இனி யார் வந்துதான் என்ன பயன்?

தமிழ்ப் பேசத் தெரிந்த மக்களுக்கு மதிப்பு இல்லையா
ஏன் மதிப்பு இல்லை? அவர் அவ்வாறு கூற என்ன காரணம்?
முதல் காரணம் ;- தாழ்வு மனப்பான்மை. தமிழில் பேசினால் படிப்பறிவு அற்றவர்கள் என்ற எண்ணம்.
இரண்டாவது காரணம் ;- ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே பெரிய படிப்புப் படித்தவர்கள் என்று சித்தரிக்கும் தமிழ்த் திரைப்படங்கள்.
மூன்றாவது காரணம் ;- ஏழ்மை. ஏழைகளின் மொழி தமிழ், செல்வம் படைத்தவர்களின் மொழி ஆங்கிலம் என்றால் முட்டாள்தனம்.
நான்காவது காரணம் ;- ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று கட்டளையிடும் தனியார் பள்ளிக்கூடங்கள்.
ஐந்தாவது காரணம் ;- ஆங்கிலம் பேசும் நாடுகள் உலக அளவில் பணக்கார நாடுகளாய் இருப்பது.
ஆறாவது காரணம் ;- கேவலமான, முறையற்ற தமிழில் பேசித் திரிவது.
ஏழாவது காரணம் ;- இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ்ப் பேசப் படுகிறது என்ற தவறான எண்ணம்.
எட்டாவது காரணம் ;- தமிழில் பணிவாகக் கூறினால் கேட்காமல், ஆங்கிலத்தில் அசிங்கமாகத் திட்டியவுடன் கையைக் கட்டி கும்பிடுப் போடும் மூடத்தனம்.
ஒன்பதாவது காரணம் ;- தமிழில் பேசுபவர்களை, “பழம், புலவர், கவிஞர், திருவள்ளுவரின் பேரன்என்றெல்லாம் விமர்சிப்பது.
பத்தாவது காரணம் ;- ஆங்கிலம் தான் உலகில் அதிகமாகப் பேசப்படுகிறது என்ற வதந்திகள்.

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் இருந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க அன்றொருவர் வந்தார், இந்த மூடர்களின் நம்பிக்கைகளை ஒழிக்க யார் வருவார்? அல்ல,இனி யார் வந்துதான் என்ன பயன்?
-----சுபா ஆனந்தி 

0 comments:

Post a Comment