
சமீபகாலமாகப் பலவிதமான நிகழ்வுகளுக்கு இறைவன் கிருபையை வேண்டி விதம் விதமான பூஜைகளை, பூசகரைக் கொண்டு புரிவது நம்மின மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. ஆரம்பத்தில் கல்யாண வைபவம், அந்திரட்டி, ஆட்டத்திரி எனச் சிலவற்றுக்கு மட்டுமே செய்யப்பட்டுவந்த பூசைக் கிரிகைகள், மக்களிடையை வசதியும், செல்வமும் பெருக, இப்பொழுது பெரும்பாலோர் புது மனை புகுதல், பூப்புனித நீராட்டுதல், குழந்தை பிறந்த துடக்கு கழித்தல் எனப் பலவிதமானவற்றை 'வெகு விமரிசையாக'...