அன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை வாழும் அண்ணாமலைத் தாத்தா- எம்மோடு வாழும் பாட்டி தொலைபேசி உரையாடல் நல்ல பொழுது போக்காக இருந்தது. நானும் பாட்டியின் அறைப் பக்கமாக என் காதுகளை கூர்மையாக்கிக்கொண்டேன்.
"பறுவதம் கேட்டியே! உவள் செல்லம்மா உன்னை நாவுறு படுத்திறாள்."
"ஏன்,என்னவாம்?"

பாட்டியும் தனது குரலை உயர்த்திக்கொண்டார். "ஏனாம், ஆடு, பண்டி, கணவாய், றால்,முட்டை எண்டு ஒவ்வொரு நாளும் வாய்க்குள்ளை அடையேக்கை எதோ தாங்கள் அனுபவிக்கப் பிறந்தவை போலவும்,சாவு எல்லாருக்கும் ஒருநாள் எண்டும் தத்துவம் பேசுவினம்.இப்ப அதெல்லாம் எங்க போட்டுது.எங்களு மட்டும் சாப்பிட வாயில்லையோ? சாவு எப்பவும் வரட்டும்.இருக்கு மட்டும் அடுத்தவைக்கு தொந்தரவு குடாம ஓரளவு எங்களால முடிஞ்ச மட்டும் வருத்தம்,துன்பம் வரக்கூடாது எண்டால் சாப்பாட்டில கொஞ்சம் கட்டுப்பாடா இருக்க த்தான்வேணும். கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசையே?"
"சரியாய் சொன்னாய் பறுவதம். வருத்தத்தை தேடுறதும் அவைதான். அனுபவிக்கிறதும் அவைதான்."என்று கதையினை முடித்துக்கொண்டார் அண்ணாமலைத் தாத்தா.
நானும் அம்மாவின் அழைப்பு மணிக்கு முன் காலைக் கடன்களுக்காக படுக்கையிலிருந்து எழுந்துகொண்டேன்.
ஆக்கம்:பேரன் செல்லத்துரை மனுவேந்தன்
0 comments:
Post a Comment