திருக்குறள் தொடர்கிறது…
100. பண்புடைமை
👉குறள் 991:
எண்பதத்தால்
எய்தல்
எளிதென்ப
யார்மாட்டும்
பண்புடைமை
என்னும்
வழக்கு
மு.வ உரை:
பண்பு
உடையவராக
வாழும்
நல்வழியை,
யாரிடத்திலும்
எளிய
செவ்வியுடன்
இருப்பதால்
அடைவது
எளிது
என்று
கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
எவரும்
தன்னை
எளிதாகக்
கண்டு
பேசும்
நிலையில்
வாழ்ந்தால்,
பண்புடைமை
என்னும்
நல்வழியை
அடைவது
எளிது
என்று
நூலோர்
கூறுவர்.
கலைஞர் உரை:
யாராயிருந்தாலும்
அவர்களிடத்தில்
எளிமையாகப்
பழகினால்,
அதுவே
பண்புடைமை
என்கிற
சிறந்த
ஒழுக்கத்தைப்
பெறுவதற்கு
எளிதான
வழியாக
அமையும்.
English Explanation:
If one is easy of access to all, it
will be easy for one to obtain the virtue called goodness.
👉குறள் 992:
அன்புடைமை
ஆன்ற
குடிப்பிறத்தல்
இவ்விரண்டும்பண்புடைமை
என்னும்
வழக்கு.
மு.வ உரை:
அன்புடையவராக
இருத்தல்,
உயர்ந்த
குடியில்
பிறந்த
தன்மை
அமைந்திருத்தல்
ஆகிய
இவ்
விரண்டும்
பண்பு
உடையவராக
வாழும்
நல்வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாரிடமும்
அன்புள்ளவனாக
வாழ்வது.
உலகத்தோடு
ஒத்து
வாழும்
குடும்பத்தில்
பிறந்திருத்தல்
இவை
இரண்டும்
பண்புடைமை
என்னும்
நல்ல
வழிகளாகும்.
கலைஞர் உரை:
அன்புடையவராக
இருப்பதும்,
உயர்ந்த
குடியில்
பிறந்த
இலக்கணத்துக்கு
உரியவராக
இருப்பதும்தான்
பண்புடைமை
எனக்
கூறப்படுகிற
சிறந்த
நெறியாகும்.
English Explanation:
Affectionateness and birth in a good
family, these two constitute what is called a proper behaviour to all.
👉குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
மு.வ உரை:
உடம்பால்
ஒத்திருத்தல்
மக்களோடு
ஒப்புமை
அன்று,
பொருந்தத்தக்கப்
பண்பால்
ஒத்திருத்தலே
கொள்ளத்தக்க
ஒப்புமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உறுப்புக்களின்
தோற்றத்தால்
பிறருடன்
ஒத்திருப்பது
ஒப்பு
ஆகாது;
உள்ளத்துடன்
இணையும்
பண்பால்
பிறருடன்
ஒத்திருப்பதே
ஒப்பு
ஆகும்.
கலைஞர் உரை:
நற்பண்பு
இல்லாதவர்களை
அவர்களின்
உடல்
உறுப்புகளை
மட்டுமே
ஒப்பிட்டுப்
பார்த்து
மக்கள்
இனத்தில்
சேர்த்துப்
பேசுவது
சரியல்ல;
நற்பண்புகளால்
ஒத்திருப்பவர்களே
மக்கள்
எனப்படுவர்.
English Explanation:
Resemblance of bodies is no
resemblance of souls; true resemblance is the resemblance of qualities that
attract.
👉குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு.
மு.வ உரை:
நீதியையும்
நன்மையையும்
விரும்பிப்
பிறர்க்குப்
பயன்பட
வாழும்
பெரியோரின்
நல்லப்
பண்பை
உலகத்தார்
போற்றிக்
கொண்டாடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியையும்
அறத்தையும்
விரும்பிப்
பிறர்க்கும்
பயன்படுபவரின்
பண்பினை
உலகத்தவர்
சிறப்பித்துப்
பேசுவர்.
கலைஞர் உரை:
நீதி
வழுவாமல்
நன்மைகளைச்
செய்து
பிறருக்குப்
பயன்படப்
பணியாற்றுகிறவர்களின்
நல்ல
பண்பை
உலகம்
பாராட்டும்.
English Explanation:
The world applauds the character of
those whose usefulness results from their equity and charity.
👉குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
மு.வ உரை:
ஒருவனை
இகழ்ந்து
பேசுதல்
விளையாட்டிலும்
துன்பம்
தருவதாகும்,
பிறருடைய
இயல்பை
அறிந்து
நடப்பவரிடத்தில்
பகைமையிலும்
நல்லப்
பண்புகள்
உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
விளையாட்டில்
விளையாட்டிற்காகக்கூட
ஒருவனை
இகழ்ந்து
ஏளனமாகப்
பேசுவது
அவனுக்கு
மன
வருத்தத்தைத்
தரும்;
அதனால்
மற்றவர்களிடம்
எப்படி
நடந்து
கொள்ள
வேண்டும்
என்று
அறியும்
திறம்
உள்ளவர்கள்,
பகைவர்களிடம்
கூட
ஏளனமாகப்
பேசார்.
