நிலையில் மிகப் பெரிய உலகத்தையே சின்ன கைபேசியில் அடக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது.
இந்நிலையில் வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.Fin Bluetooth Ring எனப்படும் இச்சாதனத்தினை விரலில் அணிந்து கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள், கணினிகள், கூகுள் கிளாஸ் போன்றவற்றினை இயக்க முடிவதுடன் இத்தொழில்நுட்பத்தினை கார்களிலும் பயன்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றது.இச்சாதனத்தினை RHL Vision Technologies எனும் நிறுவனம் கடந்த 2 வருட கடின உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
உலகின் முதலாவது சாரதியற்ற கார்! : விலை 250 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மட்டுமே
நீண்ட காலமாக சாரதியற்ற காரினை மக்கள் பாவனைக்குக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது கூகுள் நிறுவனம்.
இந்நிலையில் கூகுளினை முந்திக்கொண்டு பிரான்ஸ் நாட்டு ரோபோட்டிக் நிறுவனமான இன்டக்ட் உலகின் முதலாவது வணிகரீதியிலான சாரதியற்ற காரினை விற்பனைக்கு கொண்டுவந்து பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதி நவீன ரகமான இந்த சாரதியற்ற காருக்குநவியாஎனப் பெயரிடப்பட்டுள்ளது. 8 பேர் பணிக்கக்கூடிய இக்கார் முழுமையான இலத்திரனியல் காட்டுப்பாட்டில் சுயமாக இயங்கவல்லது.
அதிக பட்சமாக மணிக்கு 20 கிலோ மீற்றர் வேகம் வரை செல்லும் இக்காரானது விபத்துக்களிலிருந்து பாதுகாத்து குறித்த இடத்திற்கு பயணிக்கக்கூடியதாக நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் எங்கே போகவேண்டும் என நினைக்கின்றனோ அந்த இடத்தினை தொடுதிரை ஊடாக தேர்வு செய்தால் போதும் அவ்விடத்திற்கு நவியா பாதுகாப்பாக அழைத்துச்செல்லும். சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.
இக்கார் லாஸ் வெகாஸில் இடம்பெற்ற சர்வதேச நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இக்காரின் விலை 250 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இக்கார் விற்பனைக்கு வந்துவிட்டாலும் இப்போதைக்கு இதனை பொதுவான திறந்த வீதிகளில் பயன்படுத்த முடியாது. பல்கலைக்கழகங்கள், தீம் பார்க் மற்றும் விமான நிலையங்கள் போன்ற இடங்களிலேயே பயன்படுத்தப்படவுள்ளன.
இக்கார் குறித்து நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி பியர்ரா லெபெவ்ரி கூறுகையில், நவியா முழுமையாக சுயமாக ஓடக்கூடியது, 100 சதவீதம் இலத்தினியல் பாவனை, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, பாதுகாப்பானது. பாவனைக்கு இலகுவானது. இது பாதசாரிகளுக்கான சிறந்த தீர்வாகவுள்ளது. இது வித்தியமானதொரு கார் ஏனெனில் சுய அறிவாற்றலுடன் செயற்படக்கூடியது.
கையடக்கத் தொலைபேசி கட்டளை மூலம் இயங்கும் வாகனங்கள், இரைச்சலின்றிய, சூழல் மாசு ஏற்படுத்தாத வாகனங்கள் கொண்ட நகரினை கற்பனை செய்து பாருங்கள்எனத் தெரிவித்துள்ளார். இன்று உலகின் பல முன்னணி நிறுவனங்கள் சாரதியற்ற கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதனால் 2035 ஆம் ஆண்டளில் பெரும்பான்மையாக சாரதியற்ற கார்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேஸ்புக்கில் வருகிறதுஇரங்கல்பட்டன்
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வருத்தமான செய்திகளை பகிரும்போது லைக் பட்டனுக்கு பதிலாகஇரங்கல்பட்டன் விரைவில் வரவிருக்கிறது.
பொதுவாக பேஸ்புக்கில் நாம் எதையாவது பகிர்ந்தால் அதை படிப்பவர்கள் விரும்பினால் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் பொருட்டு லைக் பட்டன் இருக்கிறது. அதுவே நாம் வருத்தமான செய்திகளை பகிர்ந்தாலும்நானும் வருத்தப்படுகிறேன்என்பதை சொல்வதற்கு எந்த பட்டனும் இல்லை. மாறாக அதே லைக் பட்டனை தான் பயன்படுத்த முடியும்.
இதனால் நண்பர்களின் வருத்தத்தை விரும்புவதாக அர்த்தம் வந்துவிடுகிறது.

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதைஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.
இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.


Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.

Keyboard
பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.

left click, right click, drag & drop, scroll wheel, zoom
போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.

Team Viewer
பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.

இதை தரவிறக்கம் செய்ய...
https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile

0 comments:

Post a Comment