கலைஞர் உரை:
விளையாட்டாகக்கூட
ஒருவரை
இகழ்ந்து
பேசுவதால்
கேடு
உண்டாகும்
அறிவு
முதிர்ந்தவர்கள்,
பகைவரிடமும்
பண்புகெடாமல்
நடந்து
கொள்வார்கள்.
English Explanation:
Reproach is painful to one even in
sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing)
qualities even when they are hated.
👉குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்மண்புக்கு மாய்வது மன்.
மு.வ உரை:
பண்பு
உடையவரிடத்தில்
பொருந்தியிருப்பதால்
உலகம்
உள்ளதாய்
இயங்குகின்றது,
அஃது
இல்லையானால்
மண்ணில்
புகுந்து
அழிந்து
போகும்.
சாலமன் பாப்பையா உரை:
பண்புடையவர்கள்
வாழ்வதால்தான்
மக்கள்
வாழ்க்கை
எப்போதும்
நிலைத்து
இருக்கிறது.
அவர்கள்
மட்டும்
வாழாது
போவார்
என்றால்.
மனித
வாழ்க்கை
மண்ணுக்குள்
புகுந்து
மடிந்து
போகும்.
கலைஞர் உரை:
உலக
நடைமுறைகள்,
பண்பாளர்களைச்
சார்ந்து
இயங்க
வேண்டும்
இல்லையேல்
அந்த
நடைமுறைகள்
நாசமாகிவிடும்.
English Explanation:
The (way of the) world subsists by
contact with the good; if not, it would bury itself in the earth and perish.
👉குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.
மு.வ உரை:
மக்களுக்கு
உரிய
பண்பு
இல்லாதவர்
அரம்
போல்
கூர்மையான
அறிவுடையவரானாலும்,
ஓரறிவுயிராகிய
மரத்தைப்
போன்றவரே
ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
மனிதப்பண்பு
இல்லாதவர்கள்
அரம்
போல
அறிவுக்கூர்மை
படைத்தவர்
என்றாலும்
ஓர்
அறிவு
படைத்த
மரத்தைப்
போன்றோரே.
கலைஞர் உரை:
அரம்
போன்ற
கூர்மையான
அறிவுடைய
மேதையாக
இருந்தாலும்,
மக்களுக்குரிய
பண்பு
இல்லாதவர்
மரத்துக்கு
ஒப்பானவரேயாவார்.
English Explanation:
He who is destitute of (true) human
qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a
file.
👉குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
மு.வ உரை:
நட்பு
கொள்ள
முடியாதவராய்த்
தீயவைச்
செய்கின்றவரிடத்திலும்
பண்பு
உடையவராய்
நடக்க
முடியாமை
இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்முடன்
நட்புச்
செய்யாமல்
பகைமை
கொண்டு
தீமையே
செய்பவர்க்கும்
கூடப்
பண்பற்றவராய்
வாழ்வது
இழுக்கே.
கலைஞர் உரை:
நட்புக்கு
ஏற்றவராக
இல்லாமல்
தீமைகளையே
செய்து
கொண்டிருப்பவரிடம்,
நாம்
பொறுமை
காட்டிப்
பண்புடையவராக
நடந்து
கொள்ளாவிட்டால்
அது
இழிவான
செயலாகக்
கருதப்படும்.
English Explanation:
It is wrong (for the wise) not to
exhibit (good) qualities even towards those who bearing no friendship (for
them) do only what is hateful.
👉குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
மு.வ உரை:
பிறரோடு
கலந்து
பழகி
மகிழ
முடியாதவர்க்கு,
மிகப்
பெரிய
இந்த
உலகம்
ஒளியுள்ள
பகற்
காலத்திலும்
இருளில்
கிடப்பதாம்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல
பண்பு
இல்லாததால்
மற்றவர்களுடன்
கலந்து
பேசி
மனம்
மகிழும்
இயல்பு
இல்லாதவர்க்கு,
இந்தப்
பெரிய
உலகம்
இருள்
இல்லாத
பகல்
பொழுதிலும்
கூட
இருளிலே
இருப்பது
போலவாம்.
கலைஞர் உரை:
நண்பர்களுடன்
பழகி
மகிழத்
தெரியாதவர்களுக்கு
உலகம்
என்பது
பகலில்
கூட
இருட்டாகத்தான்
இருக்கும்.
English Explanation:
To those who cannot rejoice, the
wide world is buried darkness even in (broad) day light.
👉குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
மு.வ உரை:
பண்பு
இல்லாதவன்
பெற்ற
பெரிய
செல்வம்,
வைத்த
கலத்தின்
தீமையால்
நல்ல
பால்
தன்
சுவை
முதலியன
கெட்டாற்
போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல
பண்பு
இல்லாதவன்
அடைந்த
பெரும்
செல்வம்,
பாத்திரக்
கேட்டால்
அதிலுள்ள
நல்ல
பால்
கெட்டுப்
போவது
போலாம்.
கலைஞர் உரை:
பாத்திரம்
களிம்பு
பிடித்திருந்தால்,
அதில்
ஊற்றி
வைக்கப்படும்
பால்
எப்படிக்
கெட்டுவிடுமோ
அதுபோலப்
பண்பு
இல்லாதவர்கள்
பெற்ற
செல்வமும்
பயனற்றதாகி
விடும்.
👉English Explanation:
The great wealth obtained by one who
has no goodness will perish like pure milk spoilt by the.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment